வியாழன், 22 செப்டம்பர், 2016

ஜீவ நாடி உரைக்காதே என்று தடுத்து நிறுத்திய குலதெய்வம்


ஒருவர் வந்து ஜீவ நாடியில் முருகனின் அருள்வாக்கைக் கேட்க பிராத்தனை செய்து அமர்ந்தார். அப்போது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் வழக்கம்போல் சுவடியைப் பிரித்து பிரார்த்தனை செய்து ஜீவ நாடியில் வரும் பாடல்களை வாசிக்கத் தொடங்கினார். சுமார் இரண்டு வரி பாடல்கள் வந்தவுடன் ஒரு பெரிய சூலம் ஒன்று ஜீவ நாடியில் தோன்றி அடுத்து வரும் எழுத்துக்களைப் படிக்கவிடாமல் தடை செய்தது. யார் இந்த சூலம் என்று முருகப்பெருமானிடம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் கேட்க இந்த சூலம் அங்காளம்மன் சூலம். அந்த சூலம் உடைய அம்மன் இவனது குலதெய்வம். குலதெய்வம் இருப்பதையே மறந்துவிட்டு இங்கு என்னிடம் வந்திருக்கின்றான். எனவே இவனுக்கு வாக்கு உரைக்காதே என்று அந்த அங்காளம்மன் தடை செய்கின்றது. எட்டு அமாவாசை தவறாமல் சென்று அந்த அம்மனை பூஜிக்கச்சொல் அதன் பின்பே இவனது வாழ்வு மாறும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் சிறக்கும். என்னை வந்து பார்க்காமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு இங்கு உன்னிடம் வந்திருக்கின்றான் எனவே முருகா நீ இவனுக்கு வாக்கு உரைக்காதே என்று அந்த அம்பிகை உரைக்கின்றாள் என்று முருகப்பெருமான் உரைப்பதை ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் சொல்ல வந்தவர் அப்படியே உருக்குழைந்து போய்விட்டார் . சுவாமி முருகன் உரைப்பது சத்தியம். எதோ ஒரு காரணத்தால் குலதெய்வத்தை வணங்கவில்லை. எங்கள் குல தெய்வத்தில் தாங்கள் உரைப்பது போன்றே ஒரு பெரிய சூலம் உண்டு. அது சத்தியம். வருகின்ற அமாவாசை முதலாகவே நான் குலதெய்வ வழிபாட்டைத் தொடங்குகின்றேன் என்றார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் குலதெய்வம் பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை அவருக்குக் கொடுத்தார்கள். அதாவது குலதெய்வம் என்பது நமது குலத்தில் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு  வரும் தெய்வம் ஆகும்.  இத்தகைய குல தெய்வமே நமக்கு எளிமையாக அருள் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் விரைவில் பெற்றுத் தரும். பெரும்பாலும் குலதெய்வம் சிறு தெய்வங்களாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட்டுச் சொல்ல முடியாது.  அதே சமயம் சிறு தெய்வம்தானே என்று அலட்சியப் படுத்தவும் கூடாது.  ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதியைப் பெற்றுத்தான் எமன் கூட ஒருவரின் உயிரை எடுக்க முடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவைஎனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றனகுலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவையாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லைஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாதுஅது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும். மற்ற கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக அபிடேகம் செய்து பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
 நீண்ட நாட்கள் கடுமையான முயற்சி செய்த பின்பே ஜீவ நாடி கேட்க வந்துள்ளீர்கள். ஆனால் குலதெய்வ அருள் குறை இருந்ததால் தொடர்ந்து வாக்குரைக்க வேண்டாம் என்று முருகனிடம் உங்கள் குலதெய்வம் உரைத்துவிட்டடது. அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு காலம் எதற்கெடுத்தாலும் தடைகள் வந்திருக்கின்றது. எனவே குலதெய்வ வழிபாட்டை முறையாகச்செய்து விட்டு மீண்டும் வந்து ஜீவ நாடி கேட்டுக் கொள்ளும்படி சொல்லி திரு நீறு கொடுத்து ஆசி கூறி ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் அவரை அனுப்பிவைத்தார்கள். வாசகர்கள் இந்த சம்பவத்தை மனதில் வைத்து உங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தவறாமல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 15 செப்டம்பர், 2016

27.09.2016 அன்று பழநியில் பட்டணம் சுவாமிகளுக்கு குருபூஜை

                                                               அழைப்பிதழ்




                                             சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

புதன், 14 செப்டம்பர், 2016

ஜீவ நாடியில் தோன்றிய கிருஷ்ணர் உருவம்


ஒருவர் வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். அவருக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் ஜீவ நாடியில் வரும் வாக்குகளைப் பாடல் வடிவில் உரைத்து அதற்குரிய பொருளையும் உரைத்து வந்தார்கள். திடீரென ஜீவ நாடியில் பகவான் கிருஷ்ணரின் உருவம் தோன்றியது. அதைக் கண்ட சுவாமிகள் வந்தவரிடம் நீங்கள் கிருஷ்ணரை பூஜித்து வந்தீர்களா என்று கேட்டார் அதற்கு அவர் நான் கனடாவில் இருக்கும்போது அங்கு ஒரு கிருஷ்ணார் கோவில் உண்டு அடிக்கடி செல்வேன். அங்கு ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்வேன். இப்போது இந்தியா வந்து சில ஆண்டுகளாக அந்த மந்திரத்தை ஜபம் செய்வதில்லை என்றார். இந்த ஜீவ நாடியில் கிருஷ்ணபரமாத்மாவின் உருவம் வருவதால் நீங்கள் அந்த மஹாமந்திரத்தைத் தொடர்ந்து ஜபிக்க வேண்டும் என்று சுவாமிகள் உரைத்தவுடனே வந்தவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் தங்களிடம் வந்து ஜீவ நாடி கேட்க வேண்டும் என நீண்ட காலமாக முயற்சி செய்து இப்போதுதான் வந்து பார்க்க முடிந்தது. முன் பின் என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் ஜீவ நாடியில் கிருஷ்ணர் உருவம் வந்தவுடன் நீங்கள் கேட்ட கேள்விகள் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது என்று கூறினார். அந்த மஹா மந்திரம் பற்றி மேலும் உரைக்கப்பட்டது.  மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது 'மன்' என்றால் மனம். 'திரா' என்றால் "விடுவிப்பது". மனதை அதன் துன்பங்களில் இருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம், ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும்.
மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம், பாவ விளைவுகள், தீய சிந்தனைகள், சண்டை சச்சரவுகள், காம, க்ரோத, மோஹ, லோப, மத, மாச்சர்யம் மற்றும் அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி "ஹரே கிருஷ்ண" மந்திரத்திற்கு இருப்பதால் இம்மந்திரத்தை "மஹா மந்திரம்" என்று வேத சாஸ்த்திரங்கள் அழைக்கின்றன. ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தைச் சொல்லக் கட்டுபாடுகள் எதுவும் இல்லை. உச்சரிக்கும் முறையானது, நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெறலாம்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
இந்த மஹா மந்திரம் கலியுகத்தின் எல்லா தோஷங்களியும் நீக்க வல்லது என ப்ருஹன் நாரதீய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஷ்தி ஏவ நாஷ்தி நாஷ்தி ஏவ கதிர் அன்யதா:
பொருள்:
துன்பங்கள் நிறைந்த இக்கலியுகத்தில் எம்மை, ஹரி நாம சங்கீர்த்தனத்தைத் தவிர வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது, வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது, வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது.
இப்படி மகிமை வாய்ந்த மஹா மந்திரத்தை நீங்கள் ஜபிக்காமல் விட்டதால்தான் இவ்வளவு கஷ்டம் வந்துள்ளது எனவே இனி தவறாமல் ஜபம் செய்யுங்கள் என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் உரைத்தார்கள். இன்னும் ஏராளமான செய்திகள் அவருக்கு ஜீவ நாடியில் வந்தது. அது அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்தது என்பதால் நமக்கு இங்கு தேவையில்லை. எல்லோரும் இந்த மஹா மந்திரத்தின் ஆற்றலையும் நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியின் வலிமையை உணரவே இந்த சம்பவம் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
                ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!