புதன், 30 டிசம்பர், 2015

2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் ஜீவ நாடி பரிகாரங்கள்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதிய 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் ஜீவ நாடி பரிகாரங்கள் ஜனவ்ரி 2016 திருவருள் சக்தி இதழில் வெளிவந்து தமிழகமெங்கும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது
இந்த புத்தகம் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும்.
வெளியீடு: அப்ஸரா பப்ளிகேசன்ஸ், சென்னை
http://www.apsaraepublications.com/
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

19ம் ஆண்டு மலர்க்காவடி விழா

27.12.2015 ஞாயிற்றுக் கிழமை அன்று மாநில முருக பக்தர் பேரவையின் 19ம் ஆண்டு மலர்க்காவடி விழா கோவை கணபதி அத்தனூர் அம்மன் கோவிலில் சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில்  மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதில் சில படங்கள்



                                       

                                     
  நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: கௌமார மடாலய உற்சவர் குமரகுருபரக் கடவுள் 
படம்: சிரவை ஆதீனம் அவர்கள் காஷ்மீர் பயணத்தின் போது தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர்கள்


ஓம் சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!

என்றென்றும் மாறாத அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்

கௌமார மடாலயத்தில் குரு பூஜை விழா

கோவை கௌமார மடாலயத்தில் 29.12.2015 செவ்வாய்க்கிழமை அன்று திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களின் 59ம் ஆண்டு குரு பூசை விழா நூல்கள் வெளியீட்டுடன் இனிதே நடந்தது. அதன் படங்களில் சில
குத்து விளக்கு ஏற்றும் குல விளக்குகள்

                                          குருபூஜை செய்யும் குரு நாதர்கள்
கொங்கு நாட்டின் ஆன்மீகத் தூண்கள்  
திருப்புகழ் திரட்டு நூல் வெளியீடு 
                                           சுப்ரமணிய சப்தசதி நூல் வெளியீடு
ஒளவையார் நூல்கள் ஆங்கிலப்பதிப்பு வெளியீடு
 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: கழுகு மலையில் மலர் மாலையிட்டு சிரவை ஆதீனம் அவர்களை வரவேற்கும் யானை

என்றென்றும் மாறாத அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஜீவ நாடி கலையரசு எழுதிய காலக்கண்ணாடி எனும் நூல்


மனிதர்கள் வாழும் சூழ்நிலைகளும், சூழும் சந்தர்ப்பங்களும் நாளும் பாவ புண்ணியம் பறை சாற்றும் கர்மாவிற்கு காரண காரியம் கற்பிக்கும் விதியாகி விட அவ்விதியின் சூட்சுமத்தை விரிவாய் உதாரண ஜாதகங்களுடன் விளக்கும் அற்புத அனுபவக் கற்பகக் களஞ்சிய நூல்தான் "ஞானம் அருளும் காலக் கண்ணாடி" ஆகும். நவக்கிரகங்கள் ஆளும் பன்னிரு இராசிகளும் 27 நட்சத்திரங்களும் கூறும் விஞ்ஞானமும் பல கோடி மனிதர்களை வேறுபடுத்தி ஆளுக்கொரு கணக்கை கூறுபடுத்தி வைத்தாலும், தன் உபாசனை சித்தியாலும், பலகால தவ சக்தியாலும், தீவிர பக்தியாலும், தேர்ந்த அனுபவ யுக்தியாலும் குருமார்களின் அனுகிரகத்தாலும், ஸ்ரீஞான ஸ்கந்தப் பெருமானின் அருளாசியினாலும் தன் இறை ஞானத்தால் விதியான காலக்கண்ணாடியை ஒவ்வொரு ஜோதிடரும் அறிய, கற்றுத் தெரிய, உலகோர்க்கென "ஸ்ரீஸ்கந்த உபாசகர்" "ஜீவ நாடி கலையரசு" திரு.றி.ஞி.ஜெகதீஸ்வரன் அவர்கள் படைத்த பொக்கிஷம் தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி". 
ஜோதிடம் பயில்வோர் பல அரிய, புதிய, நூல்களை வாங்கி கற்றுத் தெளிந்து, பல பயிற்சி வகுப்புகளில் பயின்று பார்த்து, புரிந்து, புலனாய்ந்தும் கூட பலன் கூறுவது மட்டும் வருவதில்லை என விழிப்போர் குறை தீர்க்க வாங்கி படிக்க வேண்டிய நூல்தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி" இந்நூலில் "திறமையான ஜோதிடரை உருவாக்கும் சூட்சும கிரக நிலைகள்" எனும் தலைப்பில் "ஜீவநாடி கலையரசு" அவர்கள் தெள்ளத் தெளிவாய் பலக்கோணத்தில் ஆய்ந்து, ஆராய்ந்து, உதாரண ஜாதகங்கள் மூலம் உறுதிபட விளக்கி, ஒருவர் ஜோதிடராகும் அமைப்பு எதுயென விவரிக்கிறார். ஜோதிடராக வரவேண்டி பலகாலம் முயற்சி மேற்கொள்வோர்கள் முதலில் தங்கள் ஜாதகத்தில் மேற்கூறிய அமைப்பு உள்ளதா என உறுதி செய்துக் கொள்ள உதவுவது தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி" 
திருமுகமாய் "கிரகங்கள் பேசுகின்றன" என்ற தலைப்பின் கீழ் அணிவகுத்து வரும் நவக்கிரகங்கள் கொங்கு தமிழ் எழில் கொஞ்சி தங்களை பற்றி தாங்களே பேசுவது போல கூறும் தகவல்கள் மிக எளிமையாக அருமையாக நவகிரகங்களை பற்றித் தெரியாத பல புதிய விஷயங்களை அறிய பெரிதும் உதவுகிறது. 
பொதுவாக ஜாதகத்தில் மறைந்து இருக்கும் புலப்படாத மிக நுண்ணிய சூட்சுமமான விஷயங்களை சில ஜோதிடர்கள் ஆராயாமல் அஜாக்கிரதையால் கவனிக்காமல் தவற விடுவதின் விளைவு, நம்பி நாடி வரும் மக்கள் பல வேளைகளில் துன்பச் சகதியில் சிக்கி, எதிர்பாராத துயரச் சம்பவங்கள் நிகழ்ந்த பின்னே புலம்பும் துரதிஷ்டம் காண முடிகிறது. இக்குறையை நீக்கவே பல்லாயிரம் ஜாதகங்களில் உள்ள வேற்றுமையில் உள்ள ஒற்றுமையை கண்டு ஆராய்ந்து துள்ளிய பலன்களை சொல்லிட, மூல நூல்களில் கூறும் நெறிமுறைகளை வகுத்து வகைப்படுததியுள்ளார். திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள்.
இன்றைய காலக்கட்டத்தில், கலி ஓட்டவேகத்தில் பொருளாதார மேன்மை ஒன்றே பொருட்டென கண்மூடித்தனமாய் ஓடும் மனிதர்கள் காணும் மனநெருக்கடி மற்றும் சிறு விஷயத்தை கூட சீரிய முறையில் நோக்காது அவசர கோலத்தில் அள்ளித் தெளிந்து எடுக்கும் முடிவுகளின் தவறுகளால் தத்தளிப்பவர்கள், உறுதியில்லா மனநிலையின் தேடும் இறுதியான முட்டாள்தனமான முடிவு தான் தற்கொலையாகும். வரும் துன்பம் நூறாயிரம் கோடியானாலும் பரவாயில்லை "சும்மா இரு" என அருணகிரியாருக்கு, அழகு வேலன், பாலமுருகன் தந்த தத்துவ மந்திர உபதேச மொழியின் சூட்சுமம் பல பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் அமைதி காத்து பொறுமையுற்றாலே, அது காலப்போக்கில் தானே காணாமல் மாயமாய் போகும். இது புரியாது வீணே உயிரை விடக் கூடிய அமைப்பு எதுயென தெளிவாய் "தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் ஜாதகங்கள்" என்ற தலைப்பில் தற்கொலை செய்துக் கொள்ளும் அமைப்பினை உதாரண ஜாதகங்கள் மூலம் உவகையுடன் விவரிக்கிறார் குடி குடியை கெடுக்கும் என ஊருக்கு கொடி பிடித்து பேருக்கு போராடி சாடுவோர் கூட திரைமறைவில் தினம் போதையில் பாதை மாறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆணுக்கு பெண் சமமென முழங்கிய, புரட்சிகவி பாரதியின் ஒற்றை வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சில பெண்களும் வழிதவறுவதால் ஏற்படும் விபரீதம் தான் கொடுமை. போதை பழக்கத்திற்கு அடிமையாகும் அமைப்புகளை அழகாய் "போதை பழக்கம் பாதை மாறும் ஜாதகங்கள்" எனும் தலைப்பில் பலரும் பார்த்ததும் பலனறிய, பயனுற பாரோர்க்கு பறைசாற்றுகிறார். "திரு.ஜெகதீஸ்வரன்" அவர்கள். 
பெற்றோர்கள் தாங்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள் தங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் சகல விதமான வசதிகளும் செய்து தந்து ஆசைப்பட்ட செல்போன், லேப்டாப், பைக் என கேட்டது யாவும் கடனை உடனை வாங்கியாவது விரும்பிய கல்லூரியில் வேண்டிய படிப்பை கோரியபடி படிக்க அரும்பாடுபட்டு வைத்தாலும் உலகம் உணராத பிஞ்சுகள் கலகம் காணாத நெஞ்சில், நஞ்சாய் புகும் காதல், கத்தரிக்காயால் ஏற்படும் துன்பங்களால் சீரழியும் குடும்பங்கள் பல ஆயிரம். வளரும் வயதில் சுக்கிரன் ஆதிக்கத்தின் கீழ் வரும் செல்போன், லேப்டாப், பைக் மற்றும் இன்னும் பல ஆடம்பர விஷயங்கள் யாவும் எதிர்பாலரை ஈர்க்கும் சுக்கிரனின் காரகத்துவங்கள் என உணராத பெற்றோர்களின் அறியாமையால் பிள்ளைகளின் காதலால் ஏற்படும் அநியாய இழப்புகளை தடுக்க "விரும்பியனுடன் ஓடிபோகும் விபரித ஜாதக அமைப்பு" என்ற தலைப்பில் உதாரண ஜாதகங்கள் மூலம் தெளிவாய் ஜோதிடர்கள் உணர விரிவாய் விளக்கியுள்ளார். 
"மனதை ஆளும் மானசீக கிரகங்கள்" என்ற தலைப்பில் குணம் கெட்டு நாளும் திரிவோர் விதியாவும் மதியான மனதை ஆளும் சந்திரன் மற்றும் புத்தியை குறிக்கும் புதனின் பாதிப்பால் என்று 5ஆம் இட ஆராய்ச்சி மூலம் தசாபுத்தி தரும் அரிதான தெரியாத பல விஞ்ஞான விபரங்களை, கோச்சார சனிபகவானின் கோரங்களை மெய்ஞான முறையில் வரிசைப்படுத்துகிறார். பரிகாரங்கள் பலனளிக்காத காரணம் திரிகோண ஸ்தானமான 1,5,9ஆம் இடம் பாதிக்கப்பட்டு கெடுவதின் காரணமே என அரியத் தகவலை அற்புதமாக தந்துதவுகிறார். "ஆட்டி படைப்பது 6ஆம் இடமோ, 8ஆம் இடமோ" என்ற தலைப்பில் சஷ்ட அஷ்டஸ்தானங்களின் துஷ்ட பரிமாணங்களால் வரும் கஷ்டநஷ்டங்களை விவரிக்கிறார். திருமணம் யோகமாக நல்லதொரு குடும்பம் அமைய உறுதுணையாகும் 2ஆம் பாவப்பலன்களை "இல்லற பாவம் இயங்க வைத்திடும் சுபாவம்" என்ற தலைப்பில் "திருமண வாழ்வு திருப்புமுனையாகும் நிகழ்வு" யாருக்கு? என யாதார்த்தத்தை இயல்பாய் அடுக்குகிறார் திரு.ஜீவநாடி கலையரசு. 
"ஸ்தானமும் கிரக காரக யோக நிலைகள்" என்ற தலைப்பின் கீழ் பல உபதலைப்புகள் கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகள் நவக்கிரகங்களின் இராஜயோக அமைப்புகளை விளக்குகிறது. புகழைத் தரும் 10ஆம் இட புதையல் தொழில்கள் என்ற தலைப்பின் மூலம் தொழில்கள் மூலம் பேரும் புகழும் பெற்றுத் தரும் அமைப்புகளை எடுத்துரைக்கிறார். இறுதியாய் மந்திரசித்திகள் அருளும் தந்திரயோக பிரயோகங்கள் தலைப்பில் சித்தர்களை பற்றியும் ஜீவ சமாதி மற்றும் அருட்சாதனங்களின் அருமை பெருமையை கூறும் கிரக நிலைகளை போற்றுகிறார். 
இப்படி தான் பெற்ற சகல விதமான ஞானத்தையும் காலக்கண்ணாடியான ஜாதகத்தை யாவரும் சரியாக பார்த்து பலன் கூறவேண்டும் என்ற நல்லதொரு எண்ணத்தில் தூய்மை உள்ளத்தில் படைக்கப்பட்ட நூல் தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி" இந்நூலின் சிறப்பு இதில் வெளியியடப்பட்ட ஏராளமான உதாரண ஜாதகங்களும் பளிங்காய் துலங்கும் விளக்கங்களும் தான். திரு. ஜெகதீஸ்வரன் அவர்கள் தன் அனுபவத்தில் பார்த்த ஜாதகங்களின் தொகுப்பை பெயர்களை வெளியிடாது விதியின் சாராம்சத்தை மட்டும் தந்துள்ளார். "ஞானம் அருளும் காலக்கண்ணாடி" ஜோதிடர்களின் அருட்பெரும் சொத்து கிடைக்கரிதான ஞானவித்து ஜோதிட அன்பர்கள் வாங்கி பயனுற்று வாக்குபலிதம் பெற வாழ்த்துக்கள்.
மேலும் விவரங்களுக்கு
http://www.apsaraepublications.com/books.php

ஜீவ நாடி கலையரசு எழுதிய புண்ணிய சக்கரம் நூல்

மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழ்வில், நித்தமும், நிகழும் நிகழ்வுகளை உள்ளடக்கியது தான் இராசி சக்கரம் என்னும் ஜாதக கட்டமாகும். உடலைவிட்டு உயிர் பிரிந்த நேரம், நாள், நட்சத்திரம், திதி, ஊரை வைத்து, உயிர் பிரிந்த முன்னும், பிரிந்த பின்னும் ஆன்மாவின் நிலையை அறிந்திட உதவுவது தான் "இறப்பின் இரகசிய புண்ணிய சக்கரமாகும்". இது ஸ்ரீஸ்கந்த உபாசகர் "ஜீவநாடி கலையரசு" "திரு.ஜெகதீஸ்வரன்" அவர்களின் முத்தான மற்றுமொரு வித்தான அரிய படைப்பு. 
எல்லோரும் மரணத்திற்கு பின் உள்ள இரகசியங்களை தெரிந்-துக் கொள்வது அவசியமாகும். மரணங்கள் பல இரகம். ஆனால் மரணத்திற்கு பின் ஆன்மாவானது சாந்தி பெற்று மேலுலகம் சென்றதா என்பதை தெரிந்துக் கொள்வது சூட்சுமமாகும். கண்ணுக்கு புலப்படும் ஸ்தூல சரிரத்தை விட ஒருவர் இறப்பிற்கு பின் எடுக்கும் சூட்சும வடிவத்திற்கு ஆகர்ஷண ஆற்றல் அதிகம். இன்று மனிதர்கள் காணும் எல்லாவிதமான பிரச்சனைகள், தடைகள், வறுமை, பிணி, சண்டை சச்சரவு, பூர்வீக சொத்து வில்லங்கம், குடும்பப் பிரிவு, விபத்து அகால மரணம் என அனைத்திற்கும் காரணம் பித்ரு தோஷமே ஆகும். இது எளிதில் தீர்க்கமுடியாத ஒரு தோஷமாகும். தங்களோடு வாழும் காலத்தில் பெற்றவர்களை சரிவர கவனிக்காமல் கொஞ்சமும் மதிக்காமல், சுய நலத்தோடு அவர்கள் மனம் புண்படச் செய்வதால் அந்திம காலத்தில், உயிர்பிரியும் நேரத்தில், நிர்கதி நிலையில், விரக்தியின் விளிம்பில், உயிர் காணும் ஏக்கங்கள், தீராத மனவலி, மாறாத வேதனைகளுடன், சாதாரண ஆசைகள் கூட நிராசையாய் போக அந்த ஆன்மாவானது சாந்தி இன்றி சாபமாய், தோஷமாய், பாபமாய், அடுத்து வரும் சந்ததியை பித்ரு தோஷமாய், கடுமையாய் பாதிப்படையச் செய்கிறது. 
அப்படிப்பட்ட பித்ரு தோஷத்தை முழுவதுமாய் நீக்கவல்ல அற்புத பரிகார பொக்கிஷ நூல் தான் "புண்ணிய சக்கரம்" ஆகும். இதில் ஒருவர் இறந்த பின் அடையும் நிலையை அறிந்து அதற்குரிய பரிகாரங்கள் மூலம் அறவே போக்கும் சூட்சுமங்கள் ஏராளம் தாராளமாய் தரப்பட்டுள்ளது. 
இறந்தவரின் நேரத்தை வைத்து புண்ணிய சக்கரம் மூலம், ஒருவரின் மரணம் இயல்பாய் அமைதியாய் தன்னிலை அறியாமலே சுபமாய் நிகழ்ந்ததா அல்லது தாங்க முடியாத வலிகளோடு, தீர்க்க முடியாத பிணியோடு போராடி தோற்று, படுத்த படுக்கையாய், அவதியில், அல்லல் உற்று, நிம்மதியின்றி பிரிந்ததா அல்லது அற்ப ஆயுளுடன் நிறைவேறா ஆசைகளுடன், திடீர் விபத்து மற்றும் தீயோரின் வஞ்சத்தால், துரோத்தால், கொலை, தற்கொலையால், உயிர் பிரிந்ததா என்பதை சில நிமிடங்களில் அறிந்திடலாம். சில நேரங்களில் செய்வினை மற்றும் அபிசார பிரயோகத்தில் மரணம் அடைந்த ஆன்மாவின் கோபத்திற்கு யாவரும் ஆளாக நேரும். ஆகவே ஆன்மாவின் நிலையை அறிந்து உணர்ந்து அதற்குரிய முறையான பரிகாரம் செய்வதால் ஆன்மாவானது சாந்தி பெறும். 
குறிப்பிட்ட சில நாள் நட்சத்திரம் திதி சேர்வதை தனிஷ்டா பஞ்சமி என்பர். இந்நாளில் இறப்பவர் குடும்பம் மிக பெரிய தோஷத்திற்கு ஆட்படும். இதனால் ஏற்படும் தீட்டானது (அடைப்பு) சில நேரங்களில் மீண்டும், மீண்டும், திடீர் மரணங்கள், அடுக்கடுக்கான அமங்கல நிகழ்வுகள் மற்றும் வாஸ்து தோஷமாகவும், விபத்-து, நோய் நொடி என காரணம் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மீழா துயரத்திற்கு அந்த ஆன்மாவானது ஏற்படுத்தும். அப்படி இறந்தோரை சாந்தி படுத்தும் விதி முறைகளும் இரகசியங்களும் விளக்கமாய் எடுத்துரைத்துள்ளார் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள். 
புண்ணிய சக்கர நூலைக் கொண்-டு ஒருவர் இறக்கும் போது அவரது நிலையையும், இறப்பின் இரகசியத்தையும், இறுதியில் ஆன்மாவின் தற்போது நிலையையும் அறியலாம். இதனால் உயிரோடு இருக்கும் தலைமுறைகள் வாழ்க்கையை வளப்படுத்த சில பரிகார முறைகள் மூலம் வழி காணலாம். இந்நூலில் பல உதாரண ஜாதகங்கள் தரப்பட்டுள்ளன. அதிலும் பல மகான்களின் புண்ணிய சக்கரம் அவர்களது ஆன்மாவின் இரகசியத்தை சாதாரண மக்களும் அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. 
புண்ணிய சக்கரமும், ஆவிகளும் என்ற தலைப்பின் கீழ் ஆவி உலக ஆராய்ச்சிகள் அழகாய் தொகுத்து தரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆவிகளுடன் பேசுவதும், ஆவிகளின் கோரிக்கையை அறிந்து உரைப்பதும் தொடர்ந்து வருகிறது. ஆயினும் புண்ணிய சக்கர நூல் ஒன்று மட்டும் இருந்தால் போதும். ஆவிகளை பற்றிய அத்தனை இரகசியங்களும் எளிமையாய் புரியும். ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் உயிர் பிரியும் விதங்களை அழகாய் ஜீவநாடி கலையரசு வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமாக கபால வழியில் உயிர் பிரிவது மகான்களுக்கு என்றும் ஆசன வழியில் விலகுவது பாவிகளுக்கு என்றும் உயிர் பிரியும் வழிகளை தொகுத்துள்ளார். 
முன்னொரு காலத்தில் தங்கள் குலம் தழைக்க உயிர் நீத்தோரின் ஆவியை தான் குல தெய்வமாக வழங்கப் பெற்று வணங்குகிறார்கள் எனும் சூட்சுமத்தை காரண காரிய ஒப்பீட்டுடன் விளக்கியுள்ளார். திரு.றி.ஞி.ஜெதீஸ்வரன். புண்ணிய சக்கரம் நூலில் பல பல பரிகாரங்கள் உண்டு. அதில் ஆலய பரிகாரங்களும் ஒன்று. இதில் பித்ரு தோஷம் நீக்கும். திருத்தலங்களை ஜீவநாடி கலையரசு வரிசைப்படுத்தி பரிகாரங்களாக தந்துள்ளார். அவற்றை முறைப்படி கடைபிடித்து வந்தாலே வாழ்க்கை வசப்படும் வருங்காலம் சுகப்படும். 
ஜோதிட கடலில் கிடைகரிதான அரியதொரு வலம்புரி முத்துதான் "புண்ணிய சக்கரம்" எனும் நூல். இந்நூலில் தரப்பட்டுள்ள பரிகாரங்களை அறிந்து, புரிந்து, தெளிந்து எல்லோரும் கடைபிடித்தால் பித்ரு தோஷ நிவாரணம் நிச்சயம். நிம்மதியின்றி அலையும் ஆன்மாக்கள் பித்ரு லோகம் அடைவது கச்சிதம். ஜோதிடர்கள் இப்படி அரிதாக வெளிவரும் நூலை வாங்கி அதன் பயனை அறிந்து பலனை பிறர்க்கும் கிடைக்கச் செய்தால் புண்ணியங்கள் புடைசூழ கைராசி ஜோதிடர் எனும் பாராட்டையும் பெறலாம். புண்ணிய சக்கரம் நூல் ஆன்மாவை அறிய முற்படுவோரும் மறுஜென்மத்தை ஆராயத் துடிப்போரும், ஆவி உலக ஆராய்ச்சியாளர்களும் நிச்சயம் வாங்கி படிக்க வேண்டிய ஒரு பொக்கிஷம். இதன் மூலம் பல காலம் அறியாமையால் பித்ரு கடன் செய்ய தவறியோர்கள் இறந்தவர் ஆன்மாவுக்கு தர்ப்பணம் சீரார்த்தங்களை முறைப்படி செய்து தங்கள் விதியை மாற்றி பித்ரு தோஷ நிவர்த்தி பெற்று இன்புற்று வாழ இந்நூல் பெரிது உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு:
http://www.apsaraepublications.com/review_3.php

ஜீவ நாடி கலையரசு எழுதிய திம்ப சக்கரம் நூல்


ஜோதிடத்தின் ஆனி வேரென ஆன்றோர்கள் அறிவிப்பதும், மூல நூல்கள் பாடல்களில் மறைப்பொருளாய் எல்லோர்க்கும் எளிதில் புரியா வண்ணம் தெரிவிப்பதும், ஜாதகப் பலாபலன்கள் பகத்தறிவது எப்படி எனும் சூட்சமத்தின் சூத்திரமும், கர்ம கணக்கை கண்டறியும் சாத்திரமும் ஒன்றேயாகும். மக்கள் திறமையான ஜோதிடர்களிடம் சென்று இராசி, நவாம்சம், தசாபுத்தி, கோட்சாரம் என ஏனைய சூட்சுமங்களையும் அலசி ஆராய்ந்தும் கூட, சந்திப் பிழைகளை சரி செய்து பார்த்தாலும் கூட புரியாத புதிராய், விடை தெரியாத விடுகதையாய் பலநேரங்களில் சில ஜாதகப் பலன்கள் மாறுபடுகிறது. ஜோதிடர்களின் கணிப்பும், கருத்தும் வேறுபடுகிறது. இக்குறையை முற்றிலும் நீக்குவதற்கும் ஜோதிடத்தின் சூட்சுமத்தை எளிமையாய் யாவரும் கண்டறிவதற்கும், ஜோதிடர்களின் கணிப்பு முரண்பாடில்லாமல் மிக துல்லியமாய பலன்களுடன், பரிகாரங்கள் கூறி முன் ஜென்ம கர்ம வினைப்பயனை களைந்து பாரோர் இன்புற்று வாழ்வதற்கும் படைக்கப்பட்ட அருமையான நூல் திம்பசக்கரமாகும். 
ஆன்மிகமாயினும், ஜோதிடமாயினும் தீவிர ஆராய்ச்சி மட்டுமே அனுபவத்தை தரும். ஏட்டு படிப்பு பாதையை கூறும் ஆனால் அனுபவம் ஒன்றே பயணத்திற்கு உறுதுணையாய் உதவும். திரு P.D.ஜெகதீஸ்வரன் அவர்கள் ஒரு தகவலை மக்களுக்கு தருமுன் பலமுறை அதை பரிசோதித்து பலன்களின் ஆழத்தை அறிந்து செய்லபாட்டின் துல்லியத்தை ஆராய்ந்து உறுதி செய்திட்ட பின்னரே இறுதியில் அறுதியிட்டு விதிமுறைகளுடன், பரிகாரம் என மக்களுக்கு பகுத்தளிப்பார். கர்மபலனை, விதிப்பயனை, முன்ஜென்ம தீய வினையால் ஏற்படும் நவகிரகங்களின் கோபத்தின் தாக்கத்தை மாற்றும் சக்தி சிலரது ஸ்பரிசம், பார்வை, மற்றும் நிழலுக்கு கூட உண்டு. அப்படி ஒரு ஆன்மிக அருட்பெரும் ஞான சக்தியை பெற்றவர் தான் "ஜீவநாடி கலையரசு" திரு றி.ஞி.ஜெகதீஸ்வரன். இவரது நாவில் குடி கொண்டுள்ளது ஞானக் குழந்தையான ஆறாதார தத்துவ சிவனுக்கு சிவனான ஓங்காரமான பாலசுப்பிரமணியர் பெருமானாகும். ஆகவே தான் எத்தனை பெரிய தீர்க்க முடியாத கர்ம வினைகளைக் கூட சில மாதங்களில் போக்கும் வல்லமையை தனது உபாசனை மற்றும் பல துறை குருக்களின் உபதேசம் மூலம் தன் வசமாக்கி தூய்மையின் சொரூபமாய், ஞானத்தின் ஜோதியை ஒருங்கே பெற்றுள்ளார். இவர் இயற்றிய நூலான "திம்பசக்கரம்" ஜோதிடர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். 
திம்ப சக்கரம் எனும் இந்நூல் பழங்கால ஜாதகாபரணம், ஹோரா ரத்னம் எனும் மூல நூல்களில் மறைப்பொருளாய் திரு துண்டி இராஜா மற்றும் பலபத்ரர் என்போரால் பல ஸ்லோகங்களில் மறைக்கப்பட்ட சூத்திரத்தின் ஆழமான கருத்துக்கள் அடங்கிய இரகசியங்கள் முதன்முறையாய் தமிழில் வெளிவந்துள்ளது. இந்நூலில் உள்ளவாறு பிறப்பின் ஆதாரமான இராசி சக்கரத்தை திம்ப சக்கரமாய் மாற்றி அமைத்து ஆராய்ந்தால் எல்லா விதமான கேள்விகளுக்கும் விடைகள் தெள்ளத் தெளிவாய் விளங்கும். பலன் கேட்டு வரும் மக்களின் மனமும் தீர்வு கிடைத்ததென குளிரும். இருளில் வழி தெரியாது விழித்தோர்க்கு பலன்களுடன், பரிகாரங்களும் ஒளியாய் ஜொளிக்க வாழ்க்கை பயணம் இன்புற்று செழிக்கும். 
மனித உடலின் பாகங்களான அங்க உறுப்புக்களை நெற்றி முதல் பாதம் வரை 12 இராசிகளாய் பிரித்து அமைத்து, 27 நட்சத்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒவ்வொரு உறுப்புக்கும் என வகுத்து வரையறுத்து அவரவர் ஜாதகத்தில் பிறப்பின் இராசி கட்டத்தில் சூரியன் நின்ற நட்சத்திரத்தை முதலெனக் கொண்டு இலக்கினத்தை மாற்றாது கிரகங்களை மட்டும் உறுப்பு நட்சத்திரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து சந்திரன் நின்ற இராசியை மைய புள்ளியாய்க் கொண்டு பலன் உரைப்பதே "திம்ப சக்கரமாகும்". பொதுவாக ஜாதகத்தில் பித்ரு தோஷம் மிக கொடுமையான தீர்க முடியாத ஒரு தோஷமாகும். இது தலைமுறை தலைமுறையாய் பல ஜென்மங்களுக்கும் தொடாந்து வரும் முன்னோர்களின் சாபத்தால் ஏற்படுவதாகும். இத்தகைய பித்ருதோஷம் உள்ள ஜாதகங்களுக்கு ஜோதிடர்கள் பலன் உரைத்தால் பலன்கள் பலிப்பதில்லை. காரணம் பித்ரு தோஷம் தீர்க்கபடாமல் சரியான பலன் உரைக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட ஜாதகத்தைக் கூட திம்ப சக்கரம் அமைத்து பார்த்தால் கர்மாவின் காரணங்களும், வினையின் வீரியமும், விரிவாய் புரியும் பலன்களும் தெள்ளத் தெளிவாய் தெரியும். பரிகாரம் கூறினால் உடனே தோஷம் தீரும். 
திம்பசக்கரம் இராசி சக்கரத்தின் அடிப்படையை தழுவியதே பலன் கூறுவது முதல் தசா புக்தி கண்டறியும் விதம், கோட்சாரம் பரிகாரங்கள் என அனைத்துமே இதிலும் உண்டு. ஆனால் நட்சத்திரங்கள் உறுப்புக்கள் மூலம் இராசிகளில் கிரகங்கள் மாறுவதால் சில மர்மங்கள் நிர் மூலமாகி வெட்ட வெளிச்சமாகிறது. இது ஒரு மறைக்கப்பட்ட பொக்கிஷம் இதை அக்காலத்தில் சில காரணத்தால் வெளியிடாது வைத்திருத்தனர். 
திம்ப சக்கரம் மூலம் எல்லா விதமான பலன்களும், சில நொடிகளில் கண்டறியலாம். திம்பசக்கரம் அமைக்க ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திர அடிப்படையில் உறுப்புகளின் நட்சத்திர எண்ணிக்கையை அறிய திம்ப சக்கரம் உடனடி அட்டவணையை (பக்கம் 97) பயன்படுத்தி பயன் பெறலாம். சிலர் நாள்பட்ட பிணியில் அவதியுறுவர். மருத்துவர்கள் கண்டறிய முடியா நோய்களைக் கூட திம்ப சக்கரம் காட்டிக் கொடுத்து விடும். காரணம் திம்ப சக்கரத்தின் அச்சாணியே உறுப்புக்கள் உள்ளடக்கிய கிரகங்களின் நட்சத்திர அமர்வு தான். எனவே எந்த உறுப்பில் பிரச்சனை என்பது சில நொடிகளில் கண்டறிந்து பலன் உரைத்தால் விஞ்ஞானம் கூட மெய்ஞ்ஞானம் முன் அதிசயக்கும். பலன் பெற்றோர் பிணி தீர அவர் மனம் ஜோதிடத் தலைமுறைகளை தழைக்கச் செய்யும். 
திம்ப சக்கரம் மூலம் கல்வி நிலையை ஆராய்ந்து ஒருவருக்கு பிற்காலத்தில் வரும் தசாபுத்தி நிலைகளுக்கு ஏற்ப ஆலோசனை வழங்கி எந்தத் துறையில் ஒருவர் பொருளாதரா வகையில் சிறப்புற முடியும் என்பதை தெளிவாய் கூற முடியும். இக்காலத்தில் பலரும் ஒரே கல்வியை கற்றாலும் சிலரால் மட்டுமே பொருளாதார நிலையை உயர்த்தும் உத்யோகத்தை கல்வி மூலம் பெற முடிகிறது. எந்தக் கல்வியை கற்றாலும் பணம் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்பதால் ஒருவருக்கு சரியான கல்வியை திம்ப சக்கரம் மூலம் கூறி அடுத்த தலைமுறையை தலை நிமிரச் செய்ய முடியும். நல்ல கல்வியை கற்றும், சிறந்த பணியை பெற்றும், கைநிறைய பணம் சம்பாதித்தும், நிறைந்த ஒழுக்கத்துடன் உண்மையாய் வாழ்ந்து வந்தாலும் கூட சில தோஷங்கள், சாபங்கள் சரியான பரிகாரங்கள் மூலம் நீக்கப்படாததால் முன்னர் செய்த வினைப்பயன் இன்னும் காரணம் புரியாமல், தொடரும் காரியத்தால் பலரது திருமணம் நாற்பதிலும் நர்த்தனமாட காண்கிறோம். இந்நிலையை மாற்ற திம்ப சக்கரம் நூலில் கூறப்பட்டுள்ள பரிகாரங்கள் மூலம் 100% பரிபூர்ண மனதுடன் செய்தால் தோஷங்கள், சாபங்கள் தீர்க்கப்பட்டு, நீக்கப்பட்டு திருமணம் உடனடியாக கூடுவது திண்ணம். 
திம்ப சக்கரம் ஒரு முழுமையான பலன் உரைக்க உதவும் அருமையான நூல். இதில் 12 உறுப்புகளில் கிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்களை ஜீவநாடி கலையரசு திரு. றி.ஞி. ஜெகதீஸ்வரன் விளக்கியுள்ளார். ஜோதிடர்கள் ஒருமுறைக்கு பலமுறை படித்திட துல்லிய பலன்களை உடனடியாக உரைத்து கைராசியான ஜோதிடர் எனும் நல்ல பெயரை நிச்சயம் பெறலாம். அது மட்டுமல்லாது இதில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவற்றை முழுமையாய் படிப்போர் விழிகளுக்கு கிரகங்களின் செயல்பாடுகள் தெள்ளத் தெளிவாகும்.இராசி திம்ப சக்கரம், திம்ப சக்கரம் தசாபுத்தி பலன்கள், கோட்சார சூட்சும திம்ப சக்கரம், திம்ப சக்கரத்தின் மூலம் புத்திர தோஷம் கண்டறிந்து பலன் உரைக்கும் முறைகள் என அத்தனை வகையிலும், ஒவ்வொன்றுக்கும் மிக துல்லிய பலனை காண படைக்கப்பட்ட மாபெரும் நூல்தான் "திம்ப சக்கரமாகும்". இந்நூலில் உள்ள உதாரண ஜாதகங்கள் மூலம் அளிக்கப்பட்ட விளக்கங்களை ஜோதிடர்கள் தவறாது ஆராய்ச்சி செய்தல் அவசியமாகும். ஏனெனில் அவை அனைத்தும் திம்ப சக்கரத்தின் துல்லியத்தை பறைசாற்றும் விடிவெள்ளியாகும். 
"திம்ப சக்கரம்" நூலின் தனித்துவமே பலன்களுடன் கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் தான். இனிப்பை சுவைக்காது பஞ்சாமிர்த புகழைப் பாடக் கூடாது. அது போல ஜீவாநாடி கலையரசின் திம்ப சக்கர பலன்கள் மட்டுமல்ல அவரது அனுபவம் மட்--டுமே தரப்பட்டுள்ள ஆலயம் ஏனையே பரிகாரங்கள் என அனைத்திலும் தனிப்பட்ட முறையில் அவரே தொடர்புற்று உண்மையை மட்டுமே உலகோர் பயன்பட வழங்கியுள்ளார். இதில் குறிப்பாக பதினெட்டு சித்தர்களின் அதிசயங்கள், சதுரகிரி, பழநி, திருவண்ணாமலை பாதயாத்திரை, பௌர்ணமி விரதங்கள், முடிகாணிக்கை தத்துவங்கள், செல்வம் கொழிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஸ்துதி, ஆன்மிககுறிப்புகள், முன்னோர் வகுத்த நெறி முறைகளின் காரண காரியங்கள், தோத்திர பாராயண பலன்கள் ஆலய கும்பாபிஷேக வகைகள், கோ பூஜை யாகம், கோமாதா மகிமை, ஹோமங்களின் பலன்கள், ஜென்ம நட்சத்திர விருட்ச பரிகாரங்கள், திருமண தடை, தோஷ நிவர்த்தி பரிகாரங்கள், பல நாட்டில் உள்ள திருமண சடங்குகள், சத்ருசம்ஹார வேல் பூஜை, அன்னதான மகிமை, மகேஷ்வர பூஜையின் மகத்துவம், இரத்ததானப் பலன்கள், காவடி எடுக்கும் காரணம், பரிகாரம், கண்ணாடி வசிகர பயிற்சி, அருவி, கடல் நீராடலின் காரண காரியங்கள், இரகசியங்கள் என இவை அனைத்தும் ஜோதிடர்கள் மட்டுமல்ல பாமரர்கள் கூட தெரிந்துக் கொள்ள வேண்டிய இரகசியங்களை பரிகாரங்களாக விளக்கி அருமையாய் தந்துள்ளார் "ஸ்ரீஸ்கந்த உபாசகர் "ஜீவநாடி கலையரசு" திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள். 
திம்ப சக்கர நூலை ஜோதிடர்கள் வாங்கி படிக்கும் பாக்கியம் பெற்றால் தங்கள் திறமைக்கு மணிமகுடமாய் சிகரத்தின் ஜீவஒளியாய் நிச்சயம் திகழ முடியும். இறைவன் வகுத்து அறிந்த இரகசியமான விதியை துல்லியமாய் உரைக்கும் உத்திரவாதத்தை திம்பசக்கரம் தருகிறது. எனவே இந்நூலை ஜோதிடர்கள் உடனே வாங்கிப் படித்து பலன் பெற்று இன்புறவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

http://www.apsaraepublications.com/review_2.php

திங்கள், 28 டிசம்பர், 2015

இனிய அறிவிப்பு

                       படம்: ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி, ஞானஸ்கந்தாஸ்ரமம்,அந்தியூர்

 நமது கௌமாரபயணம் எனும் இந்த வலைதளமானது தனது இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து கொண்டு முருகனது திருவருளாலும் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் குருவருளாலும் வருகின்ற 2016 ஜனவரி மாதம் முதல் முத்தான மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. கௌமார சமயம் என்பது முருகனைப் பரம்பொருளாகக் கொண்டாடும் சமயமாகும். அந்த வகையில் கௌமாரத்தை நோக்கி ஒரு பயணம் எனும் பொருளில் இந்த வலைதளத்திற்கு கௌமாரபயணம் எனும் பெயர் வைக்கப்பட்டது.  நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் ஆன்மீக பயணத்திலும் அவரிடம் இருக்கின்ற பொக்கிஷமாகிய ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி மூலம் நடந்து வருகின்ற அதிசய சம்பவங்களையும், நமது குரு நாதர் அவர்கள் பெரியதாக மதித்து வரும் சிரவை ஆதீனம் போன்ற உன்னத மகான்கள் மூலம் கிடைக்கின்ற இனிய அனுபவங்கள் ஆகிய அரிய செய்திகளைத் தாங்கி இந்த இரண்டு ஆண்டுகள் செவ்வனே சென்றது. அந்த வகையில் மூன்றாம் ஆண்டில் இன்னும் பல அதிசய செய்திகளும்,முருகப்பெருமானின் விளையாடல்களும், ஜீவ நாடியில் சொல்லி அதன்மூலம் பலன் அடைந்தவர்களின் அனுபவ உண்மைச்சம்பவங்களும், ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் தனது 13 வயது முதல் ஏற்பட்ட ஆன்மீக அனுபங்களும் இனிதே இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.  நிச்சயம் இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீகப் பயணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நமது கௌமார பயண வாசகர்கள் வழக்கம்போல் தங்களது வளமான ஆதரவினைத் தந்து தண்டமிழ்க்கடவுளாம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருளைப் பெற்று அற்புதமான அதி உன்னதமான ஆனந்த வாழ்வை அடையுமாறு அந்த ஆறு முகனை அன்புடன் அடி பணிகின்றேன்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
அன்புடன்
kaumarapayanam ADMIN

பசு வழிபாடு !


இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும்புண்ணியமாகக

 கருதுகின்றனர்இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.பசுவின் உடலில்
ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.
*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன்,திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலியபுண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர்சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும்சுக்கிலத்திலும் – யாகத் தொழில்முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்காநிறையுடைய
 கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் 
இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டனஅவைநந்தாபத்திரைசுரபி
சுசீலைசுமனை ஆகியவை. . இவைபொன்னிறம்கருமைவெண்மைபுகைசிவப்பு நிறம்கொண்டிருந்தனஇவற்றின் சந்ததிகளே பூலோகத்தில்நமக்கு உதவியாக இருந்து வருகின்றனஇவற்றில்இருந்துவரும் கோமயம்(சாணம்),  
மூத்திரம்(கோமியம்), பால்தயிர்வெண்ணெய் ஆகியஐந்தும் புனித
மானவைஇவற்றை குறிப்பிட்ட அளவில்கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது
இப்பசுக்களில் மும்மூர்த்திகள்சத்தியம்தர்மம்என்று எல்லா தேவதைகளும்வசிக்கின்றனர்செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்வசிக்கிறாள்இப்பகுதியைதொட்டு வழிபட்டால் 
முன்ஜென்ம பாவங்கள்விலகும்காலையில் எழுந்ததும் பசுவைத் 
தொழுவத்தில்காண்பது சுபசகுனம் தெருக்களில் கூட்டமாகப் 
பார்த்தால்இன்னும் விசேஷம்பாற்கடலில் பிறந்த 
ஐந்துபசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து
அருள்பாலிப்பதாக ஐதீகம்பசுவைத் தெய்வமாகவழிபட்டால் 
கோலோகத்தை அடையும் பாக்கியம்உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின்வாசஸ்தலம்.
வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவதுகோலோகம்.

கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும்தெய்வங்களும்
1. முகம் மத்தியில்                       சிவன்

2. வலக் கண்                               சூரியன்

3. இடக் கண்                               சந்திரன்
4. மூக்கு வலப்புறம்                     முருகன்
5. மூக்கு இடப்புறம்                     கணேசர்
6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம்                     ராகு
8. கழுத்து கீழ்புறம்                        கேது
9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதிவிஷ்ணு
11. முன்வலக்கால்                         பைரவர்        
12. முன் இடக்கால்                        ஹனுமார்
13. பின்னங்கால்கள்                      ப்ராசரர்விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி             நாரதர்வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம்                கங்கை
16. பிட்டம் - மேல்புறம்                லக்ஷ்மி
17. முதுகுப்புறம்                           பரத்வாஜர்குபேரர் வருணன்,அக்னி    
18. வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி                     நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு                            வீமன்
22. இடக்கொம்பு                            இந்திரன்
23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை
24. முன்இடக்குளம்பு                      இமயமலை
25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை
26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை
27. பால்மடி                                      அமுதக்கடல் 

பசு வழிபாடு வகை

வழிபாடு இரண்டு வகைப்படும்.

1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்அலங்கரித்து

எல்லா மந்திரங்களும் கூறிமலர்களால் அர்ச்சித்துதூப,தீபநிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனைவிக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபடமுடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்துவழிபடுவது போலவீட்டில்கோமாதாவின் படத்தைமட்டும் வைத்து 

வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்

2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடாவிட்டாலும்வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கேஉதவுவதாக அவற்றின் நலனைப் 
பாதுகாத்துப்பராமரிப்பதும் பசுவழிபாடேஇரண்டாம் வகை பராமரிப்புவழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடுநடக்க முடியும்.கோமாதாவில் (பசுமுப்பத்து முக்கோடிதேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்அதன்பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக 
ஐதீகம்.எனவேகோமாதா பூஜை செய்யும் போதுபசுவைமுன்புறமாக
 தரிசிப்பதைவிடபின்புறம் தரிசனம் செய்வதுமிகவும் நன்மை தரும்
பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் 
சந்தனம்குங்குமம் வைத்துமலர் அணிவித்துவழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும்எனவேதான்அதிகாலையில் 
சாணத்தைவீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வதுபராசக்திக்கு பூஜை செய்வதற்குச்சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலானமும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் 
என்றொருதெய்வம் உண்டு.
சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்திஇருக்கிறார்.

இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாகமனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்திஇருக்கிறாள்.இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,
உயிர்கள்என அனைத்தையும் படைத்து,காத்து,
ரட்சிப்பவளாகஇருக்கிறாள்
இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன்வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயே,முப்பத்துமுக்கோடிதேவர்களும்,

நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சிசெய்கின்றன.

கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்தஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.
(உருவ வழிபாடுஇல்லை என சொல்லும் மதத்தினர் கூட 

கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம்நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்டசக்திகள் நெருங்காதுமுற்பிறவியில் செய்த பாவங்கள்நீங்கிவிடும்.