திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம் !


29.08.2015 சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தது. அந்த விழாவை கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள்.
கௌமாரபயணம் வாசகர்கள் பலர் வந்து கலந்து கொண்டார்கள். சுமார் 1400 பக்தர்கள் இந்த திருக்கல்யாண வைபவத்தைக் கண்ணுற்றனர் அந்த கந்தன் அருள் பெற்றனர். நிகழ்வுகளில் சில படங்கள்:
கல்யாண கோலத்தில் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை
சிரவை ஆதீனத்துடன் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள்


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம் !




                                                 தவத்திரு.குமர குருபர சுவாமிகள்

வருகின்ற 29.08.2015 அன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்க இருக்கிறது. அந்த விழாவை கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் தலைமை ஏற்று சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பதையும் கௌமாரபயணம்
வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



                                          ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்  ஞானஸ்கந்தாஸ்ரமம்


நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அடிக்கடி இந்த கௌமார மடம் பற்றி வருவதும் இப்போது அதன் ஆதீனமே இந்த திருக்கல்யாண நிகழ்வைத் தலைமை தாங்கி நட்த்துவதும் அந்த முருகன் திருவிளையாடல் என்பது நிரூபணமாகிறது. கௌமாரப் பயணம் வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு சேர குரு அருளையும் திருவருளையும் பெற 29.08.2015 அன்று சனிக்கிழமை ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் வரும் படி அழைக்கப்படுகிறார்கள்.



ஈரோட்டில் இருந்து பவானி வழியாக அந்தியூர் வர வேண்டும். அந்தியூரில் இருந்து புதுக்காடு எனும் ஊரில் உள்ள மந்தை பஸ் ஸ்டாப் வர வேண்டும். மந்தையில் இருந்து விலாங்குட்டை எனும் ஊர் செல்லும் வழியில் மலைக்காரன் தோட்ட்த்தில் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. வாசகர்கள் இந்த வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

                         
                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஆடி அமாவாஸை அன்று 18 அடி வேலுக்கு அபிஷேகம் ! ! !





ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஆடி அமாவாஸை அன்று 18 அடி வேலுக்கு அபிஷேகம்14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள 18 அடி வேலுக்கு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதானையும் செய்யப்பட்டது. மீனாட்சி நாடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களைப் பற்றியும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் பற்றியும் ஏற்கனவே சித்தர்களால் எழுதப் பட்டிருக்கிறது.



அதனால்தான் நமது குருவைச் சந்தித்த உடனே ஒரு மாற்றம் வருவதை அனைவராலும் உணர முடிகிறது. முன் ஜென்மத்தில் சித்தர் பிறப்பாக இருந்த்ததாலும் இறை அருளால் ஜீவ நாடி படிக்கும் கலையை நமது குரு கைவரப் பெற்று இருக்கிறார். கௌமாரப் பயணம் வாசகர்களுக்க்காக ஒரு சில படங்களை இணைத்து இருக்கிறேன். நேரில் வர முடியாதவர்கள் இதை தரிசனம் செய்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைய குருவடி தொழுகிறேன்.



                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

திருமணம் ஆக ஜீவ நாடி உரைத்த அபூர்வ ரகசியம் !



 நீண்ட காலமாகத் திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுக்காடு கிராமம் விலாங்குட்டை மலைக்காரன் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில்  நிகழும் மன்மத வருடம் ஆவணி மாதம் 12 ம் தேதி (29.08.2015) சனிக்கிழைமை பௌர்ணமி திதியும்,அவிட்டம் நட்சத்திரமும், விஷ்டி கரணமும்,அதிகந்த யோகமும் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 7 மணிக்கு சிம்ம லக்கினத்தில் சுப்ரமண்யர் வள்ளி தேவசேனா திருமணம் கொங்கு முறைப்படி எல்லா வகையான சீர்களையும் செய்து மங்கல வாழ்த்துப் பாடி அருமைப் பெரியவர்களை வைத்து நடக்க இருக்கிறது.

 எவர் இந்த திருமணத்தைக் காண்கிறார்களோ அவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைவதோடு திருமண வாழ்வில் பெரிய நன்மைகளை அடைவார்கள் என்றும், நீண்ட காலமாகத் திருமணத் தடை உடையவர்கள் விரைவில் நல்ல இல்லற வாழ்க்கையை அடைவார்கள் என்றும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப் பெருமான் வாக்கு உரைத்து இருக்கிறார். அதே போல் இந்த வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர் விக்ரஹங்கள் வந்த உடனேயே நீண்ட காலமாகத் திருமணமாகாத ஐந்து நபர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுவரை கொங்கு முறைப்படி இறைவன் திருமணங்கள் நடத்தப்படவில்லை. முதன் முறையாக நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த திருமண நிகழ்வுகளைப் பற்றி கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி தவத்திரு குமர குருபர சுவாமிகளிடம் தெரிவித்த போது அவர் உளம் மகிழ்ந்து ஸ்ரீ ஸ்கந்த உபாசகரிடம் ஆசி கூறி அவரது அருளாசி இருப்பதாகத் தெரிவித்தார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.  எனவே இந்த திருமணத்தை அனைவரும் கண்டு ஆனந்தம் அடைந்து ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் அருளுக்குப் பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாளில் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் கரங்களில் விபூதி பெற்று அவரது ஆசியையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்




திருமண நிகழ்வுகள்

 முகூர்த்தக் கால் நடுதல்

 படைக்கலம் வைத்தல்

 கங்கணம் கட்டுதல்

 சீர் தண்ணீர் கொண்டு வருதல்

 சுப்ரமண்யருக்கு சீர் செய்தல்

 தெய்வானைக்கு சீர் செய்தல்

 வள்ளிக்கு சீர் செய்தல்

 ஆக்கை சுற்றிப் போடுதல்

 செஞ்சோறு அஞ்சடை கழித்தல்

 நிறை நாழி செய்தல்

 கணபதி வணக்கம்

 நாட்டுக்கல் வணங்குதல்

 சீர் வரிசையுடன் ஆலய வலம் வருதல்

 சிவன் பார்வதிக்கு பாத பூஜை செய்தல்

 மங்கல வாழ்த்து

 சுபமுகூர்த்தம்

 விரல் கோர்வை

 அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல்

 பரியம் செலுத்துதல்

 தாம்பூலம் கொடுத்தல்

 கல்யாண விருந்து

 புதுமணத் தம்பதிகள் பெண்வீடு செல்லுதல்

 மஹா தீபாராதனை

                                ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இனிய உதயம் ! ! !



அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் புதிய இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. அதில் நமது குரு நாதர்  ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கலை அரசு P.D.ஜெகதீஸ்வரன் அவர்களின் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் ஜீவ நாடி பரிகாரங்களோடு வெளிவந்துள்ளது. அதில் உள்ள ஜீவ நாடி பரிகாரங்களை நமது கௌமாரப் பயணம் வாசகர்கள் பயன்படுத்தி வாழ்வில் வளம் அடையலாம்.

அதேபோல் குரு நாதர் எழுதிய நூல்களின் விபரங்களும் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் குருவருள் ஜோதிடம் மற்றும் திருவருள் சக்தி ஆகிய மாத இதழ்களில் நமது குரு நாதர்  எழுதி வருகின்ற ஜோதிடம் மற்றும் ஆன்மீக கட்டுரைகள், ஜீவ நாடியில் வருகின்ற தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அதை இந்த இணையதளத்தில் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம். இந்த
வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குரு சேவையே
குமரன் சேவை.

                   

இணைய தள முகவரி: www.apsaraepublications.com

http://www.apsaraepublications.com/special.php

http://www.apsaraepublications.com/books.php

                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!