திங்கள், 28 ஜூலை, 2014

நவாவரண பூஜை அறிந்து கொள்ளுங்கள்!!!


காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.
எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.
இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

சனி, 26 ஜூலை, 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்-9

சென்ற பதிவின் தொடர்ச்சி:-

 எனக்கு இருக்கும் அலுவலில் நிச்சயமாக முடியாது என்றேன். நீங்கள்

வராமல் நான் போக மாட்டேன் என்றார். சரி மிகவும் நல்லவராகவும்

இருக்கிறார். சரி என ஒப்புக் கொண்டு வள்ளி மலை அடிவாரத்தை

அடைந்தோம். வேலூருக்கு அருகில் உள்ளது வள்ளிமலை முருகப்

பெருமான் ஸ்தலம். எனக்கு மிகவும் பிடித்த ஸ்தலம். உடல் சிலிர்த்தது.

உள்ளம் உவகை கொண்டது. வள்ளி பிராட்டியையும், வடிவேல்

முருகனையும் பிரார்த்தித்து மலை ஏறினோம்.


ஐயா, பைரவர் வருவார், பால் சாதம் போட வேண்டும் என நாடியில்

வந்தது. பைரவரின் வாகனம் வருமா? என்றார். சொன்னவர் முருகப்

பெருமான், நிச்சயம் நடக்கும் என்றேன். உடன் பால் சாதத்தையும் எடுத்து

வந்தார். வள்ளிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகப் பெருமானைப்

பிரார்த்தனை செய்து சிறிது தூரம் மலையை நோக்கி நடந்தோம்.


வந்தார் பைரவரின் வாகனம். உடன் வந்த பள்ளியின் உரிமையாளருக்கு

ஒரே மகிழ்ச்சி. உடனே தனது கையில் இருந்த பால் சாதத்தை வைத்தார்.

பைரவ வாகனமும் அதை முழுவதுமான சாப்பிட்டு முடித்த பின் மலை

ஏறினோம். அங்கு எட்டு தூண் பகுதி வந்தவுடன் எனது உடல் தாங்க

இயலாத அளவிற்கு ஈர்ப்பு சக்தி ஈர்த்து விட்டது. இதற்கு காரணம்

அந்த எட்டு தூண் பகுதியை திருப்பணி செய்கின்ற சமயம் புணரமைக்க

முற்பட்டு அங்குள்ள பாறைகளை அகற்றும்போது குபீரென சாம்பிராணிப்

புகை வாசத்துடன் வந்தது. அதில் ஓர் உருவம் ஜடா முடியுடன் தவம்

இருப்பதும் தெரிய வந்தது. உடனே எடுத்த கற்களை அப்படியே போட்டு

மூடி விட்டு புணரமைக்காமல் விட்டு விட்டனர். இது வரலாறு. எட்டு

தூண் பகுதியில் சித்தர்கள் தவம் இருப்பதாக இன்னும் நம்பப் படுகிறது.

அதை இன்னும் உணர முடிகிறது. சற்று மேலே ஏறியவுடன் குடவரையில்

வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். அதை

தரிசனம் செய்துவிட்டு சற்று மேலே சென்றவுடன் பொங்கி அம்மன்

ஆலயம், ஸ்ரீ வள்ளி மலை சுவாமிகள் சமாதி பீடம், சூரியன் காணாத

அணை, வள்ளி மஞ்சள் குளித்த இடம், உச்சி லிங்கம், யானை வடிவில் ஒரே

கல் என பல ஆச்சரியமான, அதிசயமாக வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.

அத்துணையும் தரிசனம் செய்தோம்.


யாருடனும் இவ்வாறு செல்வதில்லை. இருப்பினும் இவர் என்னுடன்

வந்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்றார். பைரவர் வந்ததை

மிகவும் மகிழ்ச்சியாகக் கருதினர். வழிபாடு முடிந்த பின் வீடு

திரும்பினோம்.



 சில மாதங்கள் கழித்து அவர் மீண்டும் வந்து நாடி கேட்டார். ஐயா, ஒரு

பெண் ஜாதகம் பொருந்தி வருவதாகச் சொல்கிறார்கள். இதை

மணமுடிக்கலாமா? எனக் கேட்டார். நாடியில் செய் என வந்ததால்

அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அதில் ஆச்சரியம் என்னவென்றால் பெண்ணின்

தந்தை பெயர் ஸ்ரீ முருகப் பெருமானின் பெயர், அவர்கள் நடத்துகின்ற

தொழில் நிறுவனத்தின் பெயரும் முருகப்பெருமானின் பெயர். இவர்கள்

காலம் காலமாக முருகனை வழிபடுகின்ற குடும்பம். இப்படி எல்லாமே

முருகமயமாக இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தார். ஐயா முதல் முறை

நாடி கேட்ட போது “வடிவேலன் வகை தனிலே வருவான்” எனப்

படித்தீர்கள். அது அப்படியே 100% பலித்துவிட்டது. இதை எப்படி நன்றி

சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை என்றார். எனது கையில்

ஒன்றுமில்லை எல்லாம் சித்தர்கள் செயல் என்றேன். திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன். பல இலட்சங்கள் செலவு செய்து

மிக அற்புதமாக திருமணம் நடத்தினார்.



மீண்டும் தம்பதி சமேதராக வந்து நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியைத்

தரிசனம் செய்தார்கள். முருகப் பெருமான் ஆசிர்வதித்தார். இப்படி சற்று

நம்பிக்கைக் குறைவாக ஆரம்பத்தில் வந்து நாடி கேட்ட இவர் சின்ன

விஷயமாக இருந்தாலும் நாடியில் உத்தரவு கேட்டே செய்து வருகிறார்.

 ஜீவ நாடியைப் பொறுத்தவரை ஜோதிடத்தில் 12 காண்டங்கள்

சொல்வது போல் சொல்வதில்லை. எது எப்போது சொல்ல வேண்டுமோ

அது அப்போது சொல்லப்படுகிறது. எது அவசரத்தேவையோ அதற்கு

மட்டும் நாடியில் தீர்வு கேட்க வேண்டும். சாதாரண சின்ன சின்ன

விஷயங்களுக்கெல்லாம் நாடியில் பலன் கேட்க கூடாது. தீர்க்க முடியாத

பிரச்சினைகளைத் தீர்க்க நாடலாம். பொது பலன் கேட்கலாம். நாம்

எதிர்பார்த்தது அத்தனையும் வர வேண்டும் என்று நினைத்தால்

ஏமாற்றமே மிஞ்சும்.



இந்த பள்ளியின் உரிமையாளர் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தார்.

நாடி சொன்னபடி உரிய முறையில் திருமணம் நிச்சயமானது. நல்லபடியாக

திருமணமும் முடிந்தது. அதே போல் என்ன முருகப் பெருமான்

உரைக்கின்றாரோ அதை மட்டும் கடைபிடித்தால் போதுமானது.

 சில மாதங்கள் ஓடின. புது மாப்பிள்ளையாக வலம் வந்தவர் மீண்டும்

வந்தார். பூஜித்து நாடி படிக்கப்பட்டது.

“திருப்பமது ஆக திவ்யமதுகாக

திருச்செங்கோடு செல்லு

தித்திக்கும் வாய்ப்பு வரும்

திருமண இன்பம் கூடும்

மழலை வாய்க்கும்

மகிழ்ச்சி நிலையோங்கும்

தொழில் விருத்தி உண்டே”

 திருமணமானவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டிய ஸ்தலம்,

திருச்செங்கோடு.இந்த திருச்செங்கோட்டு ஸ்தலத்தில் எனக்கும் என்னுடன்

வந்த சில அடியார்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ காசி சந்நியாசி நமசிவாய

சுவாமிகள் ஸ்பரிச தீட்சை கொடுத்து பஞ்சாட்சர மந்திரம் உபதேசம்

செய்தார்கள். அப்படி எனக்கும் அதிசயம் நடந்த ஸ்தலம். அம்மையும்,

அப்பனும் இரண்டறக் கலந்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி தரும் ஸ்தலம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அருணகிரி நாதரே நாலாயிரம் கண் வேண்டும்

உனைக்கான என்று பாடிய செங்கோட்டு வேலவன் இருக்கின்ற ஸ்தலம்.

இப்படி பல்வேறு சிறப்புகளுடைய திருச்சேங்கோடு செல் அங்கு சென்று

வழிபட்டு வந்தால் மழலைச் சொல் கேட்கும். தொழில் பெருகும் எனச்

சொன்னார். முருகப்பெருமான். தம்பதி சமேதராக சென்று தரிசனம் செய்து

வந்தார்கள். நாடி கேட்டார்கள் முருகன் அருளால் பிள்ளை பிறக்கும்

என வந்தது ஆனால் சுகப்பிரசவம் அல்ல அறுவை சிகிச்சை செய்ய

வேண்டும் என வந்தது அப்படியே நடந்தது. அறுவை சிகிச்சை மூலம்

பூசம் நட்சத்திரம், கடக ராசியில் ஆண் குழந்தை ஜெனித்தது. தொழிலும்

நல்ல மாற்றம். இன்னும் ஒரு பள்ளியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்.

இப்படி சிலரது வாழ்வில் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி ஒரு மாபெரும்

வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது
.

                                     “ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

புதன், 16 ஜூலை, 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்-8



ஜீவநாடி மூலம் பலர் பயன் அடைந்து வருகின்றனர். சித்தர்களின் காலம்

விரைவில் ஆரம்பமாகப் போகிறது கலியுகத்தின் கொடுமை இப்போதே

தலை விரித்து ஆட ஆரம்பித்து விட்டது. போட்டி, பொறாமை சூது

வஞ்சனை என திண்டாடுகின்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சித்தர்களின் ஆட்சி காலம் விரைவில் வருகின்றதால் நிச்சயம் ஒரு நல்ல

தீர்வு கிட்டும் மக்கள் நமது ஞானஸ்கந்தர் ஜீவநாடியை நாடி பலன்

அடைய வேண்டும் என்று அதிகமாக முயற்சி செய்கிறார்கள். அனைவரின்






ஆவலையும் பூர்த்தி செய்கின்ற நிலைமை தற்போது இல்லை. உரிய

காலம் வரும்போது அனைவருக்கும் கிட்டும். அது வரை வாசகர்கள்

பொறுமை காப்பது அவசியம். அனைத்து மக்களுக்கும் ஜீவநாடி மூலம்

பல நன்மைகள் சென்று சேர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில்,

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியைப் பூஜித்து எழுத்தப் பட்டதே ஜீவ நாடி

மூலம் பரிகாரங்கள் அடங்கிய சனி வக்ர நிவர்த்தி மற்றும் இராகு கேது

பெயர்ச்சி பலன்கள். இதை எழுதும் போது கிடைத்த அனுபவங்கள்

ஏராளம். அதை வேறு ஒரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அதில்

ஒன்றை மட்டும் இப்போது சொல்கிறேன். ஸ்ரீ காக புஜண்டர் சித்தரை

பூஜித்து ஜீவநாடியில் வாக்கு கேட்கும் சமயத்தில் ஒரு பெரிய காகம்

ஒன்று எங்கிருந்தோ வந்து வாயிலில் அமர்ந்து கொண்டது. தியானம்

முடித்து கண் விழித்து பார்த்தால் காக்கை. சரி வந்தது புஜண்டர் என்றால்

அவரது துணைவியாரும் இதேபோல் காக்கை வடிவில் வர வேண்டும்

என்று பிரார்த்தனை செய்து கண்களைத் திறந்தால் அந்த காக்கையின்

அருகில் மற்றும் ஒரு காக்கை அமர்ந்து இருந்தது. அப்போது என்னைச்

சுற்றி சுமார் 10 நபர்கள் இருந்தார்கள். அனைவருக்கும் ஆச்சரியம். இந்த

கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என ஆச்சரியப்பட்டார்கள். அதிசயமாக

இருந்தது என பேசினார்கள்.




இது மந்திர வித்தையோ அல்லது மாய வித்தையோ அல்ல. பக்திக்கு

சித்தர்கள் காட்டும் கருணை இப்படி பல அதிசயங்கள் அடங்கி வெளி

வந்ததே அந்த பெயர்ச்சி புத்தகம். அதில் சொல்லப்பட்டுள்ள ஆலயப்

பரிகாரங்களும் 100% பலன் தரக் கூடியவை. பிராப்தம் உள்ளவர்கள் மட்டுமே

வாங்கிப் படித்து பலன் அடையும் புத்தகம். முழுக்க முழுக்க சித்தர்களின்

ஆசியையும், சித்தர்களுக்கெல்லாம் சித்தராய் இருக்கும் ஸ்ரீ ஞானஸ்கந்த

மூர்த்தியின் ஆசியையும் பெற்றுள்ள புத்தகம். வாங்கி படித்து, பாதுகாத்து

பயன் அடைவது வாசகர்களின் பிராப்தப்படி நடக்கும். எதற்காக இதை,

இங்கு, இப்படி சொல்கிறேன் என்றால் என்னிடம் நாடி கேட்டு பலன்

அடைய அனைவராலும் முடியாது அதற்குரிய கால அவகாசமும் தற்போது

இல்லை. இப்படிப்பட்ட சூழ் நிலையில் ஜீவநாடி மூலம் எழுதப்பட்ட

பெயர்ச்சி பலன், பரிகாரங்களை அடிக்கடி கடைபிடித்தாலே நமது கர்ம

வினைகள் கறைந்து விரைவில் ஜீவ நாடி படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ஜீவநாடி படிப்பதை தொழிலாக யாம் கொள்வதில்லை. இருப்பினும்

இறைவனது ஆசியும், சித்தர்களின் கருணையும் கைகூடி வரும்போது ஜீவ

நாடி என்னிடம் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.



விரைவில் நமது அப்ஸரா பப்ளிகேசன்ஸ் மூலம், ஜீவநாடி மூலம்

எழுதப்படும் சனிபெயர்ச்சி பலன்கள் வெளிவர இருக்கிறது. அது இதுவரை

எவரும் வெளியிடாத, எவராலும் சொல்லப்படாத இரகசியங்களைத்

தாங்கி வெளிவரும். அதற்கும் பிராப்தம் வேண்டும். எமது கட்டுரைகள்

வாசகர்களால் விரும்பி படிக்கப்படுவதன் காரணம், சொன்ன

விஷயங்களையே திரும்ப திரும்ப சொல்லப்படுவதில்லை. நம்பகமான

விஷயங்கள் மட்டும் தான் தரப்படுகின்றன. அனுபவத்தில் அப்படியே

ஒத்து வருகின்றன என்ற காரணங்கள் தான். இவை வாசகர்களால்

சொல்லப்பட்டவை. எனவே எல்லா விஷயங்களும் இறைவன் விதிப்படியே

நடக்கின்றன.

ஒரு பள்ளியின் உரிமையாளர் என்னிடம், நாடி பார்க்க வேண்டும்

என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு நாள் முருகப் பெருமான்

உத்தரவு கொடுத்தார். சரி வாங்க என்று சொல்லி நாடியைப் பூஜித்து

வாக்கு கேட்கப்பட்டது. வந்தவர் இளைஞர். திருமணம் ஆகாதவர். உயர்

பட்டப்படிப்பு படித்தவர். மிகவும் திறமைசாலி. அழகானவர். பள்ளிக்கூடம்

வைத்து நடத்துவது என்பது சாதரணமான செயல் அல்ல. இவர் திறம்பட

நடத்துகின்றவர். அவருக்கு நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் எடுத்த

எடுப்பிலேயே பின் வருமாறு வந்தது.

 “வளமான வள்ளிமலை

வாட்டம் களைகின்ற தருணம்

வாகாகவே சென்று

வர வேண்டுமது

வந்தபின் வரிசையாய்

வசதிகள் கூடும் வாழ்வு மாறும்

வந்திடுவாள் உத்தமி பத்தினி

வடிவேலன் வகைதனிலே வருவாள்

வாகாகவே வளமது கூடும்

வசதிகள் பெருகும்

வல்லமையாகுமே!”






பெரிய பெரிய பலன்கள் வரும் என்று எதிர்பார்த்து வந்தவருக்கு சற்று

ஏமாற்றம். என்ன இது வள்ளி மலை செல், எல்லாமே நடக்கும் என

ஒரே வார்த்தையில் சொல்லி விட்டாரே. ஜோதிடம் கேட்க சென்றால்

சுமார் ஒரு மணி நேரமாவது சொல்வார்கள். இது என்ன ஜீவநாடி

என்கிறார்கள் இவ்வளவுதான் பலனா? என நினைத்தார். நான் தெளிவாகச்

சொல்லிவிட்டேன். இதில் என்ன வருகிறதோ அதை மட்டுமே படிக்கின்ற

வேலை என்னுடையது அதில் கூட்டியோ குறைத்தோ சொல்ல முடியாது.

எனவே இதைக் கடைபிடியுங்கள். இதில் சொன்னது எதுவுமே மாறாமல்

அப்படியே நடக்கும் என்றேன். சரி வள்ளிமலை சென்று என்ன செய்ய

வேண்டும் என்று கேட்டார்.

சரி, இவர் திருப்திக்காக மீண்டும் பிரார்த்தணை செய்தேன். பின்வருமாறு

வந்தது

 “ பைரவ வாகனம்

பாங்காக வருமங்கு

பால்சாதமிட்டு வா

பல கர்மம் குறையுமே”

அடுத்து ஆச்சரியமான பலனைச் சொன்னார் முருகப் பெருமான். பைரவரின்

வாகனமான நாய் ஒன்று அந்த வள்ளிமலையில் வரும். அதற்கு பால் சாதம்

போடு. அதை அந்த நாய் சாப்பிட்டால் நீ பல ஜென்மமாக சேர்த்து வைத்த

கர்ம வினைகள் தீரும் என்று தெளிவாக நாடியில் வந்ததை சொன்னேன்.

சரி என ஒப்புக் கொண்டு விபூதி வாங்கிவிட்டு, ஐயா வருகிறேன் என

கிளம்பிவிட்டார். சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஐயா தாங்கள் பதிவு செய்து கொடுத்த ஜீவநாடி பாடல்களை அடிக்கடி

கேட்டு வருகிறேன். நல்ல மாற்றம் தெரிகிறது. உங்களைச் சந்தித்த நாள்

முதலே நல்ல நிலை தென்படுகிறது. உங்களிடம் ஒரு விண்ணப்பம்,

நீங்களும் என்னுடன் வள்ளி மலையை வந்து தரிசனம் செய்ய வேண்டும்

என்றார்.

திங்கள், 7 ஜூலை, 2014

ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-7

சென்ற பதிவின் தொடர்ச்சி :-





ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு லாரி சென்றது. அதை பெற்றுக்

கொண்டவர் சரக்கு வரவே இல்லை என்று சொல்லி விட்டார். எங்களுக்கு

ஒரு கோடியும் நஷ்டம். தற்கொலை செய்துக்கொள்ள நினைத்தோம்.

தங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. ஒரு நபர்

தங்களைப் பற்றிச் சொன்னார். தாங்கள் நாடியில் சொல்லும் பதிலை

வைத்து வாழ்வதா? சாவதா? என முடிவு செய்யலாம் என வந்துள்ளோம்.


தக்க தீர்வு வழங்கவும்” என எழுதப்பட்டதை கண்டு அதிர்ச்சி. நமக்கும்

ஒரு சோதனையை முருகன் வைத்து வேடிக்கை பார்க்கிறான் போலத்

தெரிகிறது. சரி முருகன் உரைப்பதை உரைப்பதே நமது பணி என மனதை

ஒருநிலைப்படுத்தி ஜீவநாடியைப் பிரித்தேன். மடை திறந்த வெள்ளம் போல

பாடல் வடிவில் வாக்கு வந்தது. வாக்கு தந்தவர் ஸ்ரீ அகத்தியர்.

முருகனைப் போற்றி பலன் சொல்ல ஆரம்பித்து பலரும் அதிரும் படி பல

இரகசியங்களை உரைத்து பரிகாரமும் சொன்னார்.



பஞ்ச நதீஸ்வரர் என்றும் ஐயாரப்பர் என்றும் அழைக்கப்படும் ஸ்தலம்

திருவையாறு அங்கு சென்று ஏகாதச ருத்ராபிசேகம் செய்ய வேண்டும்.

அதாவது பதினோறு ருத்ர மூர்த்திகளை அம்மை அப்பன் கலசத்தையும்

சுற்றி கலசம் மூலம் ஆவாஹனம் செய்து சங்கல்பம் செய்து, 11

அந்தணர்களால் பாராயணம் செய்து ஹோமம் செய்ய வேண்டும். பின்பு

அந்த 11 சிவாச்சாரியார்களையும் ருத்திரர்களாக பாவித்து அவர்களுக்கு

தட்சினை தாம்பூலம் தந்து ஆசி வாங்க வேண்டும். இவ்விதம் செய்.

நடப்பதைப் பார் என்றார் அகத்தியர்.



வழக்கமாக வருகின்ற முருகனின் வாக்கு வராமல் அகத்தியரின்

வாக்கு வருகிறதே என நான் சிந்திப்பதை புரிந்து கொண்ட அகத்தியர்,

வந்திருப்பவர்கள் அகத்தியர் ஆலய பிரதிஷ்டை செய்தவர்கள் என்றும்,

அடிக்கடி அகத்தியரை பூஜிப்பவர்கள் என்றும், உன்னை வழிபாடு

செய்பவர்களுக்கு நீயே சென்று உரிய வழி சொல் என்ற முருகனின்

உத்தரவால் அகத்தியர் வந்து வாக்கு சொன்னதாகவும் தெரிவித்தார்.

எவ்வளவு அதிசயம் பாருங்கள். வந்தவர்களுக்கு ஒரே ஆனந்தம், அந்த ஒரு

கோடி ரூபாயும் கிடைத்த மாதிரி மகிழ்ச்சி.



இதை உரைத்த பின்பு அவர்கள் சொன்ன செய்தி என்னை மேலும் மெய்

சிலிர்க்க வைத்தது. மேலே அகத்தியர் சொன்ன ஆலயத்தில் விபூதி

பிரசாதம் வாங்கும்போது அங்கு ஒரு பெரியவர் “திருவருள் சக்தி” இதழைப்

படித்துக் கொண்டு இருந்ததாகவும் இவர்கள் அவரைப் பார்த்தவுடன்

இவர்களிடம் அந்த பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு வேகமாகச்

சென்றதாகவும் சொன்னார்கள். சரி இது எதேச்சையாக நடக்கிறது என

சுமார் ஒரு மாத காலம் அதை புரட்டிக் கூடப் பார்க்காமல் மேஜையின்

மீது போட்டுவிட்டார்கள். இந்தப் பிரச்சினை வந்தவுடன் இந்த “திருவருள்

சக்தி” இதழை புரட்டிப் பார்த்திருக்கிறார்கள்.






அதில் ஜீவ நாடியைப் பற்றிய தொடர் என்னமோ செய்திருக்கிறது

பல முறை படித்தவர்கள் கனவில் இங்கே போ வழி கிடைக்கும் என

உத்தரவு வந்தவுடன் பலமுறை தொடர்புக் கொண்டு சிரமத்தின் பேரில்

வந்து சேர்ந்தார்கள். அதற்குள் அகத்தியர் கோவில் பற்றிய செய்தி

வந்தவுடன் அதிசயப்பட்டு, அந்த அகத்தியரே வந்து வாக்கு சொன்னதால்

ஆச்சரியப்பட்டு, அதிர்ச்சியடைந்து, ஆனந்தமடைந்து பிரிய மனமில்லாமல்

சென்றார்கள். சரி இறைவனின் கட்டளை எதுவோ அது நடக்கும் என நான்

விட்டு விட்டேன். இரண்டு மாதம் கழித்து இவர்களிடம் இருந்து அழைப்பு

வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் சொன்னேன் அந்த நாளில் மீண்டும்

வந்தார்கள்.



ஐயா, பலன் கேட்க வரவில்லை, நடந்த நிகழ்ச்சிகளையும்,

அதிசயங்களையும் சொல்லலாம் என்று வந்திருக்கிறோம் என்றார்கள்.

சரி உரைத்தப்படி ஏகாதச ருத்ராபிஷேகம் திருவையாறில் செய்தோம்.

ஸ்ரீ ஐயாரப்பரை ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள்

எனத் தெரிந்து அந்த அபிஷேகத்தை கண்ணாரக் கண்டோம். அதே போல்

சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் அறம் வளர்த்த நாயகி அம்மையையும்

அபிஷேகம் செய்து அற்புத அலங்காரத்தைத் தரிசனம் செய்தோம்.

சொன்னது சொன்னபடி செய்து முடிந்த உடனே எனது அலைபேசிக்கு

ஒரு அழைப்பு மணி வந்தது. இது சத்தியமான உண்மை. அந்த சரக்கு

லாரி வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு சிறு பிழை காரணமாக உரிய பதில்

கிட்டாததால் வரவில்லை என்று சொன்னோம். இப்போது வந்து விட்டது

என்ற தகவல் கிடைத்தவுடன் ஒரு கோடியில் பாதியை 50 லட்சத்தை

உங்களது வங்கிக் கணக்கில் போட்டுவிட்டேன். மீதியை இன்னும் ஒரு

மாதத்தில் தந்து விடுகிறேன் என்று அந்த நபரிடம் இருந்து பதில் வந்தது.

என்னால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மயக்கமே வந்து விடும் போல்

இருக்கும் நிலையில் ஆலய ஊழியர் ஒருவர் பன்னீர் சோடா ஒன்றைக்

கொண்டு வந்து கொடுத்தார். அமிர்தம் போன்று இருந்தது. அந்த அழைப்பு

துண்டிக்கப்பட்ட உடனேயே எனது அலைப்பேசியில் குறுஞ்செய்தி வந்தது.

50 லட்சம் உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டது என்று. என்னே முருகனின்

கருணை. ஜீவ நாடியைப் பற்றி தற்போதுதான் முழுமையாகப் புரிந்து

கொண்டோம் என்று சொல்லி இது பல பேருக்கும் தெரியட்டும் என

தனது கைப்பட 6 பக்கம் எழுதி கையொப்பம் இட்டு மாலை, மரியாதை

செய்தார்கள். ஆசிர்வதிக்க சொன்னார்கள். முருகா கருணை காட்டு என

ஆசிர்வதித்தேன். இது சத்திய உண்மை ஆதாரம் இருக்கிறது.



எப்படி நடக்கிறது பாருங்கள் இது தான் இறைவனின் திருவிளையாடல். சரி

அந்த அகத்தியர் ஆலயத்தில் “திருவருள் சக்தி” புத்தகத்தைக் கொடுத்தது

யார்? தெரியவில்லை பின்பு அது அகத்தியரின் திருவிளையாடல் எனத்

தெரிந்து கொண்டோம். “திருவருள் சக்தி” புத்தகமும் அகத்தியரின் கைபட்டு

ஆசிர்வதிக்கப்பட்டதால் இந்த இதழ் யார் வீட்டில் இருந்தாலும் அந்த

சித்தர்கள் ஆசி கிட்டுவது திண்ணம். அதில் ஏதும் மாற்றம் இல்லை.



இப்போது அவர்கள் தொடர்ந்து நாடியைக் கடைபிடித்து வருகிறார்கள். பல

அதிசய மாற்றங்கள் இன்னும் நடந்து கொண்டு வருகின்றன. எப்போதோ

செய்த திருப்பணியின் பலன் வாழ்வில் ஒரு கஷ்டம் என்று வரும் போது

எப்படி கை கொடுத்து காப்பாற்றும் என்பதற்கு இந்த கட்டுரையே சாட்சி.

இன்னும் பல இரகசியங்கள் வரும்.



ஒம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

செவ்வாய், 1 ஜூலை, 2014

ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி – 6





கலியுகத்தில் இறைவன் ஆயிரமாயிரம் அதிசயங்களை வைத்திருக்கிறான்.

மனித உயிர்கள் தனது மன எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு,

கண்டதே கோலம், கொண்டதே காட்சி என இன்பம் துய்க்க நினைத்து

துன்பத்தில் விழுந்த விட்டில் பூச்சி கதையாக மாறிவிடுகின்றன. அதை

வெற்றிக் கொள்ள இறைவன் கோடிக்கணக்கான வழிகளை, நெறிகளை,

கொள்கைகளை, கோள்களின் இயக்கத்தின் சூட்சும இரகசியங்களை,

ஆத்மாவைக் கடைதேற்றும் அற்புத வழிகளை, துன்பங்களைத் துடைக்கும்



தூய நெறிகளை வகுத்து வைத்துள்ளான். இன்ன நேரத்தில் இன்னது

நடக்க வேண்டும் என்ற விதியாசாரத்தின் அடிப்படையில் இயங்கும்

வாழ்க்கை இறைவன் விதித்து இரகசியப்படி இயங்கி வருகிறது. அதை

ஜீவநாடி படிக்க ஆரம்பித்த நாள் முதலே உணர்ந்து வருகின்றேன்.



ஜீவ நாடியை, குறி சொல்வது போன்று சொல்லப்படும் என்றும்,

மைவித்தை போல் இருக்குமோ என்றும், அந்த நேரத்தில் ஏற்படும்

எண்ணத்தின் வெளிப்பாடோ என்றும், நாடி ஜோதிடம் போன்று ஏற்கனவே

எழுதி வைத்து படிப்பதோ என்றும், அருள்வாக்கு என்றும், ஜோதிடம்

சொல்வது போல சொல்லப்படும் என்றும், எதிர்பார்த்து வருபவர்கள்

ஏமாந்துதான் போவார்கள். நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில்,

முருகப்பெருமான், அகத்தியர், சுகர் மற்றும் காகபுஜண்டர் ஆகியோரால்

உரைக்கப்படும் இரகசியங்கள் ஜோதிடப் பலன் அல்ல. மாறாகப்

பரிகாரம் உரைக்கப்படுகிறது. கர்மவினை குறைக்கும் சூட்சுமங்கள்

உரைக்கப்படுகின்றன. ஏனெனில் அடுக்கடுக்காய் ஆயிரம் பலன்கள்

சொன்னாலும் ஒருவர் பொருளாதார ரீதியில் பலன் அடையவில்லை

என்றால் நிறைவு ஏற்படுவதில்லை. இல்லானை எல்லாரும் வேண்டாம்

என்கிறார்கள். பணம் இல்லாதவனை பரிசுத்தமானவன் என்று இந்தப் பாரினர்

மதிப்பதில்லை.


பணம் இருந்துவிட்டால் அவன் படுபாதகனாக இருந்தாலும்

பக்குவமானவன், பரிசுத்தமானவன் என இந்தப் பாரினர்

கொண்டாடுகின்றனர். எனவே எம்மை நாடி, தேடி, அலைந்து திரிந்து

வந்து ஒரு வழியாக ஜீவ நாடி படித்து விட்டால் அவர் பணக்கார வாழ்வில்

ஒரு படி எடுத்து வைத்துவிடுகிறார். அதன் பின்பு எந்த நிலையில் அவர்

இருந்தாலும் அதிலிருந்து சிறிது சிறிதாக பல மடங்கு தனது வாழ்வில்

உயர்வினை அடைந்து விடுகிறார்.



அதேபோல் தனது கர்மவினையைத் தீர்த்துக் கொள்ளாமல், இருப்பதால்தான்

பணக்கார வாழ்வினையோ, பகட்டு நிலையையோ சுகிக்க இயலாமல்

சுந்தர வடிவை இழந்து சூழ்ச்சியான வாழ்விற்கு பலியாக நேரிடுகிறது.

எனவே முருகப் பெருமானும் சரி, சித்தர்களும் சரி பலன் சொல்ல

விரும்புவதில்லை. பரிகாரம் சொல்லி வாழ்க்கையைச் சரி செய்கிறார்கள்.

ஜாதகத்தையே மாற்றுகிறார்கள். ஜீவ நாடி மூலம் பல இரகசியங்களை

உரைத்து, செயல்பாடாத கிரகங்களைச் செயல்பட வைத்து, சீக்கிரத்தில்

சீரான வாழ்வை, சிரமமில்லாத வாழ்வை சித்தரிக்கிறார்கள். இதுதான்

இரகசியம்.




பொதுவாக ஆலய பரிகாரங்களே பரிந்துரை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட

கால இடைவெளியில் தொடர்ந்து சில மாதங்களோ, சில வருடங்களோ

ஜீவ நாடி சொல்கின்ற ஆலயங்களை விடாமல் தரிசனம் செய்ய

வலியுறுத்தப்படுகிறது. அந்த ஆலய தரிசனத்தை முறையாகச் செய்யும்

போது அந்த ஆலயத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ வேண்டும். அப்படி

நிகழும் வரை அந்த ஆலயத்தைத் தொடர்ந்து வழிபட வேண்டும். என்ன

அதிசயம் எனில் நமது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு ஏதேனும் அங்கு நடக்க

வேண்டும். அப்போதுதான் அந்த இறைவனின் பார்வை நம்மீது விழுந்து

விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியும். அதன் பின்பு ஜீவ நாடியில்

அதற்கான சூட்சும இரகசியங்களும், அந்த அதிசயத்தின் முழு செயல்களும்

விளக்கமாக வரும். அதன் மூலம் அந்த அதிசயத்தை மனப்பூர்வமாக

முழுமையாக அறிந்து கொள்ளலாம்.


நமது ஜீவ நாடியைப் பொறுத்தவரை ஜோதிடம் சொல்வது போன்று 12

வீட்டின் பலன்களை ஒரே முறையில் சொல்லி விடுவதில்லை. ஜீவநாடி

என்பதே அப்போதைக்கு அப்போது தோன்றி மறைகின்ற எழுத்துக்களை

வைத்து உரைக்கப்படுவது. எனவே முருகப்பெருமான் என்ன உரைக்க

நினைக்கிறாரோ, அதை மட்டுமே படிக்க முடியும். நாம் எதிர்பார்த்ததுதான்

வர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. முருகனது எண்ணம் எதுவோ

அதுவே நாடியில் வரும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளி கழித்து

மீண்டும் கேட்க வேண்டிய தேதியையும் முருகனே நாடியில் உரைத்து

விடுவார். அந்த குறிப்பிட்ட காலம் வரை முதல் முறை உரைக்கப்பட்ட

பலன்களையும், பரிகாரங்களையும் கடைபிடிக்க வேண்டும். அதில் பல

மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவத்தில் பார்த்து வருகிறோம். அடுத்த

முறை எந்த குறிப்பிட்ட தேதியில் கேட்கச் சொன்னாரோ அப்போது

அடுத்த இரகசியங்களை உரைப்பார். மீண்டும் ஒரு தேதி சொல்லி வரச்

சொல்லுவார். இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ தொடர்ந்து ஜீவ நாடியில் வாக்கு ஒரு

குறிப்பிட்ட நபருக்கு வந்து கொண்டே இருக்கும். எனவே ஒரே நாளில் ஒரே

மூச்சில் முழுவதும் இங்கு உரைக்கப்படுவதில்லை.



அதேபோல் முதல் முறை சொன்ன ஆலயப்பரிகாரங்களை முறையாகக்

கடைபிடிக்காமல் இரண்டாம் முறை பலன் வருவதில்லை. எனவே ஜீவ

நாடியில் வருவதை முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் கடைப்பிடித்து

வந்தால் முருகப் பெருமானும், சித்தர்களும், நமது வாழ்வில் நடத்தும்

அதிசயங்களை அனுபவிக்கலாம். எமது வயது சிறியதானாலும் முருகனது

அருள் முழுமையாக இருப்பதால் இத்தனையும் செய்ய முடிகிறது.



ஆலயப் பரிகாரங்கள் மட்டுமில்லாமல் ஒரு சில மூலிகை மர்மங்களும்,

அதைப் பயன்படுத்தும் விதமும் உரைக்கப்பட்டு அந்த மூலிகையை

அணிவதற்குள் ஆயிரம் அதிசயத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருக்கு

யந்திரங்களை வைத்து பூஜை செய்யும் முறைகள் வருகிறது. இன்னும்

சிலருக்கு யாகங்கள் செய்யச் சொல்லப்படுகிறது. ஞானத்தில் தெளிந்த

நிலை உடையவர்களுக்கு மந்திர உபதேசமே ஜீவ நாடியில் வருகிறது.

அதை எப்படி உச்சரிப்பது எப்படி பிரயோகம் செய்வது என்பது கூட

ஒரு குரு, உடன் இருந்து கற்றுக் கொடுத்தால் எப்படி இருக்குமோ

அப்படி வருகிறது. உபாசனை செய்யும் இரகசியங்கள், தேவதைகளோடு

உறையாடும் உயர்வான மார்க்கங்கள் உறுதியான வழிமுறைகள்

சொல்லப்படுகின்றன. இது யாருக்கு பிராப்தமோ அவர்களுக்கே

உறைக்கப்படுகிறது


இன்னும் பாமர மக்களுக்கு மிகச் சுலபமான வழியாக அவர்களது

ஏதேனும் மூன்று பிரச்சினைகளை ஒரு தாளில் எழுதி அவர்கள்

குலதெய்வத்தின் பெயரோடு கொடுத்துவிட, அதை நான் பூஜித்து அவர்கள்

குலதெய்வத்தோடு தொடர்பு கொண்டு ஆசி பெற்று ஜீவ நாடியை

இந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என சங்கல்பம் செய்து நாடியைப்

பிரித்த உடனேயே உறுதியான தீர்வும், அவர்கள் குலதெய்வம் என்ன

நினைக்கிறது, ஏதேனும் பூஜைகள் செய்ய வேண்டுமா அல்லது தேவை

இல்லையா? என பல விடைகள் கிடைத்து வடிவேல் முருகனின் ஆசியும்

கிடைத்து விடுகின்றன. இது தான் எளிமையான வழிமுறையாகும்.



கேட்கின்ற கேள்விகள் தொடர்பான விடைகள் மட்டுமில்லாது, இன்னும் சில

கூடுதல் செய்திகளும், சித்தர்கள் மூலமும், முருகப்பெருமான் மூலமும்

உணர்த்தப்படும். எனவே ஜீவ நாடி என்பது ஒரு நம்ப முடியாத பேரதிசயம்

என்றால் மிகை இல்லை.




இப்படி ஜீவநாடி நாளும்நாளும் பல அதிசயங்களை நிகழ்த்தி வருகின்ற

நிலையில் ஒரு மிகப் பெரிய தொழில் அதிபர் என்னைத் தேடி மிகச்

சிரமப்பட்டு வந்து ஜீவ நாடியில் வாக்கு கேட்க அமர்ந்தார். வந்தவர் உடன்

அவர் மனைவியையும் அழைத்து வந்தார். பார்த்தாலே பணக்கார கலை

அவர்கள் இருவர் முகத்தில் தெரிந்தாலும் அதையும் தாண்டி ஒரு சோக

ரேகை அவர்கள் முகத்தில் ஓடியது. உங்கள் பிரச்சினையை இந்தத் தாளில்

எழுதுங்கள் என வழக்கமாகச் சொல்வதைச் சொன்னேன். அவர்களும்

பிரச்சினையை எழுதி அவர்கள் குல தெய்வத்தின் பெயரை எழுதி அந்த

சீட்டை பிரார்த்தனை செய்து என்னிடம் கொடுத்தார்கள். நான் ஸ்ரீ

ஞானஸ்கந்த மூர்த்தி பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்து ஜீவநாடியை

பூஜை செய்து பிரச்சினையைப் பிரித்துப் பார்த்தேன். அதில் பின்வருமாறு

எழுதப்பட்டு இருந்தது.

                                                   அடுத்த பதிவில் தொடரும்...