சனி, 28 பிப்ரவரி, 2015

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்!



"யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே"  - திருமூலர்.



கோடைகாலம் நம் அனைவரையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பறவைகள் நீர் இல்லாமல் வருடம்தோறும் தன்னுடைய உயிரை இழக்கின்றது.ஆனால் இந்த வருடம் நமது வலைபதிவு நண்பர்கள் அனைவரும் ஒன்று  சேர்ந்து முடிந்த அளவு பறவைகளுக்கு நீர் மற்றும் உணவளிக்க முயற்சி எடுப்போம்.

நன்றி - கௌமாரபயணக்குழு 


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்!





வியாழன், 26 பிப்ரவரி, 2015

அபூர்வ ஆற்றல்களை அள்ளித்தரும் அருள் சாதனங்கள் !



   தர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்)

அணிய வேண்டும். ‘பவித்ரம்’ என்றால் தூய்மை என்று பொருள்.

இயற்கையாகவே தர்ப்பை தூய்மையானது. பவித்ரம் என்பதே தர்ப்பையின்

பெயராக விளங்குகிறது என்கிறது வேதம். பவித்ரம் வை தர்பா என்று

சொல்லப்படுகிறது.

   பூமியின் ஆகர்ஷண சக்தியைத் தடுக்க தர்ப்பையால் ஆன ஆசனத்தில்

அமருவது உண்டு. ஆகாயத்தில் இருக்கும் இடையூறைத் தடுக்க விரலில்

தர்ப்பை வேண்டும். கடமையைச் செய்வதற்கான பொருட்களைத்

தூய்மைப்படுத்தவும் தர்ப்பையைப் பயன்படுத்துவர். அக்னி பரிசுத்தமானது

என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும்.

 
ஒரு புல்லைக் கொண்டு செய்யும் பவித்திரம் எனப்படும் தர்ப்பை

இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு

செய்யப்படும் தருப்பை தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள்

கொண்டு செய்யப்படும் தருப்பை அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார்

சடங்கு போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தருப்பை

கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.


தருப்பைப்புல்லைப் பொதுவாக பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்று

சேகரிப்பர். அப்பொழுது அதற்குரிய மந்திரங்கள் உச்சரிக்கப்படும்.

தர்ப்பைப்புல் கொய்யும் போது சொல்லப்படும் மந்திரம்:

“தேவானாம் பரிஷூதமஸி வர்ஷவ்ருத்தமஸி,

தேவபர்ஹிர்மாத்வாஞ்..விவயஹம் ருஹேம!” --- யஜுர்வேதம், தை.ஸ 1.1.2.1

   பொருள்: “ தர்ப்பமே, நீ தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறாய்,

மற்றும் மழையால் வளர்கிறாய். உன்னை அறுப்பதற்கு கத்தியை

வைக்கிறேன். உன்னை அறுப்பவனாயினும் நான் குறைவற்றவனாகவே

இருக்கவேண்டும். தர்ப்பமே, நீ நூற்றுக்கணக்கான தளிர்களாய் தளிர்த்து

இனிது தழைப்பாயாக” என்பது இதன் பொருள்.

 
 தருப்பையின் நுனிப்பகுதிதான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தருப்பை

மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது.

அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தருப்பை

அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது.


  பிரஹ்மனின் மூக்கில் இருந்து ஆண், பெண், அலி ஆகிய மூன்று

வடிவில் தர்ப்பை தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.

அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்ப்பை என்றும், மூலஸ்தூலம் உடையது

அலி தர்ப்பை என்றும், அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது

ஆண் தர்ப்பை என்றும் பிரித்து அறியப்படும்.

 
அடி தர்ப்பையில் பிரம்மனும் இடையில் சிவனும் முனையில்

விஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம்.

 
தேவ தர்ப்பணத்திற்கு நுனியாலும், மனித தர்ப்பணத்திற்கு மத்தியாலும்,

பித்ரு தர்ப்பணத்திற்கு மடித்து நுனியாகவும், தர்பணாதிகள் செய்ய

வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்துள்ளது.

 
ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணியாக இருக்க

வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ,

அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்ம

சாஸ்திரம். உபாசனையில் ஜபம் மற்றும் வேள்வியைச் செய்ய விடாமல்

தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத அரக்கர்கள், நம் கையில் உள்ள

தர்ப்பையைப் பார்த்ததும் விலகி ஓடுவர். முன்னோர் ஆராதனையில்

அரக்கர்களை விரட்ட, விருந்து படைக்கும் இடத்தை தர்ப்பையால்

துடைப்பது உண்டு. பூதம், பிசாசு, பிரம்மரஷஸ் ஆகியவை விரலில்

தர்ப்பையைப் பார்த்ததும் மிரண்டு ஓடி விடும். ஆகவே தூய்மை

வேண்டியும் இடையூறுகளை அகற்றவும், தர்ப்பை அணிய வேண்டும்.

தர்ப்பை அணியும் விரலை, ‘பவித்ர விரல்’ என்கிறோம்.

 
 மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று. ஆனால்,

மின்சாரத்தை விட பலமடங்கு செயல்திறன் கொண்டது தர்ப்பை.

விஸ்வாமித்ரப்புல் (லெமன் கிராஸ்) என்ற ஒரு புல் வகை இருக்கிறது.

தர்ப்பைக்கு நிகராக விஸ்வாமித்ரரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புல்

வகை எனக் கூறுவார்கள். இந்தப் புல்லினால் செய்யப்பட்ட இருக்கைகளை

உபயோகப்படுத்தும் போது கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


   தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்கிரகங்களையும்,

பாத்திரங்களையும் துலக்க வேண்டும். உபாசனைக்கு எல்லா விதமான

ஆசனங்களை விடவும் தர்ப்பாசனம் சிறந்தது.

 
 கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம்.

எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய

கிருமிகளால் கெடாமலிருக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள்.

திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

 
தருப்பைப் புல்லுக்குச் சப்ததோஷம், அற்பவீரியவிஷம், கபாதிக்கம்,

சர்வசுரம், தாகம், நமைச்சல் ஆகியவை போகும்.. மேலும் இந்துமத

வைதீகக் காரியங்களைச் செய்ய மிகவும் அத்தியாவசியமானது.

 
தர்ப்பைப்புல்  புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது.

இதற்கு, ‘அக்னி கர்பம்’ என்ற பெயரும் உண்டு. இந்த புல்லில் காரமும்,

புளிப்பும் இருப்பதால் செப்பு, ஐம்பொன் உலோக படிமங்களை இந்த

புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அப்படி செய்தால் அவற்றின் ஓசை

திறன் குறையாமல் இருக்கும்.

 
 தர்ப்பைப்புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது. நீருக்குள் பல

நாட்கள் கிடந்தாலும் அழுகாது. சூரிய கிரகணம் ஏற்படும்போது இதன்

வீரியம் அதிகமாக இருக்கும். இதன் காற்றுபடும் இடங்களில் தொற்று

நோய்கள் வராது.

 
 தர்ப்பைப்புல்லுக்கு மந்திர சக்தியை உள் வாங்கிக் கொள்ளும் தன்மை

மிக மிக அதிகம். இது தீய எண்ணங்களையும் கர்ம வினைகளையும்

நம்மிடம் ஒட்டாமல் இருக்க உதவுகிறது.

 
 சிறந்த புனிதமான தெய்வீக சக்தியைக் கொண்ட தேவர்களும்

பித்ருக்களும் நம் கண்களுக்கு தெரியாத ஒளி ரூபத்தில் வந்து அந்த

தர்ப்பையில் அமர்கின்றனர்.


  தர்ப்பையைத் தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு

காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும், பயன்படுத்துவார்கள். தர்ப்பை

உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்சலோகங்களில்

தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான்

கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில்

அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள். அதை நாடி சந்தானம்

அல்லது உயிர் கொடுத்தல் என்று சொல்வார்கள்.

 
உபாசனையின் போது கையில் ஒரு பிடி தர்ப்பையும், ஆசனமாக நான்கு

பிடி தர்ப்பையையும் வைத்து மந்திரம் சொல்ல எல்லா தேவதைகளையும்

தொடர்பு கொண்டு பல்வேறு செய்திகளை அறியலாம். நன்கு உரு ஏற்றிய

தர்ப்பையை எரித்துச் சாம்பலாக்கி அதில் சிறிது நெய் விட்டு மை போல

குழைத்து புருவங்களில் தடவ எல்லாவிதமான தோஷங்களும் விலகி

ஓடும். ஜன வசீகரம் ஏற்படும். பொதுவாக யாகங்களின் முடிவில் இதை

யாக ரட்சையாகச் செய்வார்கள்.

                            “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

திங்கள், 16 பிப்ரவரி, 2015

அபூர்வ ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள்



   மகாலஷ்மிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லஷ்மி

வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரி

சங்கில் நீர் விட்டு கும்பத்தின் மேல் வைத்து மந்திரத்தினால்

புஷ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான

தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம்

மகாபுண்ணிய தீர்த்தம் போல் பரிசுத்தமாக விளங்குகிறது. ஆலயங்களில்

பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அஷ்டோத்ரசத

நூற்றியெட்டு எனவும், அஸ்டோத்ரசகஸ்ர ஆயிரத்தியெட்டு எனவும்,

சங்குகள் இடம் புரிச்சங்குகளில் அடுக்கி வைக்கப் பட்டு பூஜித்த பின்

சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்குவால் அபிஷேகிக்கும் போது

மகாபுண்ணியம் கிடைக்கப் பெறுகிறது. அதில் பிரதான சங்காக விளங்கும்

வலம்புரி தீர்த்தம் பாவங்களைப் போக்கி தீவினை களைந்து நன்மை

அளிக்கிறது.


  திருக்கழுக்குன்றம் ஊருக்கு நடுவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குளம்-

சங்கு தீர்த்த குளம் ஆகும். இதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு

பிறக்கும். அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் – குளத்தின்

ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஒதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள்

அதை தட்டில் எடுத்து வைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள

சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும்

தண்ணீரிலேயே சென்றுவிடும். சாதாரணமாக உப்பு நீரில் கடலில் தான்

சங்கு பிறக்கும். இங்கு சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது.

மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது தோன்றும். இந்த

சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில்

வைக்கப்பட்டுள்ளது.

 
வலம்புரிச் சங்கு வழிபாடு காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன்

ஆலயத்தில் ஐநூறு ஆண்டுகளாக பூஜை செய்யப்படுகிறது.

   உலகிலேயே உயிர்வளம் செழித்த பகுதிகள் கடல்தான். உலகின் 70

சதவீதம் கடல். அங்குள்ள அனைத்து உயிரினங்களும் இன்னும்

முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படவில்லை. நிலத்தில்

உள்ளது போலவே கடலிலும் கணக்கற்ற உயிரினங்கள் ஒன்றை ஒன்று

சார்ந்து வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலான கடல் உயிரினங்கள் இடது

புறமாக வளரும் தன்மை கொண்டவை. இதனால் இடம்புரிச் சங்குகளே

பெரும்பாலும் உருவாகின்றன.

 
கடலில் இருந்து சேகரிக்கப்படும் இந்த சங்கு-சிப்பி என்பது ஒரு

உயிரினத்தின் கூடு. ஒவ்வொரு உயிரினத்தின் உடலுக்கு ஏற்பவே சங்கு,

சிற்பி, சோவிகள் வளர்கின்றன.  சங்கு-சிப்பிகளை அதில் வாழும் சிறிய

உயிரினமே தனது பாதுகாப்புக்காக உருவாக்குகிறது. நமக்கு

எலும்புக்கூடு போல், அவற்றுக்கு இந்தக் கூடு பாதுகாப்பு அளிக்கிறது.

கால்ஷியம் கார்பனேட், என்றழைக்கப்படும் சுண்ணாம்பைக் கொண்டு

ஒவ்வொரு உயிரினமும் தனது இனத்திற்கு ஏற்ற வகையில் சங்கு-

சிப்பிகளை உருவாக்குகிறது. உயிரோடு பிடித்து வரப்படும் இந்த

உயிரினங்கள் கொதிக்கும் நீரை ஊற்றி அழிக்கப்படுகின்றன. பிடிக்கப்படும்

நேரத்தில் இந்த சங்கு-சிப்பிகள் பெரும்பாலும் சொரசொரப்பாகவே இருக்கும்.

ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஊற்றி சொரசொரப்பு நீக்கப்படுகிறது.

 
பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும்,

தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார்.

“முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்

இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்-கடைச்

சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ

நாம் பூமி வாழ்ந்த நலம்”

 

 தமிழனின் வாழ்வில் மூன்று நிலைகளில் சங்கு இடம்பெறுகிறது.

1. பிறந்த குழந்தைக்கு வலம்புரிச்சங்கில் பால் புகட்டுவார்கள்.

2. திருமணத்தின் போது இசையுடன் கூடிய சங்கொலி இசைப்பர்.

3. பின்னர் இறுதியாக மரணத்தின் போது ஊதப்படும் சங்கு.

   இவ்விதம் பெருமைகள் பல பெற்ற சங்கு, உபாசகர்களுக்கு அதிக

அளவில் பயன்படும். ஏனெனில் லட்சுமி கடாட்சம் இல்லாமல் இந்த

உலகில் வாழ முடியாது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

எனவே உபாசகர்கள் குறைந்த பட்சம் ஒரு வலம்புரி அல்லது இடம்புரி

சங்கையாவது பூஜையில் வைத்து உபாசிப்பது நலம். சங்கு பூஜை செய்ய

விரும்புகிறவர்கள், சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால் அர்ச்சித்து,

மந்திரம் ஜபித்து, உபாசனை தெய்வத்தின் படம் அல்லது சிற்பத்துக்கு

அருகே வைத்து விட வேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன்,

காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில்

உள்ள நீரினை முதலில் வீட்டின் வாசற்படி மேல் தெளிக்க வேண்டும்.

இப்படிச் செய்வதால் லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில்

தங்கியிருப்பாள். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி

இலைகளப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை அடுத்த

நாள், காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச்

செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால், துளசி இலைகளை பிரசாதமாகச்

சாப்பிட, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.

   வீட்டில் பூஜை அறையில் சங்கை வைத்து வழிபடுபவர்கள் சில

வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

1. சங்கு லட்சுமியின் அம்சம், ஆதலால் கீழே வெறும் தரையில்

2. தட்டு அல்லது வாழை இலையின் மீது வெறுமனே வைத்தால்

வைக்கக்கூடாது. ஏதேனும் தட்டு அல்லது வாழை இலையில்

வைக்க வேண்டும்.

சங்கு அங்கும் இங்கும் ஆடும். எனவே பச்சரிசி அல்லது நெல்

பரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும்.

3. சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.

4. சங்கில் தண்ணீர் வைத்து துளசி போடலாம்.

5. பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்தினங்கள் வைக்கலாம்

அல்லது பூக்கள் வைக்கலாம்.

6. சங்கைப் பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் அபிஷேகம்

முடிந்தபின் பட்டுத் துணியால் நன்றாக சங்கைத் துடைத்து

வைக்கவும்.

   குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை எல்லா பூஜைக்கும் சொன்னால்

மந்திரம் விரைவில் சித்தியாகும். ஆனால் சங்கு பூஜை செய்யும்போது

மட்டும் பின்வரும் சங்கு காயத்ரி மூன்று முறை சொல்ல வேண்டும்.

“பாஞ்ச ஜன்யாய வித்மஹே

சங்க ராஜாய தீமஹி

தந்தோ சங்கப் ப்ரசோதயாத்”

   இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிய பின்பு நீங்கள் உபதேசம்

பெற்ற மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பிக்கலாம். உபாசகர்கள் சொல்லும்

ஒவ்வொரு மந்திரமும் சங்கில் உள்ள நீரில் பதியும். விபூதி, எலுமிச்சை

போலவே இந்த சங்கு நீரையும் அனைத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கவும்

பயன்படுத்தலாம். சங்கு மட்டுமல்லாமல் சோழிகளும் உபாசனையில்

வைத்து உரு ஏற்றி பிரஸ்னம் பார்க்கப் பயன்படுத்தலாம். சிறு சங்குகளைக்

கட்டி மாலையும் போடலாம். சங்கு எங்கு உள்ளதோ அங்கு துர் ஆவிகள்

ஒழிந்து விடும். அதே போல் செல்வம் செழிக்கும். எனவேதான்

கிராமங்களில் பசு மாட்டின் கழுத்தில் கூட சங்கு கட்டுவார்கள். சங்கின்

ஒலிக்குத் தீய சக்திகள் அஞ்சி நடுங்கும். மார்கழி மாதத்தில் பீடைகளை

அகற்ற விஷ்ணு தாசர்கள் சங்கு ஒலி எழுப்புவார்கள்.

   அடுத்து வெற்றிலையின் மூலம் உபாசகர்கள் பெறுகின்ற நலனைப்

பார்க்கலாம். வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும்,

காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம். இறைவனுக்கு எத்தனை

பதார்த்தங்கள் நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால்

அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை. பூஜை மற்றும் திருமணம்

ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக

வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும்

மகாலட்சுமியின் அம்சங்களாகும்.

   கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள்

ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலைகள்

பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

   வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 31.3% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்

சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின்,

ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய்

எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (chavicol) என்னும் பொருள் இருப்பதாக

கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து

ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல

நோய்களையும் குணப்படுத்தலாம்.

   உபாசனையின் போது வைக்கப்பட்ட வெற்றிலையை ஆவி பிடித்தவருக்கு

மென்று சாப்பிடக் கொடுக்க விரைவில் அந்த ஆவி அவரை விட்டு நீங்கும்.

உபாசகரால் உரு ஏற்றப்பட்ட வெற்றிலையைத் தரிப்பவருக்கு தரித்திரம்

நீங்கும். உபாசகர் பூஜை செய்த வெற்றிலையை இரவு தூங்கும் முன்பு

தரித்துக் கொள்ள மந்திர ஆற்றல்கள் உடலில் அப்படியே பதியும். நன்கு

உரு ஏற்றிய வெற்றிலையை பாக்கெட்டில் எடுத்துச் செல்ல எல்லாக்

காரியங்களும் வெற்றி அடையும்.

                           “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 25!


                    தைபூச திருவிழாவில் அலங்காரத்தில்  ஞானஸ்கந்தமூர்த்தி 

   இந்த “ஜீவ நாடி இரகசியங்கள்” எனும் தொடர் சத்தியத்தையும்,

தர்மத்தையும் தாங்கி வரும் தொடர், பல்வேறு ஆன்மிக அருளாளர்களின்

பாராட்டைப் பெற்ற தொடர். இதில் கலப்பு எதுவுமில்லை. நடந்தவற்றை

அப்படியே எழுதுகின்றேன். இது சுய விளம்பரம் அல்ல. அப்படி விளம்பரம்

செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. காரணம் நம்மிடம் நாடி

கேட்க யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்தால்தானே விளம்பரம்

வேண்டும். விற்காத பொருளுக்குத்தானே விளம்பரம் வேண்டும். உண்மை

உரைப்பதற்கு எதற்கு விளம்பரம். பல்வேறு தனியார் தொலைகாட்சிகளில்

இருந்து அழைப்பு வருகிறது. ஒரு மணி நேரம் புரோகிராம் செய்ய தொகை

கொடுத்தால் போதும், மிக முக்கிய தினசரி நாளிதழ்களிலிருந்து கூட

கேட்கிறார்கள். இது விளம்பரத் தொழில் அல்ல. முருகன் கருணை யாருக்கு

இருக்குமோ அவர்கள் தான் இதை 100% நம்பி பயன் அடைவார்கள்.

என்னைத் தேடி வர ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். திரும்பத்

திரும்ப வருகிறார்கள். காரணம் அவர்கள் உண்மையை உணர்ந்து

விடுகிறார்கள். பணம் என்பது அத்தியாவசியத் தேவைதான் என்றாலும்

சுவடியை வைத்துப் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் அளவிற்கு ஸ்ரீ

ஞானஸ்கந்த மூர்த்தி என்னை கேவலமாகப் படைத்து விடவில்லை. மிக

நன்றாகவே வைத்திருக்கிறார். எனவே விளம்பரத் தொடர் அல்ல இது.

வியாபாரத் தொடர் அல்ல இது. வேலனின் திருவிளையாடல்களை

வீதிதோறும் தெரிவித்து வாழ்வை வளமாக்கும் தொடர் என்பதைப்

தெரிவிப்பது எமது கடமையன்றோ!

   எதற்காகச் சொல்கின்றேன் என்றால் என்னிடம் வந்து நாடி கேட்கவே

எவ்வளவு சிரமம் என்பதை அறியாதவர்கள் இல்லை. அப்படி நாள்

கொடுத்து நாடி படித்து சொன்னாலும் ஆலயப் பரிகாரங்களைச்

செய்யாதவர்களும் இருக்கிறார்கள். பட்டு திருந்தியவர்களும் இருக்கிறார்கள்.

நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. காரணமே அதை முருகன்

பார்த்துக் கொள்கிறார். நம் வேலையை நாம் பார்ப்போம்.

   ஒரு திருமணமான புது தம்பதிகள் ஆறுமாத முயற்சிக்குப் பின்பு நாடி

படித்து தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்கள். புதுமணத்

தம்பதிகளை தரிசிப்பதே மிக நல்லது. திருமண கோலத்தில் இருக்கிற

தம்பதிகளை தரிசனம் செய்யத்தான் அனைவரையும் அழைக்கின்றோம்.

அப்போது இறையருள் அவர்களுக்குக் கிட்டுகிறது. மணக்கோலத்தில்

இருப்பவர்களை வெறும் கையில் சென்று பார்க்கக்கூடாது. அவர்கள்

மகிழ்ந்தால் நமது கர்மவினை குறையும். தற்காலத்தில் அது மாறி Gift

கொடுக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதுவும் தவறில்லை. எனவே

திருமணத் தம்பதிகளைக் கண்டால் சிறு குங்குமமாவது கொடுங்கள். சிறிது

தண்ணீர் கொடுத்து அவர்களது வயிற்றைக் குளிர்வித்தால் அந்த

இறையருள் கிட்டும். குறிப்பாக சுக்கிர பகவானின் ஆசி கிட்டும். இது

ஜீவநாடியில் வந்த ரகசியம்.


   அந்த தம்பதியருக்கு முருகப் பெருமான் பின்வருமாறு உரைத்தார்.

“ஆசியதுவும் உண்டு

அருளதுவும் உண்டு

அற்புத சந்தானம் வாய்க்கும்

ஆனாலும் சந்தான கண்டாதி

அபதோஷம் ஒன்றுண்டு

அடுக்கடுக்காய் பரிகாரம்

ஆண்டு இரண்டுக்கு

அவசியமும் செய்ய வேணும்

ஆதான பின்னே ஆக வேண்டும் கரு”

   உங்களுக்கு முருகனது ஆசி உண்டு. அவரது அருளும் உண்டு.

அற்புதமான சந்தானம் அற்புதமான குழந்தை வாய்க்கும். ஆனாலும்

“சந்தான கண்டாதி அபதோஷம்” என்கிற ஒரு மோசமான தோஷம் உண்டு.

எனவே அடுக்கடுக்கான பரிகாரங்கள் இரண்டு ஆண்டுகள் அவசியம் செய்ய

வேண்டும். அதன் பின்பே குழந்தைக்கு முயற்சிக்க வேண்டும் என்று

எட்டுப் பரிகாரங்களை முருகப்பெருமான் உரைத்தார். அந்த எட்டுப்

பரிகாரங்களை வெளியிட உத்தரவு இல்லை என்பதால் இங்கு தரவில்லை.

   இந்த எட்டுப் பரிகாரங்களும் சில ஆலய தரிசனங்கள், சில தானங்கள்,

சில பூஜைகள், சில மூலிகைகள் என இருந்தன. பெரிய செலவுகள்

இல்லாத அவர்கள் சக்திக்கு ஏற்ப செய்யக்கூடிய பரிகாரங்களாகவே

இருந்தன. சரி ஐயா என ஆசி வாங்கி விடைபெற்றுச் சென்றார்கள். அதற்குப்

பின் ஒருவருடம் வரை மீண்டும் அவர்களைப் பார்த்ததாக நினைவில்லை.

அமாவாசை பூஜைக்கும் வருவதில்லை.

   இந்த சம்பவம் மறந்தே போய்விட்டது. மீண்டும் ஒருநாள் தேதி

கேட்டார்கள். ஏற்கனவே என்னிடம் பார்த்திருந்தால் அவர்கள் யாராக

இருந்தாலும் உடனே படிக்க அனுமதி உண்டு என்பதால் வாருங்கள்

என்றேன். வந்து எனது காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார்கள்.

எவ்வளவு சொல்லியும் எழுந்திருக்கவில்லை. சரி என்னதான் நடந்தது

எனச் சொல்லுங்கள் என்றேன்.

   சுவாமி, தாங்கள் சொன்ன எட்டுப் பரிகாரங்களில் ஒன்றைக் கூட

நாங்கள் செய்யவில்லை. நாடி படித்த அந்த மாதமே கருவுற்றேன். மிகப்

பிரபல மருத்துவரிடம் காட்டி வந்தோம். மிக நலமாக இருக்கிறது

என்றார்கள். 7வது மாதத்தில் குழந்தையின் இருதயத்தில் சிறு கோளாறு

இருப்பதாகவும், பிறந்தால் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். அழகான

ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 5 நாளில் இருதயக் கோளாறால் இறந்து

விட்டது சுவாமி எனக் கதறினார்கள். விதி எப்படி விளையாடி இருக்கிறது

பார்த்தீர்களா வாசகர்களே, நாடி கேட்டால் மட்டும் போதாது. அதன்படி

நடக்கவும் முயற்சி செய்ய வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஊழ்வினை

உறுத்து வந்து ஊட்டும் என்ற சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது போல

விதி வழியே வினை சென்று விடுகிறது. சரி இனி மேலாவது நலம்

கிட்டுமா என்று சுவடியைப் பூஜித்துப் படித்தேன். எத்தனை முறை

முயற்சி செய்தும் ஆசி என்று மட்டுமே வந்தது. வேறு எதுவும் வரவே

இல்லை. சரி அந்த எட்டுப் பரிகாரங்களை செய்து விட்டு வாருங்கள்.

நிச்சயம் வாக்கு வரும் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன். இனி

நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

                           “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

அபூர்வ ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள்


 உபாசனையைப் பலர் பற்றி பலவாறு சொல்லி இருந்தாலும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எமது பதினாறு வயதிலிருந்து செய்த உபாசனையால் பெற்ற அனுபவத்தாலும், ஜீவ நாடி மூலம் கிடைக்கும் செய்திகளாலும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஏதெனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம். அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம். மனதை ஒருமுகப்படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை. யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார். அப்படி மனதை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. எனவெ ஏதாவது ஒரு உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர். 

விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அருள் சாதனங்கள் எனப்படும். நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான். அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. நவக்கிரகங்களின் கதிர் வீச்சை பிரதிபலிக்கும் நவ ரத்தினங்கள், எண்கள், வண்ணங்கள் மற்றும் மூலிகைகள் போலவே நமது அருள் ஆற்றலை பிரதிபலிப்பது அருள் சாதனங்கள் ஆகும்.

எனவெ அனைத்து அருள் சாதனங்களையும் பயன்படுத்தி ஆத்ம சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தியானம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்கஅருள்சாதனங்கள் உதவும். தியானம் என்பதுமனதை இறைவனிடம் வைத்துமனதில் இறைவனின் உருவத்தையேபதித்து,மந்திரஜபம் செய்வதுதியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்துதியானம் செய்வது சிறப்புஜன சந்தடியோவேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாதுஏதெனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும்பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்கிறது. எனவெ எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. 

ஜபம்செய்ய நதிக்கரைமலைபுனித தலங்கள்சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவைபசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம். ஜபம் செய்ய ருத்ராட்சம்மணிமாலைதாமரை மாலைபவழம் போன்ற மாலைகளும்முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன.  முக்கியமாகமனம்  இறைவனிடம் இருக்க வேண்டும்அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டுஉட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால்அது தியானமாகாதுஇத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது. இப்படி பண்ணிரண்டு தாரணை சேர்ந்து தியானமாக மாறுகிறது. கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.

1. உங்கள் உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்அதை ஜாதகம் மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ கண்டறிந்து கொள்ளவும். குரு மிக மிக அவசியம். குரு முறைப்படி உபாசிப்பதே மிக உயர்வானது. யாரை குருவாக எற்றுக் கொள்வது யாரிடம் தீட்சை பெறுவது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையான ஆர்வம் இருப்பின் குரு உங்களைத் தேடி வருவார்.யார் உங்களது ஆத்மாவை கவருகிறாரோ அவரை குருவாக எற்றுக் கொள்ளலாம். ஜீவ சமாதி ஆகியுள்ளவர்களை அதில் நீங்கள் விருப்பப்படுபவரை முதலில் மானசீக குருவாகக் கொண்டு அவரிடமே ஒரு உயிருடன் உள்ள குருவைக் காண்பிக்கச் சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.

2.உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை மணி முதல் மணி வரை முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும்நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தீவிர சாதனை புரிய பிரம்ம முஹூர்த்தத்தில் உபாசிப்பது விரைவான பலனைத் தரும். நடு நிசி பூஜையைத் தவிர்க்கவும்
3.வீட்டில்ஒரு           குறிப்பிட்ட இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுங்கள்அது பூஜை அறையாகவோவேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம்பூஜை அறை இல்லையென்றால்இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும்தலைகழுத்துமற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்கைகள் மடி மீது இருக்கட்டும்கண்களை மூடிக் கொள்ளவும்வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.

5. உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.

6. மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

 7. உங்கள் உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும்உங்கள் கோரிக்கை என்னவோ அதைப் பிரார்த்திக்கவும்இதற்கு சங்கல்பம் என்று பெயர். எவன் ஒருவன் சங்கல்பிக்கிறானோ அவன் சிந்திக்கிறான் பின்னர் செயல்படுகிறான் அதன் மூலம் சாதிக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவும்.

8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும்மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை  தெய்வத்திடம் வைராக்கியத்துடன் நிறுத்தவும்.
9.பின்புகுருவிடம்உபதேசம்பெற்றமந்திரத்தை ஜபம் செய்யவும்குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும்சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008, 10008, 10008 ஆக இருக்கட்டும்.
10. உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும்.
11. எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால்தான் பலன் தர ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

12. தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்

13. குருவிடம் அவ்வப்போது சத்-சங்கம் வைத்துக் கொள்ளவும். அது மேலும் உபாசனை சித்திக்கு வழி கொடுக்கும்.
ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று பகவத் கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 

13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
·         சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.
·         பூஜை அறைபசுக்கொட்டகைநதிதீரம்கடற்கரைஆசிரமம்ஆலயம்தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
·         கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும்தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும்அக்னி மூலை (தென்கிழக்குநோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும்மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும்ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும்கிழக்கும்வடக்கும்நிஷ்காமியமானது.
·         சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றதுபத்ராஸனம்முக்தாஸனம்மயூராஸனம்ஸித்தாஸனம்பத்மாஸனம்ஸ்வஸ்திகாஸனம்வீராஸனம்கோமுகாஸனம்சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம்பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
·         கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதிவெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்திசிவப்பு வஸ்திரம் வசியம்கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

இது சாத்வீக உபாசனை முறையாகும். இது மாந்திரீகம் அல்ல. எந்த ஒரு தவறான நோக்கிலும் பயன்படுத்தக்கூடது. மற்றவர்க்குச் செய்கின்ற தீமை திரும்ப வந்து உங்களையே தாக்கிவிடும். ஒரு சிலர் குரளி, எட்சினி, ஜின் போன்ற தேவதைகளை மந்திர உபாசனை மூலம் வசியப் படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள்அவா்களால் ஒருவரை ஆன்மிகத்தில் உயா்த்த முடியாதுஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாதுதெய்வீக அனுபவங்களைக் கொடுக்க முடியாதுஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள் போலவும்ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு உலா வருவார்கள்மோடி மஸ்தான் வித்தை செய்பவா்கள் யார்யட்சணி வித்தை செய்பவா்கள் யார்மந்திர சித்திகள் மூலம் அற்புதம் செய்பவா்கள் யார்உண்மையான மகான்கள் யார்சித்தா்கள் யார்தெய்வ அவதாரங்கள் யார்என்றெல்லாம் புரிந்து கொள்ள ஆன்மிக அறிவு வேண்டும்அனுபவ அறிவு வேண்டும்எனவே ஒரு சரியான குருவைத் தேர்ந்த்தெடுக்க பூர்வ புண்ணியமும் சிறந்த அனுபவமும் வேண்டும்.இதற்கு கீதையில் சொல்லியபடி நமது உள்ளத்தில் இறைவன் இருக்கிறார். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். நமது   பக்குவத்திற்கு தகுந்தபடி குருவைக் காட்டுகிறார். மாயை எனும் திரையால் தன்னை முழுதும் மறத்துள்ளார்.

எனவே முடிந்த அளவு மற்றவர்க்கு நன்மை செய்வோம். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பது வள்ளுவன் வாக்கு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் எல்லா உபாசனைகளுக்கும் பொருந்தும். முதலில் குருவிடம் பெற்ற மந்திரத்தை ஒரு லட்சம் முறை உச்சரித்து உரு ஏற்றிய பின்பே அருள் சாதனங்களைக் கையாள வேண்டும். ஒரே நாளில் ஒரு லட்சம் உச்சரிப்பது என்பது உடலில் காந்த சக்தியை திடீரென கூட்டி விடும் என்பதால் தினசரி 108 முறை காலை, மாலை உச்சரித்து உரு எற்றுவதே சிறப்பு. இப்போதெல்லாம் சுமார் ஒரு மணி நேரத்தில் எல்லா வகையான சித்தியும் கிடைத்து விட வேண்டும் என்று பலர் எதிர் பார்க்கிரார்கள் ஆனால் உபாசனை உயர்வான மார்க்கம், இது சித்தர்கள் கண்ட சாத்வீக முறை. பொறுமை மிக மிக அவசியம் தேவை. நாம் உச்சரித்த மந்திரங்கள் ஒரு லட்சத்தை தாண்டிய பின்னர் மேலே சொன்ன அருள் சாதனங்களைக் கையால் தொட்ட உடனேயே நம்மிடம் உள்ள சக்தி அலைகள் உடனடியாக அதில் பதிந்து அதை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு உடனடியான நல்ல பலன்கள் கிடைகின்றன. எனவேதான் மஹான்கள் தொட்டு ஆசிர்வாதம் செய்த விபூதி, எலுமிச்சை போன்றவைகள் அருள் நிறைந்து அதன் மூலம் பல்வேறு அதிசயங்கள் நடக்கின்றன. மந்திர உரு இல்லாமல் அருள் சாதனங்கள் வேலை செய்யாது. சாதரமாண விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதியில் நமது கை பட்டவுடன் உடனடி நற்பலன்கள் கிடைக்கிறது. அனைத்து விதமான அருள் சாதனங்களையும் விரிவாகப் பார்ப்போம். முதலில் விபூதியைப் பற்றிப்  பார்ப்போம். விபூதி குறித்து ஏராளமான தகவல்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் ஒரு உபாசகர் விபூதி என்கிற அருள் சாதனத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை குறிப்பாகப் பார்க்கலாம்.

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்அவை
1.   கல்பம்
2.   அணுகல்பம்
3.   உபகல்பம்
4.   அகல்பம்
கல்பம்:
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்பஞ்ச பிரம்ம மந்திரங்களை தக்க குரு மூலம் அறிந்து கொள்ளவும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தின் அன்று இந்த கல்ப விபூதி விற்பனைக்குக் கிடைக்கிறது என்ற தகவலை இந்த கட்டுரை எழுதும் போது ஒரு நண்பர் இந்த தகவலைச் சொன்னார்.
அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்துபின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
இதில் கல்பம் என்று சொல்லப்படும் வகையான விபூதியே மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம். வியாபர நோக்கில் எருமை போன்ற விலங்குகளின் சாணமும் விபூதி தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த விபூதியை மந்தரித்து கொடுத்தால் எந்த நற்பலனையும் உபாசகர்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே நீங்களே கல்ப விபூதியை தயார் செய்வதே சிறப்பு என்பது எனது கருத்தாகும். பொதுவாக விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. நல்ல ஒரு மஹானால் தொடப்பட்ட விபூதி எந்த ஒரு நறுமணமும் கலக்காமலே மிகச் சிறப்பான வாசனையைத் தருவதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.சில சித்தர்கள் அரிய வகையான மூலிகைகளை விபூதியில் கலந்தும் பயன்படுத்தி பல காரியங்களைச் சாதித்துள்ளார்கள். அவற்றையும் குரு மூலம் தெரிந்து கொள்வதே சிறப்பான முறையாகும்.
  விபூதியை ஐஸ்வர்யம் என்று சொல்வர்செல்வத்தை அளிப்பது விபூதிநம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், “ரட்சை’ என்ற பெயரும் விபூதிக்கு உண்டுவிபூதியில் உயர்வானது, “அக்னி ஹோத்ரம்’ செய்து கிடைக்கும் விபூதிஇது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும்அதற்கடுத்துபசுஞ் சாணத்தால் வரட்டி தட்டிபசு மாட்டின் கோமியத்தால், “விரஜா’ ஹோமம் செய்துவீட்டிலேயே மந்திரத்துடன் தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது.
புருவத்தின் நடுவில் ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக ஜோதி தெரிவதை யோகியர்கள், சித்தர்கள், மஹான்கள், முனிவர்கள், ரிஷிகள் கண்டு சொல்லி உள்ளார்கள். அவ்விடத்தில் தியானம் கைகூடி ஜோதி தெரிய வேண்டுமென்பதற்காகவே சந்தனம்குங்குமம்திருநீறுதிருமண் முதலியவற்றினை இடுவர்மந்திர உருப்பெற்ற விபூதி ஒருவரின் ஆத்ம ஜோதியைத் தரிசிக்க வைக்கும். இதுவும் ஒரு வகையான தீட்சை ஆகும்.
 இறைவன் படைப்பில் நமது மனித உடல் ஒரு கோவிலாகும். அதில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம்அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படவும் அதே சமயம்உள்ளிழுக்கவும் செய்யும்ஏதெனும் ஒரு பொருளை புருவ மத்தியின் அருகே கொண்டு வர ஒருவித ஈர்ப்பு தோன்றுவதை நாம் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
புருவ மத்தியில் விபூதியை வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை விபூதி சரியாகச் செய்கிறது. அதை  அப்படியே கண்களை மூடி தியானம் செய்ய உள் ஒளி பிரகாசமாகத் தெரியும். உபாசகர்கள் சூரிய நமஸ்காரத்தை தினசரி செய்வது மிக மிக அவசியம். குறிப்பாக ஜோதிடர்கள் உபாசனை இல்லாமல் ஜோதிடம் சொன்னால் மற்றவர்களது கர்ம வினை அவர்களைப் பாதிக்கும். எனவே உபாசனை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்.
  நமது கண்களுக்கு ஏராளமான சக்திகள் உண்டு. அதைவிடப் பார்வைக்கு அதிக சக்தி ஊண்டு. மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும்அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம்மனோ தத்துவம்ஹிப்னாட்டிஸம்மெஸ்மரிஸம் போன்றவற்றில் பார்வையும்,  எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறதுகண் திருஷ்டி என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதைத் தடுக்கவும் திருநீறு பயன்படும்.எனவேதான் விபூதியைக் காப்பு என்று சொல்கிறோம்.
புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பிட்யூட்ரி சுரப்பியைத் தூண்டச்செய்யும் இடமும் இந்த நெற்றி ஆகும் அந்த ஆக்ஞா சக்கரத்தைத் தியானம் செய்பவர்களுக்கு உடல்  வெப்பம் அதிகரிக்கும்அந்த சூடு தணிய  சந்தனம் பூசுவதும் வழக்கத்தில் உள்ளது..
விபூதி எல்லா வகையான தோசங்களையும் நீக்கும் தன்மை உடையது. சைவர்கள் விரும்பி அணியும் விபூதி எல்லா மதத்தினர்க்கும் நன்மை பயக்ககூடியது.அருள் மிக்க விபூதியை பின்வரும் விதிப்படி அணிவது சிறப்பானது.
வடதிசை அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுகீழே சிந்தாமல்வலது கையின் ஆள்காட்டி விரல்நடு விரல்மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்றுபூசிக்கொள்ளல் வேண்டும்எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும்முருக உபாசகர்கள் ஆறுமுகம்… ஆறுமுகம்… என்று ஆறு முறை கூறி அணிவது சிறப்பு. இதை அருணகிரினாதர் தமது திருப்புகழிழ் சொல்லி உள்ளார். அதை வரியார் சுவாமிகள் அடிக்கடி வலியுருத்திக் கூறியுள்ளார்.  நெற்றி முழுவதும் அல்லது மூன்று  கோடுகளாகத் தரிக்க வேண்டும்காலைமாலைபூசைக்கு முன்னும் பின்னும்ஆலயம் செல்வதற்கு முன்னும்இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்எனப்படும்மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்எனப்படும்.
மேல் கோடு சாம வேதம்நடுவில் உள்ளது யஜுர் வேதம்கீழே உள்ளது அதர்வண வேதம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது
ராஜ சின்னம் அணிந்தவனை எப்படி அரசன், “இவன் நம்மைச் சார்ந்தவன்’ என்று தெரிந்து கொள்கிறானோஅதே போலவிபூதி அணிந்தவனை சிவனும்திருமண் அணிந்தவனை விஷ்ணுவும்மஞ்சள் பூசிகுங்குமம் அணிந்த பெண்ணை மகாலட்சுமியும் இவர் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணி அனுக்ரகம் செய்கின்றனர்!
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றனஇந்த முறைப்படிதான் சிவன், அம்பாள், வினாயகர், முருகன் உபாசகர்கள் விபூதி தரிக்க வேண்டும்.
1.   தலை நடுவில் (உச்சி)
2.   நெற்றி
3.   மார்பு
4.   தொப்புளுக்கு (கொப்பூழ்சற்று மேல்.
5.   இடது தோள்
6.   வலது தோள்
7.   இடது கையின் நடுவில்
8.   வலது கையின் நடுவில்
9.   இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு

நவ நாகரிகமான இந்தக் காலத்தில் இம்முறைப்படி விபூதி தரிக்க இயலாதவவர்கள் முடிந்த அளவு உபாசனை செய்கின்ற பூஜா காலங்களிலாவது இம்முறைப்படி அணிந்து மற்ற நேரங்களில் புருவ மத்தியில் மட்டும் அணிந்து கொள்ளலாம்.
உபாசகர்கள் மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் முறைப்பபடி தயாரிக்கப்பட்ட விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதைப் பத்திரமாக ஒரு பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். அடுத்த முறை மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் அதே விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதே பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். இப்படியே செய்து வர வர ஜபம் செய்பவர்களது எண்ண அலைகள் விபூதியில் சேமிக்கப்படும். பின்பு ஏதேனும் ஒரு காரியத்திற்காக விபூதி கொடுக்கும் முன்னர் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்துக் கொடுக்க அந்த காரியம் அப்படியே பலிக்கும்.

நான் முன்பே குறிப்பிட்டபடி ஜபத்தை ஒரு முறை நதிக்கரையிலும், ஒரு முறை பசுத்தொழுவத்திலும், ஒரு முறை மலை உச்சியிலும், ஒரு முறை குருவின் பாதத்திற்கு அருகிலும். ஒரு முறை எதேனும் ஒரு சித்தரின் ஜீவ சமாதியிலும், ஒரு முறை கடற்கரையிலும் செய்வது மிக அதிக ஆற்றலைத் தரும். எங்கெல்லாம் சென்று ஜபம் செய்கிறோமோ அங்கெல்லாம் விபூதியை வலது உள்ளங்கையில் வைத்து உரு எற்றி வைத்துக் கொள்ளவும். இதன் நன்மைகள் கருதியே மேற்கண்ட இடங்களில் எல்லாம் ஆலயங்களை அமைத்து அற்புத வழிபாடுகளைச் செய்தார்கள் நம் முன்னோர்கள்.