செவ்வாய், 15 நவம்பர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-5

6. ஏழரைச்சனி அஷ்டமச்சனியில் இருந்து தப்பிக்க ஜீவ நாடி வழி காட்டுமா?

    ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும். 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும். 4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள். 2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினை, வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
ஒருவரின் பூர்வ ஜென்மத்தின் பாவங்களின் பதிவுகளைக் கழிக்கவே ஏழரைச்சனி அஷ்டமச்சனியில் பாதிப்புகள் வருகின்றது. ஜீவ நாடியில் முருகனின் மீது நம்பிக்கை வைத்து வந்து ஜீவ நாடி கேட்பவருக்கு பூர்வ ஜென்ம பாவ பதிவுகளைக் கண்டறிந்து உடனடியான நல்ல வழியை ஜீவ நாடி காட்டுகின்றது. பரிகாரம் செய்தால் பாவம் தீருமா? என்றால் அப்படி பரிகாரம் அறிந்து ஏழரைச்சனி அஷ்டமச்சனி பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற விதியமைப்பு இருப்பவர்கள்தான் நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியை வந்து கேட்க முடிகின்றது. ஜீவ நாடி நடத்துகின்ற திருவிளையாடல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்குக் காரணம் 100% உண்மையும் சத்தியமும் பண ஆசையில்லாத தூய்மை நிலையும் கடைபிடிக்கப்படுவதால்தான் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். எனவேதான் அடியேன் ஜோதிடம் சொல்வதில்லை முருகனின் வாக்கு மட்டுமே ஜீவ நாடியில் என்ன வருகின்றதோ அது மட்டுமே உரைக்கப்படுகின்றது. அதனால் அடியேன் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொள்வதில்லை. சிறு காணிக்கை மட்டுமே நாடி படிக்க பெற்றுக் கொள்ளப்பட்டு அந்த காணிக்கைகள் அன்னதானம் மற்றும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றது. எனவே பணம் நிரந்தரமானது அல்ல மக்கள் சேவையே மகேசன் சேவை என உணர்ந்தவன் அடியேன். அதனால்தான் மிகுந்த நேரக் குறைவான சூழ் நிலையிலும் ஜீவ நாடி உரைக்கும் சேவையை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் செய்து வருகின்றேன்.

          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 10 நவம்பர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-4


5.ஜீவ நாடி என்றால் என்ன?
ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன் ஐயா அவர்கள். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர். அந்த வகையில் ஹனுமத்தாசன் ஐயா அவர்களிடம் அகத்தியர் வாக்கு கேட்ட பலர் இன்று நமது ஸ்ரீஞாஸ்கந்தர் ஜீவ நாடியில் 100% பலன் பெற்று வருகின்றார்கள் என்பதற்கு ஹனுமத்தாஸன் ஐயா மூலம் அகத்தியர் உரைத்த அதே இரகசியங்களை நமது ஜீவ நாடியில் முருகப்பெருமானும் அகத்தியரும் உரைக்கின்றார்கள் என்பது பலன் பெற்றவர்களின் அனுபவமாகும். பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சியாகும்.
              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 4 நவம்பர், 2016

வெளிவந்து விட்டது


முருகப்பெருமான் ஜீவ நாடியில் தோன்றி கடந்து 20 ஆண்டுகளாக உரைத்து நடந்த அதிசயங்கள் ஆச்சரியங்கள், இரகசியங்கள், உண்மைச்சம்பவங்கள் என வித விதமான தலைப்புகளில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களால் எழுதப்பட்ட “சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்” எனும் நூலும் ஆருடம் குறித்த இதுவரை வெளிவராத பல்வேறு இரகசியங்கள் அடங்கிய “அற்புதபலன் கூற உதவும் அபூர்வ ஆருடம்” எனும் ஜோதிட நூலும் இப்போது வெளிவந்து விட்டது. விருப்பமும் பிராப்தமும் இருக்கும் நமது கௌமார பயணம் வாசகர்கள் இந்த நூல்களை வாங்கி வடிவேல் முருகனின் திருவிளையாடல்களைக் கண்டு இன்புற்று எல்லா நலன்களையும் பெற நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் பொற்பாதங்களைப் போற்றுகின்றோம்.

வெளியீடு:
அப்ஸரா பப்ளிகேஷன்ஸ், சென்னை
செல்:7299921880, 9710921880

இங்ஙனம்
கௌமாரபயண வலைதள நிர்வாகிகள்

                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-3

4. ஒருவர் செய்யும் தொழில் பற்றி ஜீவ நாடியில் என்ன தெரிந்து கொள்ளலாம்?

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் ஒருவருடைய தொழில் பற்றி 100% மிக மிகத்துல்லியமாக பதில் வருகின்றது. 
தொழிலைப் பொறுத்தவரையில்

  1. வேலை கிடைக்குமா?
  2. அரசுப் பணி அமையுமா?
  3. சொந்தத் தொழில் செய்யலாமா?
  4. எந்த தொழில் செய்தாலும் லாபம் இல்லை என்ன செய்யலாம்?
  5. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?
  6. எந்தத் தொழிலைத் தொட்டால் கோடீஸ்வர யோகம் வரும்?
  7. கூட்டுத்தொழில் யோகம் உண்டா?
எனும் கேள்விகளுக்கு 100% மிகத்துலியமான பதிலை முருகப்பெருமானும் அகத்திய முனிவரும் ஜீவ நாடியில் தோன்றி ஒருவரது பூர்வ ஜென்ம தொழில் எது என்று கண்டறிந்து அதன் அமைப்பில் 100% கோடான கோடி லாபம் தருகின்ற தொழில் எது என்று உரைத்து விடுகின்றனர். நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் எப்போதும் பெரிய பெரிய தொழிலதிபர்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு ஜீவ நாடியின் துல்லிய தொழில் குறித்த வாக்கே காரணம் ஆகும். ஜாதகம் யோகமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தொழிலே அமைவதில்லை காரணம் பூர்வ ஜென்ம பதிவுகளின் தாக்கமே. அந்த தாக்கத்தைக் கண்டறிந்து ஜீவ நாடியில் வருகின்ற வழிகளைக் கேட்டு கடைபிடித்தால் உடனடியான ஒரு திருப்புமுனை வருவதற்கு இப்போது ஜீவ நாடியை நாடி கடந்த 20 ஆண்டுகளாக பலர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதே சாட்சியாகும்.  ஒரு சிலருக்கு பெரிய தொழில் யோகம் இருக்கும் ஆனால் சாதாரண சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்கள் முருகனின் ஜீவ நாடியை தொடர்ந்து இடை வெளி விட்டு ஒரு வருடத்தில் 6 முறை கேட்டு அதன்படி சில வழிபாடுகளைக் கடைபிடித்தவர்கள் ஒரே வருடத்தில் பத்து ஆண்டுகள் சம்பாதிக்கும் வருமானத்தை எட்டி விட்டார்கள். ஜீவ நாடி முழுக்க முழுக்க இறை அருளால் உரைக்கப்படுவதால் பணம் என்பது குறிக்கோள் இல்லை. பயனடைந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளாகச் செய்த திருப்பணியே இன்று ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமாக அமைந்துள்ளது எனலாம். ஜாதகத்தில் தொழிலைக் குறிக்கும் 10மிடமும் 10மிட அதிபதியும் எப்படி இருந்தாலும் ஜீவ நாடி மூலம் தொழில் பற்றித் தெரிந்து கொண்டு பூர்வ ஜென்ம பதிவுகளைக் களைந்துவிட்டால் உடனடியான ஒரு தொழில் வாய்ய்பு வருவதை அனுபவத்தில் காணலாம். அப்படி முருகனை நாடி வந்து ஜீவ நாடி கேட்கும் பிராப்தம் இருப்பவர்களே 100% நம்பிக்கையுடன் வந்து நாடி கேட்க முடிகின்றது. பிராப்தம் இல்லை எனில் இது பொய் என்று யாரேனும் ஒருவர் நம்பிக்கையைக் கெடுத்து ஜீவ நாடியை நாட விடாமலேயே செய்து விடுவர் என்பதும் அனுபவம். எனவே நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து முருகனிடம் கேளுங்கள்...அவர் நிச்சயம் இல்லை என்று சொல்லுவதில்லை...முருகன் நம்மிடம் கேட்பது பணத்தை அல்ல...பக்தியையும் அன்பையும் நாம் முருகன் மீது வைத்தால் அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்து அருள்வார் அந்த முருகன்... என்பது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் வாக்காகும்.
                                                                                                                                      தொடரும்...
                                   ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!