சனி, 31 ஜனவரி, 2015

ஜீவ நாடி பேரதிசயம் (உண்மைச்சம்பவம்)



மும்பை அகத்தியர் அடியவர் திரு. கணேசன் ரத்தினம் என்பவருக்கு 25.1.2015

ஞாயிறு சஷ்டி அன்று ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி படிக்கப்பட்டது.

அப்போது வந்த பாடல். அவரைப் பற்றி எதுவுமே ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு

தெரியாது. ஆனாலும் அவர் அகத்தியர் அடியவர் என்பது மட்டும் தெரியும்.

முருகப்பெருமான் அவரை ஒரு இல்லறவாசி என்றும் சன்னியாசி இல்லை

குடும்பத்தில் இருந்து கொண்டேதான் இறை சேவை செய்வார், இவர் வீட்டில்

அகத்தியை சிலை உண்டு, குறிப்பாக அகத்தியரே இவருக்கு கொடுத்த

யோக தண்டம் உண்டு அந்த தண்டத்தை அடிக்கடி அக்த்தியர் சூட்சுமமாகத்

தொட்டு செல்கிறார், இவருக்கு மூன்று குழந்தைகள் உண்டு, இவர் தனுசு

ராசியில் பிறந்திருப்பார், இப்போது ஏழரை சனி என்றாலும் சித்தர்களை

பூஜிப்பவர்களுக்கு ஏழரை சனி ஒன்றும் செய்யாது, இவரது பிறப்புறுப்பில்

சிறு மச்சம் உண்டு, இவ்ர் முன் ஜென்மத்தில் அகத்தியர் அடியவர், சீடன்,

அகத்தியர் மைந்தன் இவர் ஆறுமுக ருத்திராட்சம் போட வேண்டும்,

அக்த்தியர் இவரிடம் ஒலி வடிவில் பேசி வருகிறார், அகத்தியர் சொன்னபடி

இவர் சிவப்புக் கடுக்கண் அணிய வேண்டும், 55 வயது பின்னால் அபூர்வ

ஆன்மீக யோகம் உண்டு, சித்ர பட வடிவில் சிவலிங்கம் உண்டு, அகத்தியர்

இவர் மூலம் பல அரிய சித்தாடல்களை நட்த்துவார் போன்ற ரகசியங்களை

100% மிகத் துல்லியமாக முருகப் பெருமான் ஜீவ நாடி மூலம் உரைத்தார்.

அடுத்து பல ரகசியங்களை வைகாசியிலே உரைப்பதாகவும் உரத்திருக்கிறார்

முருகப்பெருமான்.

ஸ்ரீஞானஸ்கந்தர்ஜீவநாடியில்வந்த பாடல்:

இடமான நலமான முறையான வகையான

கண்டதிவன்எதிர்காலச்சிறப்புரைப்போம்கேள்

மகிமை புகழ்கடுக்கண்அதை

முனிவனவன்அணியச்சொன்னது

முன்னேற்ற நலமே அணியலாம்நட்பு

இளமை முதல்என்சீடன்ஆசியது

இவனுக்கும்உண்ணுண்டு செப்பு

ஆனதால்மூவான சந்தானம்

அடுத்தடுத்து கொடுத்தோம்

கொடுத்ததுவும்செழிக்கும்

செழிக்குமது இனிக்கும்

இனிக்குமது இவன்வாழ்வு

இல்லறத்தோடு ஆன்மீகம்

பூரணசன்னியாசி இல்லையே

பூவுலகில்புண்ணியங்கள்

பல செய்து பல செய்து

பலர்வாழ்வை சீராக்குவான்

இல்லத்தில்இன்முகமாய்

இனிமையாய்சிரிக்கின்ற

சிலை உண்டு குருமுனிவன்தனக்கு

சீராக பூஜையும்உண்டுண்டு நட்பு

யோக தண்டம்தந்ததுவும்அகத்தியன்

ஆதலால்சூட்சுமமாய்அதில்அக்த்தியனும்உண்டே

அந்த யோகதண்டம்கையிலே அடிக்கடி இவன்தொடுவான்

இடுக்கன்பல களையும்மார்க்கம்தேடி வரும்மக்களுக்கு

இன்முகத்தோடு அருள்வாக்கு போலும்

அகத்தியன்வாக்குரைப்பான்இவனிடம்

என்சீடனின்சீடன்இவன்முன்சென்மத்திலே

அகத்தியனின்மைந்தன்இவன்

வாக்கு பலிக்கும்வரம்கிடைக்கும்

இவன்வம்சம்தழைக்கும்

இல்லறத்தாள்இவன்மனைவி அடிக்கடி

மூட்டு வலி முதுகு வலி இடுப்புவலி

என வலியால்அவதிப்பட்டாளும்

அவளுக்கும்ஆயுள்தீர்க்கமாமே

அஞ்சிடாதே நலமுண்டு

சிவலிங்கம்உண்டு இவன்வீட்டில்

சித்ர பட வடிவில்சிறப்புண்டு

சேவித்து வா சிறப்பாகும்

ஆறுமுக ருத்திராட்சம்போடுவது நல்லதே

சிவப்பு கடுக்கண்அணிந்து கொள்

ஐம்பாணம்ஐந்து பின்அபூர்வ ஆன்மீகமாமே

வில்லதிலே பிறந்து சொல்லதிலே அகத்தியன்

வந்து சொல்லிடும்நிலை பெர்றுவான்கேள்

ஏழரை சனி காலம்என்ன செய்யும்இவனை

சித்தர்கள்பூஜையது செய்வதாலே

சிவலிங்கம்ஒட்டி இவன்சிறுமச்சம்

சிறு அளவில்கொண்டதாலே

சிவன்மைந்தன்அகத்தியனோடு

போகனும்பதஞ்சலியும்மறந்திடாதே

நவமிரண்டு சித்தர்களும்நலம்அருள உள்ளதால்

நலமாக ஒலி வடிவில்உரைத்து வரும்முனிவனின்

நல்வாக்கை கடைபிடித்து வா போதுமே

மற்றவை பலவற்றை பாங்காகப்

பக்குவமாய்ப்பகர்ந்திடுவோம்

விசாகமது கொண்ட வைகாசித்திங்களிலே

ஆசி! ஆசி! ஆசி!

• இவர் பொதிகைமலை செல்லும் போது ஒரு தேங்காயை உடைத்து

அகத்தியர்அருளால்கொட்டுகின்ற மழையை நிறுத்தி உடனே சூரியனை

தோன்றச் செய்து பின் பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசனம்

செய்தவர்.

•பொதிகை மலையில் அகத்தியராலேயே கொடுக்கப்பட்ட யோக

தண்டத்தை வைத்து பூஜித்து வருபவர்

• ஒருமுறை திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்த சென்ற போது

இவரது தலையில் முடியெடுக்க தீர்த்தம் போட இவர் மீது ஒரு சொட்டு

தண்ணீர் கூட பட முடியாமல் தெளிக்கின்றவர் தலை மீதே அந்த தண்ணீர்

கொட்டியது. என்வே மொட்டை அடித்துக் கொள்ளாமல் சென்ற இவர்

முன்பு பெரிய தாடியுடன்அகத்தியர்தோன்றி காட்சி கொடுத்திருக்கிறார்.

• நீண்ட நாட்களாக இவருக்கு ஆண்வாரிசு இல்லாத குறையை அந்த

அகத்தியரே போக்கி வாரிசு தந்திருக்கிறார்.

• அதேபோல் கருத்தடை செய்து கொண்ட ஒரு பெண் அகத்தியர் ஆசியால்

கருவுறும்பாக்கியத்தைக்கொடுத்து இருக்கிறார்

• இவர் இதுவரை எங்கும் நாடி கேட்கவில்லை. இரு இடத்தில் கேட்டு

இவருக்கு சரியாக வரவில்லை.

• 24.01.2015 அன்று அகத்தியர் நீகடுக்கண் போடு பச்சை, சிவப்பு என்று

சொல்லி இதன் சூட்சுமம் விரைவில் ஒருவர் அறிவிப்பார் என்று

சொல்லியிருக்கிறார்.

• உடனே தற்செயலாக மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் பற்றி இவரிடம் சொல்ல நமது ஜீவ நாடி உண்மை

என்று இவர் மனதில் பட உடனே ஸ்ரீஸ்கந்த உபாசகரைத் தொடர்பு

கொண்டார்.

• ஸ்ரீஸ்கந்த உபாசகரும் முருகனிடம் உத்தரவு கேட்க என் சீடனின்

சீடனிவன் உடனே படி என முருகனும் உரைக்க ஸ்ரீஸ்கந்த உபாசகரும்

இவருக்கு ஜீவ நாடி படித்தார்.

• ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கும் ஜீவ நாடியை பொதிகை மலையில் வைத்து

வர வேண்டும் என்ற உத்தரவு வர அதற்கு தகுந்த நபர் மும்பை

கணேசன்தான் என எண்ணி மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம்

மும்பை கணேசனிடம்ஸ்ரீஸ்கந்த உபாசகர் பற்றியும்ஸ்ரீஞானஸ்கந்தர்

ஜீவநாடி இதுவரை நடத்தி வந்த அதிசயங்கள் பற்றியும் சொல்ல நான்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் பொதிகை செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்று

மும்பை கணேசன் சொல்ல இத்தனை அதிசயங்களை அந்த அகத்தியரும்

முருகப்பெருமானும் நடத்தி இருக்கிறார்கள். இதுதான் ஜீவ நாடி படித்த

பிண்ணனி ஆகும்.

• நாடியில் முருகன் உரைத்த பின்பே இந்த தகவல்கள் மும்பை கணேசன்

அவர்களால் பகரப்பட்டது. அதன் முன்பே இத்தனை ரகசியங்களை

முருகன்ஜீவ நாடி மூலம்உரைத்து விட்டார்.

ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ்ஓங்கட்டும்!!!!!!!!!!

திங்கள், 19 ஜனவரி, 2015

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 23 !




  ஒரு 70 வயது மதிக்கத்தக்க தம்பதிகள் நீண்ட முயற்சிக்கு பின்பு 

என்னிடம் வந்தவர் இருதய ஆபரேசன் செய்து உயிர்பிழைத்தவர் மூலம் 

வந்தார்கள். அவருக்கு ஜீவநாடியில் வாக்கு தந்தார் முருகப் பெருமான். 

அதில் சுவராஸ்யமான பல விஷயங்கள் வந்தது. 

“கந்த வடிவேலனது நாமம் கொண்டான்

சொந்தமாய் இரு பெயரு கொண்டவன் கேள் 

மந்தமாய் இக்காலம் இருந்தாலும் 

வந்தமாய் மூவான பட்டம் உண்டு”

   வந்தவர்கள் தனது பேரனுக்கு நாடி கேட்டார்கள். தங்களது பேரனுக்கு 

முருகனது நாமமா அதாவது தங்கள் பேரனது பெயர் முருகனது 

பெயர்களில் ஒன்றா? ஆம் சுவாமி. 

   அது சரி அவருக்கு இருபெயர் உண்டு என்கிறாறே முருகப் பெருமான். 

ஆம் சுவாமி வைத்த பெயர் கார்த்திக் கூப்பிடும் பெயர் அப்பு. இப்போது 

மந்தமான காலம்தான். ஆனாலும் இவன் மூன்று பட்டம் படிக்க வேண்டும். 

என்ன படிக்கிறார்? 

   சுவாமி MBBS படித்து பின்பு MS படித்து இப்போது ஒரு டிப்ளமோ 

மருத்துவத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். மிகச் மிகச் சரி. 

“குருவாரம் ஒட்டி இவன் 

குவலயத்தில் தோன்ற 

அன்னைக்கு ஆங்காங்கு வலிக்கும் 

தகப்பனுக்கு பித்தப்பை ஆகாதென்போம்”

   அடுத்தது நெற்றிப் பொட்டில் அடிக்கிறார் முருகப் பெருமான். இவன் 

பிறந்தது வியாழக்கிழமையா ஆம் சுவாமி. இவனது தாய்க்கு உடலில் பல 

இடங்களில் வலி வந்து கொண்டே இருக்கும் தந்தைக்கு பித்தப்பை ஆகாது 

என்கிறாறே முருகப் பெருமான்? எப்படி? இது நான்.

   

சுவாமி இவரது அன்னைக்கு உடலில் பல வலிகள் வரும். வைத்தியமே 

இதுவரை பலிக்கவில்லை. தந்தைக்கு பித்தப்பையில் கல் வந்து சீழ் பிடித்து 

விட்டது. அதை அகற்றி விட்டோம். இப்போது பித்தப்பை இவருக்கு இல்லை 

சுவாமி. இது அவர்கள். சற்று வியர்க்கத் தொடங்கியது வந்தவர்களுக்கு 

அந்த பையனின் தாய், தந்தையாரும் வந்திருந்தார்கள். எங்கும் இதுபோல் 

யாரும் இப்படிச் சொன்னது கிடையாது. சாட்சாத் முருகப் பெருமானின் 

வாக்கு என்றார் இவரது தந்தை. காரணம் இவரது பித்தப்பைக் கல்லைக் 

கண்டுபிடிக்கவே  மருத்துவர்களுக்கு பல வருடம் ஆனது. முருகப் 

பெருமான் எடுத்த எடுப்பிலேயே ஒரு நொடியில் நாடியில் சொல்லி 

      “மணக்கோலம் இதுவரைக்கு மில்லை

      இனிமேலும் சிலகாலம் பொறுமைதேவை

 முறையற்ற சண்டாள கன்யா தோஷம் 

உண்டுண்டு என்பதாலே 

பெண்களால் பீடை வரும் 

தொந்தரவு வரும் பொறு”

   இவருக்கு இதுவரைக்கும் திருமணம் ஆகியிருக்கக் கூடாது. ஆம் 

சுவாமி. தற்போது தான் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் சுவாமி. சரி நல்லது. 

ஆனாலும் சண்டாள கன்யா தோஷம் என்கிற தோஷம் இருப்பதால் சற்று 

சில காலம் பொறுமை தேவை. பெண்கள் வகையில் பல தொல்லைகள் 

வரும் என்கிறார் முருகப் பெருமான். அப்படி ஏதேனும் வந்ததா? இதுவரை 

இல்லை சுவாமி. சரி இனிமேல் கவனமாக இருங்கள். இந்த சண்டாள கன்யா 

தோஷம் இவருக்கு ஒரு சண்டாளியை மனைவியாக்க காத்திருக்கிறது. 

எனவே நன்கு பொருத்தம் பார்த்து மணம் முடிக்க வேண்டும். படிப்பு 

முடியும் வரை கூட சற்று பொறுத்து பின்பு முடிவு செய்யலாம். 

படிக்கின்ற இடத்தில் ஏதேனும் பெண்கள் சகவாசம் உண்டா என்பதையும் 

கண்டுபிடிப்பது நல்லது என்று சொன்னேன். சரி சுவாமி என்றார்கள். 

“வெளிநாட்டு யோகங்கள் 

விரும்பியே வரும் ஏற்கலாம் நட்பு”

   வெளிநாடு செல்ல வேண்டுமா? சுவாமி இந்த டிப்ளமோ வெளிநாட்டில் 

(US) தான் படித்து கொண்டிருக்கிறார். சரி சரி தொடரட்டும். வெளிநாட்டு 

யோகம் உண்டு. 

“படிப்பிலே பாங்கான வெற்றி 

பக்குவமாய் வந்து சேரும் 

பட்டம் பெறும் யோகம் 

உண்டுண்டு ஆனாலும் 

அடிமை பணி கொள் 

முப்பான மூன்று பின்பு 

சுயமாகலாம் சொல்”

   படிப்பில் வெற்றி வந்து விடும். பட்டம் பெற்று விடுவார். சில காலம் 

ஏதேனும் மருத்துவ மனையில் அடிமைத் தொண்டாக jobல் இருக்க 

வேண்டும். 33 வயது வரை சுயதொழிலோ மருத்துவமனையோ 

வேண்டாம். சரிங்க சுவாமி. தற்போது அவருக்கு 29 வயதாகிறது. 

“முப்பானம் ஒட்டி இவனுக்கு 

முறையான திருமணமே 

காந்தர்வம் ஆகா 

உறவிலது மங்கையில்லை 

நங்கையில்லை 

பிற வகையில் வருமே”

   30 வயது ஒட்டி இவருக்கு முறையான நிச்சயித்த திருமணம் நடக்கும். 

காந்தர்வம் என்று சொல்லக் கூடிய காதல் திருமணம் கிடையாது. உறவில் 

பெண் கிடையாது. ஆம் சுவாமி இருந்தாலும் ஆகாது. பிற வகையில் தேட 

வேண்டும். எனவே நன்கு ஜாதகம் பார்த்து பொறுமையாக ஒரு இடத்திற்கு 

நான்கு இடம் பார்த்து செய்ய வேண்டும். தற்போது 29 வயது நடப்பதால் 30 

வயது ஒட்டி என்று வருவதால் இப்போதே அதற்குரிய ஆயத்தப் பணிகளில் 

ஈடுபடுவது நலம் என்றேன். அவர்களும் அதைத்தான் செய்கிறோம் 

“முருகனது ஆசியது 

முழுமையாய் உண்டு 

நல்லவன்தான் 

பொல்லானில்லையே”

   முருகனது ஆசி உண்டு என்கிறாறே முருகப் பெருமான் இவருக்கு 

முருகனைப் பிடிக்குமா? சுவாமி சஷ்டி விரதம் இருந்து வருகிறார் 

முருகனது தீவிர பக்தர் என்றார்கள். முருக பக்தர்கள் நல்லவர்கள் தானே 

எப்படி பொல்லாதவனாக முடியும் என்றேன். 

“விடைகழி கந்தனை 

குராவடிக் குமரனை 

அபிடேக ஆராதனை 

செய்து ஆடை கொடுத்து 

அர்ச்சித்து வணங்கிய பின் 

அன்புடனே அவயாம்பிகையை 

சேவி அங்கு ஒருவள் 

செந்நிற ஆடைதாங்கி வருவர் 

ஆசி வாங்கி பின் 

அறுபத்தியாரு பேர்க்கு 

அண்ணாமலை தனிலே 

மகேஸ்வர பூஜை செய் 

அன்னையும் தந்தையும் 

அபிராமி தரிசனம் 

காலசங்கார மூர்த்தியையும் 

கச்சிதமாய் சேவிக்க வேனிமே”

   பின்பு பரிகாரம் உரைத்தார் முருகப் பெருமான். திருவிடைக் கழியில் 

அபிசேக பூஜையும், மயிலாடுதுறை அவயாம்பிகைக்கு அர்ச்சனையும், 66 

பேருக்கு திருவண்ணாமலையில் மகேஸ்வர பூஜையும், தாய், தந்தை 

இருவரும் திருக்கடையூர் தரிசனமும் செய்ய வேண்டும் என்றார் முருகப் 

பெருமான். இதை செய்தால் எல்லா நலமும் வரும் என்றார். சொன்ன 

உடனேயே இவரது தாய், தந்தையர் தனது 60ஆம் கல்யாணத்தை 

திருக்கடையூரில் நடத்த திட்டமிட்டுருப்பதாகவும் அதற்கு முருகனது ஆசி 

கிடைத்து விட்டதாகவும் குதூகலித்தார்கள். இவர்களை அழைத்து வந்தவர் 

பெருமை தாங்காமல் ஐயா தங்களால் தான் இருதய ஆபரேஷன் மூலம் 

உயிர் பிழைத்தேன் என்று கண்ணீர் விட்டார். இவரைப் பற்றி ஏற்கனவே 

கன்னிமார் பூஜை செய்ததை எழுதியிருக்கிறேன். வியப்பில் ஆழ்ந்து 

விழுந்து வணங்கி விடை பெறும் நேரத்தில் பெரியவர் ஐயா எனக்கு 70 

வயதாகிறது எனக்கும் முருகன் நாடி படிக்க வேண்டும் என்றார். 

சுவடியைப் பிரித்தேன் அதிர்ந்துப் போனேன். 

                                           ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!


அதிசயம்  தொடரும்............

புதன், 14 ஜனவரி, 2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

கௌமாரப்பயணம் வாசகர்கள் அனைவருக்கும்  எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சனி, 10 ஜனவரி, 2015

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?



இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:



பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு
ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான்
இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும்,
பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத்
போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில்
வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என
கூறுவோம்.



இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே
அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை
அப்புறம் தான் கோயில் உருவாகும்.நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.


அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான்
திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக்
செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில்
இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு
செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக்எனர்ஜி.



மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து
கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு
(இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது
செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி
பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.


அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே
செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு
கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு
10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.


அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை
ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம்
(பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ
(சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.



இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.



கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா
தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு
செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை
திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த
அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு
சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.



கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும்
இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே
புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல்
இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.



கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும்
அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன்
பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம்
செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.



அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு
நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான்
காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின்
தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன்
படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான்
கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன்
என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு
விஷயம்.


இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக
அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.


சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம்
இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை
பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும்
கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு
அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன்
வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

வியாழன், 1 ஜனவரி, 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 22 !





   நாடி ஜோதிடம் என்றாலே ஒரு வித மோகம் ஏற்படவே செய்கிறது.

சாதாரணமாக ஜாதகம் பார்த்து பலன் சொல்வதற்கும் நாடி பார்த்து பலன்

தெரிந்து கொள்வதற்க்கும் என்ன வித்தியாசம் எனில் ஜாதகம் பார்ப்பவரின்

தெய்வ பலம், ஆன்ம பலம், ஞானம், ஜோதிட அறிவு ஆகியவற்றைப்

பொறுத்து பலன் அமைகிறது. ஒருவர் சொல்லுவார் அப்படியே நடக்கும்.

அதே ஜோதிடர் மற்றொருவருக்குச் சொல்லுவார் அது அப்படியே

நடக்காமல் போய்விடும். காரணம் அது ஜோதிடரிடம் எந்தக் குறையும்

கிடையாது. ஜோதிடம் பார்க்க வருபவரின் கர்ம வினையே காரணம்.

அதனால்தான் 1+2=3 எனும் Forumula வின்படியெல்லாம் ஜோதிடத்தில்

அரிதியிட்டுக் கூறமுடிவதில்லை. அப்படி பலிக்காமல் போனவர் ஜோதிடர்

பொய் என்கிறார். நன்கு பலித்து நலன் அடைந்தவர் ஜோதிடத்தையும்,

ஜோதிடர்களையும் தெய்வமாகப் பாவித்துக் கொண்டாடுகிறார். இந்தக் கதை

   நாடியில் பலன் சொல்லும் போது ஜோதிடராக இருக்க வேண்டிய

அவசியம் இல்லை. அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் கூட போதுமானது.




அந்த நாடியில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை படித்து விளக்கும்

மீடியமாக, Translator ஆகத்தான் ஜோதிடரின் நிலைமை இருக்கிறது. இவரை

ஜோதிடர் என்று கூட சொல்ல முடியாது காரணம் இவர் பலன்

சொல்லுவதில்லை. ஏதோ ஒரு முனிவர் சுவடியில் எழுதி வைத்ததை

படித்து அதை தெரிவிக்கிறார் என்பது மட்டுமே இவரது பணி. எனவே

இவரை மீடியேட்டர் என்று சொல்லலாம். ஆனால் இந்த முறையான நாடி

ஜோதிடத்தில் பல்வேறு ஏமாற்று வேலைகள் இருப்பதால் மக்கள் மரியாதை

குறைவாகப் பேசுகின்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். எனவே அதைப்

பற்றி எழுதுவது எமது பணியல்ல. அவரவர் அனுபவத்தைப் பொறுத்து

பலன் நடக்கும் விதத்தைப் பொறுத்து நம்புவதும் நம்பாமல் போவதும்

அவரவர் பொறுப்பு. என்வேதான் அடியேன் கூட இதைத் தொழிலாகச்

கொள்வதில்லை. நான் சத்தியமாக ஜோதிடன் கிடையாது. அதாவது

ஜோதிடத் தொழில் இல்லை.

 

ஆனால் இதில் எந்தவித வரையறுக்கும் விஷயங்களுக்கெல்லாம்

உட்பட்டதல்ல ஜீவநாடி. ஜீவநாடி என்றால் ஓலைச்சுவடி என்று மட்டும்

அர்த்தம் கிடையாது. ஜீவநாடியில் எதுவுமே எழுதப்பட்டு இருக்காது. ஒரு

சாதாரண வெறும் தாளில் கூட என்னால் ஜீவநாடி படிக்க முடியும்.

சுவடிதான் தேவை என்பதில்லை. இது சித்தர்களின் வாக்கு.



சித்தர்களுக்கெல்லாம் சித்தரான முருகப் பெருமானின் வாக்கு. இது ஒரு

வகையான சித்தி. இதை விலை கொடுத்து வாங்க முடியாது. என்னிடம்

நான்கு ஜீவநாடி சுவடிகள் இருக்கின்றன. எல்லாமே வெறும் எழுதப்படாத

ஓலைகள் தான். மிகச் சாதாரண ஓலைகள் தான். ஆனால் ஒரு சுவடியில்

கர்ம காண்டம் மட்டும் வரும். அதை நான் யாருக்கும் படிப்பதில்லை.



இன்னொன்றில் ஞான காண்டம் மட்டும் வரும். மீதமுள்ள இரண்டு

சுவடிகளில் சாதாரண எதிர்காலப் பலன்களும், பரிகாரங்களும் வரும்.

இதையெல்லாம் அனுபவித்து வருகிறேன். இது எப்படி சாத்தியமாகிறது

என்ற குழப்பம் எனக்கே ஆரம்ப காலத்தில் இருந்தது. ஆனால் ஒவ்வொருவர்

வாழ்விலும் மாற்றங்கள் நடப்பதைப் பார்க்கும் போது சில நேரங்களில்

எனக்கே பிரமிப்பாய் இருக்கிறது.

 

எழுதாத ஓலைச் சுவடிகளை கையில் எடுத்த உடனேயே என்ன

வருகிறதோ அதை மட்டும் படிப்பதே என் பணி. நான் ஜோதிடன் அல்ல.

எனக்கு ஜோதிடம் தெரியும் என்பதை “குருவருள் ஜோதிடம்” இதழில்

வருகின்ற ஆய்வு கட்டுரைகளைப் பார்த்தாலே தெரியும். ஆனால் நான்

ஜோதிடம் சொல்வதில்லை. ஜீவநாடி படிப்பது என்பது சித்தர்களோடும்,

முருகப் பெருமானோடும் உரையாடும் கலை. அதில் ஆத்ம திருப்தி

உண்டாகிறது.  அதில் இறைகாட்சி கிட்டுகிறது. வாக்கிலே வகை

வகையான வருங்கால நிகழ்ச்சிகள் வெளிப்படுகிறது. வந்தோரெல்லாம்

வாழ்த்துகின்ற நிலை கிட்டுகிறது.

 


எது எப்படி இருந்தாலும் ஆர அமர நாடி படிக்கும் வாய்ப்பு

கிட்டுவதில்லை. என்னை பல வருடங்களாக தொடர்ந்து தொடர்பு

கொண்டிருப்பவர்களுக்கு கூட நாடி படிக்க முடியவில்லை. எனவே

வாசகர்கள் வருத்தப்பட வேண்டாம். நாடிக்கு நாள் கேட்டு தொடர்பு

கொள்வதைத் தவிர்ப்பது நலம் என்ற வேண்டுகோளை தங்களுக்கு

வைக்கிறேன். பணிச்சுமை காரணமாக இப்போது அனைவருக்கும் நாடி

படிக்க முடியாது என்ற வருத்தமான செய்தியை உங்களுக்கும் சொல்லிக்

கொள்கிறேன்.  எனதருமை வாசகர்கள், எனது அபிமானிகள், எனது

அன்பர்கள் என்னைப் புரிந்துக் கொண்டு மன்னிப்பார்களாக! வாய்ப்பு

முழுமையாக வந்த பின்பு முறையான அறிவிப்பை “குருவருள் ஜோதிடம்”,

“திருவருள் சக்தி” இதழ்களில் வெளியிடுகிறேன். அதுவரை அந்த கந்தனை

பிரார்த்தனை செய்யுங்கள். காத்திருங்கள் காலம் நிச்சயம் கனியும்.

 

 என் அருமை வாசகர்களுக்கு உதவமுடியவில்லை என்ற வருத்தத்தின்

மேலீட்டால் தான் நாடி மூலம் சனி வக்ர நிவர்த்தி இராகு/கேது பெயர்ச்சி

புத்தகமும், சனிப்பெயர்ச்சி பலன்கள் புத்தகமும் எழுதியிருக்கிறேன்.

இரண்டுமே இப்போது விற்பனையில் இருக்கிறது. வாங்கி பலன்

அடையுங்கள். அதில் சொல்லப்பட்டுள்ள ஆலயப் பரிகாரங்களை அன்புடன்

கடைபிடியுங்கள். வாய்ப்பு நிச்சயம் வரும். அறிவிப்பு வரும். விரைவில்

வரும். அது முதல் அனைவரும் என்னைச் சந்தித்து நாடி கேட்டுக்

கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்.



   அமாவாசையில் நமது ஞானஸ்கந்த மூர்த்தி பூஜையில் கலந்து

கொண்டு ஆலயத்தை 27 முறை வலம் வாருங்கள். அருள் வாக்கிற்காக

தயவு செய்து ஆலயம் வர வேண்டாம். 500க்கும் அதிகமான பேர்கள்

வருகிறார்கள். அதில் 20 பேருக்கு மட்டுமே நாடியில் வாக்கு வருகிறது.

மீதமுள்ள 480 பேரும் ஏமாற்றமடைகிறார்கள் எனவே ஏமாற வேண்டாம்

என்பதையும் இங்கு வெளிப்படுத்துவது என் கடமை.



  ஞானஸ்கந்த மூர்த்தியை அலங்கார கோலத்தில் கண்டு ஆலயத்தை 27

முறை வலம் வந்தாலே ஆயிரம் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றன

என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே நாடியில்

வாக்கு வரவேண்டும் என்பது வருகின்றபடி வரட்டும். அது அவரவர்

பிராப்தத்தைப் பொறுத்தது. அதில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு

ஏதுமில்லை. அதேபோல் ஆலயத்தில் இன்னும் தங்கும் வசதிகள்

செய்யப்படவில்லை. அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. எனவே

வெளியில் தங்கும் வசதி, போக்குவரத்து வசதியை தற்போது தாங்களே

செய்துக் கொள்வது மிக்க நலம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எனது பணி வாரம் முழுவதும் விடுப்பு இல்லாத பணி. ஞாயிறு மட்டும்

கிடைத்தாலும் அதிலும் ஆயிரம் அலுவல்கள் வந்துவிடுவதால் நிச்சயமாக

நாடி படிக்க நேரமில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளும்

அவகாசம் இல்லை. எனவே முழு ஒத்துழைப்பு தர வேண்டுமாய் எனது

வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

எனது படைப்புகள், எழுத்துக்கள், ஆய்வுக் கட்டுரைகள், அனுபவங்கள்,

நாடி இரகசியங்கள், ஆண்டுப் பலன்கள், பெயர்ச்சி பலன்கள், தனிப்புத்தங்கள்

அனைத்தும் “அப்ஸரா பப்ளிக்கேஷன்ஸ்”  சித்தர் அடிமை ஸ்ரீ இராஜு ஐயா

அவர்கள் மூலம் வெளி வந்து கொண்டே இருக்கும். என்னை அதன் மூலம்

தொடர்பு கொள்ளும் வசதி மட்டுமே உள்ளது. எனது எழுத்துக்களைத்

தொடர்பவர்கள் தொடர்ந்து வாருங்கள். நிச்சயம் பல அபூர்வ

கட்டுரைகளைத் தொடர்ந்து தரப்போகிறேன். வாழ்க்கைக்குப் பயனுள்ள பல

இரகசியங்களைத் தொடர்ந்து சொல்லப் போகிறேன். இந்தக் கட்டுரையில்

என் மனதில் வாசகர்களுக்கு சொல்ல வேண்டும் என்று வந்ததைச் சொல்லி

இருக்கிறேன். புரிந்து கொள்பவர்கள் நிச்சயம் புரிந்துக் கொள்வார்கள். நாம்

நமது ஜீவநாடி இரகசியங்களை இனி தொடர்வோம்.

                          “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”

நன்றி!! நன்றி!!

ஸ்ரீஸ்கந்த உபாசகர்எழுதிய ஜீவ நாடி ரகசியங்கள்எனும்தொடர்அகத்தியர்

வனம்வலையில்ஆங்கிலத்தில்வெளியிட்டு வருவதற்கு நன்றி. அதன்

பதிவுகளை கீழே உள்ள இணைப்பில்படித்து மகிழலாம்.

http://agathiyarvanam.blogspot.in/2014/12/the-sri-gnanaskandar-jeeva-nadi.html

http://agathiyarvanam.blogspot.in/2014/12/the-sri-gnanaskandar-jeeva-nadi-part-2.html

http://agathiyarvanam.blogspot.in/2014/12/the-sri-gnanaskandar-jeeva-nadi-part-3.html

நன்றி!! நன்றி!!

வெற்றிகரமான 2ஆம்ஆண்டில்உங்கள்கௌமாரபயணம்!





பல வாசகர்கள் விரும்பிப்படிக்கும்இந்தகௌமாரபயணம்வலைதளம்  ஜனவரி 2015ல் வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

இந்த 2015ம்ஆண்டு        

முதல் ஸ்ரீஞானஸ்கந்தர்ஜீவநாடியில் பலன்அடைந்தவர்களின்

அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படும். அந்த அனுபவங்களை பலன்

அடைந்தவர்களே  எழுதுவார்கள். அந்த அனுபவங்கள் முழுவதும் உண்மை, 

நேர்மை, சத்தியம், மற்றும் தர்மத்தின் அடிப்படையிலேயே இருக்கும். மேலும்

முருகன் புகழைப் பாடி வரும். வழக்கம் போல் தங்கள் மேலான ஆதரவு

தொடரட்டும். அனைவருக்கும்ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

                              ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.