திங்கள், 20 அக்டோபர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 17 !



 நமது ஞானஸ்கந்தர் நாடியில் மகர இராசியினருக்கு வரும் மூன்று

முறை இந்த மகேஸ்வர பூஜை செய்ய வேண்டும் என்று வந்துள்ளது.

பலர் செய்து ஏராளமான அதிசயங்களைப் பெற்றுள்ளனர். ஆசிரமம் எங்கு

உள்ளது அவரது தொலைபேசி எண் வேண்டும் எனப் பலர் கேட்கிறார்கள்

என்பதால் அந்த தகவலையும் சொல்லி விடுகிறேன். கிரிவலப் பாதையில்

பழனி ஆண்டவர் சந்நதி பின்புறம் ஸ்ரீதயவு சித்தாஸ்ரமம் உள்ளது.

ஆசிரமத்தில் ஸ்ரீசரவணன் சுவாமிகளை 99448 00220 என்ற எண்ணில்

தொடர்பு கொள்ளலாம்.

 எதற்காக இவ்வளவு விளக்கம் கொடுக்கிறேன் என்றால் மேற்படி

சொன்ன நகைக்கடை அதிபர் திருவண்ணாமலையில் வேறு யாரிடமோ

பணத்தை மட்டும் கொடுத்து பூஜை செய்யச் சொல்லி விட்டார். அவர்கள்

செய்தார்களோ? இல்லையோ தெரியாது. மீண்டும் மூன்று மாதம் கழித்து

என்னிடம் வந்தார். ஐயா! நாங்கள் மகேஸ்வர பூஜை செய்து விட்டோம்

இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார்கள். சரி ஏதேனும்

காரணம் இருக்கும் என்று முருகனைப் பூஜித்து மீண்டும் சுவடியைப்

பிரித்தேன். இப்போது அதே அகத்தியர் வந்தார். பின்வருமாறு உரைத்தார்.

 “பூஜையது இல்லை

 புண்ணியமாகவில்லை

 புவனமதில் இதுபோலும்

 பலருண்டு

 சிலருண்டு சிறப்பாகச் செய்ய

 முறையாகச் செய்துவா

 முடியுமது காரியம்

 முருகனது ஆசி! ஆசி! ஆசி!

 இவரிடம் பணம் வாங்கிய நபர் பூஜை செய்யவில்லை என்றும்,

புண்ணியம் உண்டாகவில்லை என்றும் இந்த உலகத்தில் இதுபோல்

ஏமாற்றுபவர் பலருண்டு என்றும், சிலர் மட்டுமே சிறப்பாகச் செய்கிறார்கள்

என்றும், அப்படி சிறப்பாகச் செய்யுமிடத்தில் முறையாகச் செய்து வந்தால்

நீநினைத்த காரியம் முருகனது அருளால் முடியும் என்றும் முருகனது

சீடர் அகத்தியர் உரைத்தார். அதன் பின்பு அவர் பணம் கொடுத்தவரை

விசாரித்து பார்க்கும்போது அவர் வேறொருவரிடம் பணம் கொடுத்து

விட்டதாகவும், அவர் செய்தாரோ இல்லையோ என்பது தெரியாது என்றும்

பதில் உரைத்தார். அதன் பின்பு தான் ஸ்ரீதயவு சித்தாஸ்ரமம் பற்றியும்

அதன் மகிமைகளையும் எடுத்துரைத்து சரவணன் சுவாமிகளிடம் தொடர்பு

செய்து கொடுத்தேன்.


செய்து முடித்து 90 நாளில் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர்

தனது மகனுக்கு இந்த நகைக்கடை அதிபரின் மகளை மணம் முடித்துக்

கொண்டார். ஏதோ சாதாரண பரிகாரம் செய்வது போன்று இந்த மகேஸ்வர

பூஜையை எண்ணி விடக் கூடாது. இல்லை இது பணம் சம்பாதிக்கும்

வழியோ என்று நினைத்து மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

என்னைப் பற்றி அனைவருக்கும் நன்றாகவே தெரியும். என்னை விட எனது

குருநாதரையும் அனைவருமே அறிவார்கள். எனவே நாடியில் வருவது

மகேஸ்வர பூஜை என்று தான் வரும் அதை எங்கு வேண்டுமானாலும்

செய்து கொள்ளலாம். ஆனால் முறையாகச் செய்ய வேண்டும். அது

தான் முக்கியம். தயவு ஆஸ்ரமத்தைப் பொறுத்த வரையில் மிகவும்

சிறப்பாக முறையாக மகேஸ்வர பூஜையை செய்யப்படுவதால் ப்ராப்தம்

இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் தான் இவ்வளவு

விளக்கம் இங்கு தர வேண்டியது அவசியமாகிறது.


அடியார்கள் சதா சர்வ காலமும் அந்த அருணாசலனையே துதித்து,

அந்த அருணாசலத்திலே வாழ்ந்து அந்த அருணாசலனுக்கு தம்மை

அர்ப்பணம் செய்த உண்மைத் துறவியாக வலம் வருகிறார்கள். எவர்

ஒருவர் சிவ சின்னங்களான விபூதி, ருத்திராட்சம், ஜடாமுடி, கமண்டலம்,

தவக்கோல் ஆகிய ஐந்தும் தரித்திருக்கிறார்களோ அவர்கள் சிவனடியார்கள்

மட்டுமில்லாது அவர்கள் உண்ணும் உணவு அந்த சிவனே உண்ணுவது

போலாகும் என்றும் புராணங்கள் புலப்படுத்துகின்றன. சாஸ்திரங்கள்

சாட்சி கூறுகின்றன. இதிகாசங்கள் இயம்புகின்றன. எனவே சாதாரண

மக்களுக்குச் செய்கின்ற அன்னதானம் ஒரு மடங்கு பலன் தரும் என்றால்

அடியார்களுக்கு செய்யப்படுகின்ற அன்னதானம் ஆயிரம் மடங்கு பலன்

தரும் என்பது அடுபவத்தின் கண்கூடு. சில உண்மைத் துறவிகள்

நேரிடையாக நாம் தரும் உணவை ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும்

வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.


ஜீவநாடி இரகசியங்கள் என்னும் தொடரில் வரும் உண்மைச் சம்பவங்கள்

நூற்றில் ஒன்றுதான். இது போல் ஆயிரம் இரகசியங்களை அனுபவித்து

வருகிறேன். பொதுவாக கர்ம வினை குறையாமல் எந்த காரியங்களும்

பலிப்பதில்லை. நமது கர்மவினையை மிகச் சுலபமாகக் குறைக்க ஒரே

வழி அன்னதானம் மட்டுமே,. அதனால் தான் மகேஸ்வர பூஜ மிக சிறப்பு


 இன்னும் ஒரு மாணவன் என்னைத் தேடி வந்து ஜீவநாடி கேட்க

வேண்டும் என்றார். வந்தவர் மீன ராசி. முருகப் பெருமான் பின்வருமாறு

 “மகிமை புகழ் மீனமதில்

 மேன்மையாய் அவதரித்து

 மலைபோலும் துன்பத்தை

 அனுபவிக்கும் காலமது

 மந்தனது சரியில்லா

 நிலை போலும் இக்காலம்

 அட்டமத்து சனியாலும்

 அடுக்கான துன்பமாகும்

 படிப்பிலே வெற்றி என்றால்

 பல வகையில் கஷ்டம்

 பங்காக பதினெட்டு அடிவேலு உண்டு

 பச்சரிசி மாவால் தீபம் பதினெட்டு போட்டு

 மதுரமது வைத்து பூஜித்து பின்

 தேர்வுக்கு செல் வெற்றியாம் ஆசி! ஆசி! ஆசி!

 மீன இராசியில் பிறந்துள்ளதால் இந்த காலம் மலைபோலும் துன்பத்தை

அனுபவிக்கும் காலம் ஆகும். மந்தன் என்று சொல்லப்படுகின்ற சனி

பகவான் 8ல் இருப்பதால் அடுக்கடுக்கான துன்பம் வரும். படிப்பிலே வெற்றி

உண்டு என்றாலும் பல வகையிலும் கஷ்டம் வரும் என்று பரிகாரம்

உரைத்தார் ஸ்ரீஞான ஸ்கந்தமூர்த்தி.

 திருவண்ணாமலை ஸ்ரீவகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் தனது மீனாட்சி

நாடியில் சொன்னபடி நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தில்

18 சித்தர்களை முருகப் பெருமானது 18 கண்களாகக் கொண்டு 18

அடிவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமாவாசையிலும்

பன்னீரால் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு போட்டு பூஜை செய்ய

வேண்டும் என்று மீனாட்சி நாடியில் வந்த முறைப்படி அப்படியே

தவறாமல் செய்யப்படுகிறது. நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயம்

இருக்கின்ற இடத்தில் பல சித்தர்கள் தங்கம் செய்த இடம் என்று நாடியில்

சொல்லப்பட்டுள்ளது. இப்படி சிறப்புமிக்க ஆலயத்தில் உள்ள 18 அடி

வேல் முன்பு 18 நெய்தீபம் பச்சை மாவில் ஏற்ற வேண்டும் என்றும்,

தேன் வைத்து பூஜிக்க வேண்டும் என்றும் அந்த மாணவனுக்கு

முருகப்பெருமான் வாக்கில் உரைத்தார். அப்படி செய்தால் தேர்வில் வெற்றி

பெறலாம் என்றும் உரைத்தார்.


இதைக் கேட்ட அந்த மாணவனும் அவ்விதமே செய்து யாரும்

எதிர்பார்க்காத அளவில் மதிப்பெண் பெற்று தற்போது மேற்கல்வி படித்து

வருகிறார். நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்திலும் சேவை

செய்கிறார். எனவே நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறை

தீர்ப்பு நம்பிக்கை இல்லாமல் அந்த இறைவனே வந்தாலும் ஒரு பல
னும்

நடக்காது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

                                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

முருக வழிபாடு !!!


   
              ஞானஸ்கந்தமூர்த்தி கஜ வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு                        அருள்பாலிக்கும் காட்சி!!! 


சித்திரை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபட்டால் சகல போகங்கள் பெறலாம். தமிழரின் முதழ்கடவுள் எனவும் முருகனை பகர்வதுண்டு, எம்மனிதனும் மிக உயர்ந்த தெய்வமாகலாம் என்பதன் தெய்வக்காட்சியே முருகன் வடிவாகும்.

சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். சிவனது ஐம்பொறிதளின்று உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு. இவை ஆறினாலுமான ஒளித்திரந் சரவணப் பொய்கையில் பிரவேசித்து ஆறுமுகன் உருவானான் என்பது விளக்கம்.

முருகன் சிவசொரூபம் சக்திசொரூபம் ஆகிய இரண்டும் அமையப் பெற்றவன். முருகன், மூலாதாரம், சுவாதிஷ்டானம் முதலிய உடலில் உள்ள 6 தாரங்கலுக்கு ஒப்பானது முருகனது அறுவடை வீடுகள். ஆறுமுகப் பெருமானது சொரூப விளக்கமானது. பல்வேறு தத்துவங்களை எமக்குப் புகட்டுகிறது.

ஐயபுலன்களையறியும் ஐம்பொறிகளும், எண்ணை உதவும் நல்ல மனதும், முருகனது ஆறுமுகங்களுக்கு ஒப்பானவை. முருக வழிபாட்டில் குறிஞ்சி நிலத் தெய்வமாக போற்றப்படுகிறான். இயற்கையின் வண்ணம் எல்லாம் கொண்ட குன்றுதோறும் விளையாடுகிறான், பாலமுருகன்.
மாதந்தோறும் வரும் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகும். மேலும் ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும். கந்தசஷ்டி நோன்பானது முருகப் பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இவ்வாறு நாட்களில் போது மக்களின் மனதில் உள்ள காமம், வெகுளி, ஈயாமை, செருக்கு, பொறாமை என்னும் ஆறு பகைகள் அழிக்கப்படுகின்றன.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் வீற்றிருக்கும்
முருகனை வணங்கி அருள் பெருவோமாக.

``உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் குருவாய்
வருவாய் அருவாய் குகனே!''

மனைவியின் காலில் விழுந்த முருகன்!



அருணகிரியார் திருப்புகழ் பாடல் ஒன்றில், வேடிச்சி காலி லன்று விழுவோனே என்று குறிப்பிடுகிறார். அதாவது, முருகப்பெருமான் தனது மனைவியான வள்ளியின் காலில் விழுந்தார் என்ற பொருளில் இப்பாடலை பாடினார். இதனை மேலோட்டமாக பார்த்தால் பொருள் புரியாது. உள்ளார்ந்து படித்தால் இதற்குள் இருக்கும் பொருள் விளங்கும்.வள்ளி, திருமாலின் மகள், இவள் முருகப்பெருமானின் மீது அதிக பக்தி கொண்டவள். தெய்வானையும் திருமாலின் மகள் தான். அவளும், முருக பக்தையே என்றாலும், தேவர்களை காத்ததற்காக அவளை இந்திரன் முருகனிடம் ஒப்படைத்து விட்டான். அவள் முருகனுடன் கலந்து விட்டாள். 

இது பயன் கருதி செய்த பக்தி வகையில் அடங்கும். ஆனால், வள்ளியம்மை பூமியில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்றில் பிறக்கிறாள். முருகனைக் குல தெய்வமாகக் கொள்கிறாள். அவளை ஒரு பக்தையாகவே பார்க்கிறார் முருகன். அவளது பக்தியின் ஆழத்தைச் சோதிக்கிறார். எல்லா சோதனையிலும் அவள் வெல்கிறாள். பக்தன் இறைவனின் காலில் விழுவது போல, வள்ளியம்மையாகிய பக்தையின் காலில் அவளது பக்தியைப் பாராட்டி முருகன் விழுந்து, அவளை ஆட்கொள்கிறார். அதாவது, தன்னிடம் பக்தி கொண்டவர்களை முருகன் ஆட்கொள்வார் என்ற பொருளில் அருணகிரியார் இப்பாடலை பாடினார். உலகுக்கே கொடுப்பவன் கண்ணன். அந்த கண்ணன் யாசகம் கேட்டு மகாபலியிடமும், கர்ணனிடமும் செல்லவில்லையா? அதுபோல், தான் இதுவும்! தெய்வத் திருவிளையாடல்களை மனிதத்துவத்துடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. தெய்வீக சிந்தனையுடன் மட்டும்தான் பார்க்க வேண்டும்.

முருகா என்று ஒரு தரம் சொன்னால் கோடி முறை சொன்ன பலன்!!!


முருகப்பெருமானின் மூலமந்திரமான சரவணபவ என்பதை சடாக்ஷரம் (ஆறெழுத்து மந்திரம்) என்று கூறுவர். தமிழில் இம்மந்திரம் சடக்கர மந்திரம் எனப்படும். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியத்தில் முருகனுக்குரிய தமிழ் மந்திரங்களான முருகா, குமரா போன்றவை குறிக்கப் பெற்றுள்ளன. இம்மந்திரங்களை அருணகிரிநாதர் தன் பாடல்களில் பயந்த தனி வழிக்குத் துணை, முன் செய்த பழிக்குத் துணை என்று குறிப்பிடுகிறார். தெய்வ உபாசனையில் மந்திரஜபங்களுக்கு விசேஷத்தன்மை உண்டு. இம்முருக மந்திரத்தின் பெருமையினை வாரியார் சுவாமி முருகா என்று ஒரு தரம் சொன்னால் கோடிமுறை தெய்வநாமாவை சொன்ன பலன் கிடைக்கும் என்று குறிப்பிடுகிறார்

பழநி முருகனின் கோவண ரகசியம்!



]


ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

பதினாறு லட்சுமிகளின் பெருமைகள்!!!



ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் பெருமைகளைக் காண்போம்.
1. சௌந்தர்ய லட்சுமி


நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால்தான் அவர்கள் நம்மை வரவேற்பார்கள். இதற்கு "சௌந்தர்ய லட்சுமீ கரம்' என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதற்காக முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.

2. சௌபாக்கிய லட்சுமி

போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

3. கீர்த்தி லட்சுமி

எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரிந் திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.

4. வீரலட்சுமி

நம்மையும், நமது மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மி டம் வீரம் இருக்க வேண்டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம்.

5. விஜயலட்சுமி

மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தா லும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.

6. சந்தான லட்சுமி

மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால்தான் அவன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இருக்க வேண்டும். இதற்கு அருள் புரிபவள் சந்தான லட்சுமி. அவளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

7. மேதா லட்சுமி

பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.

8. வித்யா லட்சுமி

கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது "ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.

9. துஷ்டி லட்சுமி

எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந் தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.

10. புஷ்டி லட்சுமி

வெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.

11. ஞான லட்சுமி

வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரிந்து விடும் என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.

12. சக்தி லட்சுமி

இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங் களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்திலட்சுமியை வணங்கினால் போதும்.

13. சாந்தி லட்சுமி

எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.

14. சாம்ராஜ்ய லட்சுமி

மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.

15. ஆரோக்கிய லட்சுமி

மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப் பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.

16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது. இந்த ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.

ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.

ஸ்ரீசுப்ரமண்ய புஜங்க'த்தின் தமிழ் ஆக்கம்!!!


ஸ்ரீஆதிசங்கரர் அருளிய "ஸ்ரீசுப்ரமண்ய புஜங்க'த்தின் தமிழ் ஆக்கம் கீழே தரப் பட்டுள்ளது. அதை தினமும் ஸ்ரீசுப்ர மண்யரை மனதில் நினைத்துப் பாராய ணம் செய்து வந்தால், வளமான வாழ்க் கையும் நிலையான செல்வமும் பெற்று நலமுடன் வாழலாம்.


பிள்ளையாய் நின்றே விக்ன

பெருமலை தகர்க்கும் தெய்வம்
தொல்லிறை சிவமாம் சிங்கம் 
தொழுதிடும் யானைத் தெய்வம்
வெள்ளை வாரணன் பிரம்மாவும்
விரும்பியே தேடும் தெய்வம்
நல்லருள் உருகணேச
நம் தெய்வம் அருள்வதாக. 



திறமிலேன் சிறிதும்; உண்மை 
தெரிந்து நற் கவியைப் பாட!
உரைநடை அறியேன்: வார்த்தை
ஒலியோடு பொருளும் தேறேன்!
அறுமுகம் கொண்ட தெய்வ
அறிவே என் உள்ளிருந்து
பொருள் நிறை கவியாய் வந்து 
புனிதமாய்க் காட்சி நல்கும்!



மயிலேறி வருவோனாகி,
மனங்கவர் எழிலோனாகி,
பயில் மறைப் பொருளோனாகி
பரந்தங்கு மறைவோனாகி
கயிலையோன் மகனாய், மேலோர்
கருத்தில் வாழ் தெய்வமாகி
தயவினால் உலகம் காப்போன்
தாள் மலர் வணங்குகின்றேன்.


"அடைந்திடும் போதே என்றன்
அலைவாயில் கோவில் தன்னைக்
கடந்தனர் பிறவி என்னும்
கடலினை' என்று காட்டி
இடங்கொண்டங்கினி திருக்கும்
இளையவேல் முருகன் தன்னை
படியெலாம் காக்கும் சக்தி
பாலனைப் போற்றுகின்றேன்!


"கோவிலின் முன்வந்தென்னைக்
கும்பிட்டு வணங்குவோர்க்குத்
தீயவை, கடலின் மீது
திரை தோன்றி மறைவதைப் போல்
மாய்வுறும்' என்று காட்டி
மனிதரைத் தேற்றுகின்ற
தூய நல் குகனை என்றும்
தொழுவேனுள் மலரில் வைத்தே!


கந்தமா மலையின் மீது
காலடி வைத்த போதே
சுந்தரக் கயிலை யேறி
சுக முற்றோர் ஆவரென்று
வந்தவர்க் குரைப்பாரைப் போல்
வடிவேலன் அங்கிருக்கும்!
அந்த நற்றெய்வம் என்றும்
அகமகிழ்(வு) அருள்வதாக!


தண்கடற் கரையின் ஓங்கித்
தவத்தவர் விழைவதாகி
மண்ணவர் பாவமெல்லாம்
மாய்த்திடும் சுகந்தமென்னும்
புண்ணிய மலைக்கு கைவாழ்
பொங்கொளி குகனை அன்பர்
துன்பங்கள் துடைத்தாள் வோனைத்
துதிக்கின்றேன் விருப்பினோடு!



உலகினர் விருப்பமெல்லாம்
உவந்தருள் ஒளிர்பொன் வீட்டில்
மலர் நிறை மணி மஞ்சத்தில்
மகிழ்ந்திருப்பவனைத் தேவர்
தலைவனைக் கார்த்திகையார்
தனயனைக் கோடி சூரிய
ஒளிமிகு வடிவினோனை
உணர்வுடன் தொழுவேன் என்றும்!


ஒலிக்கின்ற சிலம்பினோடும்
ஒப்பிலா அழகினோடும்
சொலிக்குஞ்செந் நிறத்தினோடும்
சுடரும் நின் கமலபாதம்
அளிக்கின்ற அமுதம் மாந்தி
ஆறுமுகத் தேவே என்றன்
உளத்துயர் வண்டு நாளும்
உயரின்பம் அடைவதாக!


பொன்னொளி வீசுகின்ற
புகழ்மிகு பட்டினாலும்
இன்னொலி சலங்கையொட்டி
யாணத்தின் ஏற்றத்தாலும்
மின்னொளி அரை ஞாணாலும்
மேன்மை கொள் நின்னிருப்பின்
தன்னெழில் போற்றி வாழ்வேன்!
சண்முகத் தேவே என்றும்!


தாரகக் கொடியோன் தன்னைத்
தடிந்தவேல் முருகா! இந்தப்
பாரகம் அடங்கக் காக்கும்
பரிவினால் உயர்ந்து வள்ளி 
மார்பகச் சாந்தில் தோய்ந்து
மணக்கும் நின் அகன்ற மார்பாம்
சீரகம் தனை வணங்கிச்
சிந்தித்து வாழ்வேன் என்றும்!


மருவிடும் அண்டமெல்லாம்
மலைந்திடச் செய்தும், இந்த்ரன்
செனுநரைத் தேய்த்தும் வேதன்
செருக்கினைத் தீர்த்தும் நன்மை
பெருகிடக் காத்தும் யானைப்
பெருங்கையும் நாண ஓங்கிக்
கருணை செய் நின் ஈராறு
கைகளே சரணம் கந்தா!


அழகனே! நின்றன் கோலம்
அளவிட்டிங் குரைப்பாருண்டோ?
மழைபொழி பருவம் தன்னில்
மங்குலில் வானில், திங்கள்
முழுமையாய் என்றும் ஆறாய்
முளைத்திடின் களங்கமின்றி
எழில்வளர் நின்முகங்கட்(கு)
ஈடாகும் ஒருகால் என்பேன்!


புன்னகை அன்னம் தோன்றப்
புகழ் கடைக் கண்களான
வண்டுகள் இனிதியங்க
வண்சுவை அமுதைச் சிந்தும்
இன்னுதடு இதழ்கள் கொண்டு
எமக்கருள் சிவகுமாரா!
நின்முகக் கமலம் ஆறும்
நேரினில் யான் கண்டுய்ந்தேன்!


அருள் நிறை முருகா! நீண்டு
அகன்ற நின் விழியீராறும்
கருணையைச் சுரந்து நல்கும்
கடல்களே! அவற்றால் என்றும்
வரையிலா தெவர்க்கும் நீதான்
வழங்கும் நின் அருட்பார்வையில்
ஒரு சிறிதென்மேல் பெய்தால்
உமக்கொரு குறையுண்டாமோ?


என்னருள் குமரா! வாழ்க,
இனிது என ஈசனார் தாம்
அன்பொடிம் மந்த்ரம் கூறி
அறுமுறை மோந்தங்குச்சி
இன்புறற் கேற்றவாகி
எழில் ஒளிர் முடிகள் தாங்கி
மண்பொறை கொளும் நின்ஆறு
மலர்தலைக்கென் வணக்கம்!


மணியணித் தோள்வளையால்
மாலையால் குண்டலத்தால்
அணிபெறு கன்னம் தன்னால்
அழகு கை வேலால் அன்போடு
அணிந்திடும் மஞ்சள் பட்டால்
அழகிற்கோர் வடிவன் ஆன
இனியனாம் முருகன், ஈசன்
ஈன்றவன் இருக்க என்முன்!


வருக என் செல்வ என்றே
வாஞ்சையாய்ச் சிவனழைக்க
விரைவில் தாய்மடியை விட்டு
விருப்புடன் சென்ற பால
முருகனை, உவகை பொங்க
முன்னவன் தழுவிக் கொண்ட
சிறுவனைச் சேயோன் தன்னைச்
சிந்தித்து வணங்குகின்றேன்!


பரமன் தன் குமரா! சேனா
பதி! குகா! கந்தா! வேலா!
குறமகள் வள்ளி தன்னைக்
கொண்டவா! குறையில் செல்வா!
அறங்கொல்தாரகனை மாய்த்த
அருளாளா! அடியார்க் கின்ப
வரந்தரும் மயில்மேல் வீரா!
வந்தெனைக் காப்பாய் என்றும்!


அடங்கியே புலன்கள் ஐந்தும்
அறிவற்றுச் செயலும் அற்று
மடங்கிட நினைவும் நெஞ்சில்
மல்கியே கோழை பொங்க
நடுங்கிடும் உடலினின்று
நமனுயிர் பிரிக்கும்போது
தடையிலா தென்முன் வந்து
தயை நிறை குகனே நிற்பாய்!


கொடுமை செய் கால தூதர்
கோபத்தோ டென்முன் வந்து
கடலென ஆர்ப்பரித்துக்
கலங்கிடச் செய்யும்போது
நடுங்கிடேல் என்று கூறி
ஞானவேல் கையிலேந்தி
உடன் எதிர் மயிலில் தோன்றி
உளத்துயர் தீர்ப்பாய் அப்பா!
கருணையங் கடலே! அந்திக்
காலத்தில் வாயடைத்தொன்(று)
உரைக்கவும் மாட்டேனாகி
ஊமையாய்க் கிடப்பேன் அப்போது
இறைவனே! நினைப் போற்றாத
இழுக்கினால் துறந்திடாதீர்!
குறை நீக்கிக் கொள்ள இன்றே
கும்பிட்டேன் வேண்டி வேண்டி!


ஆயிரம் அண்டங்கட்கோர்
அதிபனாம் சூரன் என்னும்
தீயனோடுற்ற சிங்க
முகனும் தாரகனும் எல்லாம்
மாயவே கருணை கொண்ட
மாவீர! என் மனத்துள்
ஏயுமோர் துயர் வீழ்த்தாயேல்
என் செய்வேன்! எங்கு செல்வேன்!


வளர் துன்பச் சுமையால் என்றும்
வாடுவேன் நாயேன் நீயோ
தளர்பவர் தம்மையெல்லாம்
தாங்கிடும் கருணாமூர்த்தி!
மலைமகள் மைந்தா! உம்மை
மறந்து வேறெங்கும் செல்லேன்!
அளியன் நின்னை துதிக்கவொட்டாது
அலைக்குமென் மனநோய் தீர்ப்பாய்!


தீய தாரகனை கொன்றோய்!
திவ்விய இலையில் நின்றன்
நேயமார் நீற்றைக் கண்டால்
நீரிழி(வு) என்புருக்கிப்
பேயொரு குன்மம் குஷ்டம்
பெருகுகாக் கைவலிப்பும்
சாயபைத்தியமே மூலம்
சளிச்சுரம் அனைத்தும் ஓடும்!


கண்ணவன் வடிவே காண்க!
காதலன் புகழே கேட்க!
அன்னவன் சரிதமேவாய்
அன்புடன் உரைக்க; கைகள்
பண்ணுக தொழில வற்கே!
பணிகட்கே உடலம் ஆக!
எண்ணங்கள் எல்லாம் அந்த
எழில் குகனிடமே சேர்க!


அன்புடன் பக்தி செய்வோர்,
அருந்தவ முனிவர்க் கெல்லாம்
இன்பத்தை யருளு தற்கிங்(கு)
எண்ணற்ற தெய்வமுண்டு!
பண்பிலா ஈனர் கட்கும்
பரிந்தருள் புரிவதற்குச் 
சண்முக மன்றி வேறு
சாமியான் காணேன் காணேன்!


செந்தில் வாழ் முருகா! என்னைச்
சேர்ந்துவாழ் மனைவி மக்கள்
பந்துக்கள் பசுக்கள் ஆண் பெண்
பலரும் நின் பதமே பற்றிச்
சிந்தித்தல் துதித்தல் யாகம்
செய்தல் சேவித்த லென்னும்
இந்த நற்பணிகளே செய்(து)
இருக்க நீ அருள்வாய் அப்பா!


மாயக்கி ரவுஞ்சம் என்னும் 
மலையினைப் பொடியாச் செய்தோய்!
நோயென துடலிற் செய்யும்
நுண்புழு விலங்கு புட்கள்
ஆயவை அனைத்தும் நின்றன்
அயில் வேலால் துளைக்கப்பட்டும்
போயழித்திடுக! இந்தப்
புவியினை தாண்டி அப்பால்!


தெய்வ யானை மணாள!
தேசத்தில் அன்பு மைந்தன்
செய்திடும் பிழையைப் பெற்றோர்
சிந்தையில் பொறுத்தி டாரோ!
உய்வருள் மகேச! நாயேன்
ஒரு சிறு குழந்தை! நீயோ
வையத்தின் தந்தை! என்றன்
வசையெலாம் பொறுத்தருள்வாய்!


கந்தவேள் போற்றி! நீ வாழ்
கடற்கரை தனக்கும் போற்றி!
சந்தமா மயில் தனக்கும்
சக்தி வேலுக்கும் போற்றி!
வந்தனை போற்றி, ஆட்டு
வாகனம் தனக்கும் கோழிச்
செந்திருக் கொடிக்கும்! மீண்டும்
சேவடி போற்றி! போற்றி!


ஈசனார் மகனே வெல்க!
எல்லோர்க்கும் உறவே, வெல்க!
மாசிலாப் புகழோய் வெல்க!
வானுயர் பதத்தோய் வெல்க!
ஆசையோ டன்பர் ஆடும்
ஆனந்தக் கடலே வெல்க!
ஏசிலா இன்பம் ஈவோய்!
என்றும் நீ வெல்க! வெல்க!


போற்றியே குமரன் தன்னைப்
புகழுமிப் புஜங்க மாலை
சாற்றியே வணங்கும் அன்பர்
சன்மார்க்க ராகி, உள்ளம்
ஏற்றிடும் மனைவி மக்கள்
இருஞ்செல்வம் நீண்ட ஆயுட்
பேற்றுடன் வாழ்ந்து கந்தன்
பெரும் பதம் அடைவர் திண்ணம்!
வாழ்க சீரடியாரெல்லாம்.

ஆறு ஆதாரங்களும் அழகுறும்!


முருகா என்றழைக்க
ஆறு ஆதாரங்களும் அழகுறும்!


பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள் ஒன்றிணைந்ததே "முருகா' என்னும் திருநாமம்.

இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக விளங்குகிறது.

அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.

வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.

நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.

துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம்.

தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.

இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு திருக்கரங் களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார்.

நீலமயில் ஓங்கார சொரூபம். ஓங்காரமே பிரம்மம். அகர, உகர, மகார ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன். முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.

"சரவணபவ' என்னும் சடாக்ஷர மந்திரத்தை மனதில் நினைத்து, "குகாய நம ஓம்' என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத் தாலே மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு. முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.

திருப்பரங்குன்றம்- மூலாதாரம்.

திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம்.

பழனி- மணிபூரகம்.

சுவாமிமலை- அநாகதம்.

திருத்தணி- விசுத்தி.

பழமுதிர்சோலை- ஆக்ஞை.

"முருகா முருகா' என்று மனமுருகி வணங்கி னால், நிலையான இன்பம் அளித்து நம்மைக் காப்பான் வேலவன்.


ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 16 !



 இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் ஜீவநாடி சொல்வதும், கேட்பதும்,

நடைமுறையில் பலன்களைத் தருவதில்லை. நம்பிக்கைதான் முக்கியம்.

நம்பிக்கைதான் வாழ்க்கையின் தும்பிக்கை. ஆராய்ச்சி மனத்தோடு அணுகி

இவர் எப்படி இதைச் சொல்கிறார்? எப்படி எழுத்துக்கள் தோன்றுகிறது?

என்று அலைபாயும் மனதுடனும், ஆதங்கத்துடனும், அங்கலாய்ப்புடனும்

வருகின்றவர்களுக்கு ஜீவநாடி பாடம் புகட்டி விடுகிறது என்றே சொல்ல

வேண்டும். கலியுகத்தில் யாரையும் நல்லவர் என்று நம்ப முடிவதில்லை.



நாடியை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அணுகுவதும், அதில் என்ன

மர்மம் உள்ளது என்பதை அறிந்துக் கொள்ள வருவதும் நடைமுறையில்

பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில்

என்னிடம் இருக்கும் ஜீவநாடி மந்திர நாடி அல்ல. சாட்சாத் முருகப்

பெருமானின் ஆசியோடு சொல்கின்ற அருள்வாக்கு நாடி. தம்மை

உண்மையோடும், பக்தியோடும், பக்குவத்தோடும் நாடி வருபவர்களுக்கு

தேடிச் சென்று திருவிளையாடல்களை நடத்துகின்ற நமது ஸ்ரீஞானஸ்கந்த

மூர்த்தியின் வாக்கு இதுவரை பொய்த்தது கிடையாது.



இந்த தொடரை எழுதுவது கூட சுய விளம்பரமாகப் போய்விடுமோ

என்று எழுதும் முன்பு யோசித்தேன். பொய்யைச் சொன்னால் தானே

விளம்பரமாகப் போகும். உண்மையை, உணர்ந்ததை ஊரரியச் சொல்லுவதில்

எந்த வித தவறும் இல்லை என்று அறிவுறுத்தியது. எனது குரு

சக்திவேல் அடிகளாரும், ஆசிரியர் ஸ்ரீராஜு ஐயா அவர்களிடமும்

ஆரம்பம் முதலே பல இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள்

கொடுத்த ஊக்கம் தான் இதை எழுதத் துடிக்கும் தாக்கம் எனக்கு

ஏற்பட்டது. இந்த தாக்கம் தான் அனைவருக்கும் ஒளிவு மறைவுமின்றி

வெளிப்படுத்திடும் வாய்ப்பு கிட்டியது. அனுபவித்தவர்களின் ஆர்ப்பரிப்பான

ஆதங்க வெளிப்பாடுகள் ஏராளம், ஏராளம். இந்த தொடரை ஆவலோடு

எதிர்பார்க்கும் வாசகர்கள் ஏராளம் விரும்பிப் படிக்கின்றவர்களும் தாராளம்.



இதைப் படித்த பின்பு உடனடியாக என்னைச் சந்திக்க வேண்டும் என்று

நினைப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தற்போது அதற்கான

கால அவகாசம் இல்லை என்பது தான். வாய்ப்பு கிடைக்கும் போது

முறையாக அறிவிப்பு செய்கிறேன். அதன்பின்பு தடையில்லாமல் சந்தித்து

விடை காணலாம். வாழ்வின் வெற்றிக்கு தடையில்லா நிலை காணலாம்.

தடம் மாறாமல் வாழ்வில் வளம் பெறலாம்.



 ஒரு மிகப் பெரிய நகைக்கடையின் அதிபர் தனது மகள் திருமணம் பற்றி

கேட்க வேண்டும் என்று என்னிடம் அனுமதி வாங்கி ஒரு நாள் வந்து

சந்தித்தார். பெரிய கோடீஸ்வரன் என்றே சொல்லும்படியான தோற்றம்

தெரிந்தது. பலவரன் பார்த்தும் படியவில்லை ஐயா தாங்கள் தான் இதற்கு

ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்று வந்தார். சரி கந்தன் விட்ட வழி

என்று சுவடியைப் பூஜித்து பிரித்து படித்தேன். பின்வரும் விஷயம்

பாடலாக வந்தது.

“கச்சிதமாய் முடியும்

காலமது கனியும்

கந்தனது ஆசிகள்

கனிவாக உண்டுண்டு

கவலைகள் தேவையில்லை

கட்டழகு கொண்டவன்

கன்னியை விரும்பி வந்து

கைப்பிடிப்பான் அஞ்சேல்

கவலைகள் வந்ததுவும்

கஷ்டங்கள் வந்ததுவும்

காட்சிகளங்கே கண்டதும்

காணுகின்ற அக்னி ஸ்தலம்

கச்சிதமாக ஏகியங்கு

கந்தனின் தந்தை நாமம்

கொண்டதன் அடியார்கள்

காவி பூஜை செய்து பின்

கச்சிதமாய் வில்வமொன்றை

கந்தனை தொழுது நட்டுவா

நலம் என்றோம் நலம்!

ஆசி! ஆசி! ஆசி!”

 ஸ்ரீஞானஸ்கந்தர் நாடியில் வாக்கு தந்தது ஸ்ரீஅகத்தியர்.


முருகப் பெருமானது வாக்கு வராமல் அகத்திய மகரிஷி வாக்கு தந்தார்.

எந்த நேரத்தில் யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறது

என்பதால் யார் வாக்கு தந்தாலும் அதை உரைப்பது மட்டுமே எமது பணி.

சித்தர்கள் ஆசி இருப்பதால் பணத்தின் மீது ஆசை எனும் பேய் என்னைப்

பிடிக்காததால் தூய்மை இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதால்

வாய்மை இருக்கிறது. வாக்கு பலிக்கிறது. கேட்பவர்கள் வாழ்வு சிறக்கிறது.

 அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை சென்று சிவனடியார்களுக்கு



மகேஸ்வர பூஜை செய்து பின்பு வில்வமொன்றை பிரதிஷ்டை செய்து

வந்தால் கந்தனது ஆசியால் விரைவில் திருமணம் நடக்கும் என்று வாழ்த்தி

முருகனது ஆசி இருப்பதாகவும் கூறி ஆசி கொடுத்தார் அகத்தியர்.

முகமலர்ச்சியோடு ஆசி வாங்கிச் சென்றார்கள்.



திருவண்ணாமலையைப் பொறுத்தவரை அடியார்கள் அதிகம். யாருக்கு

தானம் செய்தாலும் சிறப்புதான். ஆனாலும் சிவனை சிந்தையில் வைத்து

சிவ நாமத்தை உச்சரித்து சிவவேடம் பூண்டு இருக்கும் உண்மையான

சிவனடியார்களுக்கு பூஜை செய்து, போஜனம் செய்து ஆசி வாங்குவது

முடிகின்ற காரியமா? என்ற யோசனை வரும். உண்மைதான் பாத்திரம்

அறிந்து பிச்சையிடு என்பது பழமொழி. ஆசி வாங்குவதும் அப்படித்தான்

இதற்கு ஒரு விடை கொடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஓர்

ஆசிரமம் சிறப்பான சேவை செய்து வருகிறது. எனது குருநாதர் ஸ்ரீவகாப்

ஜோதி அக்பர் சுவாமிகளின் ஆசியோடு அவர் அறிவுறுத்தலின் பேரில்

ஸ்ரீசரவணபவா சுவாமிகளின் தொடர்பு கிடைத்தது. மீனாட்சி நாடியின்

அற்புதங்களையும், நமது ஞானஸ்கந்தர் நாடியின் அற்புதங்களையும்

பல ஆண்டு எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஸ்ரீ ஜோதி

அக்பர் சுவாமிகள் யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்க விட மாட்டார்.



அவரிடம் முருகப் பெருமானும், மீனாட்சியும் உரையாடி வருவது என்

அனுபவத்தில் கண்டுக் கொண்ட உண்மை. ஜோதி அக்பரின் ஆசியால்

அன்னை வாராஹி தேவியே எனக்கு காட்சி கொடுத்து என்னிடம்

உரையாடி இருக்கிறாள் என்றால் சுவாமியிடம் இன்னும் எத்தனை அதிசயம்

உண்டோ அறியேன். என்னைப் பொறுத்த வரையில் எனது முன் ஜென்ம

பலனால் கிடைத்த பொக்கிஷம் ஸ்ரீ ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்கள்.


ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் ஸ்ரீ சரவணன் சுவாமிகளை

அறிமுகம் செய்து வைத்தார். பொள்ளாச்சியில் இருந்து அண்ணாமலைக்கு

இளமை காலம் முதலே வந்து சரணாகதியடைந்தவர். சரவணன் சுவாமி

வள்ளலார் பேரில் அன்பு பூண்டு அவர் மார்க்கத்தில் நிற்பவர். பல

சித்தர்களுக்கு அன்னம் படைத்து அவர்களின் ஆசியையும், அன்பையும்

பெற்றவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இவர் செய்யும் மகேஸ்வர

பூஜையை கண்ணால் கண்டு தொழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்.



எத்தனை அடியார்களுக்கு அன்னதானம் செய்து பூஜை செய்ய

வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி விட்டால் அத்துணை

அடியார்களுக்கும் தகவல் கொடுத்து பூஜைக்குத் தயார் செய்து

விடுவார். அவர் அழைக்கும் அடியார்கள் உண்மையான சிவனடியார்களாக

இருப்பார்கள். அவர்களை வரிசையாக அமர வைத்து இலை போட்டு

அறுசுவை உணவு படைத்து அடியார்கள் நமசிவயா வாழ்க... நாதன் தாள்

வாழ்க... என்று சிவபுராணம் ஓதி பூஜை செய்பவர்களுக்கு ஆசி வழங்கி

பின்பு அன்னம் உண்டு செல்வார்கள். இது போன்ற பூஜை சாதாரணமாக

யாரும் செய்து விட முடியாது. பிராப்தம் உள்ளவர்கள் தான் செய்ய முடியும்.
                 
                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.  
                        ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் - துணை ஆசிரியர்  திருவருள் சக்தி மாத இதழ்.

வியாழன், 9 அக்டோபர், 2014

பாவங்களை கரைக்கும் - உன்னதமான சில புண்ணிய காரியங்கள்!



 பாவங்கள் செய்யத மனிதர்களே இல்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை அப்படி அமைந்துவிடுவது உண்டு. சற்று , சுமாரான நிலையை வாழ்வில் எய்தியவுடன், செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய  உள்மனசு துடிக்கும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது .  


எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
பசுவிற்கு பழங்கள் , அகத்திக்கீரை அளிப்பதும் - ஒரு சிறந்த புண்ணிய காரியம் ஆகும்.  பிராமண சமூகத்தில் - இன்னொரு மிகச்சிறந்த விஷயம் நடைமுறையில் இருக்கிறது. கோ தானம் என்று பெயர். ஆச்சார , அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள , சற்று வசதியுள்ள குடும்பத்தில் இது நடைமுறையில் உள்ளது.  அவர்கள் குடும்பத்தில் - தாயோ, தந்தையோ  இறந்து விட்டால்  அவர்கள் ஞாபகார்த்தமாக - ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி - ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.

இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய , அந்த பசு கறக்கும் பாலில் - அதிகாலையில் - அந்த கோசாலை அருகில் இருக்கும் - சிவன் ஆலயத்திற்கோ , பெருமாள் ஆலயத்திற்க்கோ - அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து , போஷிப்பது - அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும். அந்த பசுவினால் வரும் இதர வருமானம் முழுவதும் அவருக்கே.
சுமார் ஒரு வருடம், அவர்கள் முதல் திதி கொடுக்கும் வரை - நாள் தவறாது - இறைவனுக்கு பாலபிசேகம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனால், இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து - அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வலி ஏற்படுகிறது..
நீங்களும் இதைக் கடைபிடிக்க நினைத்தால் , வசதி வாய்ப்பு இருந்தால் - நீங்களும் செய்யலாமே ..!!கோசாலைக்கு கொடுக்க முடியவில்லையானாலும், தாமே பசுவை வளர்த்து , யார் மூலமாவது பாலபிசேகம் செய்யலாம். இல்லை இந்த கடமையை நிறைவேற்றக்கூடிய ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கலாம்.

சண்முகக் கவசத்தின் மகிமை!!!


 சண்முகக் கவசத்தின் மகிமை:-


முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;


பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.

தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

சக்தி நிறைந்த உடல்!!!


சக்தி நிறைந்த உடல்
மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ரகசியமாக வைத்திருக்க வேண்டிய 9 விஷயங்கள்.


இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:

1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்
9.பயன்படுத்திய மந்திரம்

தோப்புக்கரணத்துக்கான கதை!!!




விநாயகர் வழிபாட்டில் கைகளால் குட்டிதோப்புக்கரணம் இடுவர். "தோர்பி கர்ணம்' என்னும் வடசொல்லே தோப்புக் கரணம் எனப்படுகிறது. இந்தச்சொல்லுக்கு "கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது' என்று பொருள். விநாயகர், தன் மாமா திருமாலின் சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டு கொடுக்க மறுத்து அடம் பிடித்தார்.

அவரைச் சிரிக்க வைத்தால் வாயில் இருந்து சக்கரம் வெளியே வந்துவிடும் என்று எண்ணிய பெருமாள், தன் நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு கரணம் போட்டு வேடிக்கை செய்தார். விநாயகரும் அதைப் பார்த்து சிரிக்க, சக்கரம் கீழே விழுந்துவிட்டது. அதுமுதல் விநாயகரை மகிழ்விப்பதற்காக இவ்வழக்கம் உண்டானது. இவ்வழிபாட்டிற்கு வேறொரு புராணக்காரணமும் உண்டு. தேவர்களைக் கைது செய்த கஜமுகன் என்ற அசுரன் தனக்கு தோப்புக்கரணம் இடும்படி ஆணையிட்டான். விநாயகப்பெருமானை அவனை அழித்து தேவர்களைக் காத்தார். அவருக்கு நன்றிக்கடனாக தேவர்கள் தோப்புக்கரணம் இட்டனர். அதுமுதல் இவ்வழிபாடு உண்டானதாகவும் கூறுவர்

படித்ததில் பிடித்தது- உணவுப் பழக்கங்கள்!!!



நீங்கள் உண்ணும் உணவு நீங்கள் வாழும் இந்த நிலத்தின் சத்துக்களை உறிஞ்சி உருவானவை. நிலத்தின் ஒரு பகுதியான இந்த உணவு சாப்பிட்டபிறகு நீங்களாகவே மாறுகிறது. இது சாதாரண விஷயமல்ல. மிகப் பெரிய விஷயம். எனவே சாப்பிடும்முன் இந்த உணவு உங்களுக்கு கிடைக்க வழி செய்த அனைத்து சக்திகளுக்கும் உங்கள் நன்றியை வெளிப்படுத்திவிட்டு, முடிந்தவரை மௌனமாக உண்ணுங்கள். 

1.சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் முகம், கை, கால்களைக் கழுவுங்கள். 

2.ஒவ்வொரு நாள் காலையிலும், மஞ்சள் மற்றும் வேப்பிலை உருண்டைகளை வெறும் வயிற்றில் உண்டு வந்தால், நல்ல ஜீரணசக்தி உண்டாவதோடு, தொற்றுக் கிருமிகளின் பாதிப்பிலிருந்தும் புற்றுநோய் ஏற்படாமலும் தவிர்க்க இயலும். 

3.தரையில் கால்களை மடித்து (சுகாசனம்/சாப்பாடு ஆசனம்) அமர்ந்து உண்பதே சிறந்தது. 

4.உணவை நன்றாக மென்று உண்ணுங்கள். 

5.ஒவ்வொரு வாய் உணவையும் குறைந்தபட்சம் 24 முறையாவது மெல்ல வேண்டும். 
உணவு செரிமானம்… 

உணவு செரிமானம் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் ஒருவிதமான நொதி, வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் துவக்கிவிடுகிறது. உணவை, இந்த நொதி நிறைந்த உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது, ஆபத்தான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், மற்ற நுண்ணுயிர்களிடமிருந்தும், வேறு பல இரசாயனங்கள், கதிர்வீச்சு மற்றும் விஷப் பொருட்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. சரியாக மென்று தின்றால், 40-50% உணவு செரிமானம் வாயிலேயே நடந்துவிடுகிறது. உணவு சரியாக மெல்லப்படாவிட்டால், சரியாக செரிமானமாகாத உணவு வயிற்றை அடைந்து, ஒட்டுமொத்த உடலமைப்புக்கும் பிரச்சனை ஏற்படுத்துகிறது. 

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்? 

1.சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். 
2.சாப்பாட்டுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக சிறிதளவு சீரகத் தண்ணீரோ அல்லது சாதாரண நீரோ குடிப்பது நல்லது. 
3.சாப்பிட்டு 30-40 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் அருந்துவது நல்லது. 
4.முதலில் சமைக்காத, பச்சை உணவு வகைகளை உண்டுவிட்டு, பிறகு சமைத்த உணவுகளை உண்ணுங்கள். 

சாப்பிட்ட பிறகு தூங்குவதற்கு 2 மணி நேரம் காத்திருக்கவும். உடலுக்கு உணவைப் பற்றித் தெரியும். ஏனென்றால் உடலே உணவால் ஆனதுதான். எனவே எதை, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் உங்கள் நாக்கை கவனிக்காமல், உடலை கவனியுங்கள். மாதத்துக்கு ஓரிரு முறையாவது ஒரு நாள் முழுவதும் பழங்களையும், காய்கறிகளையும், தானியக் கஞ்சியையும் மட்டும் உட்கொள்ளுங்கள். மாதத்துக்கு இருமுறை வயிறை காலியாக விட்டுவிடுவது இன்னும் சிறந்தது. இது உடலை சுத்தப்படுத்தும். 

ஏகாதசி… 

பாரம்பரியமாக, மக்கள் ஏகாதசி அன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்நாட்களுக்கு ஆன்மீக முக்கியத்துவமும் இருக்கிறது. உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, முதலில் எளிதில் ஜீரணமாகக் கூடிய பப்பாளி மற்றும் கஞ்சி போன்ற உணவு வகைகளை உண்ண வேண்டும். 

தேன்...

தினந்தோறும் தேன் உட்கொள்வது ஒரு மனிதருக்கு பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது. தேனின் இரசாயன அமைப்பும், மனிதனின் இரத்த அமைப்பும் மிக நெருக்கமாக ஒத்திருக்கின்றன. ஆஸ்துமா மற்றும் சளித் தொந்தரவு இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்து. இதயம், மூளை இவற்றுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், மனதையும் கூர்மையாக வைத்திருக்கக் கூடியது. மிகவும் சக்தி ஊட்டக் கூடியது.

சனி, 4 அக்டோபர், 2014

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்''




குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்'' என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாக முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களில் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் "தெய்வசிகாமணி' என்று போற்றுவர். ""கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது'' என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. நாம் அறியாமல் செய்த பிழைகளையும் முருகன் பொறுத்துக் கொள்வான். பிள்ளை என்று அன்பாய் பிரியம் காட்டுவான் என்று கந்தசஷ்டிகவசம் நமக்கு வழிகாட்டுகிறது. 

அதோடு மட்டுமல்லாமல் முருகனிடம், ""என்னைப் பெற்றவன் நீயே! என் பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன் கடமை!'' என்று தேவராய சுவாமிகள் கவசத்தில் முருகனிடம் முறையிடுகிறார். வள்ளலார் தனது தெய்வமணிமாலையில், ""தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!'' என்று அழைக்கிறார்.

சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?





சூரபத்மனை வதைத்த முருகப்பெருமான் அவனுக்கு நற்கதி அளித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஏற்றதாகப் படித்திருக்கிறேன். ஆனால்... சூர சம்ஹாரத்துக்கும் முன்னதாகவே மயிலின் மீது ஏறி முருகன் உலகை வலம் வந்தார் என்கின்றன புராணங்கள். எனில், சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?
அத்தனை உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கும் பரம்பொருள் முருகப்பெருமான். அவர், ஈசனின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றியவர்; பிறந்தவர் அல்ல. பிறப்பும் இறப்பும் அற்றவர். அவர், எந்த வேளையிலும் மயில் வாகனத்தில் தோன்றலாம்.
ஒருவனது உயிர் பிரிந்ததும் பூத உடல் மறைந்துவிடும். கண்ணுக்குப் புலப்படாத சூட்சும வடிவில் அவனது ஆன்மா இருக்கும். அதுதான் அழியாத பொருள். சூரன் உயிர் பிரிந்தது. பூத உடல் மறைந்தது. சூட்சும வடிவம், வாகனமான மயிலில் ஒன்றியது. ஸாரூப்யம், ஸாமீப்யம், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் என்கிற நான்கு நிலைகளில்... மயிலோடு சாயுஜ்யத்தை அளித்தார் முருகப்பெருமான். இப்போது, அவன் மயில் வடிவில் நமக்குத் தென்படுகிறான் என்றே அதற்குப் பொருள். உயிரினங்களில் நஞ்சை உமிழ்ந்த தாரகனை, நஞ்சை அழிக்கும் மயிலில் இணைத்தார் முருகப்பெருமான் என்று சொல்வது பொருந்தும்.
சூரபத்மன் இறக்கும் வரை வாகனம் இல்லாமல் இருந்து, பிறகு கிடைத்தது என்று, மனிதப் பிறவியின் சாதாரண சிந்தனையை இந்த இடத்தில் செயல்படுத்தக் கூடாது. 'உலகையே உலுக்கிய தீய சக்தியையும் அருள்பாலித்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்’ எனும் முருகனின் பெருமையைப் பறைசாற்றும் நோக்கத்தில் இந்த நிகழ்வு விளங்குகிறது.
வேதம் அறிமுகம் செய்த உயிரினம் மயில் (ஸெளரீ பலாக்ர்ச் யோமயூர:). வேதப்பொருள் (முருகன்) அதனுடன் என்றென்றும் ஒன்றியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. புராணங்களைத் தெரிந்து கொள்வதில் தனி அணுகுமுறை உண்டு. கதையில் ஒளிந்திருக்கும் தத்துவத்துக்கே முதலிடம் உண்டு. அவனது விளையாட்டிலும் செயல்பாட்டிலும் ஒளிந்திருக்கும் குறிக்கோளை உணர வேண்டும். பாமரர்களை ஈர்க்க கதை வடிவம் தேவைப்படுவதால், அதன் போக்கு விறுவிறுப்புடன் அமைந்திருக்கும்.
மோகினி அவதாரத்தில் அமுது பரிமாறும்போது, அரக்கன் ஒருவன் அமுதைப் பருகினான். மோகினி அதைக் கவனித்து, பாம்பாக மாறிய அவனை கரண்டியால் துண்டித்தாள். ஒருவன் இருவரானான். அவ்விருவருமே நவக்கிரகத்தில் இணைந்த ராகு- கேதுக்கள் என்ற தகவல் உண்டு.
வேதம் ராகுவை அறிமுகம் செய்தது. வேத கால வேதம் ஓதுபவர்கள், தினமும் மூன்று வேளை ராகு-கேதுவுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அப்படியிருக்க, பாற்கடலை கடைவதற்கு முன்பு ராகு-கேது இல்லை என்றாகுமா? வானவியல், ராகு சாரத்தை வரையறுத்துக் கூறும். உலகம் தோன்றிய நாளிலிருந்து கிரகணமும் தொடங்குகிறது.
காயத்ரீயை விஸ்வாமித்திரர் வெளியிட்டதாக புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலிருந்தே காயத்ரீ ஜபம் தொடர்கிறது. கங்கையை வரவழைத்தவன் பகீரதன் என்று புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலேயே கங்கை பற்றிய தகவல் உண்டு. (கங்காயமுறயோர்மத்யே...)
வேதத்தின் விளக்கவுரையாக புராணம் செயல்படுவதால், ஒரு கதையோடு அதன் தொடர்பை சிறப்பித்துக் காட்டும். யுகத்துக்கு யுகம் புராணக் கதைகளில் மாற்றம் உண்டு. வால்மீகி இயற்றிய ராமாயணம், மற்ற மொழிகளில் பல மாற்றங்களுடன் இருப்பது கண்கூடு. ஆகவே, ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் ஆராயாமல், முன்னும் பின்னுமான தகவல்களையும் திரட்டி விரிவாக அதை அணுகும்போது உண்மை விளங்கும்.

திருப்பணி புண்ணியம் !!!



திருப்பணி புண்ணியம்:
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.

ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், 'ஐயா... என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார். 'சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்...' என்றார். 'பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...'என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. 


எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான். 'புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்...' என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, 'இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே...' என்று கேட்டான்.

அதற்கு எமதர்மன், 'இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்...' என்றான் எமதர்மன்.
தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, 'சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்...' என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம். அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், 'என் பணமும் அதில் சேரட்டும்...' என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர். தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!திருப்பணியாளர்கள் இப்பிறவியில் அரசனைப் போல் வாழ்வார்கள் அல்லது அரசனாக வாழ்வார்கள். இழந்த பதவியை மீண்டும் பெற்று, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வாழ்வார்கள். தெய்வலோகத்திலும் பதவி பெற்று தேவர்களின் ஒரு பிரி விற்கு தலைமை வகிக்கும் நிலையையும் பெற்று தேவ அரசனாக வாழ்வதுடன் மோட்சத்தின் நான்காம் படியான (கடைசி படியாக) சாயுச்சியம் என்னும் இறைவனோடு கலக்கும் முழு முக்தியை அடைவதுடன் பிறவியின் பெரும் பயனை அடைவதுடன் பிறவியிலா பெருவாழ்வும் அடைவார்கள். 


இவர்களின் தலைமுறையில் இவருக்கு பின் வரும் 108 தலைமுறையினரும் அரசனுக்கு நிகராக பேரும் புகழும் தனமும் செல்வாக்கும் பெற்று வாழ்வார்கள். இவர்களின் குலம் தெய்வகுலம் என்று உலகத்தாரால் பேசப்படும். திருப்பணிக்கு நன்கொடை அளிப்பவர்கள் பூலோகத்தில் வாழும் போதே தெய்வமாக வழிபடுவார்கள். மனித ரூபத்தில் உள்ளவரை உலகம் தெய்வமாக வழிபடும். தெய்வத்திற்கு கிடைக்கும் அனைத்தும் உயர்வுகளையும் பெறுவார்கள். ஜீவ நிலையிலேயே (ஜீவ சமாதி) இறைவனை அடைவதுடன் தான் விரும்பிய வகையில் தேவர்களுக்கு தலைமை பதவி பெற்று இந்திரனுக்கு சமமா க தேவலோகத்தில் தேவர்களுக்கு தலைமை வகித்து பல கற்பகாலங்கள் தேவலோகத்தில் தவம் பெற்று வாழக்கூடிய பாக்கியத்தை பெறுவர். 


இவர்களது வருங்கால தலைமுறையினர் பல தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் பெற்று குறைவில்லாமல் வாழ்வார்கள். பூலோ கத்தில் வாழும் காலத்தில் அட்டமாசித்துகளிலும் வல்லமை பெற்று சித்தனுக்கு சித்தனாய், குருவிற்கு குருவாய் நீடூடி வாழ்வார்கள். இவர்களுக்கு நிகர் பூலோகத்தில் யாரும் இல்லை எனும் நிலையை அடைவார்கள்.திருப்பணி வாழும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் இறந்த ஆன்மாக்களுக்கும் உயர்வு அளிக்கும் சர்வ வல்லமை படைத்தாகும். 


உங்கள் தாய், தந்தை, பாட்டன், பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை போன்ற ரத்த உறவினர் யாராவது அண்மையில் இறந்ததிருக்கலாம். அப்படி இறந்தவர்கள் தேவையான புண்ணிய பலம் இல்லாமல் சூன்ய திதி காலத்தில் உயர்வு நிலை பெற முடியாமல் பேய், பிசாசாக சுற்றிக் கொண்டிருக்கலாம். சிலர் பிதுர்லோகத்தில் அடுத்த பிறவி எடுப்பதற்கான புண்ணிய பலம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். சிலர் நரக லோகத்தில் வதைபட்டுக் கொண்டிருக்கலாம். சிலர் மோட்சம் அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். மேற்கண்ட குறைபாடுடன் ஏதேனும் கொண்டு உங்கள் ரத்த உறவினர்களின் ஆத்மா தத்தளித்துக் கொண்டிருந்தால் அவர்களின் திருப் பெயரால் சங்கல்பம் செய்து ஓர் கோயில் உபயத்தினை நீங்கள் செய்தால் 48 நாட்களில் (ஒரு மண்டல காலத்தில்) அந்த ஆன்மாக்கள் வேண்டிய வரத்தை ஈசன் அருளால் பெறும் என்பது பேருண்மையாகும்.