திங்கள், 22 டிசம்பர், 2014

கொங்கு நாட்டின்ஆறுபடை வீடுகள்:


கொங்கு நாட்டின்ஆறுபடை வீடுகள்




1.ஆறுமுகம்பனிரெண்டு கரங்களுடன் – அவினாசி, பூண்டியிலும்,
2.ஐந்து முகம் எட்டு கரங்களுடன் – பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,
3.நான்கு முகம்எட்டு கரங்களுடன் – திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்,
4.மூன்று முகம் ஆறு கரங்களுடன் – கோபி, காசிபாளையம்குமரன்கரட்டிலும், 5.இரண்டு முகம் நான்கு கரங்களுடன் – சென்னிமலையிலும்,
 6.ஒருமுகம் – தண்டாயுதபாணியாக – பழனியிலும் நின்று

அருள்செய்யும்ஸ்ரீமுருகப்பெருமானின்மேற்கண்ட ஆறு தலங்களும்கொங்கு
நாட்டின்ஆறுபடை வீடுகளாகும்.



கொங்கு மண்டலத்தில் 6 மலைகளிலும் 6 கோயில்களில்ஆறுமுகன்

அருள்புரிவதால்இதை கொங்கு மண்டல அறுபடை வீடுகள்என்பர். வைகாசி

விசாகத்தன்று காலை சென்னிமலை முருகன்; முற்பகல்சிவன்மலை

முருகன்; உச்சிவேளை கைத்தமலை வேலன்; மாலை அருள்மாலைமுருகன்;

அஸ்தமன சந்தியில்சீனாபுரமலை முருகன்; அர்த்த ஜாமத்தில்திண்டல்மலை

வேலவன் என ஒரேநாளிலேயே அனைவரையும்தரிசித்துவிடலாம். இதை

ஏகதினவழிபாடு என்பர். இதனால்நோயற்ற நீண்ட ஆயுள், நிறைந்த வாழ்வு,

பேரின்பம் பெறலாம்.



தமிழ்நாட்டில்அறுபடை வீடு முருகனுக்கு இருப்பது போல்இலங்கையிலும்

முருகனின்ஆறு கோயில்கள்விசேஷமாகக்கருதப்படுகிறது. இதை

முருகனுக்குரிய அறுபடை வீடுகளாக சொல்கின்றனர். கதிர்காமம், நல்லூர்

கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலிவேலி

என்பவையே அறுபடை வீடுகளாகப்போற்றப்பெறுகின்றன.


ஜீவ நாடியில்வந்த பேரதிசயம் ! ! !



திண்டுக்கல்லில் புற்றிலிருந்து அம்மன் தோன்றியதும் அதை நமது

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்ததையும் சென்ற பதிவில் சொல்லி

இருந்தேன். அந்த அம்மனுக்கு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்

பிரதான அர்ச்சகர் மூலம் பூஜை செய்யப்பட்ட்து. அதன் படங்களைப் பார்த்து

அருள் பெருங்கள்.











சனி, 20 டிசம்பர், 2014

ஜீவ நாடியில் வந்த பேரதிசயம்

சென்ற பதிவின் தொடர்ச்சி:-



திண்டுக்கல்லில் புற்றிலிருந்து அம்மன் தோன்றியதும் அதை நமது

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்ததையும் சென்ற பதிவில் சொல்லி

இருந்தேன். அதில் அந்த அம்மன் காட்சி கொடுத்த வகையில் தன்னை

வெளிப்படுத்த அந்த அம்மன் செய்த திருவிளையாடல் இன்னும் மெய்

சிலிர்க்க வைக்கிறது. புற்று உள்ள இடத்தில் இருந்து சற்று அருகே திரு.ஜீவா

என்பவருக்கு ஒரு சிறிய பெண் ஒடுவது போல் தெரிந்து இருக்கிறது. யார்

ஓடுவது என்று பின் தொடர்ந்து சென்ற ஜீவா அவர்கள் திடீரென இந்த பெண்

மறைந்து விடுவதைக் கண்டு அதிசயப் படுவதற்குள் புற்றில் இருந்து

அந்த தெய்வம் வெளிப்பட்டிருக்கிறது. இதை உடனே ஜீவா அவர்கள் திரு.ராஜீ

அவர்களிடம் சொல்ல அதிசயம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திரு.ஜீவா

மற்றும்திரு.ராஜீஆகிய இருவரும்நமது ஞானஸ்கந்தர்ஜீவ நாடியை

தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல

ரகசியங்கள் வெளிவரும்.பொறுத்திருங்கள்.....

வியாழன், 18 டிசம்பர், 2014

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடியின் பேரதிசயம்!


திண்டுக்கல்லில் இருந்து திரு.ராஜூ எனும் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ

ஸ்கந்த உபாசகரிடம் அடிக்கடி ஜீவ நாடி கேட்டு அதில் வந்தபடி செய்து

கொண்டு வந்தார். 17.12.2014 புதன் கிழமை அன்று திரு.ராஜீஅவர்களுக்கு ஸ்ரீ

ஞானஸ்கந்தர் நாடியில் பாலா மந்திரம் உபதேசம் செய்யப்பட்டது. அதன்

பின்பு உனக்கு இனி அம்மன் திருவிளையாடல்கள் ஆரம்பம் என நாடியில்

உரைத்தார்


முருகப்பெருமான். 18.12.2014 அன்று அம்மன் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினாள்.

அவர் வசிக்கும் இடத்தின் அருகில் ஒரு புற்றில் இருந்து அம்மன் வெளிப்பட்டு

காட்சி கொடுத்துள்ளாள். அதன் படங்களை கௌமாரபயணம் வாசகர்களுக்கு

இங்கே தந்திருக்கிறேன். அடுத்து அந்த அம்மன் ஆலயம் கொள்வாளா அல்லது

என்ன நடக்கும் என்பதை ஸ்ரீ ஞானஸ்கந்தர் நாடியில் வரும் வாக்கின்படி

நடக்கும். அதன்ரகசியங்கள்இந்த கௌமாரபயணத்தில்வெளிவரும். இது

போல்  தினமும் ஏராளமான அதிசயங்களை நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி    

தனது ஜீவ நாடியின் மூலம் நடத்தி வருகிறார்.





திங்கள், 15 டிசம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 21




   முருகப் பெருமானை வேண்டி முதல் நாடி கேட்கின்ற பொழுது

அவருக்கு வயது 40. தனது திருமணம் நடக்க வேண்டும் என்ற

கோரிக்கையை மனதில் வைத்து நாடி கேட்க வந்திருக்கின்றார். பெரிய

அளவில் படிப்பேதும் படிக்கவில்லை, அரசு உத்யோகமும் கிடையாது.

வெளிநாட்டு வேலையும் கிடையாது. பெரிய சம்பளமும் கிடையாது. பெரிய

அந்தஸ்தும் கிடையாது. வயதும் 40 ஆகி விட்டது. இதுவரை பார்க்காத

ஜோதிடம் இல்லை. போகாத கோயில்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள்

இல்லை. பலன் 0 (சைபர்) தான். அதனால்தான் என்னவோ முருகப்பெருமான்

பரிகாரம் ஏதும் சொல்லவில்லை. எனது ஆலயத்திற்கு நீ வந்துவிட்டாய்.


இதுவே பெரிய பரிகாரம் என்று முருகப்பெருமான் நினைத்து விட்டார்

போலும், தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தார். காரியம் கைகூடிய

சூழலே இல்லை. நண்பர்களும், உறவினர்களும் இவரை கிண்டலடிக்க

ஆரம்பித்தனர். கிழவனான பின்பா இவன் கல்யாணம் பண்ணப் போகிறான்

என்று ஏசினர், பேசினர், இவர் ஓயவில்லை மனம் தளரவில்லை. முருகன்

விட்ட வழி என்று அனைவருக்கும் சவால் விட்டார். மாதம் தவறாமல்

அமாவாசை தோறும் 27 முறை வலம் வருவார். ஒரே ஒரு 27 முறை வலம்

வந்தவர்க்கு ஓராயிரம் காரியங்கள் நடந்தேறியது. ஆனால் இவர் ஓயாமல்

வலம் வருவார். காரியம் நடந்தபாடில்லை. ஓராண்டு கடந்தது.



இரண்டாண்டு கடந்தது. மூன்றாண்டும் கடந்தது. காரியம் நடக்கவில்லை.

தனது குலத்தைவிட்டு அடுத்த குலத்தில் பெண் எடுக்கலாம் என்று கூட

பேச்சு எழுந்தது. ஆனால் இவர் மறுத்து விட்டார். ஆண்டு 4ஆனது

நடந்தபாடில்லை காரியம். முருகனை வணங்கி வணங்கி பாதி சாமியார்

ஆகிவிட்டான் என்று பலர் தூற்றினார்கள். இவர் போற்றினார் முருகப்

பெருமானை, ஆண்டு ஐந்தானது அவருக்கு வயது 45 ஆகியும் திருமணம்

ஆகவில்லை. ஆனால் நடந்தது அதிசயம். இவர் மனதிற்கு பிடித்தமாதிரி

மாலை சூட்டினாள் மங்கை. காலம் கனிந்தது. கந்தன் சொன்னது போலவே

கச்சிதமாய் முடிந்தது. ஆனந்தம் இவர் வாழ்வில் அரும்பியது. அல்லி

நகையாடியவர்கள் வள்ளி மணாளன் வடிவேல் கந்தன் முருகனை வாயாற

துதித்தார்கள். ஜீவநாடியின் பெருமையை ஊருக்கு ஊர் பேசி மகிழ்ந்தார்கள்.

 

அவர் 40 வயதில் என்னை சந்தித்த பொழுது நாடி கேட்டவர் இடையில்

எதுவும் கேட்கவில்லை. முருகனும் உரைக்க வில்லை. ஆறு

மாதங்களுக்கு மேலாகியும் வாரிசுயோகம் இல்லையே என்று முருகனது

ஜீவநாடி பார்க்க வேண்டுமென்று கேட்டார். பார்த்துவிட்டு சென்றவுடன் 3

நாளிலேயே அய்யா எங்கள் காரியம் அப்படியே தடையாகவே இருக்கின்றது

என்று கேட்பவர்கள் மத்தியில் இவர் விதிவிலக்கு என்பதால் உடனே

இவருக்கு நாடி படித்தேன். அதில் பின்வரும் பாடல் வந்தது.



   “கைபிடித்த நங்கையுடன்

   நலமாக வளமாக

   நல்படி அது ஆக ஆசி!

   கருதரிக்கும் காலமது

   கச்சிதமாய் உண்டுண்டு

   ஊஞ்சலது சேவை நாளில்

   உமைபாலன் என்னை

   ஊஞ்சலது ஆட்டிவிட்டு

   உத்தரவு மருந்துண்டு  வா

   உருவாகும் போ கரு ஆசி!

   என்று ஞானஸ்கந்தர் உரைத்தார். ஒவ்வொரு வருடமும் வைகாசி

விசாகத்தன்று நமது ஞானஸ்கந்த மூர்த்தியின் உற்சவ சிலையை

ஊஞ்சலில் வைத்து தீட்சை பெற்ற 50 அடியார்களும் தாலாட்ட ஓதுவார்

திருமுருக ரமேஷ் அடிகளார் கௌமாரச் செல்லமடி.. அம்மான் முருகன்..

கௌமாரச் செல்லமடி அம்மான்… என்று தாலாட்ட பக்தர்கள் அதையே பின்

தொடர அந்த கந்தலோகமே இறங்கி வந்தால்போல் பூஜை நடக்கும்.



அப்போது உற்சவர் விக்கிரகத்தின் முகத்தில் ஒரு தேஜஸ் ஒளி பெருகும்.

அதை அனைவரும் கண்டு ஆனந்தம் கொண்டு வெற்றி வேல் முருகனுக்கு

அரோகரா.. எனும் கோஷத்தோடு பக்தி வெள்ளத்தில் திளைப்பார்கள்.

இவரை அந்த நாளில் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு ஊஞ்சலை

ஆட்டிவிட்டு உத்தரவு மருந்து எனும் திரவ வடிவில் பாயசம் போல்

தரப்படும். அதை அருந்தினால் கரு உருவாகும் என்று நாடியில் உரைத்தார்

நமது ஞானஸ்கந்த மூர்த்தி. உத்தரவு மருந்தில் ஏழு வித மூலிகை

கலந்து முருகனுக்கு நைவேத்யம் செய்து கொடுக்கப்படும். அந்த

மூலிகையை நாடியில் உரைப்பதும் முருகனே.




 முருகப் பெருமான் நாடியில் சொல்கின்ற மூலிகைகளை சுண்டக்

காய்ச்சிப் பாலுடன் கலந்து தம்பதியாக வரக்கூடிய

குழந்தையில்லாதவர்களுக்கு சரிசமமாக கணவன் மனைவி இருவருக்கும்

பங்கிட்டு யாரும் பார்க்காத வகையில் உள்ளுக்குள் அருந்த

சொல்லப்படுகிறது. அவ்விதம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு

அடுத்த வைகாசி விசாகம் வருவதற்குள் கரு தரிக்கும் யோகம்

ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு கடுமையான தோஷங்கள், கர்ம வினைகள்

இருப்பதால் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது வைகாசி விசாகம்

தவறாமல் உத்தரவு மருந்து அருந்த முருகப் பெருமான் உத்தரவிட்டுள்ளார்.



அதுபோலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்பட்டுள்ளது.

காரணமென்னவெனில் இங்கு முருகப்பெருமானே குழந்தை வடிவில்

எழுந்தருளியுள்ளார். அது மட்டுமல்லாமல் சுயம்பு வடிவில்

முருகப்பெருமான் தோன்றியிருக்கின்றார். நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில்

இங்கு முருகப் பெருமான் பாதம் பட்ட இடம் என்று 15 ஆண்டுகளுக்கு

முன்னரே குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலையில்

உள்ள ஸ்ரீ ஜோதிஅக்பர் சுவடிகளால் படிக்கப்படும் மீனாட்சி நாடியில்

சித்தர்கள் பலர் கூடி தங்கம் செய்த இடம் என்றும், சூரபத்மன் வதத்திற்கு

முன்பே முருகப் பெருமான் எழுந்தருளிய இடம் என்றும், வள்ளி,

தெய்வானை திருமணத்திற்கு முற்பிட்ட முருகன் என்பதால் மயில் வாகனம்

அல்லாமல் யானை வாகனம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும்

மீனாட்சி நாடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



இந்த மீனாட்சி நாடி 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாடியாகும். அப்போதே

நமது ஆலயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன் பெருமை

விளங்கும். அதுமட்டுமல்லாது 18 சித்தர்களும் அருவமாக முருகனுக்கு

பூஜை செய்ய வருவதும், முருகனின் 18 விழிகளில் இருந்து வரக்கூடிய

கருணைப் பார்வை இந்த ஆலயத்தின் மீது கந்தலோகத்திலிருந்து படுவதும்

மீனாட்சி நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 அதைக் குறிக்கும் வகையில் 18 அடி வேல் பிரதிஷ்டை செய்யப்

பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் பாம்பு வடிவில் வந்து முருகப் பெருமானை

பூஜிப்பதும் மீனாட்சி நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல்

இன்றும் அடிக்கடி நடப்பது கண்கூடு. ஆனால் அனைவர் கண்களுக்கும்

புலப்படுவது கடினம். ஒரு முறை ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்த

10 வயதுடைய அஸ்வத் கிருஷ்ணா என்ற சிறுவனுக்கு நமது ஆலய

கோபுரத்தின் மீது தங்கநிற வடிவில் மயில் மீது பெரிய ஒளி வடிவில்

உருவம் ஒன்று வந்து இறங்கியதைக் கண்டு அச்சிறுவன் அதிர்ந்து

கூறியது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படி சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில்

குழந்தை வரம் வேண்டி நாடி கேட்ட அவர் உத்தரவு மருந்து வாங்கி

குடித்து அவர் மனைவியையும் குடிக்கச் செய்தார். அடுத்த வைகாசி

விசாகம் வருவதற்குள் நிறைமாத கர்ப்பிணி ஆகி தற்பொழுது அழகான

பெண் குழந்தைக்கு தாயாகி விட்டார். முதன் முதலாக அவருக்க்கு 40

வயதில் நாடி உரைத்த போது ஆனந்தமே ஆனந்தமே ஆசி ஆசி என்று

அன்று உரைத்தது 100% அப்படியே சத்தியமாக பலித்தது. இந்த சம்பவம்

முருகப் பெருமான் திருக்கை வேலின் மீது ஆணையிட்டு உண்மை,

உண்மை, உண்மையை தவிர வேறேதுமில்லை என்பது அனைவரும்

அறிந்ததே.

                                 “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”

திங்கள், 8 டிசம்பர், 2014


வலைப்பதிவு வாசகர்களுக்கு...

கீழே உள்ள பதிவுகளில் நமதுஸ்ரீஞானஸ்கந்தர்ஜீவநாடி பற்றிய செய்திகள்

இடம்பெற்றுள்ளது. 

http://agathiyarvanam.blogspot.in/2014/03/lord-murugan-speaks-about-kallar-ashram.html

http://agathiyarvanam.blogspot.in/2014/03/promoting-agathiyar-siddhas.html



                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்!


சனி, 6 டிசம்பர், 2014

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம் !



காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.(இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ் அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி,பார்வதி,மகேசுவரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும்,உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும்.(நாம் அகத்திய மகரிஷியை நமது குருவாகக் கொள்வோம்.இந்த வலைப்பூவில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்ற தலைப்பைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.அதில் உள்ள வழிமுறைப்படி 48 நாட்கள் முயன்று அகத்தியரை தரிசித்து அவரது அருளாற்றலால் காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவோம்)

அஷ்ட ஐஸ்வர்யங்களும்,அஷ்டமாசித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம்.

காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத் தரும்.உதடுகள் மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்குபலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10 பங்கு பலனும் தரும்.ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நன்று.


இந்த காயத்ரி மந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன்(பத்ரகாளி அல்லது மாரி அல்லது வெயிலுகந்தம்மன் அல்லது வைஷ்ணவி அல்லது வராஹி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வம்) சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால் அதனால் கிடைக்கும் பலன்களைச் சொல்ல இந்த சர்வர் பத்தாது.ஏன் இந்த உலகில் உள்ள மொத்தசர்வர்களும் பத்தாது.

என் அனுபவத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் முதல் முறையாக ஒன்பதுமுறை ஜபித்த உடனே குளிரூட்டப்பட்ட காரில் பயணம் செய்யும் வாய்ப்பு உடனே கிடைத்தது.

யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.
தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்துவந்தால் அவன்/ள் பெரும் செல்வந்தராவது நிச்சயம்.

வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரிமந்திரத்தை பயபக்தியோடும் முழுமனதோடும் சொல்பவர்கள்(ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன் பெறுவார்கள்.இந்த ஜபம் செய்ய தண்ணீர் மட்டும் போதுமானது.


ஒருவேளை தண்ணீருக்குப்பதிலாக இளநீர் வைத்துக்கொண்டு ஜபிப்பது மிக மிக நன்று.நீண்ட நேரம் மந்திர ஜபம் செய்துவிட்டு முடிவில் இளநீர் அருந்தினால் அந்த மந்திர அலைகள் நம் உடலிலேயே தங்கிவிடும் எஎனது ஆத்மார்த்த குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.


                                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் !


புதன், 3 டிசம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 20 !



   சித்தர்கள் ஆசியாலும் முருகப் பெருமானின் கருணையாலும், நமது

ஞானஸ்கந்தர் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற

உண்மையான பக்தர்களின் கண்களுக்கு காட்டி அவர்களையும்

ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. வெறும்

ஓலைச்சுவடியில் தூய தமிழிலேயே எழுத்துக்கள் தோன்றி எனது

கண்களுக்கு மட்டுமன்றி உண்மையான பக்தியுடனும் உள்ளன்புடனும்,

உறுதியான நம்பிக்கையுடனும் வருபவர்களுக்கு இந்த எழுத்துக்களை

அவனிடம் காட்டு என்று முருகப் பெருமான் உத்தரவிடுவார். இதுவரை


சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த எழுத்துக்களை பார்த்து

படித்துள்ளனர். வருவோர், போவோருக்கெல்லாம் சுவடியை காட்டாதே

என்றும் எனது பக்தர்களுக்கும் எனது சீடர் அகத்தியர் பக்தர்களுக்கும்

மட்டுமே எழுத்து வடிவில் காட்சியளிப்பேன் என்றும் முருகப் பெருமான்

உரைத்திருக்கிறார். நாடியை ஆராயச்சி செய்யும் நோக்கில்


வருபவர்களுக்கும், சோதிக்கும் நோக்கில் வருபவர்களுக்கும், அவதூறு

பேசுபவர்களுக்கும், அவச்சொல் சொல்பவர்களுக்கும், நமது ஞானஸ்கந்தர்

நாடி ஒரு புரியாத புதிராகவும், வீணர்களுக்கு தக்க தண்டனையைக்

கொடுத்து வருவதை கண்கூடாக காணலாம். இதை என்னைச் சுற்றி

உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். எனவே நம்பிக்கை இல்லாதவர்கள்

என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் அல்லது இந்த

தொடரையே படிக்க வேண்டாம் என்று அன்புடனும் பணிவுடனும்

கேட்டுக் கொள்கிறேன்.


  அடுத்ததாக, என்னைச் சந்திப்பது பற்றி பகிர்ந்து கொள்வது அவசியம்

என நினைக்கிறேன். நாடி படிக்க அவ்வளவு எளிதில் பிடி கொடுப்பதில்லை

என்று பலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் நான் வேண்டுமென்றே தர

மாட்டேன் என்கிறேன் என நினைக்கிறார்கள்.



  அதில் எனது தவறு எதுவும் கிடையாது. அவரவர் கர்மவினை

அடிப்படையிலேயே நாடி படிக்க முடியும். என்வே உங்கள் கர்மாவைத்தான்

நொந்துக் கொள்ள வேண்டுமே தவிர என்னை நொந்துக் கொள்வதில்

அர்த்தமில்லை என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல் வேண்டுமென்று இழுத்தடிப்பதாக நினைக்க வேண்டாம்.



10 ஆண்டுகளுக்கு மேலும் முயற்சி செய்து இன்னும் நாடி

கேட்டுக்கொள்ள முடியாதவர்கள் இருக்கிறார்கள். வியாபாரத்திற்கோ, பண

நோக்கத்திற்கோ வேறு எந்த எதிர்பார்ப்பிற்கோ நான் நாடி படிப்பதில்லை.



எனவே அமாவாசை பூஜையில் தவறாமல் கலந்துக் கொண்டு ஆலயத்தை

27 முறை வலம் வந்து உங்கள் கோரிக்கையை வையுங்கள். நிச்சயம்

முருகன் செவி சாய்ப்பான். உங்களுக்கு அனுகிரகம் புரிவார். கடந்த 5

ஆண்டுகளாகத் தனக்கு திருமணம் ஆக வேண்டுமென்று அமாவாசை

பூஜை தவறாமல் கலந்துக் கொண்டு பணிவிடை செய்து வந்தார் ஒருவர்.

அவர் வந்து கலந்துக் கொண்ட முதல் அமாவாசையில் அவருக்கு ஜீவநாடி


பின்வருமாறு உரைத்தது.

 “காலங்கள் கடந்தாலும்

 கந்தனது ஆசி! ஆசி!

 கச்சிதமாய் வந்து சேர்ந்தாய்

 காலமது கனியும்

 காரியமும் நடக்கும்

 கால தாமதம் ஆனாலும்

 ஆரும் அவசியம் பொறு

 ஆனந்தமே ஆனந்தமே ஆசி! ஆசி!”

 என்று உரைத்தார். கந்தனது ஆசி என்று வந்ததுமே அவருக்கு மிகுந்த

சந்தோஷம். சிலருக்கு என்ன பெரிய ஆசி என்கின்ற எண்ணம் வருகின்றது.



பக்தி இல்லாதவர்களுக்கு ஆசி என்றால் சாதாரண விஷயம் தான். ஆனால்

இவர் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர் என்பதால் ஆசி என்றதுமே

அடிபணிந்து வணங்கினார். ஒன்று என்ற அந்த இறைவனின் ஆசி மட்டும்

கிடைத்துவிட்டால் அதற்கு அப்புறம் எந்தனை சைபர் போட்டாலும் அதற்கு

பலன் உண்டு. நமது வாழ்வு முழுதும் சைபராகவே இருந்தாலும் ஒன்று

என்று சொல்லக்கூடிய இறைவனின் ஆசி கிட்டிவிட்டால் அது பத்தாகிறது,

ஆயிரம் என்று மதிப்புடையதாகிறது. எனவேதான் மற்றவர்களை விட இவர்

விஷய ஞானம் உடையவர் என்பதால் ஆசியே போதும் என்றார். அடுத்து

கச்சிதமாய் வந்து சேர்ந்தாய் என்றார் முருகப் பெருமான். அதற்கு அர்த்தம்

என்ன? எப்படி இருந்தாலும் ஒரு நாள் நீ என்னிடம் வரப்போகிறாய் என்று

முருகனே எண்ணி இருந்ததால் கச்சிதமாய் வந்து சேர்ந்தாய் என்றார்.



அதாவது சரியான இடத்திற்கு நீ வந்துவிட்டாய் இனி உன் வாழ்வை நான்

பார்த்துக் கொள்கிறேன் என்ற சரணாகதி தத்துவத்தை வலியுறுத்துவது

போல் கந்த மூர்த்தி உரைத்தார். காலமது கனியும் என்றார் கந்தன். அப்படிப்

பார்த்தால் இப்போது நீ எண்ணி வந்த காரியம் கனிய வில்லை அது காயாக

இருக்கலாம் ஏன் பிஞ்சாகக் கூட இருக்கலாம் அல்லது விதையே

போடப்படாமல் கூட இருக்கலாம். விதை போட்டு அது செடியாகி மரமாகி

பிஞ்சாகி, காயாகி, கனியாகி, அப்பப்பா எவ்வளவு காலம்? அது தெரியாது.

மொத்தத்தில் இது உகந்த காலமல்ல என்று மட்டும் தெரிகிறது. அடுத்து

காரியமும் நடக்கும் என்றார். விடை கொடுத்தார் வேலன். நீ நினைத்து

வந்த காரியம் நடக்கும் என்பதில் மாற்றமில்லை. அதில் எந்த வித

சந்தேகமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக வந்து விட்டது. அடுத்த

வரியில் கால தாமதம் ஆனாலும் ஆகும் அவசியம் பொறு! ஆனந்தமே!

ஆனந்தமே! ஆசி! ஆசி! என்றார்.



  இப்போது நிச்சயமாகத் தெரிந்து விட்டது. இவர் காரியம் உடனடியாக

நடக்காது சற்று காலதாமதம் ஆகும். அப்படி ஆனாலும் ஆனந்தம் உண்டு.

இறைவனது ஆசியும் உண்டு. அதில் ஏதும் மாற்றமில்லை என்பது

நிதர்ஸனமாகிறது. இந்த விளக்கங்களையெல்லாம் கேட்டுவிட்டு கந்தனது

ஆசியே போதும் அவர் நினைத்தப்படி எனது காரியம் எப்போது

வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு, சரியான

இடத்திற்கு வந்துவிட்டேன் அதை கந்தனும் உறுதி செய்து விட்டார்.

என்வே எது எப்படியானாலும் இந்த கணம் முதல் கந்தனையே

சரணடைகிறேன் என்று வணங்கிவிட்டு சென்று விட்டார்.

                             ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

செவ்வாய், 2 டிசம்பர், 2014

குரு பக்தி !


குரு பிரம்மா, குரு விஷ்ணு; குரு தேவோ மகேஸ்வர…’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மற்ற தெய்வங்களைவிட, குருவுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம். இதில், குருவுக்கு மூன்றாவது இடம் உள்ளது. காரணம், ஒருவனது பிறவிக்கு மாதா, பிதாக்களே காரணம் என்பதால் இவர்களுக்கு முதலிடம்.
ஆரம்பத்தில் உள்ள வாக்கியத்தில் குருவுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. மனிதன் பிறந்த பின், அவனது அறிவுக் கண்களை திறந்து விடுபவர் ஆசான் அல்லது குரு. குருவுக்கு நிறைய பெருமைகள் சொல்லப்பட்டுள்ளன. "குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்!’ என்றுள்ளது. அதனால், பிறவி எடுத்தவர்கள் ஒரு சத்குருவை அடைந்து, கல்வி, வேத சாஸ்திரங்கள் பயின்று, தன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். குரு பக்தி, மிகவும் முக்கியமானது.
ஒரு நல்ல குரு கிடைப்பதற்காக தேடி அலைய வேண்டும் சீடன். ஒரு நல்ல சீடன் கிடைக்க வேண்டுமென்று, குரு தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். யார் கிடைத்தாலும் அவர் குரு என்றோ, அவன் சீடன் என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது. குருவுக்குப் பணிவிடை செய்து, அவரை திருப்திப்படுத்தினால், கற்ற வித்தைகள் நல்ல பலன் தரும்; குருவை அவமதித்தால் குரு சாபம் ஏற்படும்.
குரு சாபத்தை போக்கவோ, மாற்றவோ பகவானால் கூட முடியாது. அதனால், குரு என்றால் பக்தி, விசுவாசத்துடன் இருந்து பணிவிடை செய்து அவர் சந்தோஷப்பட்டால், அவர் ஆசீர்வதிப்பார். பல சீடர்களுக்கு, "நீ படிக்காமலே சகல வேத சாஸ்திரங்களும் உனக்கு சித்தியாகும்’ என்று, குரு ஆசீர்வதித்ததாகவும், அதே போல, அந்த சீடர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்கினர் என்றும் பல சரித்திரங்கள் உள்ளன.
கீதையை உபதேசிக்க விரும்பினான் கண்ணன். யாருக்கு உபதேசம் செய்வது என்று யோசித்தான். அந்தத் தகுதி பெற்றவன் அர்ஜுனன் தான் என்று தீர்மானித்தான். அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தான். கீதை, உயர்ந்த போதனை, தத்துவங்கள் கொண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த விஷயத்தை, உயர்ந்த இடத்தில் தானே வைக்க வேண்டும்! ஏன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தான் என்பதற்கான காரணங்கள், பகவத் கீதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளன.
நல்ல பாலை, தங்கம் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் வைப்பது தான் உயர்வு. அதை தாமிரப் பாத்திரத்திலோ, சுரைக் குடுவையிலோ வைப்பரா? தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தால் தான் பாலுக்குப் பெருமை. வைரத்தோடை நகைப்பெட்டியில் வைத்து, அலமாரியில் வைப்பரா அல்லது சமையலறை அஞ்சறைப் பெட்டியில் கடுகு, உளுத்தம் பருப்போடு போட்டு வைப்பரா?
பொருளின் உயர்வுக்குத் தகுந்தபடி இடம் தேடி வைப்பர். அதுபோல், ஒரு குருவானவர் உயர்ந்த உபதேசங்களை, தகுதி உள்ள மாணவர், சீடர்களுக்கு தான் உபதேசிப்பார். மாணவனின் அறிவு, பணிவு இவைகளை கணக்கிட்டு, அதற்கு தக்கபடி ஆசிர்வதிப்பார். அப்படி அவர் ஆசிர்வதித்து விட்டால், அந்த சீடனும் சீரும் சிறப்புமாக வாழ்வான்; குருவுக்கும் பெருமை சேர்ப்பான். நான் இன்னாருடைய சீடன் என்று பெருமையாகப் பேசுவான். அது, குருவுக்குப் பெருமை.
அப்படியில்லாமல், "குருவா… அவரா… அவருக்கு என்ன சார் தெரியும்? ஏதோ பெயர்தான் குரு! அவர் என்ன சொல்லிக் கொடுத்தார்? எல்லாம் நானே கற்றுக் கொண்டேன்…’ என்று சொல்லும் சீடர்களும் உண்டு. அதனால், விவரம் தெரிந்த குரு, ஆரம்பத்திலேயே நல்ல சீடனை தேர்ந்தெடுக்க வேண்டும். தன்னிடம் பயில்பவனின் நலன் கருதும் குருவை, சீடனும் அடைய வேண்டும். இரண்டும் நன்றாக அமைந்து விட்டால், இருவருக்குமே பெருமை தான்!

முருகனின் விஸ்வரூப தரிசனம் !


குழந்தையாக இருந்த முருகன் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த செய்தி கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்தில் சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் தந்த பின்னரே, அவனை ஆட்கொண்டு அருள்புரிந்தார். இந்த தரிசனத்தின் போது, முருகனின் சேனைத்தலைவர் வீரபாகு, முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்கும் பேறு பெற்றார். இதன் அடிப்படையில், தினமும் காலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தரிசனத்தின் போது, வள்ளியம்மன் கோயிலில் "செந்திலாதிபன் சுப்ரபாதம்' பாடப்படும். அதன்பின் பள்ளியறை தீபாராதனையும், கருவறையில் மூலவருக்கு பூஜையும் நடக்கும். அதன்பின் கொடிமரத்தடியில் பள்ளியறையில் வைத்த பாலும், கற்கண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும். விஸ்வரூப தரிசனம் கண்டவர்களுக்கு வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி சுபயோகம் உண்டாகும்.


புண்ணிய பலன் ! ! !

நம் சந்ததியருக்கு
எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?
புண்ணியங்களையா ..?
பாவங்களையா ..........?
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...!
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்...!!
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!
நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !
நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.
நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லை
என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க ...
என்பதே மெய்ஞ்ஞானம்.
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.
ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!
நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.


புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ..........................................6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு

அந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!