வெள்ளி, 23 மார்ச், 2018

மாலை மயங்கும் நேரம் எதை செய்யக்கூடாது-ஸ்ரீஸ்கந்த உபாசகர் உரை

ஒரு நாள் என்பது எட்டு முகூர்த்தங்கள் கொண்டது. ஒவ்வொறு முகூர்த்தமும் ஒவ்வொறு விஷேசங்களை கொண்டது. அந்த வகையில் ஒவ்வொறு நாளும் வருகிற சந்தியா காலம் என்பது புனிதமானது. அந்த நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றிய தொகுப்பு அருளியிருப்பவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள். கீழே உள்ள லிங்கை சொடுக்கி உரையைக் கேட்கலாம்.



ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 20 மார்ச், 2018

பங்குனி உத்திர வழிபாடு

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருநாள், 30.3.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வருகின்றது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானின் படத்தை வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

‘முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே, ஈசன்மகனே ஒரு கைமுகன் தம்பியே
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்!’

என்று முன்னோர்கள் பாடியதைப் போல நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள், கௌமார மடாலயம், கோயம்புத்தூர்.
                                                     சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

வியாழன், 15 மார்ச், 2018

ஸ்ரீஸ்கந்த உபாசகர் நடத்தும் பயிற்சி தொடர்பு எண்கள்

பயிற்சி வகுப்பில் சேர தொடர்பு கொள்ள வேண்டிய செல்  எண்கள்
                            6382034853

                            6382039706

                            8668088735
இந்த எண்களில் தொடர்பு கொண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் நடத்தும் ஜோதிடம் மற்றும் உபாசனை பயிற்சிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் எழுதிய நூல்கள்
1. திம்ப சக்கரம் (மனித உடலே ஜாதமாக்கி பலன் கூறும் ஜோதிட நூல்)
2. புண்ணிய சக்கரம் (மரணத்தின் பின் ஆன்மாவின் நிலையை கிரக ரீதியாக கணிக்கும் ஜோதிட நூல்)
3. ஞானம் அருளும் காலக்கண்ணாடி (ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய பலன் கூற உதவும் ஜோதிட நூல்)
4.சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் (ஜீவ நாடி திருவிளையாடல்கள் தொகுப்பு)
5. அற்புத பலன் கூறும் அபூர்வ ஆருடம் (அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என கண்டறிய உதவும் ஆருட ஜோதிட நூல்)

புத்தகம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய செல்  எண்கள்
                            6382034853

                            6382039706

                            8668088735
இந்த எண்களில் தொடர்பு கொண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் எழுதிய புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

website:

                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

புதன், 14 மார்ச், 2018

ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி - கழுகுமலை



மிகவும் அமானுஷ்ய அதிசயம் நிறைந்த அற்புதமான ஜீவசமாதி இவரை பற்றி 4 ஆண்டுகள் முன்பே தெரிந்திருந்தாலும் குரு பௌர்ணமி அன்று  (08/07/2017) செல்லும் பாக்கியம் கிடைத்தது..

நேரில் சென்று தரிசனம் செய்யும் போது தான் அதன் மகிமையும் அங்குள்ள ஆற்றலும் நம்மை எப்படி ஆட்கொள்கிறது என்பது புரியும்..

85 வயது மதிக்க தக்க பாட்டி அவர்கள் இங்கு பூஜைகள் செய்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் கிரிவலம் வரும் அடியார்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள் இந்த வயதிலும் என்ன ஒரு பணிவு அன்பு கலந்த உபசரிப்பு .. என்ன தான் பணம் செலவு செய்து five star ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் இது போன்ற அன்பு கலந்த  உபசரிப்பு கிடைக்காது..

சுவாமிகளின் வாரிசு வரிசையில் இவர் 8வது தலைமுறை சேர்ந்தவர்கள் .. இப்போதும் சுவாமிகள் இங்கு தேகத்துடன்  உள்ளார்கள் என்பதற்கு இவரே சாட்சி..சுவாமிகளுடன் நேரடியாக பேசவும் தேவையானதை  மக்களுக்கு பெற்று தருவதும் இவர்தான்...

மிகவும் ஆச்சர்யமான பல நிகழ்வுகள் சுவாமிகளை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள் ஒரு குழந்தையிடம் என்ன பரிவு இருக்குமோ அப்படி ஒரு  அன்பு இங்கிருந்து வர மனம் இல்லை..

மிளகாய் பழம் மற்றும் வற்றல்ளே இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.. அதையே நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்..

மிகவும் சமீபத்தில் நடந்த ஒரு அதிசய நிகழ்வு உங்களுக்காக கோவில்பட்டி சேர்ந்த அன்பர் ஒருவர் சுவாமி சமாதி தரிசனத்திற்கு வந்துள்ளார் அப்போது சமாதி பீடத்தில் இருந்து அவரை ஒரு குரல் அவரை பெயர் சொல்லி  அழைத்தது அவரை மெய்சிலிர்க்க வைத்தது அந்த வினாடி  முதல் அவரை ஆட்கொண்ட நோய் நீங்க புது பிறவி எடுத்து சென்றது போல் அவர் உணர்ந்துள்ளார் ... இது போல் பல அதிசயங்களை நிகழ்த்தும் சுவாமிகள் பற்றி நிறைய செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்..

திருமணமாகி சுமார் 20 ஆண்டுகளாக குழந்தை செல்வம் இல்லாமல் தவித்து வந்த தம்பதிகள் இங்கு வந்து சுவாமிகளிடம் பிரார்த்திக்க அடுத்த வருடம் அவர்கள் தன் குழந்தை செல்வத்துடன் வந்து இங்கு சுவாமிகளை வழிபட்டு சென்றதாக கூறினார்கள்..

பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை வைத்து இங்கு பூஜை அன்னாதனம் நடைபெறுகிறது..

தற்போது சமாதி பீடம் கட்டிடம் சரியான நிலையில் இல்லை பராமரிப்பு செலவிற்காக கூட இவர்கள் யாரிடமும் கேட்பதில்லை இங்கு சென்று பார்த்த பிறகு தான் எனக்கும் தெரிந்தது ..

இந்த பதிவை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு என்னுடை தாழ்மையான வேண்டுகோள் நீங்களும் இங்கு சென்று மகானை சேவித்து உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

திருமணம் வரம் வேண்டுவோர் ஒரு ரோஜா மாலையை இங்கு சுவாமிக்கு சாற்றி விளக்கேற்றி வழிபட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை..

குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இங்கு வந்து எலுமிச்சை பழம் வாங்கி வந்து சமாதி பீடத்தில் வைத்து வழிபட்டு அத்துடம் சுவாமி நிவேதனம் செய்த மிளகாய் வற்றல்களை சேர்த்து எலுமிச்சை சாதம் செய்து அதில் இந்த மிளகாய் வற்றல்களை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை..

ஒரு முறை தரிசனம் செய்யுங்கள் ஆனந்தமாக வாழுங்கள் ...

ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி
ஆறுமுக நகர்..
கிரிவல பாதை ..
கழுகு மலை..

சிவாயநம
ராஜா @ ஈஸ்வர்
தர்மபுரி

சனி, 10 மார்ச், 2018

யோகானந்த பாரதி சாமிகள் ஜீவசமாதி - தர்மபுரி


தஞ்சையில் பிறந்த யோகானந்த பாரதி சாமிகள் தனது குருநாதர் சொக்கலிங்க தம்பிரான் அவர்கள் ஆணைப்படி பாரதம் முழுவதும் தலப்பயணம் மேற்கொண்டார்.

பல அற்புதங்களை நிகழ்த்தி பல இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் பிணிகளை நீக்கினார்..

இறுதியில் பாலக்கோடு கடமடை ரயில்வே கேட் அருகில் உள்ள வீரஆஞ்சனேயர் கோயில் அருகில் மூன்று ஆண்டுகள் தங்கி தவத்தில் இருந்தார்..

நித்தியானந்த ஆஸ்ரமத்தை 1994 ல் தோற்றுவித்தார்.

1995 ஆம் ஆண்டு மார்கழி சதய நட்சத்திரத்தில்
தமது 30 வது வயதில் நிர்விகல்பசமாதி நிலையை அடைந்தார்.

ஜீவசமாதி இருக்குமிடம்: தர்மபுரி – ஓசூர்சாலையில், பாலக்கோடு அருகில், இரயில்வே கேட், கடமடை, யோகானந்த நகர்.

சிவாய நம 
ராஜா @ ஈஸ்வர் தருமபுரி.

          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 9 மார்ச், 2018

ஸ்ரீஸ்கந்த உபாசகர் நடத்தும் பயிற்சி வகுப்புகள்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் நடத்தும் திம்பசக்கரம் ஒரு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் உபாசனை ரகசியங்கள் ஒரு நாள் பயிற்சி வகுப்பு.

இடம்: சென்னை அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் ஹால்
நாள்: 21, 22.04.2018 சனி,ஞாயிறு

அடிப்படை ஜோதிடம் தெரியாதவர்களும் கலந்து கொள்ளலாம். முன் பதிவிற்கு பின்வரும் படங்களைப் பெரிதாக்கிப் பார்த்துக் கொள்ளவும். நன்றி

                                           

                                            
பயிற்சி வகுப்பில் சேர தொடர்பு கொள்ள வேண்டிய செல்  எண்கள்
6382034853
6382039706
8668088735
                                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜாதகமே மாறிப் போகும் அளவிற்கு முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதம்!


அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்தில் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்திக்கும், ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கும் சேவை செய்யும் அடியவர் ஒருவருக்கு முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதம். ஸ்ரீஞானஸ்கந்தர் ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசைப் பூஜையும், வருடந்தோறும் வைகாசி விசாகமும், தைப்பூசமும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வைகாசி விசாகத் திருநாளில் முருகப் பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்யப்பட்டு பாலமுருகனைக் குழந்தையாக தாலாட்டும் ஊஞ்சல் வழிபாடு நிகழ்த்தப்பட்டது. ஜீவநாடியில் வந்த வாக்கின்படி குழந்தை வரம் வேண்டி வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு குழந்தை அருள் திருவமுது வழங்கப்பட்டது. ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்திக்கு சேவை செய்யும் அடியவர்க்கும் அவரது மனைவிக்கும் திருவமுது வழங்கப்பட்டது. அடியவர்க்கும் அவரது மனைவிக்கும் ஜாதக ரீதியாக பெண் வாரிசு யோகமே உண்டு. ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் இருவருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்து இருவருடைய ஜாதகத்திலும் பெண் வாரிசு யோகம் மட்டுமே உண்டு ஆனால் முருகன் அருளால் ஆண்வாரிசு கிட்டும் என்றும் அப்படி ஆண்வாரிசு கிட்டினால் இதுவரை அவர்கள் முருகனுக்கு செய்த சேவையின் பரிசு இல்லை பெண்ணாக இருப்பின் அவர்கள் ஜாதக கிரகங்கள் தரும் பரிசு என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு இப்போது ஆண் குழந்தை கிடைத்திருக்கிறது. முருகப் பெருமானுக்கு உள்ளன்போடு சேவை செய்து வந்ததால் ஆண்வாரிசு யோகத்தை முருகப் பெருமானே கொடுத்தார். ஜாதகமே மாறும் அளவிற்கு முருகப் பெருமான் அற்புதம் நிகழ்த்தியுள்ளார். மற்றுமொரு சிறப்புத் தகவல் என்னவெனில் அடியவரின் மனைவியை ஆரம்பம் முதலே பகவத் கீதை படிக்குமாறு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதுபோல் அவரும் பகவத் கீதையை உள்ளன்போடு படித்து வந்தார். அதன் பயனாக பகவான் கிருஷ்ணாரின் அருள் இருப்பதை மெய்ப்பிக்கும் வகையில் நடுநிசியில் 12.05 மணிக்கு கிருஷ்ணரின் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் ஆண்குழந்தை பிறந்து உள்ளது. இதுபோல் ஏராளமான அதிசயங்கள் ஆலயத்திலும், ஜீவநாடியிலும் நடந்து கொண்டிருக்கிறது.  கந்தனை சரணடைந்தவரை கந்தன் என்றும் கைவிடுவதில்லை. அதேபோல் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் வாக்கும் அவர் செய்யும் உபதேசமும்  நடைமுறையில் கடைபிடிக்கும்போது 100% பலன் தருவதை இது போல் பலர் அனுபவத்தில் பார்த்து வருகின்றோம். நன்றி!
@சம்பூரணம், கேரளா
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

பரஞ்சோதி பாபா - வடபழனி சென்னை

  • கடவுள் தரிசனம் காண லட்சக்கணக்கானோர் கூடும் இடம் அது. ஆனால், வெகுசிலர் மட்டும் அந்த மகானைக் காண்பதற்காக வரிசையில் நிற்கிறார்கள். .
  • சமீபத்தில் நம்மிடம் வாழ்ந்த ஒரு மகான் வடபழனி பரஞ்சோதி பாபா.. கலைத்துறையினர் அதிகம் பேர் இவருடைய பக்தர்கள்..
  • ஆறடிக்கு ஆறடி அகலமுள்ள ஒரு குட்டி அறையில் அழகானதொரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் அவர்.
  • அவரை பார்க்க வருபவர்கள் யாரையும் அவர் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. மீறிப் பார்த்துவிட்டால், பாதிச்சுமை இறங்கிவிடும். நாலு வார்த்தை பேசிவிட்டால்? -பிரச்னைகள் அனைத்துமே தீர்ந்துவிடும்’’ என்கிறார்கள்..
  • பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் சீடர்கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.
  • பாபா வாழ்ந்த காலத்தில்யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்...
  • பல பேர் பல வித பிரச்சனைகளுடன் பாபாவை தரிசித்திருக்கிறார்கள் அவர்கள் பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் தீர்த்திருக்கிறார் பாபா என பல திரைப்பிரபலங்கள் கூறுகிறார்கள்...
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது.
  • என் சொந்த அனுபவம் நான் பாபா அவர்களை 2008ம் வருடம் தரிசிக்க சென்றேன் ஒரு bread pocket வாங்கி சென்றேன்.. முதலில் மெத்தை மேல் உள்ள படிக்கட்டில் சென்று உட்கார சொன்னார்.. காலை பிடிக்க சொல்லி வேட்டியை தூக்கி பிடித்தார் 13 bread pocket எனக்கு கொடுத்தார்.. எதற்கு இவ்வளவு நமக்கு கொடுக்கிறார் என்பது அப்போது புரியவில்லை.. வாங்கி விட்டு வெளியில் வந்தேன் வடபழனி கோவில் அருகில் சென்றபோது சரியாக 12 பிச்சைக்காரர்கள் என்னிடம் வந்து bread pocket வாங்கி சென்றுவிட்டார்கள்.. ஒரு pocket நான் எடுத்து வந்துவிட்டேன் இன்று வரை எதற்குகாக இப்படி நிகழ்ந்தது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.. அவர் சமாதி ஆவதற்கு 2 மாதம் முன்பு நான் அவரை தரிசிக்க சென்றேன் அப்போது முதலில் அவர் பேசவில்லை நான் அங்கிருந்து புறப்பட தயாரான போது அவர் என்னிடம் டேய் நான் ஓலை வீடு கட்டப்போறேன் என்று சொன்னார் அப்படி என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை அதன் பிறகே தெரிந்தது அவர் சமாதிஆனார் என்பது... 
சிவாய நம 
ராஜா @ ஈஸ்வர் தருமபுரி..
                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சித்தர் நூரோந்து சுவாமிகள்

  • நூரோந்து சுவாமிகள் - நூரோந்து மலை அஞ்செட்டி, தேன் கனி கோட்டை 
  • நூரோந்து சுவாமிகள் சுமார் 850 வருடங்கள் முன் வாழ்ந்த சித்தர்..
  • பல அதிசய அற்புதங்களை நிகழ்த்தியவர் அவர் வழி சீடர்கள் 12 பேர் ஒரே இடத்தில் சமாதியில் இருப்பது சிறப்பு இதை 12 தலை முறைகளாக பாதுகாத்து வருகின்றனர்..
  • அடர்ந்த வனம் எங்கும் பசுமையான சூழல் பல முலிகைகளை கொண்டது இந்த மலை.
  • சுவாமிகள் வரலாறு சரியாக தெரியவில்லை இவர் மகிமையை கேள்விபட்டு மைசூர் மகாராஜா ஒரு வாளை இங்கு பரிசாக கொடுத்ததாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள் ..
  • மலை மேல் பல குகைகள் உள்ளதாகவும் அதை யாரும் தவறாக பயன் படுத்தாமல் ஒரு நாகம் அதை பாதுகாப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் ..
  • கல்யாணி குளம் என்று மலை மேல் ஒரு மூலிகை குளம் உள்ளது பல வித நோய் தீர்க்கும் இந்த குளம் சுவாமிகளால் உருவாக்க பட்டதாகவும் சுமார் 850 வருடங்களாக நீர் வற்றாமல் உள்ளது அதிசயம்..
  • விஞ்ஞானத்தால் விடை தெரியாத அதிசயம் பல உள்ளன அதில் ஒன்று தான் இந்த நூரோந்து சுவாமிகள் சமாதி இடம் இங்கு தான் எண்ணெய்க்கு பதிலாக இளநீரில் விளக்கு எரியும் அதிசயம் நிகழ்கிறது..
  • விளக்கு எண்ணெய்க்கு பதிலாக இளநீர் வாங்கி செல்ல வேண்டும் அவர் சமாதி பீடத்தை தவிர வேறு எங்கும் விளக்கு எறிவதில்லை..என்பது ஒரு அதிசய நிகழ்வு..
  • இங்கு இளநீரில் விளக்கு ஏற்றுவதால் பல வித பிரச்சினைகள் தீர்வதாக இங்கு வந்து சென்றவர்கள் தெரிவிக்கிறார்கள்..
  • சுத்தமான காற்று நீர் அற்புத வனம் பறவைகள் கீதம் என்று ரம்மியமான இயற்கை நமக்கு அளித்த வரம் அதை முறையாக பயன்படுத்தி சுவாமிகளை தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற பிராத்திக்கிறேன்...
  • அஞ்செட்டி சென்று உரிகம் சாலையில் தக்கட்டி எனுமிடத்தில் பிரிந்து மலை பாதையில் சென்றால் நூரோந்து சாமிமலை செல்லலாம். சிறிய குகை கோவில்
  • அடர்ந்த வனம் மிருக நடமாட்டம் அதிகம் என்பதால் தகுந்த எச்சரிக்கை உடன் செல்வது நல்லது...
  • தாங்கள் செல்லும் போது சில மர கன்றுகளை அங்கு நடவும்..
  • பிளாஷ்டிக் பொருட்களை தவிர்க்கவும் சுற்று சூழல் பாதுகாக்க உதவவும்..

சிவாயநம

ராஜா @ ஈஸ்வர்
தர்மபுரி
                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!