ஞாயிறு, 31 ஜூலை, 2016

கோவை R.J மெட்ரிக் பள்ளியில் நடந்த யோகா விழா காட்சிகள்

கோவை R.J மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அனைவருக்கும் யோகா எனும் விழா 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவில்
சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களும்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சிகளில் இருந்து சில படங்கள் நமது கௌமாரபயணம் வாசகர்களுக்காக....
                                     சிரவையாதீனம் சுவாமிகளுக்கு பாத பூஜை


குத்துவிளக்கேற்றுதல்
சிரவையாதீனம் அருளாசி

   ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கு பள்ளி நிறுவனர் மரியாதை செய்தல்

அனைவருக்கும் யோகா

சிரவையாதீனம் அவர்களுடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள்

மாணவ, மாணவியர்கள் யோகா செய்தல்

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கடும்!!

புதன், 27 ஜூலை, 2016

அனைவருக்கும் யோகா YOGA FOR ALL

கோவை R.J மெட்ரிக் பள்ளியில் 31.07.2016 ஞாயிறு அன்று அனைவருக்கும் யோகா YOGA FOR ALL  எனும் நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 8 மணி வரை நடக்க இருக்கின்றது. அந்த நிகழ்ச்சியில்


சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களும்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அருள் உரையாற்றுகின்றார்கள். ருதம்பர யோகா அறக்கட்டளையினர் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கின்றார்கள்.

                                                                 அழைப்பிதழ்


ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

28.07.2016 அன்று கௌமார மடாலயத்தில் ஆடிக்கிருத்திகை விழா

அழைப்பிதழ்



                                         சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

6.8.2016 அன்று சிரவையாதீனம் அவர்களின் 47 வது நாண்மங்கல நாள் விழா

அழைப்பிதழ்


                                       
                                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

22.08.2016 அன்று ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் முப்பெரும் விழா


                                   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 21 ஜூலை, 2016

ஸ்ரீஸ்கந்த உபாசகர் எழுதிய ஜீவ நாடி குருபெயர்ச்சி பலன்கள்


திருவருள் சக்தி ஆகஸ்ட் 2016 மாத இதழில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதிய குரு பெயர்ச்சி பலன்கள் ஜீவ நாடி பரிகாரங்கள் வெளிவர உள்ளது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதழ் கிடைக்கும். நமது கௌமார பயணம் வாசகர்கள் அனைவரும் ஜீவ நாடி பரிகாரங்களைக் கடைபிடித்து வாழ்வில் உன்னத நிலை அடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

                      ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி உரைத்தபடி செய்த தீப விழாவில் பைரவர் காட்சி

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அகத்தியர் திருமகன் அவர்களுக்கு அட்ட வீரட்டான தலங்களில் 2108 சக்தி கல தீபங்கள், வேல் தீபம், சிவலிங்க தீபம் ஆகியவற்றை ஒவ்வொரு பெளர்ணமியிலும் ஏற்றுமாறு வந்தது. அந்த அடிப்படையில் திருக்கண்டியூரில் சென்ற பௌளர்ணமியில் தீப வழிபாடு செய்யபட்டது. இந்த ஆடி மாத பௌர்ணமியில் திருக்கோவிலூரில் தீப வழிபாடு செய்யப்பட்டது. வழிபாடு துவக்கம் முதல் முடிவு வரை பைரவரின் வாகனமாகிய நாய் ஒன்று வந்து படுத்திருந்தது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அதன் படங்களில் சில



                         
                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

குடமுழுக்கின் போது கோபுரத்தின் மேல் வட்டமிட்ட கருடன்

துன்முகி ஆண்டு ஆனித்திங்கள் 30 ஆம் நாள் (14.07.2016) வியாழக்கிழமை  அன்று,  விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டம், சிறு நாகலூர் கிராமத்தில், எழுந்தருளியுள்ள அருள்மிகு யோகநாயகி உடனுறை ஆத்மநாத சுவாமி திருக்கோவில், திருநெறிய தமிழ்த்திருக்குடமுழுக்குப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா கடந்த 11.07.2016 திங்கள் 6.00 மணிக்கு ஐங்கரப்பெருமான் வேள்வியில் தொடங்கி, முறையாக மங்கள இசை, ஓதுவாமூர்திகள்    திருமுறை படல்களைப்பாடி, கோவை, சிரவை ஆதீன அருட்பணி மன்றம் கௌமார மடாலயத்தர்கள் நடத்திய  ,  முதலாம் கால வேள்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வியை   தொடர்ந்து, 14.07.2016 அன்று காலை  9.15 மணிக்கு,  சிரவை ஆதீனம், மயிலம் பொம்மபுர ஆதீனம் சுவாமிகள் ,திருவாடுதுறை திருவென்னைநல்லூர் தம்பிரான்சுவாமிகள், கள்ளக்குறிச்சி சைவசித்தாந்த பேரவை ஆகிய அனைவரும் கலந்து விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி விழாவை சிறப்பு செய்தார்கள். மேலும் இவ்விழாவிற்கு மகுடம் வைத்தாற்போல இறைவனின் திருவருளால், கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட்டது. இந்த தரிசனம் எங்கும் காண கிடைக்காத தரிசனம் என அருளாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இந்த நிகழ்வு,  சிறு நாகலூர் கிராமத்தில், எழுந்தருளியுள்ள அருள்மிகு யோகநாயகி உடனுறை ஆத்மநாத சுவாமி திருக்கோவில் அருள் ஆற்றல்  நிறைந்தது என்பதற்கான சான்றாக அமைகிறது எனலாம்.

கருடன் வட்டமிடும் அருள் காட்சி

விழாவில் குரு மஹா சந்நிதானங்கள்

அவிநாசி கோவில் சுப்பிரமணியர் திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வில் சிரவையாதீனம் அவர்கள்...... பரிவட்டம் கட்டிய அழகு என்னே அருமை....கண்கொள்ளாக் காட்சி....முருகா.....

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

செவ்வாய், 19 ஜூலை, 2016

முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளும் சான்றோர்கள்

முப்பெரும் விழா
1.சுப்ரமண்யர் திருக்கல்யாண நாள் விழா
2. புதிய கட்டிடத் திறப்பு விழா
3. புத்தக வெளியீட்டு விழா

 நாள்: 22.08.2016 திங்கட்கிழமை 
இடம்: ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கலந்து கொண்டு சிறப்பு செய்யும் சான்றோர்கள்
சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
தென்சேரிமலையாதீனம் தவத்திரு.முத்துசிவராமசாமி அடிகளார் அவர்கள்

        திருவண்ணாமலை மீனாட்சி நாடி Dr.W.J.A சுவாமிகள் அவர்கள்

         
             அனைவரும் வருக!           அருள் பெருக!!               ஆனந்தம் அடைக!!!


                          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்ட்டும்!!!

திருமணமாக வேண்டி இருப்பவர்களுக்கு ஜீவ நாடி கூறிய நற்செய்தி

நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 22.08.2016 திங்கள் அன்று காலை 7 மணிக்கு நடக்க இருக்கும் சுப்ரமண்யர் திருக்கல்யாண நாள் விழாவில் கலந்து கொண்டு அங்கு வழங்கும் காப்பு நாண் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள விரைவில் மணவாழ்க்கை அமையும் என்று ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்துள்ளது. சென்ற ஆண்டு காப்பு நாண் கட்டிக் கொண்ட பலருக்கு இந்த ஆண்டு விழா வருவதற்குள் திருமணம் நடந்துள்ளது என்பது மெய் சிலிர்க்க வைக்கும் செய்தியாகும். காப்பு நாண் பெற கட்டணம் இல்லை. யாருக்கு பிராப்தம் இருக்கின்றதோ அவர்களே இதைப் படிக்கவும் முடியும். உரியபடி வந்து இறையருள் பெறவும் முடியும் என்பது நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் அருள் மொழியாகும்.

                          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

முப்பெரும் விழா அழைப்பிதழ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் மந்தை-விலாங்குட்டை எனும் ஊரில் உள்ள ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 22.08.2016 திங்கட்கிழமையன்று முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கௌமார பயணம் வாசகர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

                                                                 அழைப்பிதழ்



அனைவரும் வருக!                       அருள் பெருக!!              ஆனந்தம் அடைக!!!

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 12 ஜூலை, 2016

ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருளுரை பகுதி-5


ஜீவ நாடி இரகசியங்கள் பற்றிய ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் அருள் நிரம்பிய ஆன்மீக உரையைக் காண பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.




ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 4 ஜூலை, 2016

ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருளுரை பகுதி-4


  • உங்களுக்கு ஜீவ நாடி கேட்கும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்?
  • ஜீவ நாடியில் வந்த ஒரு அதிசயம்
  • ஆன்மீக அனுபவங்களை அடுத்தவருக்கு உரைக்கலாமா?
  • குரு கிடைக்க என்ன வழி?
  • முருகன் திருவிளையாடல் உங்களுக்கு எப்போது?

எனும் அரிய இரகசியங்கள் அடங்கிய ஜீவ நாடி செய்திகள் பற்றிய ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் அருளுரை பாகுதி-4 ஐக் காண பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.





ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!