செவ்வாய், 30 செப்டம்பர், 2014

குருவின் பெருமை !!!



அகல் விளக்கும், கோதுமை குளவியும் மனிதனின் வாழ்க்கையும் : - 


                                                                    மனிதனின் வாழ்க்கையானது அகல் விளக்கை போன்றது.அகல் விளக்கில் நெய் இருக்கும் வரை அது எரிகின்றது அதுபோல மனிதனின் வாழ்க்கை உயிர் இருக்கும் வரைதான். அகல் விளக்கில் எரிகின்ற ஜோதி நிலையானது அதுபோல மனித உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா என்றும் அழிவதில்லை. இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருளும் அணுக்களின் தொகுப்பே.எனவே இந்த உலகத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் உணர்வுதான் உயிராகிறது.அந்த உணர்வுதான் கடவுளாகும்.அந்த உணர்வை அடைவதற்குதான் இந்த மனிதப்பிறவியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார்.

நம்மை படைத்த கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் இறை தன்மையை உணர சந்தர்ப்பம் கொடுத்து கொண்டே இருக்கிறார். அதற்க்கு உதாரணம் கோதுமை குளவியனது புல்வெளிகளில் இருக்கும் புலுவிடம் சென்று ரீங்காரம் செய்கிறது.அதில் எந்த புழு தன்னை பார்க்கிறதோ 
அதை தன் கூட்டுக்கு கொண்டு வந்து ரீங்காரம் பாடியே அந்த புழுவை குளவியாக மாற்றுகிறது.அதுபோல எந்த ஒரு மனிதன் குருவின் வழியாக தனக்கு பிடித்த தெய்வத்தின்  உபாசனை மந்திரத்தை தினமும் ஜெபம் செய்கிறானோ அவனே கடவுள் தன்மையை அடைய தகுதி ஆகிறான்.

எனது வாழ்கையில் ஏற்பட்ட எல்லாவித மாற்றங்களுக்கும் எனது குருவே காரணமாகிறார். குரு தொட்டு காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியை போல குரு உபதேசித்த அனைத்தையும் சரியாக செய்தாலே இவுலக்திலும் அவ்வுலகதிலும் இடம் உண்டு என்பது சத்தியமான உண்மையாகும்.

               குரு வாழ்க ! குருவே சரணம் ! குருவே துணை ! குருவின் திருவடி போற்றி!

                                                          வடிவேல் முருகா !

திங்கள், 29 செப்டம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 15




முக்கிய குறிப்பு : முருகப்பெருமானின் திருவடிகளின் கீழ் உள்ள லிங்கமானது முருகப்பெருமானேசுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த லிங்க வடிவில் உள்ள முருகப்பெருமானே நமது ஸ்கந்த உபாசகரை ஆட்கொண்டு ஜீவநாடி மூலம் முக்காலத்தையும் உணர்த்தி வருகிறார்.ப்ராப்தம் உள்ளவர்கள் மட்டுமே இந்த சுயம்பு லிங்க முருகப்பெருமானை தரிசனம் செய்யவும்,ஜீவநாடியின் மூலம்  அருள்வாக்கு கேட்கவும் முடியும் என்பது அனுபவ உண்மையாகும்.

ஞானஸ்கந்த மூர்த்தி ஜீவ நாடியைப் பொறுத்தவரை 100% முருகனின்

அருள்வாக்கே. இதில் மந்திரமோ, மை வித்தையோ, எட்சினியோ கிடையாது.

எனது குருநாதரிடமும் கிடையாது. என்னிடமும் கிடையாது. சிலர்

எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பதற்குக் காரணம் மிகத்

துல்லியமாக வருவதால் தான். இதை எப்படிச் சொல்ல முடியும் என்று

நினைக்கிறார்கள். மேலும் ஒரு சம்பவம் நமது ஞானஸ்கந்த மூர்த்தியிடம்

தீட்சை பெற்று ஸ்ரீமுருக உபாசனை செய்து வரும் சுரேந்திரமான அடியார்

ஒருவரும், பிரகாசமான அடியார் ஒருவரும் பவானி லட்சுமி நகரில் ஒரு

டீகடையில் டீகுடித்தார்கள். அதற்கு சுரேந்திரமான அடியார் பணம்

கொடுத்து அதுவும் ரூ100/- கொடுத்து சில்லறை வாங்கியிருக்கிறார். இதை

அப்படியே ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி உரைத்தார். கேட்ட அனைவருக்கும்

அதிர்ச்சி. இது எப்படி சாத்தியம். நிச்சயம் மை, மந்திரம், எட்சினி

இருக்குமோ? ஏன் அப்படி நினைக்க வேண்டும். எட்சினியை விடவா முருகப்

பெருமான் கீழாகப் போய்விட்டார். இதை உரைத்தது முருகப் பெருமான் இது

தான் இரகசியம்.

 ஜீவநாடியைப் பிரிக்காமல் அதை கையில் வைத்துக் கொண்டே இத்தனை

இரகசியங்களையும் ஞானஸ்கந்த மூர்த்தி உரைத்து விடுகிறார்.

எனவே ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டு ஆறுமுகப் பெருமானே கதி

என்று சரணாகதி அடைபவர்களுக்கே ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி நூறு

சதவீதம் நன்மை செய்கிறார். ஆராய்ச்சியில் விளைவது குழப்பம் மட்டுமே.

 நாடியில் வருகின்ற பரிகாரங்கள் அனைத்தும் ஆலய தரிசனங்களாகவே

இருக்கின்றன. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு ஆலயம் வருகிறது. அவர்

அந்த குறிப்பிட்ட ஆலயத்தை தரிசனம் செய்த உடனேயே பல அற்புத

மாற்றங்கள் நடந்து விடுகின்றன. சிலருக்கு அந்த ஆலயங்களிலேயே பல

அதிசயங்கள் நடக்க ஆரம்பித்து விடுகின்றன. இதெல்லாம் நமது

ஞானஸ்கந்த மூர்த்தி நம் மீது காட்டுகின்ற கருணை. நமது ஞானஸ்கந்தர்

ஜீவநாடி பணத்திற்கு அடிமை அல்ல. நாடி படிக்க ஒரு சிறு காணிக்கை

சித்தர்களே நிர்ணயம் செய்து வைத்ததை தவிர வேறு எந்த பணமும்

வாங்கப்படுவதில்லை. பணம் குறிக்கோள் இல்லை என்பதால் உண்மையை

மட்டுமே உரைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளேன். சித்தர்கள் நிர்ணயம்

செய்துக் கொடுத்த தொகைக்கு கீழ் வாங்கப்படுவதில்லை. அதற்கு

மேலும் வாங்குவதில்லை. எல்லாமே சித்தர்களாலும், ஞானஸ்கந்த

மூர்த்தியாலும் வழி நடத்தப்படுவதால் பொய் என்பது இங்கு

பொய்யாகவே இருக்கும். உண்மை இருப்பதை உணர்ந்து மாதந்தோறும்

ஒவ்வொறு அமாவாசையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வந்து ஞான

தரிசனம் செய்து அற்புத மாற்றங்களை உடனே அடைகிறார்கள்.

 ஒருவர் நாடி கேட்க வேண்டும் என்று வந்து அமர்ந்தார். முருகப்

பெருமான் பின் வருமாறு உரைத்தார்.

“தோஷமது உண்டு

தொந்தரவும் உண்டு

தொல்லைகளும் உண்டு

உண்டுண்டு கேள்

உறுதியில்லா இதயமாய்

அடைப்பு போலும்

அதிசயமாக நீங்க

வழியுரைப்போம்

வகை வகையாய்

வழி வழியாய்

பூஜித்து வந்த

வரிசை தெய்வம்

கற்சிலையாய் நின்று காக்கும்

கன்னி தெய்வம்

கச்சிதமாய்க் காசோலை

கருகு மணி வைத்து

கற்கண்டை நிவேதனம் செய்து

கைதொழுது பின்

ரண சிகிச்சை செய்

அஷ்டமம் தன்னியே

ஆட்சியான மங்களன்

ஆயுள் தருவான் அஞ்சிடாதே!

செய்ய வேண்டும்

ஜெயமாகுமே செய்”

 என்ற நீண்ட விளக்கப் பாடலை மட மடவென நாடியில் உரைத்தார்

முருகப் பெருமான் வந்து அமர்ந்தவருக்கு இதயத்தில் அடைப்பு. அதைப்

பற்றிய விபரம் எதுவும் முன்பே எனக்குத் தெரியாது. தொலைபேசியில்

தொடர்பு கொண்டது மட்டுமே அறிமுகம். ஆனால் அருகில் இருந்து

பார்த்ததைப் போல் அப்படியே அப்பட்டமாக உரைத்ததோடல்லாமல்

உரிய பரிகாரமும் சொல்லி அந்த இதய அடைப்பு சரியாகி ஆபரேசன்

செய்தாலும் உயிர் பிரியாது என்பதையும் துல்லியமாக உரைத்தார். வந்து

நாடி கேட்டவருக்கு வயது 45. இந்த வயதிலேயே இதயத்தில் அடைப்பு

இருந்தது.

அதுவும் தொன்னூறு சதவீதம் அடைப்பு. மருத்துவர்களே மலைத்து

விட்டார்கள். இவரது மனைவி இதை நினைத்து நினைத்து அழுது அழுது

பாதி காலியாகி விட்ட நிலைக்கு தள்ளபட்டார். மிகவும் சிறிய குழந்தைகள்

இவர்களுக்கு நாடியை படித்து விளக்கம் சொல்லி முடித்த பின்பு சொன்ன

சம்பவங்கள் இத்துணையும், சேலத்தில் மிகப் பிரபலமான தனியார்

பேருந்தின் உரிமையாளர். ஏற்கனவே என்னிடம் அடிக்கடி நாடி கேட்பவர்

அதன் மூலம் அவருக்கும் ஏராளமான அதிசயங்கள் கிடைக்கப் பெற்றவர்.

அவரிடம் சென்று இந்த இதய அடைப்பு உடையவரின் மனைவி அழ

அவர் ஞானஸ்கந்தர் ஜீவநாடியில் நிச்சயம் வழி கிடைக்கும் என என்னிடம்

தேதி வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். அவரும் என்னிடம் எதுவும்

சொல்லவில்லை. இது எப்படி சாத்தியம் 100% பலன் வந்திருக்கிறதே என

அதிசயப்பட்ட இருவரும் மருத்துவர்களே கை விட்ட நிலையில் நாங்கள்

எப்படி ஐயா ஆபரேஷன் செய்வது எனப் புலம்பினார்கள்.

 அதற்கு நாடியில் வந்த விபரங்களை மீண்டும் விளக்கினேன்.

 “பூஜித்து வந்த

 வரிசை தெய்வம்”

 “கற்சிலையாய் நின்று காக்கும்

 கன்னி தெய்வம்”

 எது எனக் கண்டு பிடியுங்கள் அதாவது முன்னோர்கள் பூஜித்த

கன்னிமார் எங்கு உள்ளது எனக் கேட்டேன். ஐயா எங்களது பூர்விக

சொத்தில் தோட்டத்திலேயே கன்னிமார் 7 பேரும் உண்டு. சிலை கிடையாது.

கல் வடிவில் சுயம்பு போன்று உள்ளது. அதற்கு வருடம் ஒரு முறை

பொங்கல் வைத்து, காதோலை கருகுமணி போட்டு பூஜித்து வருவோம்.

ஆனால் கடந்த 5 வருடங்களாக அந்த பூஜையை நாங்கள் செய்யவில்லை

என்றார்கள். முதலில் அந்த அம்மனை ஒரு சுப நாளில் பூஜித்து வந்து

பின்பு அதே மருத்துவரிடம் செல்லுங்கள் உற்ற வழி கிடைக்கும் என்றேன்.

ஐயா எப்படியாவது குணம் கிடைக்க வேண்டும் என்றார்கள். ஆசிர்வதித்து

மந்திர விபூதி கொடுத்து அணியச் சொன்னேன்.

 2 மாதம் எந்தத் தகவலும் இல்லை. நானும் அலுவல் காரணமாக மறந்து

விட்டேன். 2 மாதம் கழித்து அந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஐயா தங்களைப் பார்க்க வேண்டும் என்றனர். சரி என ஒரு தேதியைச்

சொல்லி வரச் சொன்னேன். மீண்டும் கணவன்/மனைவி இருவருமே

வந்தனர். சரி இன்னும் ஆபரேசன் செய்யவில்லை போலும் என நினைத்து

என்னாயிற்று எனக் கேட்டேன்.

 இருவரும் தேம்பித் தேம்பி அழுதார்கள். சரி பெரிய பிரச்சினை போல்

தெரிகிறது என நினைத்து ஞானஸ்கந்த மூர்த்தியைப் பூஜித்து சுவடியைப்

பிரித்தேன்.

 “சுபமானது

 சுகமானது

 சூட்சுமமானது”

 என வந்தது. ஐயா அதை சொல்லத்தான் நாங்கள் வந்தோம். உங்களைப்

பார்த்ததில் பேச்சே வரவில்லை. மிகப் பெரிய மரணப் போராட்டத்தின்

பின்பு அறுவை சிகிச்சை வெற்றி பெற்று இவர் பூரண குணமாகி விட்டார்

என்று சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டார்கள். இப்படி அவசரத்திலும்

ஆபத்திலும் காப்பாற்றிய ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.

கல்லூரியில் பணி புரிவதாலும், வாரம் ஒரு முறை ஞாயிறு மட்டுமே

நாடி படிக்க முடிவதாலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே

தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்

கொள்கிறேன். நாடி படிக்க பல மாதங்கள் ஆனாலும் ஆகும்,பொறுமை

தேவை!

                         “ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

படித்ததில் பிடித்தது!

                              "குருவின் திருவடிகளுக்கு வணக்கம்"


                         குரு =  ஞானத்தின் திறவுகோல்!
                         குரு =  அன்பின் வெளிபாடு!
                         குரு =  தெய்வத்தின் வடிவம்.

எல்லையற்ற அன்பால் எங்கும் வியாபித்துள்ள  குருவின் திருவடிகளுக்கு வணக்கம். சுகம் அந்த சுகம் எங்குள்ளது.கல்வியிலா,செல்வத்திலா,பதவியிலா,பட்டத்திலா எங்கே நிரந்தர சுகம்.
 
ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேவையும்,தேடலும் உண்டு.அதற்கேற்பத்தான் அவரவர் சுகம் அமையும்.உடல் சுகம் , உள்ள சுகம் இரண்டும் சேர்ந்து இருப்பதுதான் சுகமா! இதையும் கடந்து போனால் சுகம் எங்குள்ளது.வேத சாஸ்திரங்களில் உள்ளதா இல்லை மந்திர தந்திரங்களில் உள்ளதா? குருவின் அருள் இல்லாமல் வேறு இடத்தில இப்புவியில் சுகமில்லை என்று குருகீதை சொல்கிறது.

சுகம் பற்றி எவ்வளவு சுருக்கமான செய்தி இது. குருவின் அருள் அல்லவா உண்மையான சுகம்.அவரின் அருளை பெற எத்தனை காலம் நாம் தவமிருந்து காத்திருக்க வேண்டும்.தேடுதலுக்கு ஏற்ப குருதேவரின் அருள் நம்மை அனைத்துக் கொள்ளும்.நாம் குருவிற்காக காத்திருப்பது போன்று குருவும் நமக்காக காத்திருப்பார்.

 

                           ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.

சனி, 27 செப்டம்பர், 2014

செல்வ செழிப்புடன் வாழ சித்தர்கள் காட்டிய வழிமுறை!!!




இலக்குமி தோத்திரம்:-

அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். கொல்லாபுரத்தில் உள்ள திருமகள் திருக்கோவிலிற்கு சென்று இங்கு குடிகொணடிருக்கும் திருமகளை போற்றி பின்வரும் பாடலைப் பாடினார். திருமகளும் மனமகிழ்ந்து அகத்திய மகரிசியிற்கு காட்சி கொடுத்து “அகத்திய மகரிசியே தங்களின் போற்றிப் பாடலிற்கு நான் மிகவும் மனமகிழ்ந்தேன். இப் பாடலை யாரொருவர் உள்ளத்தூய்மையோடு பாடி போற்றுகிறாரோ அவர் அரிய பெரிய இன்பங்களை நுகர்வார். இப் பாடல்கள் எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள் அவ்வில்லத்தை அடைய மாட்டாள்.” என்று திருவாய் மலர்ந்தருளினாரகள். இப் பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் வறுமை நீங்கி செல்வத்தையடைந்து அச் செல்வத்தினாலான பயனையும் நுகர்வர் இது நடைமுறையில் கண்டறிந்த உண்மை. இந் நூல் வீட்டிலிருக்குமானால் செல்வ நலம் சிறந்தோங்கும்.

1

மூவுலகம் இடரியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்

மூன்று உலகங்களுக்கும் துன்பத்தை விளைவிக்கின்ற வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிரை ஒழிக்கின்றதும், பூவையொத்த மென்மையான, அழகிய உடலை கொண்ட அருட் கடவுளான திருமாலின் மார்பில் தோன்றிய தாயே, தேவர் உலகத்திலும் சிறப்பான புகழ்மிக்க கொல்லாபுரம் ஊரில் சேர்ந்து இனிதாக வீற்றிருக்கும் பாவையாகிய திருமகளின் இரண்டு திரு அடிகளையும் வணங்கி, பழைமையான சாத்திரங்களையெல்லாம் ஆராய்ந்து குரு முனிவரான அகத்திய முனிவர் பாடுகின்றார்.

2

கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகு மானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்த்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர
அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய்.


தேனிற்காக வரும் வண்டினம் பண்களை பாடுவதற்கு இடமாக இருக்கும் தாமரை மலரின் கொட்டையில் உறைகின்ற தத்துவம் போன்ற மழை நீர் நிரம்பிய கருமுகிலினை ஒத்த நிறத்தினையுடைய திருவுடம்பினையுடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளமாகிய தாமரை மலரில் வாழுகின்ற மான் போன்ற அருட்பார்வை கொண்ட திருமகளே. உலகம் முழுவதும் உனது அருளினால் தீன்றிய அருட்கொடியே. என்னாளும் உனை மறவாது தாமரை மலர் போல் இரு காரமும் குவித்து உன்னை மிகுந்த காதலோடு அதாவது மிகுந்த அன்போடு வணங்குபவர்களின் தீவினை தீர்த்து அருள் பொழியும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவளே!

3

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான்
தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன் றிடவொளிருஞ் செழுஞ்சுடரே
எனவணக்கஞ் செய்வான் மன்னோ.

தாமரை மலர் போன்ற கண்ணுடைய திருமகளே. அழகிய மறுவமைந்த மார்பினை உடைய திருமாலின் இல்லத்தரசியே. செழுமை நிறைந்த தாமரை மலரினை ஒத்த கையினை உடையவளே, செந்நிறமான விமலையே, பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கும் வேனிற் காலத்திற்குரியவனான காமனைப் பெற்றவளே, தூய்மையான அமுதகலசத்தை ஏந்திய பூ போன்ற மென்மையான கையினை உடையவளே, பாற்கடலில் பிறந்தவளே, அன்பர்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஒளிரச் செய்யும் செழுமையான பேரொளியே என்று போற்றி வணக்கிறேன்.

4
மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்
செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ.

அழகிய இதழ்களையுடைய நல்ல மணமுள்ள தாமரை பூக் கொட்டையில் அரசாயிருக்கும் நற்பவளம் போன்ற சிவந்த அதரங்களை உடைய மயில் போன்றவளே, மற்றும் உன் கடைக்கண் பாரரவை அருள் பெற்றல்லவா நீல மணி நிறத்தினையுடைய திருமால் உலகையெல்லாம் காக்கும் தொழிலை மேற்கொண்டார். நான்கு முகக்கடவுள் படைத்தல் தொழிலை செய்தார். பசுமையான பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும் அழித்தற் தொழிலைச் செய்தார். நின் பெருங் கீர்த்தி என்னை போன்றோரால் எப்படி எடுத்துச் சொல்ல முடியும்
 

5
மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சி யோரும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்
வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்
அருள்நோக்கம் அடைந்துள்ளாரே.

வளம் பொருந்திய பரந்த பூமி முழுவதையும் பொதுவானவற்றிலிருந்து விலகி தனியே ஆட்சி செய்யும் அரசர்கள் தானும், கல்வியிலும், பெரிய அறிவிலும், மிகுந்த அழகிலும் சிறந்து விளங்குவோரும், வெல்லுகிற படையினால் பகைவர்களை துரத்தி கொடிய போரில் வெற்றி வாகை சூடும் வீரர்கள் தானும், தாமரை மலரின் அகவிதழாம் அல்லி வட்டத்தினுள் உள்ள கொட்டையின் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளாம் தங்களின் திருஅருளைப் பெற்றவர்களே ஆவர்.

6
செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும்
எழின்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா.

செந்தாமரை மலரின் பொன்னிறமான மகரந்தத்தை போல் சிறந்து ஒளிரும் அழகிய எழில் மேனியினளே திருமகளே, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் இருளை விரட்டும் சூரியனாய், வெண்மையான சந்திரனாய், தேவர்களை மகிழ்விக்கும் பொங்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே! நீண்ட காட்டில், மலையில், நிலத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு செல்வ வளம் சிறப்பாக ஓங்கி இருக்கிறதம்மா.

7
என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்சலோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவண் மருவல் செய்யாள்.

என்று திருமகளை புகழ்ந்து பாடிய தமிழிற்கு இலக்கணம் செய்த குறு முனியாகிய அகத்திய முனிவர் தனது மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கலானார். அங்கு தோன்றிய திருமகளும் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வல்லவனே நீ என்னை புகழ்ந்து பாடிய பாடலிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்பாடல்களை முறைப்படி படிப்பவர்கள் பெரிய இன்பத்தை அனுபவிப்பார்கள். என்னை புகழ்ந்த இந்த பாடல்கள் எழுதிய ஏடு யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டிற்கு வறுமையைத் தரும் எனது தமக்கையானவள் வரமாட்டாள் என வரமளித்தார்கள்.இப்பாடல்கள் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்த காசி காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.
பூசிக்கும் முறை:-
பூசை அறையில் பஞ்சமுக தீபமேற்றி வைத்து நறுமணம் தரக்கூடிய சாம்பிராணி தூபம் அல்லது பத்தி பொருத்தி வைத்து, முதலில் விக்கின வினாயகரை காரிய சித்தி வேண்டி வணங்க வேண்டும். பின்னர் அகத்திய மகரிசியிற்கு குரு வணக்கம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் மகாலட்சுமி தாயிற்கு மந்திர புட்ப, தூப தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும். பிறகு இப்பாடல்களை 3. 5, 9 முறை என படித்து தூப தீப நைவேத்திய ஆராதனை செய்து முடிக்க வேண்டும்.

அகத்திய மகரிசி காட்டிய வழியில் மகாலட்சுமி தாயை வணங்கி நாமும் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.

ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் !

முருகன் தமிழ்க் கடவுள்






 
முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் வணங்கப்பட்டு வந்துள்ளார். கார்த்திகைப் பெண்கள்அறுவர் பாலுண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் (வடநாட்டினர் அறிந்த பெயர்இதுவேயாகும்).
 
முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். சங்ககாலத்திற்கு முன்பிருந்தே குறிஞ்சிக் கடவுளான முருகன் தமிழ் மக்களை ஆண்டு வந்திருக்கின்றான். மலை மீது கோவில் கொண்டுள்ள  முருகன் தமிழர்களின் இதயத்தில் நீங்காத இடம் கொண்டு நிலை பெற்ற கடவுளாகும். தமிழகத்தில் பலர் ‘பரமகுரு’ என்றும் ‘குருநாதன்’ என்றும் முருகனை வணங்கி வருகின்றார்கள். உலகில் பல இடங்களில் முருக வழிபாடு தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது. முருக வழிபாடானது தமிழ் மக்களிடையே காணப்பட்ட மிகத் தொன்மையான வழிபாடாகும். சில காலங்களுக்கு முன் தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகளின் போது சேவற் சிலைகள், காவடிச் செதில்கள், வேல் என்பன காணப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காவடி என்றாலே அது முருகனுக்கு மட்டும் உரியது

முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

தேவர் மூவரின் பெயர்களின் முதலெழுத் துக்கள் சேர்ந்ததே ‘முருக’ என்றதிருநாமம்.முகுந்தன் – மு – திருமால்
ருத்ரன் – ரு – சிவன்
கமலோத்பவன் –  – பிரம்மன்

''முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகனின் வரலாற்றைக் குறிக்கும் ஆறுபடை தலங்களும் தமிழகத்திலேயே உள்ளன. அவ்வையார், நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களின் தமிழ்ப்பாடல்களை கேட்டு மகிழ்ந்தவர் முருகன். அதனால், அவர் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகிறார்

தமிழ்க் கடவுள் என்பது முருகனையேமொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்குவிழிகளோ பன்னிரண்டுஅருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு!முக்கண் சிவனின் மைந்தனுக்கு மூவாறு கண்கள்முத்தமிழ் மொழியின்மெய்யெ ழுத்துக்களும் மூவாறு (பதினெட்டுஅவை வல்லினம்மெல்லினம்,இடையினம் என மூவாறாய் பகுக்கப்பட்டுள்ளனமுருகன் கை வேலாயுதம்ஒன்றே போல் தமிழில் ஒரே ஒரு ஆய்த எழுத்தும் உண்டுபிற மொழி எதிலும்இல்லாத சிறப்பெழுத்து!

முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம்







மயிலின் முக்கியமான பண்பு அதன் அழகான தோற்றமும்ஒயிலாக ஆடும்நடனமும்தான்ஆனால் அவை கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீலமயமானவண்ணம்தான் காரணமாக இருக்கிறதுஅதுதான் அழகாக ஆடுவதாகநினைக்கும்போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்துகட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.

மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான்தனக்குஅழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான்தன்னால் நினைத்துப் திட்டமிடக்கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான்கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால்எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான்இதில்ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதைஉணரமுடிவதில்லைஇந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும்அவனுள்இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன்தெரிந்து கொள்ள வேண்டும்கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாகஏற்றுக் கொள்ள வேண்டும்இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும்சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.

மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டுமயில் பாம்பைக் கொல்லுவதில்லை.ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறதுஅதைப்போல உலக பந்தங்கள்ஆசைகள்எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டியஅவசியம் இருக்கிறதுஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமானால்இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைக்க வேண்டும்இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும் பாம்புநமக்கு உணர்த்துகிறது.

முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்!



முருகனுக்கு வேல்:-

முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்
பட்டிருக்கிறதுவேல் வெற்றிக்கும்அறிவுக்கும் அடையாளமாகத்
திகழ்கிறதுவேல் நடுவில் அகன்றும்உருவில் நீண்டும்முனையில்
கூர்மையாகவும் இருக்கிறதுஇதுபோல் இக பர வாழ்வில் மனிதன்
சிறந்தோங்க அகன்றஆழ்ந்தகூர்மையான அறிவுடையவனாக
இருக்கவேண்டும்அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய ..இறைவனேஇதையே திருவள்ளுவர்,

     
 கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
      
நற்றாள் தொழாஅர் எனின் ... என்கிறார்.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி
வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து
அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும்கூவுகின்ற
கோழி நாத வடிவானதுகோழிக் கொடி வெற்றியின் சின்னமாக
விளங்குகின்றதுஅழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான்முருகன்.மயில் மனத்தின் சின்னம்பரிசுத்தமானஅழகான உள்ளம்தான்
இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம்
விளக்குகிறதுபாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா
சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறதுதீராத
நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன்.

தமிழ் இந்துக்களின் பெயர்களில் சக்திவேல்ராஜவேல் பழனிவேல் போன்றவேல் என முடியும் பெயர்களும் வேல்முருகன்வேலப்பன்வேலம்மாள்என்ற பெயர்களும் அதிகமாக காணப்படுகின்றன

 

முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம்நமது அறிவு ஆழமானதாகவும்,பரந்ததாகவும்கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதைஉணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடிஅகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்றுகருதப்படுகிறது.

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்பற்றி கூறப்பட்டுள்ளது

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றிகூறப்பட்டுள்ளதுகந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன்வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத்தெளிவுப்படுத்துகின்றதுஎனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல்,வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரிமுருகனின் போர்க்குணம் மற்றும்முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.
வேல் விடுமினையோன்திறல்வேலன்வேல் கொண்டன்று பொருதவீரன்,துங்கவடிவேலன்ப்ரசண்ட வடிவேலன்வேல் தொட்ட மைந்தன்அசுரர்தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும்அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில்செல்வாக்குப் பெறலாயிற்று.
ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு,வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின்சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.
வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமானஅருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ,சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடியகுறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானதுதமிழகத்தில் முருகனைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத்தெளிவுப்படுத்துகின்றதுஇன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளதிருப்பத்தூர்கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம்,மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகியஇடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.
திருச்செந்தூர்திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ளமுருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளனஅவை வெகு தொலைவு வரை முருகன்கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றனமேலும் தமிழகத்தில்உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை.
இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாகஉள்ளனதமிழகத்தில் சுந்தரவேல்சக்திவேல்கதிர்வேல்கனகவேல்,வடிவேல்குமரவேல்கந்தவேல் ஞானவேல்வேலப்பன்வேல்ச்சாமி,வேலன்வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச்சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்

முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார்பெரும்பாலான ஹிந்துமத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர்.இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளைஅழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவைவாஸனைகளும்அவற்றால்ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூலகாரணம்இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணரமுதல் தடைஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான்.வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான்முருகனின் சக்திஆயுதமாகிய வேல்இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்லசக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்