வெள்ளி, 1 ஜனவரி, 2021


ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் நடந்த கும்பாபிஷேக நிகழ்வுகள்




 நமது கௌமார பயணம் வலைதள வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில்  எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி பெருமான் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர ஈசான கண சிவம் அவர்களை ஆட்கொண்டு ஜீவநாடி மூலமும், அருள்வாக்கின் மூலமும் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் ஆதிசங்கரர் தோற்றுவித்த அறுசமய வழிபாடுகளையும் தோற்றுவிக்குமாறு ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளாணை வழங்கியிருக்கிறார். திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளும் சுவாமிகளின் கனவில் தோன்றி இங்கு எழுந்தருளி ஆசி தருவதாகவும் வாக்கு உரைத்திருக்கிறார். மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளும் இங்கு எழுந்தருளி ஆசி வழங்குவதாகவும் நமது சுவாமிகளுக்கு கனவில் உரைத்திருக்கிறார். ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருளாணையின் படி ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில்  ஸ்ரீ அவிநாசியப்பர், ஸ்ரீ கருணாம்பிகை தாயார், ஸ்ரீ நந்தீஸ்வரர், திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், ஆகிய அனைத்து விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சேலம் பெரிய புத்தூர் ஆதீனம் ஸ்ரீ ராஜலிங்க சிவாச்சாரியர் அவர்கள் தலைமையில் கார்த்திகை மாதம் 16 ம் தேதி (4/12/2020) அன்று காலை கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.

 




நன்றி: சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர ஈசான கண சிவம் அவர்கள்,

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடம், அந்தியூர். 

தொகுப்பு:

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடம் பக்தை,

சம்பூர்ணம் முருகேசன் .