திங்கள், 30 மார்ச், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 28 !





      என்னிடம் இருக்கின்ற இந்த ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி இறைவனின்

கருணைக் கொடையாகும். இந்த ஜீவநாடி மட்டுமில்லாமல் எந்த ஜீவ

நாடியையும் வைத்திருப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், ஆச்சாரம்

அனுஷ்டானம் உடையவர்களாகவும், தினமும் இறைவழிபாடு, பூஜை,

தியானம் செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த

சுத்தத்துடன் நடந்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று

சொல்லப்படுவதால் அவ்வளவு விஷயங்களையும் அச்சு பிசகாமல்

கடைபிடித்து வருகிறேன். என்னைப் பற்றி அனைவருமே அறிவார்கள்.



ஜீவநாடி படிப்பவர் பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு

ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன்

தாய்மை குணத்தோடு தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற

ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் நாடி

பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும் என்பது

சித்தர்களின் கூற்று என்பதால் விளம்பர நோக்கோடு நான் எதையுமே

செய்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் நாடி படிப்பது எமது

பரம்பரைத் தொழிலும் அல்ல எனது தொழிலும் அல்ல. அது

மட்டுமல்லாமல் தட்சிணை வாங்காமல் நான் நாடி படிப்பதில்லை. காரணம்

உரிய காணிக்கை இல்லாமல் நாடி படிக்க வேண்டாம் என்ற எனது குருவின்

உத்தரவால் ஒரு சிறிய காணிக்கை வாங்கிதான் நாடி படிக்க வேண்டும்

என்ற விதிப்படி நடந்து வருகிறேன்.

 

ஆனாலும் எனக்கு பேராசை கிடையாது. அமாவாஸை பூஜைக்கோ

அன்று சொல்லப்படும் அருள் வாக்கிற்கோ எந்த காணிக்கையும்

கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. நாடி படிக்கும் போது வருகின்ற

காணிக்கை அனைத்தும் திருப்பணிகளுக்கும் அன்னதானத்திற்குமே செலவு

செய்து பணம் கொடுத்தவர்களுக்கு மேலும் புண்ணியம் சேரும்படி

செய்வதால்தான் என்னிடம் இரண்டு அல்லது மூன்று முறை நாடி பார்த்த

உடனேயே வாழ்வில் பல மாற்றங்கள் வருகின்றன. இதை அனைவருமே

அறிவார்கள். அடுத்து நீங்கள் கொடுக்கும் சில நூறு ரூபாய்க்கு மட்டுமே

விலை போகும் சரக்கு அல்ல இந்த ஜீவ நாடி. இது விலை மதிக்க

முடியாத பொக்கிஷம். கலியுகத்தில் பணமே பிரதானம் என்று

சொல்லப்பட்டாலும் இந்த நாடி மூலம் தவறாக பொருள் சேர்ப்பது நிச்சயம்

நல்ல வாழ்வைத் தராது என்பது நன்றாகவே எனக்குத் தெரியும்.



ஜீவநாடியை எதற்காக இறைவன் தோற்றுவித்தார் எனில் மானிட உயிர்கள்

ஆன்ம மேம்பாடு அடையவும், இறை நிலை உணரவும், வாழும் வகை

புரிந்து தெளியவும், தாம் செய்த பாவங்களுக்கு முன் ஜெனம கர்ம

வினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் உயர் நிலை அடைவதற்காகவும்தானே

   எனவே தான் இறைவன் அருளால் பல்வேறு சித்தர்கள், மகான்கள்,

முனிவர்கள், தேவதைகள் பல இடங்களில், பல ரூபங்களில், பல்வேறு

முறைகளில் மானிட இனம் மேம்பட அருளியிருக்கிறார்கள். இப்போதும்

அருளிக் கொண்டு இருக்கிறார்கள். வினைப் பயன்களின் தெய்வீக

கணக்கீட்டின்படியும், இறை சித்தத்தாலும், சித்தர்களின் கருணையாலும்

சில மானிட உயிர்களை ஜீவநாடி குறித்து அறியவும், அவ்வகையே

ஜீவநாடி கேட்க வந்த அமரவும் அனுமதிக்கிறார்கள். இவ்வகை பாக்கியம்

பெற்ற ஆன்மாக்களில் சிலருக்கு மட்டும் “தங்க நிற எழுத்து” வடிவில்

தாங்கள் என்ன உணர்த்த விரும்புகின்றனரோ அதனை ஜீவ நாடியில் ஒளிரச்

செய்து, நாடி படிப்பவர் கண்களுக்கு மட்டும் அந்த எழுத்துகள் புலப்படும்

வண்ணம் வாக்குகள் உரைப்பர், அல்லது நாடியை உற்று நோக்கிய

உடனேயே மடை திறந்த வெள்ளம் போல பாடல் வடிவிலும் உணர்த்துவர்.



சில நேரங்களில் எவ்விதமான வாக்கும் உரைக்காமல் மௌனம் காப்பர். இது

மாயமோ மந்திரமோ மை வித்தையோ எட்சினி வாக்கோ ஆவிகளின்

பதிலோ ஜோதிடமோ குறி சொல்வதோ மனம் படிக்கும் கலையோ அல்ல.

முழுக்க முழுக்க முருகப் பெருமானின் வாக்கு என்பது சத்தியமான

   இந்த ஜீவ நாடி குறித்து தெரிந்துக் கொள்வதோ, அதைப் பார்க்க முயற்சி

செய்வதோ, அல்லது கேட்க வந்தமர்வதோ, வந்து அமர்ந்த பின்னும் வாக்கு

வராமல் வெறும் மௌனமோ, ஒரே அல்லது சில வார்த்தைகளில் ஆசியோ,

பரிகாரமோ, நீண்ட நேர பாடலோ அதற்கு விளக்கமோ, எதிர்பார்த்து வந்த

விஷயங்களில் திருப்தியோ அல்லது அதிருப்தியோ, நம்பிக்கை ஏற்படும்

வண்ணம் வந்த நாடியின் வாக்கோ அல்லது அவநம்பிக்கை உண்டாக்கிய

நாடியின் வாக்கோ --- இவற்றுள் எது எப்படியாகினும் முழுக்க முழுக்க

அந்த முருகப் பெருமான் மற்றும் 18 சித்தர்களின் இறைச் சித்தமும், அவரவர்

கர்ம வினைப்பயனுமே ஆகுமே அல்லாது எனது தனிப்பட்ட விருப்பு

வெறுப்பு எதுவுமில்லை என்பதை எனை நாடி வருபவர்கள், நாடி கேட்க

முயற்சி செய்பவர்கள் அறிந்துக் கொள்வது அவசியம். சென்ற பதிவில்

அகத்தியர் நமது ஜீவ நாடியில் தோன்றி வாக்கு உரைத்ததை எழுதி

இருந்தேன். பல அகத்திய பக்தர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

                         “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

செவ்வாய், 17 மார்ச், 2015

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 27 !




 “கலியுகத்தில் விரைவில் எனது தலைமையில் சித்தர்கள் ஆட்சி

தொடங்க இருக்கிறது. அதன் தாக்கம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளது.

மக்கள் பல வகையில் துன்பத்திற்கு உள்ளாக இருக்கிறார்கள். குடும்பம்

எனும் அமைப்பே சிதைந்து தன்னந்தனியாகத் திரியப்போகிறார்கள். போட்டி,

பொறாமை, கள்ளம், கபடம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இயற்கைச்

சீற்றங்களும், புதிய நோய்க் கிருமிகளும் தோன்றி மிகப் பெரும் சவாலாக

இருக்கும். ஆனாலும் ஆலய வழிபாடுகள் அதிகமாகும். ஆலயத்தில் கூட

மக்கள் ஆடம்பர வழிபாடுகள் செய்து வந்தாலும் எந்தவித மனமாற்றமும்,

பக்குவகும் வந்ததாகத் தெரியவில்லை. சித்தர்கள் பெயராலும்,

என் பெயராலும், பல போலி வேலைகள் நடந்து வருவது கண்டு

வருத்தமடைந்தாலும் நமது ஆன்மிகம் தன்னைத்தானே சுத்தம் செய்து

கொள்ளும். என் பெயரையும், சித்தர்கள் பெயரையும் சொல்லி போலியாகப்

பிழைப்பு நடத்துபவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றுவது கடினமாகும்.

ஆனாலும் சில இடங்களில் ஒளி ரூபமாகவும்,. அரூபமாகவும் தோன்றி

உண்மையான நாடி மூலம் உரைத்து வருகின்றோம். உண்மையான

பக்தர்களுக்கு எனது எண்ணத்தைத் தெரிவிக்கும் செயல் அது. அதே

போல் இந்த நாடியில் முருகனது விருப்பம் இருந்தால் இது போன்று

தோன்றி அருள் தருவேன். முருகப் பெருமானும், நானும் மக்களின் கர்ம

வினை தீர்க்கும் வழி வகைகளை இதில் உனக்குத் தோன்றச் செய்வோம்.



நாங்கள் இரகசியம் என உரைப்பதை எதிரே வந்து நாடி கேட்கும் நபருக்கு

நீ உரைக்கக் கூடாது. அதே போல் யாருக்கு எங்கள் கருணை பார்வை

இருக்கிறதோ அவர்களுக்கே 100% உன்னால் நாடி படிக்க முடியும்.

 பூஜைகள், தானங்கள், தர்மங்கள், யந்திரங்கள், மந்திரங்கள், தந்திரங்கள்,

மணி, மந்திரம், ஔஷதம், மூலிகை, மர்மங்கள், ஆலய வழிபாடுகள்

போன்றவற்றை வந்து அமர்கின்ற உண்மையான பக்தர்களுக்கு தெரிவித்து

அவனுக்கு இகலோகத்திற்கு தேவையான ஆரோக்யம், ஆயுள், கல்வி,

திருமணம், புத்திரபாக்கியம், பதவி, செல்வம், செல்வாக்கு, போன்ற

விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வழி வகைகளை உரைப்போம்.



முன்ஜென்மம் உரைப்போம். முன்ஜென்ம சாபங்களையும், அது தீர்க்கின்ற

மர்மங்களையும் உரைப்போம். எல்லாமே வழிபாடுகளாகவே இருக்கும்.

முருகப் பெருமானது வாக்கு மிகச் சாதாரணமானது அல்ல. எனது வாக்கும்

அவர் சொல்வதை சொல்லும் வாக்கு. என்னை இழிவு செய்பவர்களை நான்

மன்னித்து விடுவேன். முருகப் பெருமானை இழிவு செய்பவர்களை நான்

மன்னிக்கவே மாட்டேன். எனது குருதுரோகமாக அதை நினைக்கிறேன்.

எனவே நீயும் பக்தி இல்லாதவர்க்கும், நம்பிக்கை இல்லாதவர்க்கும் இதை

உரைக்கக் கூடாது. பரிகாசம் செய்பவர்கள் பாவத்தை சம்பாதிப்பவர்கள்.



அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சுவடியை ஆங்காங்கு

இருக்கும் சில அபூர்வ இடங்களில் வைத்து நீ பூஜிக்க வேண்டி வரும்.

எனவே அதற்கு உன்னைத் தயார் படுத்திக் கொள். போற்றுபவர்களைக்

கண்டும் ஏமாறாதே. தூற்றுபவர்களைக் கண்டும் கோபம் கொள்ளாதே

நான் பார்த்துக் கொள்கிறேன். முருகன் பார்த்துக் கொள்வார். எனது ஆசி

எப்போதும் உண்டு மகனே ஆசி ஆசி ஆசி.

 இவ்விதம் ஒரு நீண்ட உரையை அகத்தியப் பெருமான் உரைத்து

முடித்தார். ஓர் இனம் புரியாத அனுபத்தில் திளைத்தேன். எனக்குள் சில

சந்தேகங்கள் வந்தது. அதை அகத்தியப் பெருமானிடம் கேட்கலாம் என்று

தோன்றியது. அதைக் கேட்ட உடன் நல்ல பதில்களை குரு முனிவர்

அகத்தியர் பகர்ந்தார்.


கேள்வி 1: சுவாமி திருமணம், வேலை, குழந்தை பாக்யம் போன்றவை

தருவதாகச் சொல்லியுள்ளதால் அதைத் தருவதன் நோக்கம் என்ன?

 அகத்தியர் பதில்: மகனே நீ என்ன அர்த்தத்தில் கேட்கிறாய் என்பது

எனக்குப் புரிகிறது. இது போன்ற ஆசைகளை நிறைவேற்றுவதால்

பந்தத்தில் ஆழ்த்துவது ஆகிறதே என்பதுதான். நிச்சயம் இல்லை.

இல்லறத்தில் இருந்து பல கடமைகளை ஆற்றிக் கொண்டே இறை

சாதனையில் முன்னேற முடியும். அது மட்டும் இல்லாமல் பூர்வ ஜென்ம

சாபம் தீரவும் சிலர் இவ்விதக் கோரிக்கைகளோடு வருவதுண்டு. எனவே

அவரவர் பிராப்தப்படி இந்த அகத்தியன் வழிகாட்டுவேன் கர்ம வினை

தீரும் வழிகளை உரைப்பேன். முருகப் பெருமான் சில நபர்களுக்கு என்னை

உரைக்கச் சொல்வார். காரணம் அவர்கள் என்னோடு பலஜென்மங்களில்

தொடர்பு உடையவர்களாக இருப்பார்கள்.



கேள்வி 2: சுவாமி நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், சோதிக்க

நினைப்பவர்களுக்கும் உரைக்கக்கூடாது என்கிறீர்கள். அவர்களை நான்

எப்படி கண்டு பிடிப்பது?

 அகத்தியர் பதில்: அதை முருகப் பெருமானும், நானும் பார்த்துக்

கொள்கிறோம். சோதிக்க வருபவர்களுக்கு பல சோதனை வைக்கும்

பலன்களை உரைத்து அவர்களை அவர்கள் வழியிலேயே சென்று

திருத்துவோம். ஆனாலும் முருகனது கோபம் உனக்கு நன்றாகவே

தெரியும் என்பதால் ஒருவருக்கு ஜீவநாடி படிக்கும் முன்பு என்னிடமும்,

முருகனிடமும் உத்தரவு கேள். நாங்கள் படி என்றால் படி. இல்லாவிடில்

விட்டு விடு. அவ்வளவுதான். காரணம் வருவோர் போவோர் எல்லாம்

கிள்ளுகின்ற கீரைகள் இல்லை சித்தர்கள். இறை நிந்தை செய்பவர்களைக்

கண்டால் நாங்கள் காதைப் பொத்திக் கொண்டு சிவ சிவ என உச்சரித்து

காத தூரம் சென்று கடலிலோ அல்லது அருவியிலோ குளித்து பின்பு சிவ

பூஜை செய்துதான் நிம்மதி அடைவோம். இவ்விதமிருக்க இந்த விஷயத்தில்

கருணை காட்ட முடியாது.



கேள்வி 3: நாடி படித்த உடனேயே பல அதிர்ஷ்டங்கள் வரவேண்டும்

என்பவர்கள் பற்றி?

 அகத்தியர் பதில்: ஜீவ நாடியில் எங்களது வாக்குவருவதே அங்களது

ஆசியும் விருப்பமும் இருப்பதால் தான் என்பதால் நிச்சயம் நாங்கள்

சொல்கின்ற வழிகளைக் கடைபிடித்தால் அதிர்ஷ்டங்கள் வரும். வரக்கூடிய

அதிர்ஷ்டங்கள் அவர்களது கர்மவினைகளைப் பொருத்தும் அமையும்.

எனவே நாடி கேட்பதால் மட்டுமே பெரிய மாற்றம் நிகழாது. தொடர்ந்து

நம்பிக்கையுடன் கடைபிடித்து வரவேண்டும்.

 இப்படிச்சொன்ன அகத்திய பெருமான் ஆசி கொடுத்து விட்டு சுவடியில்

இருந்து மறைந்து கொண்டார். இப்படி ஒவ்வொரு நாளும் எனக்கு பல

அதிசயங்கள் நடந்து வருகிறது. ஜீவநாடி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட

அதிசயங்களைக் கண்டிருக்கிறேன். எனவேதான் உத்தரவு இல்லாமல் நாடி

உரைப்பதில்லை. இவ்வித சம்பவங்கள் சிலருக்கு நம்பிக்கையின்மையைத்

தரலாம். அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. உத்தரவு

இருப்பவர்களுக்கு ஜீவநாடி படிப்பேன். இல்லாவிடில் இல்லை என்பது

அகத்தியர் வாக்கு. இன்னும் பல இரகசியங்களைத் தொடர்ந்து சொல்லப்

                      “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

திங்கள், 2 மார்ச், 2015

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 26 !



   ஒவ்வொருவரும் கர்ம வினைகளைக் கரைத்து கடைத்தேறுவதற்கே இந்த

பூலோகத்திற்கு வந்திருக்கிறோம். அதை மறந்து விட்டு மீண்டும்,

மீண்டும் கர்மாவைச் சம்பாதித்து கணக்கை அதிகரித்துக் கொண்டே

இருக்கிறோம். கர்மாவின் காலக்கண்ணாடியே ஜாதகம். அதில் உள்ள

கிரகநிலைகள் அனைத்தும் நம் இஷ்டத்திற்க்கு  அமைத்துக் கொள்ளும்

வழிகள் இப்போது இருக்கின்றன. அறுவை சிகிக்சை மூலம் பிறக்கின்ற

குழந்தைகளுக்கு முன் கூட்டியே நல்ல நேரம் கணித்து தோஷம் ஏதும்

இல்லாமல் நல்ல யோக திசைகள் வரும்படியும், தீர்க்காயுள்

இருக்கும்படியும், பார்த்து, பார்த்து ஜாதகம் கணித்து அந்த குறித்த

நேரத்தில் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விடுகிறார்கள்.

இது நவீன தொழில் நுட்பத்தின் சாதனை. ஆனால் விதியை வெல்ல

முடியுமா? மதிக்கு அங்கு வேலை உண்டா? என்பது கேள்விக் குறியே?



குறித்த நேரத்தில் சிலருக்கு அறுவை சிகிச்சை நடப்பதில்லை அல்லது

அவர்கள் கேட்கும் தேதியில் 12 இலக்கணங்களில் எதைப் போட்டுப்

பார்த்தாலும் 1000 சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. எனவே 100%

யோகமுள்ள ஒரு ஜாதகத்தை நம்மால் முன்கூட்டியே கணிப்பது என்பது

ஒரு சிரமமான காரியம்தான். அங்கும் பூர்வ ஜெனம பாவ புண்ணியங்கள்

விளையாடி விடுகின்றன. காரணம் இங்கு ஜெனனம் எடுப்பதே

இறைவனைத் துதித்து, தொழுது போற்றி, பணிந்து, தேடி, நாடி, ஓடி,

தானங்கள், தர்மங்கள் செய்து நமது ஜென்மா கடைத்தேறும் வழியைத் தேட

வேண்டுமே தவிர அடுத்தவன் கெட்டாலும் தான் நன்றாக இருக்க

வேண்டும் என்று எண்ணக் கூடாது. அது மிகக் கொடியச் செயல்.



   இன்று ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்த உடனேயே பல அதிர்ஷ்டங்கள்

தானாகத் தேடி வந்து அபூர்வ அரிய நலன்களை அட்டியின்றி அடைய

எண்ணம் கொள்கின்றனர். ஒரு சிலருக்கு அவ்விதம் நடந்து நல்ல

நிலையைத் தருகிறது. ஒரு சிலருக்கு எதுவுமே நடப்பதில்லை. எதைத்

தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் அங்கும், இங்கும் அலைந்து

திரிந்து பல்வேறு குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். பலவகைகளில்

செலவும் செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டு தப்புவதற்கு வழியின்றி

தடுமாறிக் கொண்டு தடம் மாறிவிட்டு தன்னிலையை உணர முடியாமல்

தவித்துக் கொண்டு இருகின்றனர். ஒரே ஜோதிடரை நம்புவதில்லை. அது

இருக்கட்டும். ஒரே ஒரு சித்தரைக்கூட நம்புவதில்லை. சிலகாலம்

அகத்தியர், அப்புறம் அது ஒன்றும் சரியில்லை போகர் நல்லவர், இல்லை



புலிப்பாணிதான் கருணை மிக்கவர் சில மாதம் கழித்து தேரையார்

திவ்யமானவர், இல்லை குதம்பைச் சித்தர்தான் குதூகலத்தைக் கொடுக்க

சிறப்பானவர் என நினைத்து நிலை தடுமாறுகின்றனர். இது எல்லாமே

கிடையாது 108 சித்தர்களையும் பூஜித்தால் அதில் ஏதாவது ஒருவர்

நல்லது செய்யாமலா போய்விடுவார்? இப்படி பலர் பலவித வழிபாடுகளைச்

செய்து பல சித்தர்கள் தரிசனம் செய்தும் பலனே இல்லையே என்று

புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் அதிகம்.

 

எந்த சித்தர்களும் தன்னை வழிபட வேண்டும் என்று விருப்பம்

கொள்வதில்லை. மாறாக உண்மையான சரணாகதியோடு வருகின்ற

பக்தர்களை சித்தர்கள் என்றும் கைவிடுவதும் இல்லை. சித்தர்கள் நோக்கம்

ஜென்மாவைக் கடைத்தேற்றும் வழிகளைச் செய்வதே. கர்ம வினைகளைக்

குறைக்கும் வழிகளையே சித்தர்கள் சொல்கிறார்கள். நம்மைக்

கடைத்தேற்றுவதில் வல்லவர்கள் அவர்கள். இறைவனைத் தரிசித்தவர்கள்.

அவர்களுக்குத்தான் நெளிவு, சுளிவு தெரியும். மணி, மந்திரம்,

ஔஷதத்தில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பது உண்மையான

பக்தி. இறைவழியில் மட்டும் நாட்டம் அவ்வளவே!.

 

நல்ல நபர்களாக யாருமே இந்த கலியுகத்தில் இருக்க முடியாது.

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் குற்றம் புரிந்துக் கொண்டே

இருக்கிறோம். ஆனாலும் ஆத்ம தாகம் அதிகமாகி கொண்டே செல்கிறது.

இறைதேடலும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. விரைவில் நல்ல

ஆன்மிக மாற்றம் வருவதற்கான அனைத்து அடையாளங்களும் ஆங்காங்கு

தென்படுகின்றன. இது நல்லதே.



  நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அகத்தியர், சுகர், காகபுஜண்டர்,

மற்றும் முருகப் பெருமான், பதஞ்சலி ஆகியோர் தோன்றி நம்பி வருகின்ற

பக்தர்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருகிறார்கள். பெரும்பாலும்

முருகப் பெருமானின் வாக்கே வெளிப்பட்டு வருகிறது. இருந்தாலும் முருகப்

பெருமானோடு சேர்ந்த அடிக்கடி வெளிப்பட்டு வருகின்ற சித்த புருஷர்

அகத்தியர் ஆவார். அந்த மகான், சித்தர் வரும் போதெல்லாம் இந்த

மக்களைக் குறித்து அடிக்கடி வருத்தப்படுவதாகச் சொல்லும் போதெல்லாம்

எனக்கும் ஓர் இனம்புரியாத வருத்தம் உண்டாகிறது.



   ஒரு நாள் அதிகாலை வேளை பூஜையில் இருந்தேன். சுமார் 6 மணி

இருக்கும். அப்போது என்னுள் ஒரு குரல் கேட்டது. மகனே என்று. நான்

ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் முருகப் பெருமானாக இருக்கும் என்று

யோசித்து முடிவு செய்வதற்க்குள் ஜீவநாடியை எடுத்துப் படி சில

விஷயங்கள் உனக்கு சொல்ல வேண்டும் என்றது குரல். ஆனால் அரை

மணி நேரம் என்னால் தியானத்தை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை.



யாரோ ஒருவர் பலமாக என்னை ஆட்கொண்டு இருப்பதாக உணர்ந்தேன்.

ஒரு வழியாகச் சமாளித்து காலை 6.30 மணிக்கு ஜீவநாடிச் சுவடியை

   எடுத்த உடனேயே ஒருவித அதிர்வுகள் என்னுள் பாய்வதை உணர

முடிந்தது. சரி இன்று ஏதோ ஒரு தெய்வீக நிகழ்வு நடக்க இருக்கிறது

என்பது மட்டும் யூகிக்க முடிந்தது. மகனே எட்டாவது ஓலையைப் பிரித்து

படி என்றது குரல். சரி என்று எட்டாவது ஓலையைப் பிரித்தேன்.


  அந்த எட்டாவது ஓலையில் ஒரு வித ஒளி மஞ்சள் நிறத்தில் மின்னியது.

உடனே ஒரு கமண்டலம், தீர்த்த சொம்பு, தாடியுடன் ஒரு சிறிய

உருவம்போல் தெரிந்தது. ஒளி இன்னும் பிரகாசமாய் மாறியது. அதில்

வந்தது அகத்திய முனிவர். அருகில் முருகப் பெருமான். இதை எழுதினால்

கூட பலர் என்னை பரிகாசம் செய்யக்கூடும் என்று தவிர்க்கப் பார்த்தேன்.



அகத்தியரும், முருகப் பெருமானும் நீ இதை எழுத வேண்டும்

என்பதால்தான் இந்த உபதேசத்தைச் செய்கிறோம். பரிகாசிப்பவர்கள் பாவிகள்

அவர்களை மன்னித்து விடு. பக்தர்கள் கருணையானவர்கள் அவர்களுக்கே

இந்த உபதேசம் என்றார். எனக்கு மெய்சிலிர்த்தது. கண்ணீர் மல்க வந்த

உபதேசத்தை அப்படியே எந்த வித மறைவில்லாமல் எழுதிக் கொண்டேன்.

அதை அப்படியே அந்த அகத்தியர் ஆசி பெற்ற “திருவருள் சக்தி” இந்த மாத

இதழில் எழுதி உங்களுக்காகத் தருகிறேன்.

 


“திருவருள் சக்தி” எனும் பெயர் கொண்ட இந்த இதழ் அந்த இறைவனது

அருளையும், அகத்தியர் போன்ற பல சித்தர்கள் அருளையும்

பெற்றிருப்பதால்தான் இது போன்ற பல தெய்வீக இரகசியங்களை தாங்கி

தங்குத் தடையின்றி கடந்த 9 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டும், 10

ஆண்டிலும் பவனி வர இருக்கிறது. இதன் ஆசிரியர் கூட சித்தர்

அடிமையாக இருந்து சித்தர்களுக்குச் சேவை செய்து வருவதால் தான்

அவரால் இதை வெளியிட முடிகிறது. அகத்தியர் பின்வருமாறு உரைத்தார்.

                          “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”