வெள்ளி, 20 ஜூன், 2014

ராகு-கேது அருளைக் கொடுக்கும் பரிகாரங்கள்:



 ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் ஒவொரு ராசிக்கும் ஒரு ஆலய பரிகாரம்
சொல்லப்பட்டுள்ளது. அதைக் கடைபிடிப்பதோடு பின் வரும் பரிகாரங்களையும் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த ஊர்களில் உள்ளவர்கள் கடைபிடிக்கலாம்.





வாசகர் வசதிக்காக ராகு கேது பரிகார தொகுப்பு இங்கே கொடுக்கப்படுகிறது:-

* ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மனை ஒவ்வொரு

வெள்ளி தோறும் ராகு காலத்தில் தரிசனம் செய்து வந்தால் ராகு கேதுவின்

தோசம் விலகும். குறைந்த பட்சம் எட்டு வாரம் வழிபட வேண்டும்.


 *ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோவில் (வழி)

தண்ணீர்பந்தல் பாளையம் போஸ்ட், தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி

திருக்கோவில் ராகு- கேதுவுக்குரிய பரிகார தலம் ஆகும். இங்கு விஷ

கடிகளுக்கு தண்ணீர் மந்தரித்துத் தரப்படுகிறது.


* கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழைத் தோட்டத்து

அய்யன் கோவில்உள்ளது. இது ராகு-கேது பரிகார ஸ்தலம்ஆகும்.


* கோவை மருதமலையில் உள்ள பாம்பாட்டி சித்தர் குகை அருகே அமர்ந்து

தியானம் செய்தால் ராகு கேது அருள் கிடைக்கும்.


* சங்கரன் கோவில் அருகில் உள்ள பாம்பாட்டி சித்தர் சமாதியில் வழிபாடு

செய்தாலும் ராகு கேதுவின் அருள் கிடைக்கும்.


* சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி

தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான

அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும்

கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகு-

கேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.


* காரைக்குடியில்செஞ்சைபகுதியில்நடராஜ்தியேட்டர்கீழ்புறம்ஸ்ரீபெரியநாயகி

சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில்இருக்கிறது. இங்கு நாக விநாயகர்

சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம்

அர்ச்சனை செய்யலாம்.


 * பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற

ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு

வழிபடலாம்.



* ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்

செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம்.

நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில்

காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான்

செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி

ராகு-கேது அருளைப்பெறலாம்.


* திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்)

நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி

வழிபடலாம். அபிஷேகம்செய்யலாம்.


 * செம்மங்குடியில்உள்ள கேதுபுரம்கேது ஸ்தலம்ஆகும். இங்கு வழிப்படலாம்.


* தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் பாதையில் உள்ள

தொலைவில்லிமங்கலம்சென்று வணங்கலாம்.


* மன்னார்குடி அருகில் பாமினியில் உள்ள சிவாலயம் ஆதிசேஷன் வழிபட்ட

ஸ்தலம்உள்ளது.


* திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி-

விசுவாமித்திரர்தவம்இருந்த பூமி தில்லைக்காளியும்உண்டு.


* நாகர்கோவிலில்உள்ள நாகராஜா கோவில் (ஆதிசேஷன்வழிபட்ட ஸ்தலம்)


* மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை

கோவில்பிரகாரத்தில்பன்னிருநாகர்உள்ளன.இதற்குபாலாபிஷேகம்
செய்யலாம்.


* கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப்

பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில்

நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர் அர்ச்சனைக்கும்

பணம் கட்டினால்பிரசாதம்அனுப்பி வைப்பார்கள்.


* ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட

இடங்களில் மாறினாலும் சரி- அதற்காக பயப்படத் தேவையில்லை.

குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ

சமாதிகளில்சென்று வழிபட்டால் போதும், ராகு- கேதுப் பெயர்ச்சி பலனை

உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.


* சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை

நாகேஸ்வரமுடையார்கோவில்உள்ளது. இங்கும்வழிபடலாம்.


* சோளிங்கரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில்

நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.


*கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில்

நாகேஸ்வரர்மூலவர்.


* காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில்,

மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து

பூஜித்தது. மூலவர்மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும்ஆகும்.


* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர்.

இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும்

ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான

தோஷம் விலகும்.





* கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி

அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை

அம்மனை வழிபடுங்கள்ராகு பகவானால்உண்டான தீமை விலகும்.



* சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய

மகிரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன்,

ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான

தோஷம்விலகும்.



 * நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர்

ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக

ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில்

திருமணம் நடக்கும்.


* விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம்

எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை

வணங்குங்கள். ராகு மற்றும்கேதுவினால்உண்டான தோஷங்கள்விலகும்.


* சென்னை, மைலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக

வணங்கி வழிபட்டுவர ராகு- கேதுவினால்ஏற்பட்ட தடைகள்விலகும்.


* திருச்சி மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி

வாருங்கள்உங்கள்வாழ்வில்ராகு-கேது சிக்கல்விலகி சுபீட்சம்காண்பீர்கள்.


* திருவாலங்காடு சென்று முஞ்சிகேசமுனிவரும், கார்கோடகனும் வழிபட்ட

வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர ராகு,

கேது தோஷம்நீங்கி வளம்பெருகும்.


* மயிலாடுதுறை- காரைக்கால் சாலையில் செம்மாங்குடிக்கு அருகில்

திருச்சிறுபுலியூர் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் கிருபாசமுத்திர

பெருமாளையும், ஸ்ரீதயாநாயகி தாயரையும் வணங்கினால் வழக்கில் வெற்றி,

பூர்வீக சொத்து பிரச்சினை தீருதல், செல்வம்சேருதல்ஆகியன கிட்டும்.


* புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும்

ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாக நாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள்

யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இன்றும்

பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர்

சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள 5 தலை

நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில்குளிப்பதும்விசேஷம்.


* திருவாரூர்- கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள

தலம் மணக்கால். இங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீசேஷபுரீஸ்வரரை

வணங்கி ஸ்ரீஆதிசேஷன் விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம்

நீங்கப் பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும்

காணலாம்.ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கினால் அரசு தொடர்பான

வேலைகள் வெற்றி அடையும், நல்ல வேலை கிடைக்கும்.


* நாகர்களுக்கு எதிரான யாகங்கள் நடந்தபோது லட்சக்கணக்கான நாகங்கள்

யாக நெருப்பில் விழுந்து மடிந்தன. இதனை காப்பாற்ற நினைத்து

நாகராஜனான ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள்பெற்ற

திருத்தலமே நாகூர். இங்கு கோவில் பிரகாரத்தில் ஸ்ரீஆதிகேஷன்

சிவபெருமானை பூஜை செய்ததற்கான சாட்சிகள் உள்ளன. இங்குள்ள ஈசனை

வணங்கினால் ராகு, கேது தோஷங்கள்விலகி பெரிய பதவிகள்கிடைக்கும்.


* தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள

திருத்தலம் கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும்,

இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து

வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு

இணையான தலமாக போற்றப்படுகிறது.

இத்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ராகு

கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு

கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி பத்ரம்

(இலை) ஆகியவை சார்த்தி, ஸ்தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு

கட்டிமனதாரப்பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம்யாவும்விலகும்.



* குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் சுமார் 850

ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இக்கோயில் ராகு பகவானுக்கு

பரிகாரத்தலமாக அமைந்துள்ளது.கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில்

முக்கிய தோசம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு

தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது. இத்தோசம் உள்ளவர்கள்

இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம்

செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.


* ராகு, கேது தோஷ முள்ளவர்கள் ரமேசுவரம் கோவிலில் உள்ள நடராஜர்

சன்னதியில் அமைந்திருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும்

விளக்கில்நெய்விட்டு வழிபட்டால்தோஷம்நீங்கி விடுகிறது.


 * மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள இலுப்பட்டு தலம் நாக

வழிபாட்டில் சிறப்பு வாய்ந்தது. நளமகராஜன் விஷக்கடியில்

நிறமாறியிருந்தான். அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கே தான்

அடைந்தான் என்று அத்தல வரலாறு பேசும். சிவபெருமானே தமது

கண்டத்தில் விஷமருந்திய இறையைக் காட்டி அருளியபதியும்அதுவே தான்.


* கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில்

குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர்

திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாரம்பரம், திருப்பாமணி,

திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோயில் நாகமலை என்னும்

திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று

பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்களை எவ்வளவு

விவரித்தாலும்தகும்.


* ஐந்தலை நாகம் குடைப்பிடிக்க விநாயகப் பெருமான் வீற்றிருக்கும்

தலங்களுள் நாகப்பட்டினமும், தஞ்சை பாபநாசமும்சிறப்புக்குரிய

தலங்களாகும்.


* திருபுவனம் திருக்கோவிலில் எல்லா காலமும் சரபமூர்த்தி வழிபாடு அருள்

நலம் பொலிய நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும்,

வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் சரப மூர்த்தியை வழிபாடு செய்வதன்

வாயிலாக ராகு-கேதுக்களைப் பிரீதி செய்வதுடன் நடுக்கம் தீர்த்த பெருமான்,

அறம்வளர்த்த நாயகி, சரபர்இவர்களது அருளுக்கும்பாத்திரர்ஆகலாம்.



* தமிழ்நாட்டில் ராகு கால பூஜை முதன் முதலில் தொடங்கிய பெருமை

குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன்கோவிலில்

தான்எனப்படுகிறது. இங்கே நாள்தோறும்ராகு கால பூஜை நடைபெற்று

வருவது சிறப்பு.




ராகு கேது பரிகாரத்தலங்கள்:

ஸ்ரீகாளஹஸ்தி:

சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் திருப்பதியிலிருந்து 40 கி.மீ.

தொலைவிலும்உள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும்.

கீழப்பெரும்பள்ளம்:

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்தலத்தை அடையலாம். கேது

பகவானுக்குரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.

திருநாகேஸ்வரம்:

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில்உள்ளது.

கும்பகோணம்:

நகரின்மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன்கோயில்

பாமணி:

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ளது. பாதாளத்திலிருந்து

ஆதிசேஷன்தோன்றி வழிபட்டதால்பாதாளீச்சரம்என்றும்இத்தலத்தை

அழைப்பர்.

திருப்பாம்புரம்:

கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக

இத்தலத்தை அடையலாம். ஆதிசேஷன்வழிபட்ட தலம்இது.

ஸ்ரீவாஞ்சியம்:

கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக

இத்தலத்தை அடையலாம். ராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய

கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.

நாகூர்:

நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகராஜன் பூஜித்து

பேறுபெற்றார்.

பேரையூர்:

புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில்

உள்ளது.. நாகராஜன்பூஜித்த தலம்இது.

நயினார்கோவில்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம்

அமைந்துள்ளது.

நாகமுகுந்தன்குடி:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ.

தொலைவில் இத்தலம்அமைந்துள்ளது.

திருக்களாஞ்சேரி:

மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர்

நாகநாதர் சுயம்புலிங்கமாக அருள்பரப்பி தோஷ பயம்நீக்குகிறார்.


திங்கள், 16 ஜூன், 2014

ஜீவநாடி இரகசியங்கள் பகுதி – 5





ஜீவநாடி பல உண்மைகளைப் புலப்படுத்தி வைத்துவிடும். ஆனால் எதை 

எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

இடம், பொருள், ஏவல் அறிந்து குறிப்பறிந்து வெளியிட வேண்டும். 

சித்தர்கள் பலர் சூட்சுமமாக ஜீவ நாடியில் அருள்வாக்கு சொல்லுவதால் 

அவர்கள் சம்பந்தமாக ஏற்படும் சகுனங்கள், நிமித்தங்களைக் கவனித்தால் 

100% துல்லிய பலன்களைச் சொல்ல முடியும்.


ஜீவ நாடியும் ஜோதிடத்தை விட்டு விலகி எதையும் சொல்வதில்லை. 

மனிதனின் ஜாதக ரீதியாகவே பலன்களைச் சொல்லும் சித்தர்கள் 

சொல்வதால் கிரகங்களின் தாக்கங்களிலிருந்து தப்பிக்கின்ற வழிமுறைகளை 

ஏராளமாகச் சொல்வார்கள். பொதுவாக ஆலய வழிபாடுகளையே 

பரிகாரமாகச் சொல்வார்கள். ஒரு சில நேரங்களில் சில மூலிகைகளைப் 

பற்றியும் அதைப் பயன்படுத்தும் வித்தையும் சொல்வார்கள். சில 

நேரங்கள் யந்திரங்கள் பற்றியும், மந்திர ஜபம் பற்றியும் சொல்வார்கள். 

நமது ஞானஸ்கந்த ஜீவ நாடியின் மணி மகுடமாக நாங்கள் கருதுவது 

உபாசனை மார்க்கம். நெற்றியில் அடித்த்து போல் வருகின்ற உபாசனை 

முறைகள் உறுதியான பலன்களைத் தந்து உயர் வாழ்வை பலருக்கு தந்து 

கொண்டிருக்கிறது. இன்னும் பல சூட்சும இரகசியங்களை தொடர்ந்து 

பார்க்கலாம்.


ஜீவ நாடியைப் பற்றி எழுத ஆரம்பித்த உடனே பல்வேறு ஆன்மிக 

அருளாளர்களின் தொடர்பு கிடைத்தது. ஆசியில்லாமல் எந்த ஒரு 

காரியத்திலும் வெற்றிகள் கிடைப்பது சற்றுக் கடினம். ஒரு பல் மருத்துவர் 

ஒருவர் எம்மைத் தொடர்ந்து ஜீவநாடி படியுங்கள் எனது பிரச்சினைகளுக்கு 

தீர்வு தாருங்கள் என்று சுமார் ஆறு மாதங்களாகக் கேட்டுக் கொண்டே 

இருந்தார். அவரை நான் முன் பின் பார்த்தது கிடையாது. தொலைபேசியில் 

பேசியிருக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் நாடியில் பலன் உரைக்க 

அவருக்கு ப்ராப்தம் கிடைக்கவேயில்லை. அவரும் விடாமல் முயற்சி செய்து 

வந்தார். தொடர்பு கொள்வோர் அனைவருக்கும் நான் நாடி படிப்பதில்லை. 

எமக்கு பணம் நோக்கமே கிடையாது என்பதை அனைவரும் அறிவார்கள். 

பண பலத்தால் நாடியில் பலனை வாங்கிவிட முடியவே முடியாது. 

பக்தியால் மட்டுமே பலன் வரும்.


எவர் ஒருவர் பக்தி மார்க்கத்திலும் சித்தர்கள் தேடலிலும், ஆன்மிக 

தாகத்திலும் இருக்கிறார்களோ அவருக்கு 100% துல்லியமாக நெற்றிப் 

பொட்டில் அடித்தால் போல் பலன் நாடியில் அருள்வாக்காக வருகிறது. 

அதேபோல் விரைவில் பலன் தரவும் செய்கிறது. எனவே இறைவனது 

உத்தரவு இல்லாமல் என்னால் பலன் சொல்ல முடியாது. அது 

வியாபாரமாகப் போய்விடும். ஜீவநாடியை வியாபார நோக்கில் படித்தால் 

சித்தர்களது சாபத்திற்கு ஆளாக நேரிடும். அதேபோல் சுயநலத்திற்காகவும் 

இதைப் பயன்படுத்தக் கூடாது. மொத்தத்தில் ஜீவநாடி ஒரு தெய்வீக 

சுகானுபவம். தெய்வத்தோடும், தேவதைகளோடும், சித்தர்களோடும் 

உரையாடும் ஒரு கலை இது. இதைத்தான் அந்த பல் மருத்துவரிடமும் 

சொல்லி வந்தேன். அவரும் புரிந்துக் கொண்டு உரிய நாள் வரட்டும் எனக் 

காத்திருந்தார்.





சேலத்தில் மிகப் புகழ் பெற்ற, சித்தர்களோடு தொடர்புடைய ஒரு சிறந்த 

ஸ்தலம் ஊத்துமலை முருகன் கோவில் அங்கே இருக்கின்ற முருகன் 

பேசும் தெய்வம். அடிக்கடி அங்கு செல்வேன். அதேபோல் அந்த மலையில் 

ஒரு குகையும் உண்டு. அந்த குகைக்கு அருகிலே அகத்தியர் பிரதிஷ்டை 

செய்த 44 முக்கோணங்களை கல்லினால் செதுக்கி வைக்கப்பட்டுள்ள 

ஸ்ரீ சக்கரம் உண்டு. அதனது ஆற்றல்களை அளவிட்டுக் கூற இயலாது. 

பொதிகை மலை சென்று அகத்தியரைப் பார்க்க முடியாதவர்கள் இந்த 

ஊத்துமலை குகையில் தியானம் செய்து ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் 

அகத்தியர் தரிசனம் தருவார். அடியேனுக்கு அப்படித்தான் அகத்தியர் 

தரிசனம் கிட்டியது.


அதுமட்டுமல்லாமல் அகத்தியர் பூஜித்த லிங்கம் ஒன்றும் அந்த மலையில் 

உண்டு. அகத்தியர் மட்டுமில்லாமல் சுகர் மகரிஷிக்கும் இந்த மலைக்கும் 

நிறைய தொடர்பு உண்டு. ஒரு முறை ஊத்துமலை சென்று குகையில் 

ஒரு நாள் முழுவதும் தங்கி ஜபம் செய்துவிட்டு வெளியே வந்து 

அகத்தீஸ்வர சுவாமியை தரிசனம் செய்யும் வேளையில் ஐயா என்றது 

ஒரு குரல். திரும்பிப் பார்த்தேன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். 

ஐயா தாங்கள் தானே ஜீவ நாடி படிப்பவர், ஸ்கந்த உபாசகர் என்றார். ஆம் 

என்றேன். ஐயா நான் கடந்த ஆறுமாதமாக முயற்சி செய்தும் தங்களை 

வந்து சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் தான் ஐயா அந்த பல் 

மருத்துவர் என்றார். 


அட, ஆமாம் என்று நானும் யோசித்து எப்படி இங்கு வந்தீர்கள் என்றேன். 

ஐயா இந்த கோவிலுக்கு நான் இதுவரை வந்தது கிடையாது. எந்து நண்பர் 

ஓர் ஆன்மிகவாதி, அவர் தான் ஏதேனும் ஒரு கோவிலுக்கு போவோம் என 

இங்கு கூட்டி வந்தார் என்று அவரது நண்பரையும் அறிமுகப்படுத்தினார். 

அவரும் “திருவருள் சக்தி” வாசகர்தான். அவருக்கும் ஒரே மகிழ்ச்சி. 

அதுமட்டுமில்லாமல் அங்கு வருகின்ற ஊற்று நீரில் குளித்தேன். அது ஒரு 

சிலிர்ப்பை உடலில் உண்டாக்கியது என்று சொல்லி ஐயா இறையருளால் 

உங்களைச் சந்தித்தேன். நாடி படித்து எனக்கு ஒரு விடை சொல்லுங்கள் 

எனக் கேட்டார். இதற்கு மேல் வேறு என்ன அதிசயம் வேண்டும் இதோ 

அகத்தியரே நம்மை சந்திக்க வைத்துவிட்டார். நிச்சயம் நாடியி வாக்கு 

வரும் என நினைக்கிறேன் இருந்தாலும், 2 நாள் கழித்து தொலைபேசியில் 

தொடர்பு கொள்ளுங்கள் என விடை பெற்றுச் சென்றுவிட்டேன். 

மீண்டும் அழைத்தார், வந்தார். சுவடியைப் பூஜித்து பாடி அருள் வாக்கு 

ஆரம்பம் செய்யப்பட்டது. மடை திறந்த வெள்ளம் போல பலன்கள் 

கொட்டியது என்று தான் சொல்ல வேண்டும். மூச்சுவிடக் கூட 

முடியாமல் பலன்கள் வந்தது. அவரது முன் ஜென்மமும் வந்தது. 

தற்போதைய பிரச்சினையும் வந்தது. அதற்கு பலனும் வந்தது. எனக்கே 

ஆச்சரியம் இவ்வளவு பலனை ஒரே நாளில் சொல்லாத முருகன், அகத்தியர் 

மூலம் பலன் சொன்னார். இவருக்கும் அகத்தியருக்கும் பூர்வ ஜென்மத்தில் 

நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

ஆறு மாதமாக முயற்சி செய்தும் ஏன் கிடைக்கவில்லை? என்ற காரணமும் 

வெளிப்பட்டது.

“முன்ஜென்ம தொடர்புடைய ஸ்தீரி சாபம்

முழுமையாக முறை தவறி வந்த காதல்

மாசுபடும் மணவாழ்வு இவளை விடு

இல்லாவிடில் இருதார யோகமே

கட்டியவனை விட்டு கண்டவனோடுபோகும்

பெண்ணாவாள் பெருமையது பின்னால் இல்லை

முன்ஜென்ம முருகனடி சித்தரோடு

முழுமையான தொடர்பு கொண்டு நீயும்

மூலிகைகளைப் பிடுங்கி ஆய்வு செய்தாய்

முன்ஜென்ம தொடர்வதால் தந்தத்தை 

தரணியில் பிடிங்கி சரி செய்கிறாய்

சென்று வர வேண்டுமது சிவசைலம்

சிங்கார சேக்ஷத்ரமது சென்றுவா

வந்த பின்னே வழியமாய் இவள் போவாள்

வசந்த காலமது வருமே பாரு

வாட்டமது கொண்டிடாதே வரிசையாய்

வளமான யோகமது வரும் வரும்

இடர்களையும் இன்மபது விளையும்

இனிப்பான மூலிகை ஒன்று உண்டு

உறுதியாய் அதை நீ அணிந்து கொண்டு

உபாசனை யோகத்தில் மூழ்க வேணம்

சித்தர்கள் பலவும் சீரருளும் முறையாக

சீக்கிரம் ஆசிதந்து அற்புதமாய்

முன்ஜென்மமது வெளிப்படுமே

செய்துவிட்டுக் கேள்!” 

இன்னும் ஏராளமான இரகசியங்கள் வந்தது. சுருக்கத்தை மட்டுமே 

தந்திருக்கிறேன். இது ஏதோ கற்பனைப் பாடல் என நினைக்க வேண்டாம். 

எதுகை, மோனை, இலக்கணத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டது. ஸ்கந்தர் 

ஜீவ நாடி இதைக் கேட்ட அந்த வாலிபர் அதிர்ந்தார். காரணம் இவர் பல் 

மருத்துவம் படிக்கும் போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, 

காதலாகி மலர்ந்தது. இவரது தந்தை காவல் துறையில் மிகப்பெரிய 

உயர் அதிகாரி. அவருக்கு இவர் ஒரே மகன். மகனது காதலைப் பிடிக்காத 

பெற்றோர்கள் இந்த ஆறு மாதமாகப் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. 



அவ்வளவு துயரம். நாடி படித்த பின்பே அவரது தந்தை வந்து சேர்ந்தார். 

அவரிடம் பதிவு செய்யப்பட்ட பலனை அவரது மகன் போட்டுக் 

காண்பித்தவுடன் இன்பத்தின் உச்சத்திற்கே அவர் சென்றார்.

ஆனால் அந்த வாலிபருக்கு மட்டும் ஒரே வருத்தம். கட்டினால் 

அவளைத்தான் கட்ட வேண்டும் என்று, பரிகாரம் செய் சரியாகும் என 

அனுப்பி வைத்தேன். சற்று வருத்தமோடு சென்றார். வேறு வழியில்லை. 

முக ஸ்துதிக்காக பலன் சொல்வது எனது வேலையில்லை. வருவதை 

உரைப்பதே எமது கடமை. பல பேர் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் 

என்று சொல்லி பணம் பிடிங்கி இவரை ஏமாற்றியும் உள்ளார்கள். 



உங்கள் மகனது காதலை பிரித்து வைக்கிறேன் என்று சொல்லி அவரது 

தந்தையிடமும் பணம் பறித்து உள்ளார்கள். எனக்கு அதைப் பற்றியெல்லாம் 

கவலை இல்லை. தப்பு செய்தவன் இன்று நலமாக இருப்பது போல் 

தோன்றினாலும் தண்டனை நிச்சயம் பெறுவான். எனவே பரிகாரம் 

முடித்துவிட்டு வாருங்கள் என அனுப்பி வைத்துவிட்டேன். மீண்டும் 

நான்கு மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது

ஐயா, தாங்கள் சொன்னபடி எல்லாமே செய்துவிட்டோம் அந்த பெண்ணிடம் 

அடிக்கடி சண்டை வருகிறது. எனக்கு அவளைக் கண்டாலே வெறுப்பாக 

இருக்கிறது. அது மட்டுமல்ல அவளுக்கு வேறு ஒரு பையனை 

பார்த்துவிட்டார்கள். இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை 

பூங்காவில் பார்த்தேன். நெஞ்சம் குமுறிவிட்டது. உடனே உங்கள் நினைவு 

வந்தது. அலைபேசியில் அழைத்தேன் என்றார்.



மீண்டும் நாடி படிக்கப்பட்டது. இன்னும் சில இரகசியங்கள் உரைத்து 

உபாசனை மார்க்கத்தில் வழி சொல்லப்பட்டது. காரணம் இவர் 

முன்ஜென்மத்தில் சித்தர்களுக்கு தொண்டு செய்து, சில மூலிகைகளைக் 

காட்டில் சென்று பறித்து வரும் தொழிலில் இருந்தவர். அப்போது 

மூலிகைகளைப் பிடிங்கியவர், இந்த ஜென்மத்தில் சிறு மாறுபாடாக 

மனிதர்களின் பல்லைப் பிடிங்கி வைத்தியம் செய்து வருகிறார். முன் 

ஜென்மத்தில் இதே பெண்ணிடம் சாபம் வாங்கியதால் இந்த ஜென்மத்தில் 

அதே பெண் மூலம் மன வேதனையை அடைந்துள்ளார். உபாசனை 

மூலமே ஜபம், தவம் செய்தால் மட்டுமே முன் ஜென்ம தொடர்பு கிட்டும் 

என்றும் அகத்தியரும் அவரது குரு முருகனும் உரைத்ததால் உபாசனை 

போதிக்கப்பட்டது. தற்போது உபாசனை செய்து வருகிறார். ஒரு நாளைக்கு 

இரண்டு, மூன்று பேர் மட்டுமே வந்து போன மருத்துவமனை தற்போது 

20 பேர் வருகிறார்கள். ஜோதிடப் பணி, ஆசிரியப் பணி, மருத்துவ பணி, 

அனைத்தும் இறை அருளால் கிட்டும் பணிகள். 



இறையருள் இல்லாமல் இந்த பணிகள் பலிக்காது. பல் மருத்துவத்தில் 

இன்னும் பல சாதனை புரிவாய் என அகத்தியரும், முருகனும் 

சொல்லியுள்ளார்கள். அது பலிக்கும். அதேபோல் விரைவில் நல்ல 

குணவதியை மணப்பாய் என்றும் வந்திருக்கிறது. அதுவும் பலிக்கும். 

பலனை பொறுத்திருந்து பார்ப்போம்.



இறைவன் திருவிளையாடலைப் பாருங்கள். நமது நாடியில் வந்ததை பதிவு 

செய்து அடிக்கடி கேட்டும் வருகிறார். அதுவே மனதிற்கு உளவியல் 

ரீதியாகப் பலன் தரும் என்பதை அவரே சொல்கிறார். இதுபோல் இன்னும் 

ஆயிரம் சம்பவங்கள் உண்டு. உண்மையை உள்ளபடி உரைப்பதே எமது 

பணியாகும். இதைப் படிப்பவர்கள் இனிமேலாவது மனதளவிலும் கூட 

பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது எனப் பிரகடனம் செய்யுங்கள். 

தெய்வ வழிபாட்டில் ஈடுபடுங்கள். சித்தர்களை நித்தமும் பூஜியுங்கள், 

போற்றுங்கள், புத்துணர்ச்சியான வாழ்வு கிட்டும்.



நமது ஸ்கந்தர் ஜீவநாடி யாருக்கு பலன் சொல்லுமோ அவருக்கு 

நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் சொல்லியே தீரும். எம்மைத் தொடர்பு 

கொள்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு பொறுமை காப்பது அவசியம். 

ஐயா நான் ஒரு வருடமாகத் தொடர்பு கொள்கிறேன் படிக்கவே மாட்டேன் 

என்கிறீர்கள் எனப் பலர் என்னிடமும், ஆசிரியர் ஐயா அவர்களிடம் தங்களது 

கருத்துக்களைச் சொல்கிறார்கள். காரணம் இதுதான். உரிய காலம் 

வரும்போது படித்தால் தான் உண்மை புலப்படும். இல்லாவிடில் பலன் 

நடக்காது.



பொதுவாக, நாடி ஜோதிடம் பார்த்தால் சுமார் பத்தாயிரம் முதல் 

இருபதாயிரம் வரை பரிகாரம் சொல்கிறார்கள். அதே போல் பிறந்த தேதி, 

நேரத்தை வாங்கி அதைக் கொண்டு கணனியில் போட்டு, ஜாதகத்தில் 

உள்ள கிரக நிலைகளைக் கொண்டு, மனப்பாடமாகப் பாடல் வடிவில் 

சொல்கிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஈரோட்டில் 

இருந்து என்னைப் பார்க்க வந்த நபர். ஒரு சிலர் சொல்கின்ற பலனைக் 

கடைபிடிப்பது எப்படி என்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. இவர் எப்படி 

பலன் சொல்கிறார் என்பதை மட்டுமே ஆய்வு செய்து ஜோதிடர்களை 

சோதனை செய்வது மட்டுமே பணியாகக் கொள்கிறார்கள். அதே போல் 

தான் நாடி என்ற பெயரில் நடக்கும் மோசடிகளையும் அறியாதவர் 

இல்லை. நமது ஸ்கந்தர் நாடியை அதனால்தான் அனைவருக்கும் உரைப்பது 

இல்லை. காரணம் எவருக்கு பிராப்தம் உள்ளதோ அவருக்கே உரைக்கிறோம். 



அதேபோல இதில் வரும் பரிகாரங்களும் பொதுவாக அன்னதானம், சித்தர்கள் 

பூஜை, ஜீவ சமாதி வழிபாடு, ஆலய தரிசனம், மணி, மந்திரம், ஔஷதம் 

என்கிற முறையில்தான் வருகிறது.



பரிகாரங்கள் எத்தனை தான் செய்தாலும் அது பலிப்பதும். பலிக்காமல் 

போவதும், அவரவர் கர்ம வினையைப் பொறுத்தே அமைகிறது. அதே 

போல் நாடியில் வரும் பலன்களும் அவரவர் கர்ம வினைப்படியே நடக்கிறது 

என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தீதும் நன்றும் 

பிறர் தர வாரா, 


                             "ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்"

செவ்வாய், 10 ஜூன், 2014

குருவின்அருளை நிறைவாகப்பெற உதவும்சூட்சும இரகசியங்கள் !



 குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரைஎன்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்துநான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின்குருவாக மாறினார்.

அத்துடன்திட்டையில்கோயில்கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன்
கிரகம்ராஜகிரகம்என்று அழைக்கப்படுகிறது.


இவர்இடம்பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி,தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன்என பதினெட்டு பெயர்கள்உள்ளன. இவரின்சொந்த வீடுகள்தனுசு மற்றும்மீனம். ஒளிபடைத்த ஞானிகளையும், மேதைகளையும்உருவாக்குபவர்இவர்.


 மனித வாழ்க்கையின் ஏற்றம்-இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின்
அடிப்படையில்தான்அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழ்பவர் குருபகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரஹம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல்உண்டு.


அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்தி”
என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது. குரு பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும். இந்த குருப்பெயர்ச்சி என்பது சுமாராக ஓர் ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்வது ஆகும். நவகிரகங்களில் பூரண சுபகிரகமான குருபகவான், ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களே கோசார பலன்கள்எனப்படும்.


பொதுவாக குருபகவான்ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில்சஞ்சரிக்கும்போது சுப பலன்களையும் 1, 3, 4, 5, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும்போது அசுப பலன்களையும் வழங்குவார் என்பது விதி. ஆனால், இது பொதுவான விதிதான். அவரவருடைய சுய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளின்படியும், தசாபுத்திகளின்படியும்கோசார பலன்கள்மாறுபடும்.

1ஒவ்வொருவரும் குரு பெயர்ச்சியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் காரணம் ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற பெருமையும் அந்தஸ்தையும், அதிகாரத்தையும், பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி, வியாழன் என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருந்து போற்றப்படுகிறார்.


திருச்செந்தூரில் சூரனின் வரலாற்றை முருகப்பெருமானிடம் தேவர்கள் சார்பாக எடுத்துக் கூறியவர் குரு பகவான் என்பதாலும், முருகனே குருவிற்கெல்லாம் குருவாக இருப்பதாலும் திருச்செந்தூருக்கு குரு ஸ்தலம் என்கிற பெருமை ஏற்படுகிறது. எவர் ஒருவர் திருச்செந்தூருக்கு வாழ் நாளில் ஒரு முறையேனும் சென்று தரிசனம் செய்கிறாறோ அவருக்கு குரு அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது திண்ணம்.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் என்று பார்த்தால் பொருட்செல்வமும், மழலைச் செல்வமும். இந்த இரண்டையும் தரும்
கிரகம் குருபகவான். குரு பலம் வந்துவிட்டதா திருமணம் செய்யலாம் என்று
கேட்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு குருவின் பெருமை உண்டு.

நம் ஜாதகத்தில் குரு பலமாக இருப்பதும் கோட்சார ரீதியாக குரு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும் போது குரு பலம் வந்து விட்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

குரு முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.


 குருவின் காரகத்துவம் எனப் பார்க்கும் போது உடலில் குடல் பகுதி, மூக்கு,
கொழுப்பு, தொடை, வீட்டில் கடவுள் அறை, நீதிபதி, ஆசிரியர், வழங்குபவர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், கணக்காய்வாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், கடவுள், நீதிபதி, மரியாதை, உண்மை, பொறுமை, தன்னடக்கம்.

2

எல்லாவிதமான சுபம். பெரிய அளவிலான பணம். நேர்மை. சிந்தனை. சட்டபடியான ஆணை. பட்டு. பருத்தி. மஞ்சள்தொழில்கள். மிகப்பெரிய நிறுவனங்களின்கூலியாட்கள். கல்லீரல். தசைகள். மதகுருக்கள். தர்மகர்த்தாக்கள். திருப்பனி குழுக்கள். கோயில் ட்ரஸ்டிகள். எல்லாவற்றிலும் கவரவம் பார்ப்பவர்கள். திருப்தியற்ற மனிதர்கள்.


ரகசியமாக பகையை தீர்த்துக்கொள்பவர்கள், சந்தோஷம். குழந்தை. பூர்வீகம்.
ஆச்சார்யன். மதகுரு. விந்து. ஜீவன். பழங்கள். பாரம்பரியமிக்க. உணவுகள்.
வம்சம். முப்பாட்டன். பிராமணன். தங்கம். பட்டாடை ஆண்களுக்கு உயிர். மதம். மதத்தன்மை. எமபயம் நீக்கும். தசைகள். கல்லீரல். புற்று. வயிற்றுப் பகுதி நோய்கள். மஞ்சள்காமாலை. தட்சிணாமூர்த்தி. இருந்தாலும் பார்த்தாலும் சுபம்.


எல்லாவற்றிற்கும்உயிர், என ஒரு நீண்ட பட்டியல் கிடக்கிறது. ஒருவனின் முன்வினைக் கர்மப்படிதான் குரு அவனுடைய ஜாதகத்தில் வந்து அமர்வார். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல சேர்க்கை அல்லது பார்வை
பெற்றிருந்தாலும், அத்துடன் அஷ்டகவர்கத்தில் அதிகப்பரல்களைப் பெற்றிருந்தாலும், அவனுடைய முன்வினைகளில்குறைகள்ஏதும்இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

ஓராண்டு கால சஞ்சாரத்தில்! இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல
தசாபுத்திகள் நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான் பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.


இந்த குரு கவசத்தை வியாழன் தோரும் பாராயணம் செய்து உங்கள் ராசிக்கு
சொல்லியுள்ள பரிகாரங்களைக் கடை பிடித்து வந்தால் இந்த குரு பெயர்ச்சி நிச்சய நல்ன்களைத் தரும்.

குரு கவசம்

1.வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே! உன்னை தேனான
  சொல்லெடுத்து செவி குளிர போற்றுகின்றேன் காணாத இன்பம்
  யாவும் காண நீவழி வகுப்பாய் மீனமும் தனுசும் உந்தன் மேலான வீடதாகும்!


2.பொன்னிற முல்லையொடு புஷ்ப ராகத்தை ஏற்றாய்!
   வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய் மரத்தினில் அரசை ஏற்றாய்!
   எண்ணத்தில் நிற்கும் தேவா! எளிதினில் வெற்றி தாராய்! மண்ணினில்


3.பதினாறு ஆண்டை மறவாமல் நீயும் ஏற்றாய்!
  சுண்டல் நைவேத்யதால் தொல்லைகள் தீர்ப்பவன் நீ!
  கொண்டதோர் யானை உந்தன் கொண்டாடும் வாகனம் தான்!
  தந்திடும் பதவி வாய்ப்பும் தடையில்லாக் காரிய சிறப்பும்
  வந்திடும் பிள்ளைப் பேறும் வழங்குதல் உன் பொறுப்பே!



4. பொருளோடு புகழைத் தந்து போற்றிடும் வாழ்வைத் தந்து
    வருங்காலம் அனைத்தும் செல்வம் வரும் காலம்ஆக்கி வைத்து
    பெருமைகள் வழங்க வேண்டும் !


5. பேரருள் கூட்ட வேண்டும்! அருள்மிகு குருவே உன்னை
    அடிப்பணிந்து வணங்குகின்றேன்!
    வருடம் ஓர் ராசி வீதம் வட்டமாய் சுழன்று வந்தே தருகிற
    பலனை நாங்கள் தங்கமாய் ஏற்றுகொள்வோம் ! வருகிற நாட்கள்
    எல்லாம் வசந்தமாய் மாறுதற்கே அருள்தரும் உனது பார்வை
    அனுதினம் எமக்கு வேண்டும்!


6. குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்!

திருவருள் இணைந்தால் வாழ்வில் திருமணம் வந்து கூடும்!

பொருள் வகை பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்!

அருள் தர வேண்டி உன்னை அன்போடு துதிகின்றோமே!


ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின்அருளைப் பெறலாம்.

· வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை  வழிபடுவதன்மூலம்குருவின்அருளைப்பெறலாம்.

· வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும்,
ஏழைகளுக்கும்தானம்செய்வதாலும், குரு பகவானின்அருளைப்பெறலாம்.

· ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

· ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

· தாங்கள் படித்த பள்ளியின்ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின்அருளைப்பெறலாம்.

· வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக
உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில்அமைதியை நிலவச்செய்வார்.

· சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !

• மடப்புரம் தட்சிணா மூர்த்தி சுவாமிகளின் சமாதியில் வழிபாடு செய்தாலும்
  குருவின் அருள் கிடைக்கும்.

• பெருவள நல்லூரில் (லால்குடி அருகில்) உள்ள நந்தி அடிகள் சமாதியில்
   வழிபாடு செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்.

• மந்திராலயம் ராகவேந்திரர் சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின்
  அருள் கிடைக்கும்.

• ஷீரடி சாய் பாபா சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின் அருள்
  கிடைக்கும்

• திருவண்ணாமலை ஸ்ரீ ஷேசாத்ரி சுவாமிகள் சமாதியில் வழிபாடு
  செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்

• திருவண்ணாமலை ஸ்ரீ ரமணர் சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின்
  அருள் கிடைக்கும்

• வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு
  வழிபாடு செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்

• திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சமாதியை வழிபாடு
  செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்

குரு வார விரதம்:

வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்தால்
எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும். ஏழ்மையில் இருப்பவர்களும்,
திருமணம் ஆகாதவர்களும், குடும்பத்தினை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை
இல்லாதவர்களும் வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை
வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள்.


நாம் வியாழன் தோறும் விரதம் இருந்து நமது பிரச்சனைகளை முன் வைத்து
சாயிபாபாவிற்க்கு விரதம் இருந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.
குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது
சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை
முடித்துவிட்டு, மஞ்சள் நிறம் ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை
அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை
ஆரம்பித்து செய்யவேண்டும்.


தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது
ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள்,
அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப்
பயன்படுத்தலாம்.



ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ
ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.

அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை
நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில்மவுன விரதம்இருப்பது மிகவும்சிறந்ததாகும்.

குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின்ஆசிகள்ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம்.

முக்கியமாக வயதில் மூத்தவர்களிடம் பணிவுடனும், பிரியமுடனும் இருப்பது
பிரகஸ்பதியான, குருவான, பொன்னன் எனப்படும் வியாழனுக்கு உகந்ததாகும்.

அதன்மூலம்கிடைக்கும்ஆசீர்வாத பலம்விலைமதிப்பற்ற சொத்தாகும்.

மகேஸ்வர பூஜை:

திருவண்ணாமலையில் ஸ்ரீ தயவு ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்
மூலம் செய்யப்படும் மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க வைக்கும்
என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து அன்னதானம்
செய்து மகேஸ்வர காலமான 12 முதல் 1 மணிக்குள் சிவ பெருமானுக்கு
எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே சிவனடியார்களுக்குச்
செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை அறியாதார் யாரும் இல்லை.


ஆனால் சிவனடியார்களை அமர வைத்து அவர்களை சிவனாகவே பாவித்து
செய்யப்படும் அன்னதானத்தின் மகிமையை அனுபவித்து பார்த்தல்தான்
தெரியும். எந்த ஒரு லாப நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த
பூஜை செய்யப்படுகிறது. இது எல்லாப் பரிகாரங்களையும் விட மேலான
பரிகாரம் என்று எனது குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர்
சுவாமிகள் மீனாட்சி நாடி மூலம் சொல்லியுள்ளார்கள்.

அத்துடன் அடியேனிடம் இருக்கும் ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி அருள் வாக்கிலும் அடிக்கடி மகேஸ்வர பூஜையைப் பற்றி வருகிறது. எந்த காரியம் தடையாக இருந்தாலும், எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் இந்த மகேஸ்வர பூஜை நிவர்த்தி செய்து விடுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். யாருக்கு பிராப்தம் இருக்குமோ அவர்களே இதைப் படிக்க முடியும், பூஜையும் செய்ய முடியும்.

ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

திங்கள், 9 ஜூன், 2014

ஜீவநாடி இரகசியங்கள் பகுதி-4



இந்த பில்லி, சூன்யம் பற்றி கிரக ரீதியில் ஆராய்ந்து “அபிசாரப் பிரயோகம்

அறிவுறுத்தும் கிரக நிலைகள்” எனும் தலைப்பில் ஏற்கனவே “குருவருள்

ஜோதிடம்” பத்திரிக்கையில் ஜோதிட ரீதியாக ஆராய்ந்து எழுதி இருக்கிறேன்.

இந்த கணிப்பொறி காலத்திலும் மாறாத ஒன்று அபிசார பிரயோகம். தனக்கு


இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தனது எதிரிக்கு ஒரு

கண்ணாவது போக வேண்டும் என்ற பழி வாங்கும் வெறி. இது அசுரர்கள்

தன்மை. இதில் பல குடும்பங்கள் சிதைந்து சீரழிந்து இருக்கின்றதை

வரலாறு பக்கம் பக்கமாய்ச் சொல்லும்.



இரும்பில் மாரணச் சக்கரம் வரைந்து மாரண மந்திரம் உச்சரித்து பலரை

மரணமே அடையச் செய்யும் மாந்தீரிகம் இன்றும் உண்டு. அதில்

மாற்றமில்லை. ஏன் அபிசாரத்தில் பாதிக்கப் படவேண்டும் என்பதற்கு

முன்ஜென்ம பாவங்களே சாட்சியாகி இந்த நேரத்தில் இந்த நபரால் தீங்கு

நேர வேண்டும், அந்த தீங்கு இந்த நபரால் தீர்க்கப்பட வேண்டும் என்ற

விதியின் சட்டத்தின் முன்பு நமது எந்த திட்டமும் வேலை செய்வதில்லை.

வெற்றி தருவதில்லை என்பது நிதர்சன உண்மை.



இந்த நண்பரின் அரிசி ஆலைக்குள் சுடுகாட்டுச் சாம்பலுடன், கள்ளி,

சுள்ளி, போன்ற விஷமுட்களைக் கொண்டு மாந்தீரிகம் செய்து தூவி

விட்டிருக்கிறார்கள். அது நாளடைவில் பிரச்சினைகளைத் தர ஆரம்பித்து

விட்டது. அதை ஞானஸ்கந்தர் நாடி உறுதி செய்ததால் நண்பரும்

திருவான்மியூர் சென்று ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகளை வணங்கி சண்முகக்

கவசத்தை ஆறு முறை பாராயணம் செய்து வந்தார். அப்போது ஒரு நாள்

கடுமையான மல வாசனை இவரது பூஜை அறைக்குள் வந்தது. அங்கு

அந்த துர்செய்வினை உறுதியானது.



சரியாக எட்டு நாள் கழித்து ஒரு ஞாயிறு அன்று ஆலைக்கு அருகில்

போடப்பட்டுள்ள கூரையால் வேய்ந்த கொட்டகை தீப்பிடித்து பலத்த

நஷ்டமும் ஆனது. எட்டு நாளிலேயே இப்படி சோதனைகள் தலை

விரித்து ஆடுகிறதே என நொந்துபோன ஆலை அதிபர்கள் மீண்டும்

வந்தனர். செய்வினை அபிசாரப் பிரயோகம் இருப்பதை நாங்கள் உறுதி

செய்துவிட்டோம். அதை எப்படி எடுப்பது என்பதை நாடியில் கேட்க

வேண்டும் என்றனர். மீண்டும் நாடி படிக்கப்பட்டது.





“காசிக்கு வாசி அவிநாசியிலே

அற்புத பைரவர் உண்டு

அவரை பூஜிக்கும் ஆசிபெற்ற

சிவாச்சாரியாரும் உண்டு

அவர் மூலம் சத்ரு சம்ஹார

திரிசதி ஹோமத்தைச்

சரியாகச் செய்தால்

பைரவர் மூலமே இது தீரும்

சத்தியம்”

அந்த சிவாச்சாரியாரும் நமது ஞானஸ்கந்தர் நாடியில் பயன் அடைந்தவர்.

அவர் மூலம் ஒரு பிரம்மாண்டமான யாகம் ஆலைக்குள் ஏற்பாடு

செய்யப்பட்டது. கணபதி பூஜை, சுப்ரமண்ய பூஜை, ஜபம் எனத் தொடங்கி

பூஜை பூர்ணாகுதி முன்பு சத்ரு சம்ஹார திரிசதியைச் செய்து வீட்டில்

வளர்க்கின்ற நான்கு நாய்களுக்கும் தலை வாழை இலை போட்டு படையல்

இடப்பட்டது. ஆச்சரியமாக அத்துணை நாய்களும் சாதத்தை சிந்தாமல்

சிதறாமல், இலைகளைக் கிழிக்காமல் மனிதன் எப்படிச் சுத்தமாகச்

சாப்பிடுவானோ அதேபோல் சாப்பிட்டது. பூஜை முடிந்த அடுத்த கணமே

பத்து பதினைந்து பேர் திரண்டு வந்து உங்கள் நாய் எங்கள் பட்டியில்

புகுந்து ஆடுகளைக் கடித்து குதறி விட்டு வந்துவிட்டது என்றும்,

இதனால் பல நஷ்டங்கள் ஏற்பட்டது என்றும் பெரிய தகராறு ஏற்பட்டது.



ஒரு வழியாக அது சமாதானமானது. ஏன் இப்படி ஒரு சம்பவம் நடக்க

வேண்டும் என்று மீண்டும் நாடி பார்க்கப்பட்டது.

“பைரவர் ஆசியால் தீரும் பிரச்சினை

பக்குவமாக பைரவரும் சென்று

நாய் வடிவில் நாசம் செய்தார்

இதுவே சூட்சுமம்”

என வார்த்தைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தோம். இப்படியும்

நடக்குமோ? என்ற ஆச்சரியமும் அடைந்தோம். அந்த நாய் ஏன் குறிப்பிட்ட

அந்த நபரின் பட்டியில் அடைத்துள்ள ஆட்டை ஏன் கடிக்க வேண்டும்?



அவர்தான் இந்த செய்வினையை வைத்தவரா? இல்லை துணை போனவரா?

அந்த முருகனே அறிவார். அதற்கு நாடியில் விளக்கம் சொல்ல முருகன்

மறுத்துவிட்டதால் விடை கிடைக்கவில்லை. ஆனால் அரிசி ஆலை

அற்புதமாக நடந்து வருகிறது. சித்தர்கள் ஆசியால் ஆலை அதிபர்கள் நமது

ஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தில் மந்திர தீட்சை பெற்று ஜபம் செய்து

வருகிறார்கள். அவர்களை ஆன்மிகத்தில் உயரச் செய்யவே இறைவன்

நடத்திய நாடகம் என்றே கருதுகிறேன்.



செய்வினை, மாந்தீரிகம் என்ற பெயரில் பல போலிகளும் வருகிறார்கள்.

அதுவும் ஒரு கசப்பான அனுபவங்களாக அமைந்துவிடுகின்றன. ஒரு சிலர்

இந்த அபிசார பிரயோகம் என்ற பெயரை வைத்தே மிரட்டி பயமுறுத்தி

விடுகிறார்கள். அது சம்பந்தமாக இன்னும் ஓர் அனுபவம் உண்டு.

அதையும் இங்கே எழுதிவிடுகிறேன். காரணம் உண்மை எது? பொய் எது?

போலி எது? மாயம் எது? மந்திரம் எது? மகத்துவம் எது? என பகுத்துப்

பார்க்கின்ற அறிவு வேண்டும்.



மாந்தீரிக ஏவல் இருப்பதாக ஒருவர் கூறக் கேட்ட இன்னுமொரு நண்பர்

அதை சரி செய்யுமாறு கேட்டு இருக்கிறார். சரி என்னால் ஆகாதது

எதுவுமில்லை என்று கூறிய மந்திரவாதி பிரம்மாண்ட பூஜையைச்

செய்து அதில் ஒரு தேங்காயையும் வைத்து பூஜை செய்திருக்கிறார்.

அந்த தேங்காயில் அவருக்கு வைத்துள்ள செய்வினையை எடுப்பதாகக்

கூறி நல்ல கணிசமான தொகை ஒன்றைப் பெற்றுள்ளார். பூஜையும்

முடிந்தது. பூஜையில் வைத்த தேங்காய் உடைத்துப் பார்க்கலாம் என்றார்

மந்திரவாதி. எனது நண்பரும் மிக ஆர்வமாக தேங்காயைப் பார்த்தார்.

தேங்காய் உடைக்கப்பட்டது. அதன் உள்ளே ஒரு கோழியின் காலும்,

ஒரு செம்புத் தகடும் இருந்தது. ஆச்சரியத்தில் மூழ்கிய எனது நண்பர்

இது எப்படி சாத்தியம் எனக் கேட்டுள்ளார். அதற்கு இந்த மந்திரவாதி

கோழியின் மூலமே ஏவல் செய்துள்ளனர் என்று சொல்லி இருக்கிறார்.



மேலும் தேங்காயில் உள்ள செப்புத் தகட்டைப் பிரித்துப் பார்க்க அதில்

எனது நண்பரின் பெயரை எழுதி மரணம் என்று எழுதப்பட்டது கண்டு

மீண்டும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார் எனது நண்பர்.

நீங்கள் செய்வினையிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டீர்கள். இனி அச்சம்

தேவையில்லை என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.



மீண்டும் சில நாட்கள் கழித்து ஏதேச்சையாக என்னை வந்து சந்தித்தார்

அந்த நண்பர். விபரங்கள் அனைத்தையும் கூறினார். எனக்கே பிரமிப்பாக

இருந்தது. சரி எங்கேயோ வைத்த தகடு எப்படி இந்த தேங்காய்க்குள்

வந்தது என்றேன்? அதுமட்டுமில்லாமல் கோழியின் கால் மூலம்

ஏவிவிட்டது சரி அந்த கோழியின் கால் எப்படி தேங்காய்க்குள் வந்தது?

எனக்கு சற்று சந்தேகமாகவே இருக்கவே பூஜையில் அமர்ந்தேன்.

சிறப்பாக பூஜை செய்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியை பிரித்து இதற்கு

சரியான பதில் வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். பின்வரும் பதில்

கிடைத்தது.

“மாய வேலை மாயாஜாலம்

தந்திர வேலை இந்திர ஜாலம்

மோடி வித்தை கோடிவித்தை

ஜால வித்தை கோலவித்தை

கோடி கோடி உண்டுண்டு

யுகத்திலே அதில் இதுவுமது

தேங்காயின் கண்ணிலே

கச்சிதமாய் உட்புகுத்தி

காட்டியது வித்தை வித்தை

வித்தையது வித்தையே!”

தேங்காயை உரித்துப் பார்த்தால் மூன்று கண் இருக்கும். அதில் ஒன்று

லேசாக இருக்கும். அதை சிறிது அழுத்தம் செய்தால் ஒட்டை விழும். அதில்

ஒரு கோழியின் காலைப் போட்டுவிட்டால் தேங்காய்க்குள் கோழியின் கால்

எளிதாகச் சென்றுவிடும். அதேபோல் ஒரு சிறிய செம்புத் தகட்டில் பெயரை

எழுதி கூர்மையாகச் சுருட்டி அதே துளையில் எளிதில் உள்ளே போட்டு

விடலாம். பின்பு குடுமியை பசை போட்டு ஒட்டி சிறிது சந்தனத்தையும்

மஞ்சளையும் குழைத்து பூசிவிட்டால் தடயமே தெரியாது. ஜீம்…பூம்…பா…

என பூஜை செய்து தேங்காயை உடைத்தால் உள்ளே என்ன வைத்தோமோ

அதுஅப்படியே வந்து ஆச்சரியப்படுத்தும். விஷயம் தெரியாதவர்களை பாமர

மக்களை ஏமாற்றும் வித்தை இது போல் கோடியுண்டு யுகத்திலே என்று

முருகப் பெருமான் உரைத்தார். அதே போல் தேங்காய்க்குள் மல்லிகைப்

பூவை எடுப்பார்கள். ஒரு சுண்டெலியைப் பிடித்து வந்து தேங்காய்க்குள்

விட்டுவிட்டால் தேங்காய் நடந்து ஓடும். இதை ஒருவர் செய்து வருகிறார்.

இப்படி பல வித்தைகள் உண்டு. நாகரீகமாக மேஜிக் ஷோவில் இவற்றைப்

பார்க்கலாம்

தொடரும்....

சனி, 7 ஜூன், 2014

ஜீவநாடி இரகசியங்கள் பகுதி-3




அவரவர் கர்ம வினைகளைப் பொறுத்தே நாடியில் பலன்கள் அமைகிறது. 

எதிர்பார்த்த்து வராமல் ஏதேனும் எதிர்பாராத பலன்கள் கிடைப்பதும் 

உண்டு. ஓர் இளைஞர் ஒருவருக்கு நாடி படிக்கும்போது அவர் எனக்கு 

என்ன தொழில் அமையும் எனக் கேட்டார். படித்தது B.E. வேலை எதுவும் 

கிடைக்கவில்லை. அவர் DIPLOMO படிக்கும் போதே என்னிடம் தொடர்பு 

கொண்டார். மேலும் படி என நாடியில் வந்தது. அதே போல் B.E. படித்து 

முடித்தார். எதிர்பார்த்த அளவு வேலையில்லை வருத்தத்துடன் வந்தார். 

அவருக்கு பின்வருமாறு வந்தது.

“கற்ற கல்வியால்

காலம் முழுவதும்

கணிவான பலன் உண்டு

கட்டிய மனைவி வந்த பின்னே

காலம் கனியும் 

கச்சிதமாய் முடியும்

குருகுலச் சேவைசெய்

குணவதி ஒருவள் வருவாள்

குடும்பம் அமைப்பாள் பின்பே

மற்றவையாம்”

அந்த இளைஞர் சிரித்தார். காரணம் குருகுலச் சேவை என்றால் ஆசிரியப் 

பணி. அவருக்கு அது பிடிக்காத பணியாம். அதே போல் திருமணம் பற்றிய 

எண்ணமே இல்லை. இப்படி ஏறுக்கு மாறாக வருகிறதே என்ன செய்வேன் 

என்று புலம்பினார். எனக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியாது. என்ன 

வருகிறதோ அதை உரைப்பதே எமது வேலை. முக மகிழ்ச்சிக்காகவோ, 

வேறு ஏதேனும் ஆசைக்காகவோ பொய் உரைத்தால் சித்தர்கள் 

சபித்துவிடுவார்கள். தேவதை சாபம் குருவால் நீங்கும். ஆனால் குரு சாபம் 

எந்த ஒரு தேவதையாலும் நீங்காது. நீ முதலில் ஆசிரியப் பணி தேடு. 

உடனே மனைவி அமைவாள். அதன் பின்பே நிரந்தரப் பணி. தற்போது சுய 

தொழிலும் வேண்டாம். INDUSTRY செல்லவும் வழி இல்லை என்றேன். சரி 

முருகன் விட்ட வழி என்று வீடு திரும்பினார். சில பரிகாரங்களும் ஒரு 

சில ஆலய தரிசனங்களையும் செய்யுமாறு நாடியில் வந்தது. சொன்னபடி 

அத்துணை ஆலய தரிசனங்களையும் செய்தார். ஒரு தனியார் தொழில் 

நுட்பக் கல்லூரியில் இளநிலை விரிவுரையாளர் பணி கிடைத்தது. சொற்ப 

வருமானம். என்னிடம் சொன்னார். சேவை போல்தான் செய்ய வேண்டும் 

என வந்துள்ளதால் சேவையாகவே செய் என்றேன். ஒரு வருடத்தில் 

நல்ல சம்பள உயர்வை அடைகின்ற தருணம், தனது உறவினரி மகள் 

உறுதி வார்த்தை கூறி நிச்சயமானது திருமணம். ஓர் ஆண் குழந்தையும் 

பெற்றாகிவிட்டது. இப்போது தனியாரில்  இருந்தாலும் தரமான சம்பளத்துடன் 

தன்னம்பிக்கையுடன் வேலை செய்து வருகிறார் அந்த இளைஞர் அப்போது 

எதிர்பார்த்தது வேறு அவருக்கு நாடி உரைத்தது நடந்ததே உண்மை 

என ஆனது. சித்தர்கள் வாழ்வை அடைவார்கள் என்பதை இதன் மூலம் 

அடியேனும் உணர்ந்து கொண்டேன். 



ஜீவ நாடியைக் கையில் வைத்திருப்பது கத்தி மேல் நடப்பதற்குச் சமம். 

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான். என்ன வருகிறதோ அதை 

மட்டும் உரைக்க வேண்டும். விளக்கம் கூட பார்த்துத்தான் பக்குவமாகக் 

கொடுக்க வேண்டும். சொல்லுவது கவிதை நடையிலும் வரும். சாதாரண 

மொழியாகவும் வரும். அதைவிளக்குகிறேன் என்று இறங்கி விபரீதத்தை 

விளைவித்து விடக் கூடாது என்பதால் எனக்கு புரிந்ததை மட்டும் 

சொல்கிறேன். இங்கே அகம்பாவம் வந்துவிட்டாலும் அவ்வளவுதான்.

அதே போல் யார் ஒருவர் சித்தர்கள் மீதும் முருகப் பெருமான் மீதும் நூறு 

சதவீதம் நம்பிக்கை வைத்து வந்து நாடியில் அருள் வாக்கு கேட்கிறார்களோ 

அவர்களுக்கு அடுத்த நிமிடம் முதலே பல்வேறு ஆச்சரியங்களும், 

அதிசயங்களும் நடக்கக் காண்கிறார்கள். 



நாடியை பக்தி இல்லாதவர்க்கு உரைக்கக் கூடாது. வக்ர புத்தியுடன் 

சோதித்து பார்ப்பவர்க்கும் உரைக்கக் கூடாது. உள் ஒன்று வைத்து 

புறம் ஒன்று பேசுபவர்க்கும் உரைக்கக் கூடாது. அவ்விதம் உரைத்தால் 

உரைத்தவனுக்கும் இழுக்கு. இங்கு படிக்கும்போது கேட்டு விட்டு 

வெளியே சென்று வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் எங்களுக்குத் தெரிந்தே 

சித்தர்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள். இந்த தொடரை எழுதுவதற்கே 

பல முறை உத்தரவு கேட்டு சித்தர்களும், முருகப் பெருமானும் சரி என 

சம்மதம் தந்ததால்தான் எழுதுகிறோம். ஏனெனில் பல பேர் படிப்பதால் 

அனைவரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள். அவர்களின் கசப்பான 

அனுபவங்கள் நாடி மீது வெறுப்போடு இருப்பவர்கள், நம்பிக்கை 

அற்றவர்கள் இதைப் பழித்துக் கூறி சித்தர்கள் சாபத்தைப் பெற நேரலாம். 

எனவே அடியேன் கேட்டுக் கொள்வது என்னவெனில் நம்பிக்கை 

இல்லாதவர்கள் இந்த தொடரைப் படிக்கவே வேண்டாம். நம்பிக்கையுடன் 

படிக்கும்போது பல கஷ்டங்கள் தீருவதை உணர்வீர்கள்.

ஏனெனில் இந்தத் தொடரில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் சித்தர்களின் 

அருளால் செதுக்கப்படுபவை. எனது அத்துனை கட்டுரைகளும் பூஜை 

அறையில் தானாக எழுதும் முறையில் (AUTO WRITTING) கிடைக்கின்ற 

முத்துக்கள். பயன்படுத்தினால் நிச்சயம் மேன்மைகளைக் காண்பீர்கள்.



ஜீவநாடி மட்டுமல்ல ஜோதிடர்களிடம் செல்லும் போதும் அந்த 

ஜோதிடரை தெய்வக்ஞன் என்கிறோம். அவரையும் அவரது பேச்சையும் 

நம்பிக்கையுடன் மதித்துக் கேட்டீர்களாயின் அந்த ஜோதிடரைச் சுற்றிலும் 

உள்ள சூட்சும தேவதைகளால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள். அவரிடம் கேட்டு 

விட்டு வெளியே சென்று அவதூறு பேசினால் நிச்சயம் தேவதா சாபம் 

ஏற்படும். அதன் பின்பு எந்த ஜோதிடரிடம் சென்றாலும் ஜாதகம் வேலை 

செய்யாது. ஜோதிடர்களுக்கு கணிசமான தட்சிணைகள் கொடுங்கள். 



காரணம் தட்சிணை இல்லாமல் ஜோதிடம் கேட்டாலும், சொன்னாலும் 

தட்சிணா தேவி சபிப்பாள். ஏன் இப்படி எழுதுகிறார் என நினைக்க 

வேண்டாம். எல்லாம் எமது குருவின் உபதேச மொழிகள். ஜோதிடர்களும் 

நம்பி வருகின்ற மக்களை ஏமாற்றினாலும், தட்சிணை விஷயத்தில் 

ஏமாற்றி பிழை செய்தாலும் மேற்படியான சாபங்களைப் பெற நேரிடலாம். 

ஜோதிடமும் வளர வேண்டும். ஜோதிடர்களும் வளர வேண்டும். 

ஜோதிடர்த்தை நாடி வருகின்ற மக்களும் வாழ்க்கையில் உயர வேண்டும் 


என்பதே எமது அவா. அதற்காகவே இவற்றை எழுதும்படி ஆனதே தவிர 

எந்த நோக்கமும் இல்லை. இன்னும் ஜீவ நாடி மூலம் ஞானஸ்கந்தமூர்த்தி 

நடத்திய திருவிளையாடல்களைத் தொடர்ந்து பார்ப்போம். ஜீவ நாடி 

என்பதற்கு ஜீவனுள்ள எழுத்துக்களைத் தோன்றி மறையச் செய்யும் 

என்றே பொருள் உண்டு. ஆனாலும் எல்லா நேரங்களில் தோன்றுகின்ற 

எழுத்துக்களைப் பார்த்தே படிப்பது சுலபமாக இருப்பதில்லை. பல 

நேரங்களில் சுவடியைப் பிரித்த உடனேயே சரளமாகப் பாடல் வடிவில் 

முக்காலமும் வந்து விடுகின்றன. அப்போது எந்த எழுத்துக்களும் 

சுவடியில் இருப்பதில்லை. சில நேரங்களில் வரைபடங்கள் தோன்றும். 

சங்கு, சக்கரம் மற்றும் மந்திரங்கள் போன்றவை தோன்றும் அதை 

வைத்து வழிபடும் தெய்வம், செல்கின்ற ஆலயம், பரிகாரம் போன்றவற்றை 

அறிந்துக் கொள்ள முடிகிறது. சில நேரங்களில் மூச்சுவிடவே இடைவெளி 

தராமல் வேகமாக பாடல்கள் வருவதும் உண்டு. இது அத்தனையும் வந்து 

அமர்பவரின் கர்ம வினைகளையும், அவர்களது குல தெய்வ ஆவியையும் 

பொறுத்தே அமைகிறது.



ஜீவ நாடி படிப்பதற்கு எந்தத் தகவலையும் தரவேண்டும் என்ற அவசியம் 

இல்லை. ஆனால் சில நேரங்களில் கைப் பெருவிரல் ரேகை, நட்சத்திரம், 

இராசி, ஜாதகம், பிறந்த தேதி போன்ற பல தகவல்கள் தேவைப்படுகின்றன. 

சுருங்கச் சொல்வதென்றால் ஒருவருக்கு ஏற்படும் அனுபவம் மற்றவர்க்கு 

ஏற்படுவதில்லை. அதேபோல் பலன்கள் நடக்கும் விஷயத்தில் நாடியில் 

வந்த ஆலய தரிசனங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் பலன்களும் 

நடப்பதில்லை. சென்ற ஜென்ம தீவினை அதிகம் உடையவர்கள் பல 

ஆண்டுகள் பரிகாரங்கள் செய்கின்ற நிலைகளும் ஏற்படுகின்றன. இது 

பொறுமையான அதே சமயத்தில் உறுதியான வழிமுறை அவசரம் கூடவே 

கூடாது. 



எனது நீண்ட கால நண்பர் ஒருவர் அரிசி ஆலை வைத்து நடத்துகிறார். 

கூட்டுத் தொழில் தான். பல இலட்சங்களை முதலீடாகப் போட்டு சிறப்பான 

நிலையில் செய்து வருகிறார். சில நாட்கள் செல்லச் செல்ல ஏதேனும் 

துர்ச்சம்பவங்கள் நடப்பது, நாய் ஆலையை நோக்கி ஊளையிடுவது, 

கூட்டாளிகளுக்குள் சண்டை வருவது என அவ்வப்போது குழப்பங்கள் 

ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. காரணம் புரியாமல் அவர்களின் 

ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து ஞானஸ்கந்தர் நாடி படிக்க 

வேண்டும் என்று கேட்டனர். நெருங்கிய நண்பர் என்பதால் உத்தரவு 

கேட்டேன். ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி அப்போது படி என உத்தரவு 

வந்தது. நண்பரும் சரி என சம்மதித்து குறிப்பிட்ட நாளில் வீடு, வாசல் 

சுத்தம் செய்து, பசுங்கோமியம் இறைத்து, குலதெய்வ பூஜைகளைச் 

செய்து சுவடியைப் பிரித்தேன். பலன்கள் பின்வருமாறு வந்தது.



“ஆகாத சிலபேர்கள் சேர்ந்துகொண்டு

அபிசாரப் பிரயோகம் செய்ததாலே 

ஆலைக்கும் பிரச்சினை உண்டு

ஆபத்தும் அருகிலே உண்டு உண்டு

ஆன்மியூரில் அருள் சமாதிக்குள் இருந்துகொண்டு

அற்புதம் பல புரியும் ஆறுமுகன் அடியார் அருளிய

ஆச்சரிய மூட்டும் சண்முகக் கவசத்தைச்

சரியாகப் படித்து வா பின்னர்

பைரவரின் அருளாலே பிரச்சினை தீரும்

பொறுமையிறு பொறுமையிறு

பெருமை கிட்டும் பொறுமையிறு” 


எதிரிகள் இல்லாதவர்கள் இந்தக் கலியுகத்தில் இருக்கவே முடியாது. 

எதிர்ப்பின் காரணமாக கண் திருஷ்டி ஏற்படுவதும் அதனால் பல்வேறு 

தடைகள் வருவதும் இயற்கை அதே சமயம் பிரச்சனைகள் உச்ச நிலையை 

அடையும்போது மனிதர்கள் கையில் எடுப்பது அபிசாரப் பிரயோகம். 

மாந்திரீகம், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை என்று பல பெயர்களால் 

இதை அழைக்கிறார்கள்.

தொடரும்....