புதன், 18 ஜனவரி, 2017

4ம் ஆண்டில் கௌமார பயணம்

ஜனவரி 2017 முதல் நமது கௌமாரபயணம்  நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நான்காம் ஆண்டில் மகத்துவம் பொருந்திய இறையருள் செய்திகளை வெளியிடும் இந்த கௌமாரபயணம் உண்மையிலேயே முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம் என்று பல ஆன்மீக அருளாளர்கள், குரு மஹா சந்நிதானங்கள், பல கௌமார பயண வாசகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 10 லட்சம் வாசகர்கள் நமது கௌமாரபயணத்தைப் படித்துள்ளார்கள் என்பது இந்த நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                     ஓம் ஸ்ரீஞானகந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!