திங்கள், 27 பிப்ரவரி, 2017

சிரவை ஆதீனங்களின் ஓவியங்கள் கண்கவர் காட்சிகள்

                                                       தவத்திரு இராமானந்த சுவாமிகள்
                  
                                                         தவத்திரு கந்தசாமி சுவாமிகள்
                                                      
                                                           தவத்திரு சுந்தர சுவாமிகள்
                                                      
                                                        தவத்திரு குமர குருபர சுவாமிகள்
                                                         

                                                    சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

மருதமலை படித் திருவிழா அழைப்பிதழ் 14.03.2017

                                                              அழைப்பிதழ்

                                                 
          
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

ஜீவ நாடி உரைத்தபடி மருதமலையில் படி விழா 14.03.2017

                                                                   மருதமலை
நிகழும் துன்முகி வருடம் பங்குனி மாதம் 1ம் தேதி 14.03.2017 செவ்வாய்க்கிழமை அன்று கோயம்புத்தூர் மருதமலையில் காலை 6 மணிக்கு படி விழா, மருதாசல முருகப்பெருமானுக்கு அபிடேகம், அருச்சனை, ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள்  ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்தபடி செய்யப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் சான்றோர்கள்:

கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமை தாங்குகின்றார்கள்,
 கோவை பேரூராதீனம் இளையபட்டம் கயிலைப் புனிதர் தவத்திரு. மருதாசல அடிகளார் அவர்கள்,
                                                        
தென்சேரிமலையாதீனம் தெற்கு நந்தவனத் திருமடம் தவத்திரு. முத்து சிவராமசாமி அடிகளார் அவர்கள்,
                                           
அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்த பீடம், ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஆகியோர் முன்னிலையில் படி பூஜை ஆரம்பம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தி அதைத் தொடர்ந்து குரு மஹா சந்நிதானங்களின் அருளுரைகள் நடைபெற இருக்கின்றது.
                                   
படி பூஜை நடக்கும் போது சிரவையாதீனம் இரண்டாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் இயற்றிய மருதமலை அலங்காரம் நூல் பாராயணம் செய்யப்பட உள்ளது.

                                   அனைவரும் வருக! அருள் பெறுக!!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

நன்றி! நன்றி!! நன்றி!!! பெண்மை.காம்

www.penmai.com எனும் வலைப்பக்கத்தில் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் பற்றியும், ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி பற்றியும் தகவல் இடம்பெற்றுள்ளது. அதன் விபரம் இங்கு வெளியிடப்படுகின்றது. மேலும் தகவலுக்கு இணையத்தின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்மை.காம் வலைதளத்திற்கு நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும், நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் சார்பாகவும் நன்றி! நன்றி!! நன்றி!!!
இதோ அந்த பதிவு:  

தீராத வினைகளை ஜீவநாடி மூலம் தீர்க்கும் ஞானஸ்கந்தமூர்த்தி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு எனும் கிராமத்தில் மலைக்காரன் தோட்டம் என்ற இடத்தில் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி கோவில் உள்ளது.

ஞானஸ்கந்தமூர்த்தியாக முருகன் இங்கு அருள்பாலிக்கிறார். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.

இங்கு பல வித துன்பங்களாலும் பிரச்சினைகளாலும் அவதிப்படுபவர்கள் வந்து ஞானஸ்கந்த மூர்த்தியை வேண்டி கொள்கின்றனர்.

இந்த கோவிலில் அமாவாசை அன்று செய்யப்படும் பூஜைகள் வழிபாடுகள் மிகவும் பிரசித்தம். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசையன்றும் வந்து இக்கோவிலை 27 முறை சுற்றி வந்து வழிபட்டால் சிறப்பு.

பூஜைகள் வழிபாடுகள் முடிந்தவுடன் இக்கோவிலில் ஜீவநாடி படிப்பது சிறப்பு.

முருகப்பெருமானின் வாக்காக ஜீவநாடி படிக்கப்படுகிறது. கூட்டத்தில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் நாடியில் முருகன் உரைப்பதற்கிணங்க யாருக்கு கர்ம வினைகள் குறைய வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அப்படிப்பட்ட குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் அழைக்கப்படுவார்கள்.

நாடியில் வரும் அழைப்புப்படி குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டுமே அழைக்கப்படுகின்றனர். அவர்களின் துன்பங்கள் தீர உரிய பரிகாரங்களை முருகன், மற்றும் அகத்தியர் ஜீவநாடியில் தரும் வாக்குப்படி உரைக்கப்படுகிறது.

மற்றவர்கள் மனம் தளராமல் தொடர்ந்து இக்கோவிலுக்கு வருவதன் மூலம் என்றாவது ஒருநாள் ஜீவ நாடி பரிகாரங்களை தெரிந்துகொள்கின்றனர். 

தொடர்ந்து இக்கோவிலுக்கு அமாவாசைதோறும் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கர்மவினைகளையும் துன்பங்களையும் கரைக்க கூடியது.

Read more: http://www.penmai.com/forums/miscellaneous-spirituality/49911-spiritual-informations-201.html#ixzz4ZIoLhsZn

                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கஜபூஜை சுந்தர சுவாமிகள் ஓவியமும் ஸ்ரீஸ்கந்த உபாசகரின் கவிதையும்

கார்த்திகை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை அன்று கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவதரித்தார்கள்.  நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் குரு நாதர் தவத்திரு சுந்தர சுவாமிகள் ஆவார்கள். அந்த வகையில் சுவாமிகள் அடியேனுக்கு பரம குரு நாதர் ஆவார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் விசாகம் அன்று கௌமார மடத்தில் சுவாமிகள் அவதார விழா பூசை   நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. சுவாமிகள் செய்த கஜ பூஜை அனைவராலும் இன்றும் மெய் சிலிர்க்கும் வகையில் போற்றப்பட்டு வருகின்றதுஇது போல் ஒரு பூஜையை இது வரையில் யாருமே செய்ததில்லை. இனி எவரும் செய்ய இயலாது. அப்போதே உரிய படி பதிவு செய்திருந்தால் இந்த கஜ பூஜை கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கும். இந்த கஜ பூஜை நடத்தி 25 ஆண்டுகளாகி அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு 108 கோ பூஜை, கஜபூஜை, 1008 திருவிளக்கு பூஜை கஜ பூஜை சுந்தர சுவாமிகள் திரு உருவம் திறப்பு, சீர் மிகு சிரவை ஆதீனம் எனும் நூல் வெளியீடு, அறுபத்து மூவர் நீராட்டு என தனது ஞானாதேசிகரைப் போற்றும் விதமாக  நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் கஜ பூஜை வெள்ளி விழாவைக் கொண்டாடினார்கள்.
கொங்கு நாடு செய்த தவப் பயணாய் அவதரித்தவர் நம் சுந்தர சுவாமிகள். அவருக்கு நாம் என்ன கொடுத்தாலும் ஈடு இணை ஆகாது எனவே தூய்மையான பக்தியைச் செலுத்தலாம். தமிழ்ப்பற்று இருப்பவர்கள் நம் சுந்தர சுவாமிகள் இயற்றிய சுந்தரர் சொற்றமிழை படித்து ஆய்வு செய்து இன்புறலாம். ஆலய வழிபாட்டில் விருப்பமுடையவர்கள் சுந்தர சுவாமிகள் திருப்பணிகள் செய்த கௌமார மடாலயம், அவினாசி, திருச்செங்கோடு, திருப்பெருந்துறை, வெஞ்சமாக்கூடல் போன்ற தலங்களை தரிசனம் செய்யலாம். வழிபாடு செய்பவர்கள் தமிழ் முறையில் வழிபாடு செய்து சுவாமிகளின் செயல்களைப் போற்றலாம். இப்படி ஏதேனும் ஒரு வகையில் நமது சுவாமிகளைப் போற்றி வழிபட்டு குருவே பரம்பொருள் எனும் கௌமார நெறியில் இணைந்து குருவருளால் அந்த தண்டபாணிக்கடவுள், ஞானஸ்கந்தப் பெருமானின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கஜபூஜை சுவாமிகளின் திருவுருவம் ஓவியத்தில் மெய் சிலிர்க்கும் காட்சி

தவத்திரு குமர குருபர சுவாமிகள் திருவுருவ ஓவியம் உருவாகிக் கொண்டிருக்கின்றது..... அந்த  காட்சி....
ஓவியம் உருவாகிவிட்ட காட்சி....


கவிதை:
ஓம்கார உபதேசம் தந்தைக்குச் செய்த
ஓம்கார உருவ கணபதியின் தம்பி
காவியமாய் கண்ட கௌமார வம்சம்
ஓவியத்தில்  மின்னும் காட்சியிதே

பாவிகளை பரிசுத்தம் ஆக்கி பாரினில்
காவியங்கள் படைத்த கௌமார வம்சம்
ஆவிதனை அப்படியே அழகாக ஆட்கொள்ள
ஓவியத்தில் மின்னும் காட்சியிதே

நிஜமாக இருக்கும் நிலை போலேவே
கஜபூஜை சுவாமிகள் திருவுருவம் மின்ன
குமர குருபரர் என் குருவின் உருவம்
சாமரம் வீசி துதிக்கவே
                                                                                    -ஸ்ரீஸ்கந்த உபாசகர் 

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!



வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

கோவை கௌமார மடாலயத்தில் அடியார்கள் மாநாடு ஏப்ரல் 21,22,23-2017

கோவை கௌமார மடாலயத்தில் அடியார்கள் மாநாடு  ஆன்மீக அருள்நெறிக் கண்காட்சி  ஏப்ரல் 21,22,23-2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
                                                    

  • 5 அடி உயர ஐம்பொன் சிவ பெருமான் சிலைக்கு லட்சம் சங்காபிசேகம்
  • 1008 திருக்குண்டங்கள் தமிழ் முறை வேள்வி
  • 108 ஓதுவார்கள் -திருமுறை பாராயணம்
  • 5000 அடியார்கள் சங்கு நாத முழக்கம்
  • 1008 அடியார்கள் கயிலாயம் வாத்தியம் வாசிப்பு
                                         அனைவரும் வருக! அருள் பெறுக!!


திங்கள், 13 பிப்ரவரி, 2017

ஜீவ நாடி அதிசயம் உண்மைச்சம்பவம்

ஒரு பெரியவர் ஜீவ நாடி கேட்க வந்து அமர்ந்தார். அவருக்குப் பின்வருமாறு ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்தார்.
ஜீவ நாடி: சிறு கல்வி கற்றவன்
பெரியவர்: ஆம் சுவாமி
ஜீவ நாடி: இதுவரை தொழில் இல்லை தொல்லைதான். பெரிய சம்பாத்யமும் இல்லை.
பெரியவர்: ஆம் சுவாமி உண்மை
ஜீவ நாடி: பூமியும் வழக்கிலும் வம்பிலும் இருக்கும். நீதிமன்றம் ஏகவேண்டும்
பெரியவர்: ஆம் சுவாமி. எனது பூமி மீது வழக்கு உள்ளது. நீதி மன்றத்தில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
ஜீவ நாடி: இல்லற சாபம் இல்லாள் இல்லை பிள்ளை இல்லை. சந்நியாசி போல் அலைய நேரும்
பெரியவர்: சத்தியமான உண்மை. எனக்கு மனைவி குழந்தைகள் கிடையாது. ஒரு சந்நியாசி போல்தான் அலைந்து வருகின்றேன்.
ஜீவ நாடி:ஜோதிட சாத்திரம் ஆய வல்லவன் பலருக்கும் பயன்படக்கூடியவன். உன் மூலம் பலர் நலம் அடைவர். மற்றவரால் உனக்கு நலம் இல்லை. வேதாந்தம் ரகசியம் அறிவாய். அகத்தியன் ஆசி உண்டு. சித்தர்கள் மார்க்கத்தில் வருவாய். பல சித்துக்களும் பெறுவாய். இன்னும் ஆயுள் உண்டு. ஆரோக்யம் தொல்லை தரும். மூட்டோடு முதுகு வலி ரத்தம் என ரோகம் வரும் கவனம்.
பெரியவர்: மிகச் சரி மிகச் சரி.
ஜீவ நாடி: அம்பாள் ஒருவள் ஸ்தம்பனக்காரி அன்னவளே உன்னுள் இருந்து உன்னை வழி நடத்தி வருகின்றாள். அன்னவளின் மந்திரத்தை அதிகாலையில் 5 மணி முதல் 6 மணி வரை ஜபித்து வா. விரைவில் மௌனம் சித்திக்கும். பின் வழக்கும் வெல்லும். சொத்து வந்து சேரும். பலருக்கும் குரு போல் இருப்பாய். ஜோதிடம் சொல்வாய். உபாசனை புரிவாய். ஸ்தம்பனக்காரி உன்னிடம் வந்து விளையாடுவாள்.
பெரியவர்: கடவுளே….மிக மிக உண்மை. எனக்கு ஜோதிடம் தெரியும். பலருக்கும் சொல்லி வருகின்றேன். அப்படியே பலித்து வருகின்றது. நீங்கள் சொல்லும் இந்த அம்பாள்தான் எனக்கு உற்ற துணை. இந்த அம்மனின் கோவில் அபூர்வமாக ஒரு சில இடங்களில் மட்டுமே உண்டு. அடியேன் அமாவாசை மற்றும் முழு மதியில் தவறாமல் சென்று பூஜையில் கலந்து கொண்டு வருகின்றேன். அந்த அம்மனே எனக்கு எல்லாம். முருகப்பெருமான் புட்டு புட்டு வைத்து விட்டார் ஐயா. எனக்கு இனி என்ன வேண்டும். பல இடங்களில் சென்று அலைந்து திரிந்து இன்று இங்கு ஒரு பெரும் மன நிம்மதி கிடைப்பதை உணர்கின்றேன். இது வரை எனக்கு இது போல் யாரும் நாடி உரைத்ததது கிடையாது. நான் 3 மணிக்கே எழுந்து விடுவேன். நீங்கள் சொல்லும் மந்திரம் எனக்கு ஏற்கனவே உபதேசம் ஆகியுள்ளது. எனவே இனி முதலாய் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஜபம் செய்யத் துவங்குகின்றேன். எனக்கு மௌனம் சித்திக்குமா சுவாமி?
ஜீவ நாடி: ஜபத்தால் ஸ்தம்பனம் ஆகும் மௌனம் சித்திக்குமே.
மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் அசையாமல் வைத்திருப்பதற்குப் பெயர்தான் மௌனம். ஆன்மீக வாழ்வை ஒரு கனி எனக் கொள்வோமேயானால், மௌனம் அதன் சுவையாகும். நாம் அடைகின்ற முடிந்த பூரண நிலையே மௌனம். எண்ணம், சொல், செயல் இந்த மூன்றிலும் கடைபிடிக்கப்படும் மௌனத்தில், பேசாமல் இருக்கும் வாக்கு மௌனமே எளிதானது. எனவே முதலில் மௌனம் பழகுகின்றவர்கள் பேசாமல் இருந்து பழகுவார்கள். வாயை அசைக்காமல் வைத்திருப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். இதனால் வாக்கு சித்தி உண்டாகும். இல்லறத்தார்கள் விரத நாட்களில் மௌனம் கடைபிடிப்பார்கள். மௌனத்தோடு இறை சிந்தனையும் சேரும் போது அதன் பலன் மிகுதியாகும். வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்கள் முதலில் தனிமையில் இருப்பதே நல்லது. அதில் சித்தி அடைந்த பிறகு கூட்டமாக உள்ள இடத்தில் அமரலாம். வாக்கு கட்டுப்படுத்தப்படும் போது மற்ற இந்திரியங்களும் கட்டுக்குள் வருகின்றன. வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்களுக்கு கோபம் என்கிற குற்றம் நீங்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். பெண்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனைத் தரும். அவர்கள் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளே ஏற்படாது. சக்தி விரையமாவது தடுக்கப்படும். பேச்சு குறைகின்ற அளவு செயல்திறன் அதிகரிக்கும்.
பெரியவர்: மிகுந்த மகிழ்ச்சி சுவாமி என்று கூறி ஆசி வங்கி விபூதி பெற்று விடைபெற்றார்.
                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் தைப்பூச விழா கொடியேற்றம்

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் தைப்பூச விழா கொடியேற்றம் படங்கள்
வலம்புரி செல்வ விநாயகர்

ஸ்ரீஞானஸ்கந்தர்
பாலசுப்ரமண்யர்

கொடியேற்றம் நிகழ்வு
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி உண்மைச் சம்பவங்கள்

ஒரு வாசகர் ஜீவ நாடியில் தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.   நாங்கள் கேரளாவில் வசிக்கும் ஒரு குடும்பம். நாங்கள் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அருள்வாக்கு வந்தது. அதில் எங்களுடைய வீட்டின் முன்பு மா மரம் ஒன்று இருப்பதையும், அதில் பூ, காய் ஒன்றும் இல்லாததையும் குறிப்பிட்டு, பின் வீட்டின் பூஜை அறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் போட்டோ சுவற்றில் நன்கு ஒட்டப்படாமல் இருந்ததையும், ஜீவ நாடியில் உரைத்தார். பின் வீட்டில் பச்சை கலர் மூடி போட்ட பாக்ஸில் சாப்பிடுவதற்கான பொருள் இருந்ததையும், பின் வீட்டிற்க்கு பின்புறம் ஏதோ ஒரு  மிருகம் ஒன்று தெரிகிறது அது என்ன என்றும் கேட்டார். நாங்கள் அந்த மிருகத்தை பார்த்திருக்கிறோம். அதை கேரளாவில் மரப்பட்டி என்று அழைப்பதுண்டு. அது ஜீவ நாடி அருள்வாக்கில் வந்தது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், இருந்தது. ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கோ எங்களைப் பற்றியோ, எங்கள் வீட்டைப் பற்றியோ, எந்த ஒரு தகவலும் அப்போது தெரியாது. அது முதல் எங்கள் குடும்பம் முழுவதும்  ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியைச் சரணடைந்து விட்டோம். ஜீவ நாடியில் வரும் வாக்கின் படி நடந்து வருகிறோம்.
மேலும் இன்னுமொரு வாசகர் பின்வருமாறு எழுதியுள்ளார். எனது உறவினர் ஒருவருக்கு ஸ்ரீ ஸ்கந்த உபாஸகரின் அருளாலும், ஆசியாலும் ஜீவநாடி படிக்கும் பாக்கியம் கிடைத்தது. சுவடியைப் பிரித்து முருகனைப் பிரார்த்தனை செய்து சுவாமிகள் நாடி படிக்கத் தொடங்கினார். சிறிது நேரம் படித்தவுடன் நாடியில் ஒரு சிறிய வேல் தோன்றியது. அந்த வேலை ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அடியேனுக்கு காண்பித்தார்கள். முருகா, முருகா, முருகா எனப் பிரார்த்தனை செய்து வேலை தரிசனம் செய்தேன். பின் அந்தப் பெண்ணுக்கு மாத வயிற்று வலி வரும் என்றும், அதற்கு மருந்தாக ஒரு ஆயுர்வேத மருந்தின் பெயரும் ஜீவநாடியில் வந்தது. மருந்து கூட நாடியில் வருமா என ஆச்சரியத்துடன் சுவாமிகளைப் பார்த்து கேட்டதற்க்கு வரும் என்றும், அந்த மருந்தின் பெயரின் எழுத்தையும் ஜீவநாடியைக் காண்பித்து படித்துக் காண்பித்தார்கள். (மருந்தின் பெயர் குறிப்பிட அனுமதி இல்லாததால் குறிப்பிடவில்லை.) ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகள் கௌமாரப் பயணம் வலைத்தளத்திலும், திருவருள் சக்தி புத்தகத்திலும் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற அடியவர்களுக்கு முருகப் பெருமானின் அனுமதியோடு காண்பித்ததாக எழுதியிருக்கிறார்கள். நமக்கும் இந்த பாக்கியம் கிடைக்காதா என்று முருகப் பெருமானை வேண்டியிருக்கிறேன். உண்மையான பக்தி யார் வைத்தாலும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருள்புரிவார். முருகப் பெருமான்  கருணைக் கடல். கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் தெய்வம். கந்தனை நம்பினோர் என்றும் கைவிடப்படுவதில்லை. இதுபோல் நிறைய திருவிளையாடல்களை ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி ஜீவநாடி மூலம் நடத்தி வருகிறார். 

              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!