திங்கள், 22 டிசம்பர், 2014

கொங்கு நாட்டின்ஆறுபடை வீடுகள்:


கொங்கு நாட்டின்ஆறுபடை வீடுகள்




1.ஆறுமுகம்பனிரெண்டு கரங்களுடன் – அவினாசி, பூண்டியிலும்,
2.ஐந்து முகம் எட்டு கரங்களுடன் – பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,
3.நான்கு முகம்எட்டு கரங்களுடன் – திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்,
4.மூன்று முகம் ஆறு கரங்களுடன் – கோபி, காசிபாளையம்குமரன்கரட்டிலும், 5.இரண்டு முகம் நான்கு கரங்களுடன் – சென்னிமலையிலும்,
 6.ஒருமுகம் – தண்டாயுதபாணியாக – பழனியிலும் நின்று

அருள்செய்யும்ஸ்ரீமுருகப்பெருமானின்மேற்கண்ட ஆறு தலங்களும்கொங்கு
நாட்டின்ஆறுபடை வீடுகளாகும்.



கொங்கு மண்டலத்தில் 6 மலைகளிலும் 6 கோயில்களில்ஆறுமுகன்

அருள்புரிவதால்இதை கொங்கு மண்டல அறுபடை வீடுகள்என்பர். வைகாசி

விசாகத்தன்று காலை சென்னிமலை முருகன்; முற்பகல்சிவன்மலை

முருகன்; உச்சிவேளை கைத்தமலை வேலன்; மாலை அருள்மாலைமுருகன்;

அஸ்தமன சந்தியில்சீனாபுரமலை முருகன்; அர்த்த ஜாமத்தில்திண்டல்மலை

வேலவன் என ஒரேநாளிலேயே அனைவரையும்தரிசித்துவிடலாம். இதை

ஏகதினவழிபாடு என்பர். இதனால்நோயற்ற நீண்ட ஆயுள், நிறைந்த வாழ்வு,

பேரின்பம் பெறலாம்.



தமிழ்நாட்டில்அறுபடை வீடு முருகனுக்கு இருப்பது போல்இலங்கையிலும்

முருகனின்ஆறு கோயில்கள்விசேஷமாகக்கருதப்படுகிறது. இதை

முருகனுக்குரிய அறுபடை வீடுகளாக சொல்கின்றனர். கதிர்காமம், நல்லூர்

கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலிவேலி

என்பவையே அறுபடை வீடுகளாகப்போற்றப்பெறுகின்றன.


ஜீவ நாடியில்வந்த பேரதிசயம் ! ! !



திண்டுக்கல்லில் புற்றிலிருந்து அம்மன் தோன்றியதும் அதை நமது

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்ததையும் சென்ற பதிவில் சொல்லி

இருந்தேன். அந்த அம்மனுக்கு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்

பிரதான அர்ச்சகர் மூலம் பூஜை செய்யப்பட்ட்து. அதன் படங்களைப் பார்த்து

அருள் பெருங்கள்.











சனி, 20 டிசம்பர், 2014

ஜீவ நாடியில் வந்த பேரதிசயம்

சென்ற பதிவின் தொடர்ச்சி:-



திண்டுக்கல்லில் புற்றிலிருந்து அம்மன் தோன்றியதும் அதை நமது

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்ததையும் சென்ற பதிவில் சொல்லி

இருந்தேன். அதில் அந்த அம்மன் காட்சி கொடுத்த வகையில் தன்னை

வெளிப்படுத்த அந்த அம்மன் செய்த திருவிளையாடல் இன்னும் மெய்

சிலிர்க்க வைக்கிறது. புற்று உள்ள இடத்தில் இருந்து சற்று அருகே திரு.ஜீவா

என்பவருக்கு ஒரு சிறிய பெண் ஒடுவது போல் தெரிந்து இருக்கிறது. யார்

ஓடுவது என்று பின் தொடர்ந்து சென்ற ஜீவா அவர்கள் திடீரென இந்த பெண்

மறைந்து விடுவதைக் கண்டு அதிசயப் படுவதற்குள் புற்றில் இருந்து

அந்த தெய்வம் வெளிப்பட்டிருக்கிறது. இதை உடனே ஜீவா அவர்கள் திரு.ராஜீ

அவர்களிடம் சொல்ல அதிசயம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திரு.ஜீவா

மற்றும்திரு.ராஜீஆகிய இருவரும்நமது ஞானஸ்கந்தர்ஜீவ நாடியை

தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல

ரகசியங்கள் வெளிவரும்.பொறுத்திருங்கள்.....

வியாழன், 18 டிசம்பர், 2014

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடியின் பேரதிசயம்!


திண்டுக்கல்லில் இருந்து திரு.ராஜூ எனும் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ

ஸ்கந்த உபாசகரிடம் அடிக்கடி ஜீவ நாடி கேட்டு அதில் வந்தபடி செய்து

கொண்டு வந்தார். 17.12.2014 புதன் கிழமை அன்று திரு.ராஜீஅவர்களுக்கு ஸ்ரீ

ஞானஸ்கந்தர் நாடியில் பாலா மந்திரம் உபதேசம் செய்யப்பட்டது. அதன்

பின்பு உனக்கு இனி அம்மன் திருவிளையாடல்கள் ஆரம்பம் என நாடியில்

உரைத்தார்


முருகப்பெருமான். 18.12.2014 அன்று அம்மன் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினாள்.

அவர் வசிக்கும் இடத்தின் அருகில் ஒரு புற்றில் இருந்து அம்மன் வெளிப்பட்டு

காட்சி கொடுத்துள்ளாள். அதன் படங்களை கௌமாரபயணம் வாசகர்களுக்கு

இங்கே தந்திருக்கிறேன். அடுத்து அந்த அம்மன் ஆலயம் கொள்வாளா அல்லது

என்ன நடக்கும் என்பதை ஸ்ரீ ஞானஸ்கந்தர் நாடியில் வரும் வாக்கின்படி

நடக்கும். அதன்ரகசியங்கள்இந்த கௌமாரபயணத்தில்வெளிவரும். இது

போல்  தினமும் ஏராளமான அதிசயங்களை நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி    

தனது ஜீவ நாடியின் மூலம் நடத்தி வருகிறார்.





திங்கள், 15 டிசம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 21




   முருகப் பெருமானை வேண்டி முதல் நாடி கேட்கின்ற பொழுது

அவருக்கு வயது 40. தனது திருமணம் நடக்க வேண்டும் என்ற

கோரிக்கையை மனதில் வைத்து நாடி கேட்க வந்திருக்கின்றார். பெரிய

அளவில் படிப்பேதும் படிக்கவில்லை, அரசு உத்யோகமும் கிடையாது.

வெளிநாட்டு வேலையும் கிடையாது. பெரிய சம்பளமும் கிடையாது. பெரிய

அந்தஸ்தும் கிடையாது. வயதும் 40 ஆகி விட்டது. இதுவரை பார்க்காத

ஜோதிடம் இல்லை. போகாத கோயில்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள்

இல்லை. பலன் 0 (சைபர்) தான். அதனால்தான் என்னவோ முருகப்பெருமான்

பரிகாரம் ஏதும் சொல்லவில்லை. எனது ஆலயத்திற்கு நீ வந்துவிட்டாய்.


இதுவே பெரிய பரிகாரம் என்று முருகப்பெருமான் நினைத்து விட்டார்

போலும், தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தார். காரியம் கைகூடிய

சூழலே இல்லை. நண்பர்களும், உறவினர்களும் இவரை கிண்டலடிக்க

ஆரம்பித்தனர். கிழவனான பின்பா இவன் கல்யாணம் பண்ணப் போகிறான்

என்று ஏசினர், பேசினர், இவர் ஓயவில்லை மனம் தளரவில்லை. முருகன்

விட்ட வழி என்று அனைவருக்கும் சவால் விட்டார். மாதம் தவறாமல்

அமாவாசை தோறும் 27 முறை வலம் வருவார். ஒரே ஒரு 27 முறை வலம்

வந்தவர்க்கு ஓராயிரம் காரியங்கள் நடந்தேறியது. ஆனால் இவர் ஓயாமல்

வலம் வருவார். காரியம் நடந்தபாடில்லை. ஓராண்டு கடந்தது.



இரண்டாண்டு கடந்தது. மூன்றாண்டும் கடந்தது. காரியம் நடக்கவில்லை.

தனது குலத்தைவிட்டு அடுத்த குலத்தில் பெண் எடுக்கலாம் என்று கூட

பேச்சு எழுந்தது. ஆனால் இவர் மறுத்து விட்டார். ஆண்டு 4ஆனது

நடந்தபாடில்லை காரியம். முருகனை வணங்கி வணங்கி பாதி சாமியார்

ஆகிவிட்டான் என்று பலர் தூற்றினார்கள். இவர் போற்றினார் முருகப்

பெருமானை, ஆண்டு ஐந்தானது அவருக்கு வயது 45 ஆகியும் திருமணம்

ஆகவில்லை. ஆனால் நடந்தது அதிசயம். இவர் மனதிற்கு பிடித்தமாதிரி

மாலை சூட்டினாள் மங்கை. காலம் கனிந்தது. கந்தன் சொன்னது போலவே

கச்சிதமாய் முடிந்தது. ஆனந்தம் இவர் வாழ்வில் அரும்பியது. அல்லி

நகையாடியவர்கள் வள்ளி மணாளன் வடிவேல் கந்தன் முருகனை வாயாற

துதித்தார்கள். ஜீவநாடியின் பெருமையை ஊருக்கு ஊர் பேசி மகிழ்ந்தார்கள்.

 

அவர் 40 வயதில் என்னை சந்தித்த பொழுது நாடி கேட்டவர் இடையில்

எதுவும் கேட்கவில்லை. முருகனும் உரைக்க வில்லை. ஆறு

மாதங்களுக்கு மேலாகியும் வாரிசுயோகம் இல்லையே என்று முருகனது

ஜீவநாடி பார்க்க வேண்டுமென்று கேட்டார். பார்த்துவிட்டு சென்றவுடன் 3

நாளிலேயே அய்யா எங்கள் காரியம் அப்படியே தடையாகவே இருக்கின்றது

என்று கேட்பவர்கள் மத்தியில் இவர் விதிவிலக்கு என்பதால் உடனே

இவருக்கு நாடி படித்தேன். அதில் பின்வரும் பாடல் வந்தது.



   “கைபிடித்த நங்கையுடன்

   நலமாக வளமாக

   நல்படி அது ஆக ஆசி!

   கருதரிக்கும் காலமது

   கச்சிதமாய் உண்டுண்டு

   ஊஞ்சலது சேவை நாளில்

   உமைபாலன் என்னை

   ஊஞ்சலது ஆட்டிவிட்டு

   உத்தரவு மருந்துண்டு  வா

   உருவாகும் போ கரு ஆசி!

   என்று ஞானஸ்கந்தர் உரைத்தார். ஒவ்வொரு வருடமும் வைகாசி

விசாகத்தன்று நமது ஞானஸ்கந்த மூர்த்தியின் உற்சவ சிலையை

ஊஞ்சலில் வைத்து தீட்சை பெற்ற 50 அடியார்களும் தாலாட்ட ஓதுவார்

திருமுருக ரமேஷ் அடிகளார் கௌமாரச் செல்லமடி.. அம்மான் முருகன்..

கௌமாரச் செல்லமடி அம்மான்… என்று தாலாட்ட பக்தர்கள் அதையே பின்

தொடர அந்த கந்தலோகமே இறங்கி வந்தால்போல் பூஜை நடக்கும்.



அப்போது உற்சவர் விக்கிரகத்தின் முகத்தில் ஒரு தேஜஸ் ஒளி பெருகும்.

அதை அனைவரும் கண்டு ஆனந்தம் கொண்டு வெற்றி வேல் முருகனுக்கு

அரோகரா.. எனும் கோஷத்தோடு பக்தி வெள்ளத்தில் திளைப்பார்கள்.

இவரை அந்த நாளில் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு ஊஞ்சலை

ஆட்டிவிட்டு உத்தரவு மருந்து எனும் திரவ வடிவில் பாயசம் போல்

தரப்படும். அதை அருந்தினால் கரு உருவாகும் என்று நாடியில் உரைத்தார்

நமது ஞானஸ்கந்த மூர்த்தி. உத்தரவு மருந்தில் ஏழு வித மூலிகை

கலந்து முருகனுக்கு நைவேத்யம் செய்து கொடுக்கப்படும். அந்த

மூலிகையை நாடியில் உரைப்பதும் முருகனே.




 முருகப் பெருமான் நாடியில் சொல்கின்ற மூலிகைகளை சுண்டக்

காய்ச்சிப் பாலுடன் கலந்து தம்பதியாக வரக்கூடிய

குழந்தையில்லாதவர்களுக்கு சரிசமமாக கணவன் மனைவி இருவருக்கும்

பங்கிட்டு யாரும் பார்க்காத வகையில் உள்ளுக்குள் அருந்த

சொல்லப்படுகிறது. அவ்விதம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு

அடுத்த வைகாசி விசாகம் வருவதற்குள் கரு தரிக்கும் யோகம்

ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு கடுமையான தோஷங்கள், கர்ம வினைகள்

இருப்பதால் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது வைகாசி விசாகம்

தவறாமல் உத்தரவு மருந்து அருந்த முருகப் பெருமான் உத்தரவிட்டுள்ளார்.



அதுபோலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்பட்டுள்ளது.

காரணமென்னவெனில் இங்கு முருகப்பெருமானே குழந்தை வடிவில்

எழுந்தருளியுள்ளார். அது மட்டுமல்லாமல் சுயம்பு வடிவில்

முருகப்பெருமான் தோன்றியிருக்கின்றார். நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில்

இங்கு முருகப் பெருமான் பாதம் பட்ட இடம் என்று 15 ஆண்டுகளுக்கு

முன்னரே குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலையில்

உள்ள ஸ்ரீ ஜோதிஅக்பர் சுவடிகளால் படிக்கப்படும் மீனாட்சி நாடியில்

சித்தர்கள் பலர் கூடி தங்கம் செய்த இடம் என்றும், சூரபத்மன் வதத்திற்கு

முன்பே முருகப் பெருமான் எழுந்தருளிய இடம் என்றும், வள்ளி,

தெய்வானை திருமணத்திற்கு முற்பிட்ட முருகன் என்பதால் மயில் வாகனம்

அல்லாமல் யானை வாகனம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும்

மீனாட்சி நாடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



இந்த மீனாட்சி நாடி 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாடியாகும். அப்போதே

நமது ஆலயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன் பெருமை

விளங்கும். அதுமட்டுமல்லாது 18 சித்தர்களும் அருவமாக முருகனுக்கு

பூஜை செய்ய வருவதும், முருகனின் 18 விழிகளில் இருந்து வரக்கூடிய

கருணைப் பார்வை இந்த ஆலயத்தின் மீது கந்தலோகத்திலிருந்து படுவதும்

மீனாட்சி நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 அதைக் குறிக்கும் வகையில் 18 அடி வேல் பிரதிஷ்டை செய்யப்

பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் பாம்பு வடிவில் வந்து முருகப் பெருமானை

பூஜிப்பதும் மீனாட்சி நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல்

இன்றும் அடிக்கடி நடப்பது கண்கூடு. ஆனால் அனைவர் கண்களுக்கும்

புலப்படுவது கடினம். ஒரு முறை ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்த

10 வயதுடைய அஸ்வத் கிருஷ்ணா என்ற சிறுவனுக்கு நமது ஆலய

கோபுரத்தின் மீது தங்கநிற வடிவில் மயில் மீது பெரிய ஒளி வடிவில்

உருவம் ஒன்று வந்து இறங்கியதைக் கண்டு அச்சிறுவன் அதிர்ந்து

கூறியது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படி சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில்

குழந்தை வரம் வேண்டி நாடி கேட்ட அவர் உத்தரவு மருந்து வாங்கி

குடித்து அவர் மனைவியையும் குடிக்கச் செய்தார். அடுத்த வைகாசி

விசாகம் வருவதற்குள் நிறைமாத கர்ப்பிணி ஆகி தற்பொழுது அழகான

பெண் குழந்தைக்கு தாயாகி விட்டார். முதன் முதலாக அவருக்க்கு 40

வயதில் நாடி உரைத்த போது ஆனந்தமே ஆனந்தமே ஆசி ஆசி என்று

அன்று உரைத்தது 100% அப்படியே சத்தியமாக பலித்தது. இந்த சம்பவம்

முருகப் பெருமான் திருக்கை வேலின் மீது ஆணையிட்டு உண்மை,

உண்மை, உண்மையை தவிர வேறேதுமில்லை என்பது அனைவரும்

அறிந்ததே.

                                 “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”

திங்கள், 8 டிசம்பர், 2014


வலைப்பதிவு வாசகர்களுக்கு...

கீழே உள்ள பதிவுகளில் நமதுஸ்ரீஞானஸ்கந்தர்ஜீவநாடி பற்றிய செய்திகள்

இடம்பெற்றுள்ளது. 

http://agathiyarvanam.blogspot.in/2014/03/lord-murugan-speaks-about-kallar-ashram.html

http://agathiyarvanam.blogspot.in/2014/03/promoting-agathiyar-siddhas.html



                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்!


சனி, 6 டிசம்பர், 2014

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம் !



காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.(இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ் அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி,பார்வதி,மகேசுவரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும்,உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும்.(நாம் அகத்திய மகரிஷியை நமது குருவாகக் கொள்வோம்.இந்த வலைப்பூவில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்ற தலைப்பைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.அதில் உள்ள வழிமுறைப்படி 48 நாட்கள் முயன்று அகத்தியரை தரிசித்து அவரது அருளாற்றலால் காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவோம்)

அஷ்ட ஐஸ்வர்யங்களும்,அஷ்டமாசித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம்.

காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத் தரும்.உதடுகள் மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்குபலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10 பங்கு பலனும் தரும்.ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நன்று.


இந்த காயத்ரி மந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன்(பத்ரகாளி அல்லது மாரி அல்லது வெயிலுகந்தம்மன் அல்லது வைஷ்ணவி அல்லது வராஹி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வம்) சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால் அதனால் கிடைக்கும் பலன்களைச் சொல்ல இந்த சர்வர் பத்தாது.ஏன் இந்த உலகில் உள்ள மொத்தசர்வர்களும் பத்தாது.

என் அனுபவத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் முதல் முறையாக ஒன்பதுமுறை ஜபித்த உடனே குளிரூட்டப்பட்ட காரில் பயணம் செய்யும் வாய்ப்பு உடனே கிடைத்தது.

யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.
தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்துவந்தால் அவன்/ள் பெரும் செல்வந்தராவது நிச்சயம்.

வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரிமந்திரத்தை பயபக்தியோடும் முழுமனதோடும் சொல்பவர்கள்(ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன் பெறுவார்கள்.இந்த ஜபம் செய்ய தண்ணீர் மட்டும் போதுமானது.


ஒருவேளை தண்ணீருக்குப்பதிலாக இளநீர் வைத்துக்கொண்டு ஜபிப்பது மிக மிக நன்று.நீண்ட நேரம் மந்திர ஜபம் செய்துவிட்டு முடிவில் இளநீர் அருந்தினால் அந்த மந்திர அலைகள் நம் உடலிலேயே தங்கிவிடும் எஎனது ஆத்மார்த்த குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.


                                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் !


புதன், 3 டிசம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 20 !



   சித்தர்கள் ஆசியாலும் முருகப் பெருமானின் கருணையாலும், நமது

ஞானஸ்கந்தர் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற

உண்மையான பக்தர்களின் கண்களுக்கு காட்டி அவர்களையும்

ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. வெறும்

ஓலைச்சுவடியில் தூய தமிழிலேயே எழுத்துக்கள் தோன்றி எனது

கண்களுக்கு மட்டுமன்றி உண்மையான பக்தியுடனும் உள்ளன்புடனும்,

உறுதியான நம்பிக்கையுடனும் வருபவர்களுக்கு இந்த எழுத்துக்களை

அவனிடம் காட்டு என்று முருகப் பெருமான் உத்தரவிடுவார். இதுவரை


சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த எழுத்துக்களை பார்த்து

படித்துள்ளனர். வருவோர், போவோருக்கெல்லாம் சுவடியை காட்டாதே

என்றும் எனது பக்தர்களுக்கும் எனது சீடர் அகத்தியர் பக்தர்களுக்கும்

மட்டுமே எழுத்து வடிவில் காட்சியளிப்பேன் என்றும் முருகப் பெருமான்

உரைத்திருக்கிறார். நாடியை ஆராயச்சி செய்யும் நோக்கில்


வருபவர்களுக்கும், சோதிக்கும் நோக்கில் வருபவர்களுக்கும், அவதூறு

பேசுபவர்களுக்கும், அவச்சொல் சொல்பவர்களுக்கும், நமது ஞானஸ்கந்தர்

நாடி ஒரு புரியாத புதிராகவும், வீணர்களுக்கு தக்க தண்டனையைக்

கொடுத்து வருவதை கண்கூடாக காணலாம். இதை என்னைச் சுற்றி

உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். எனவே நம்பிக்கை இல்லாதவர்கள்

என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் அல்லது இந்த

தொடரையே படிக்க வேண்டாம் என்று அன்புடனும் பணிவுடனும்

கேட்டுக் கொள்கிறேன்.


  அடுத்ததாக, என்னைச் சந்திப்பது பற்றி பகிர்ந்து கொள்வது அவசியம்

என நினைக்கிறேன். நாடி படிக்க அவ்வளவு எளிதில் பிடி கொடுப்பதில்லை

என்று பலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் நான் வேண்டுமென்றே தர

மாட்டேன் என்கிறேன் என நினைக்கிறார்கள்.



  அதில் எனது தவறு எதுவும் கிடையாது. அவரவர் கர்மவினை

அடிப்படையிலேயே நாடி படிக்க முடியும். என்வே உங்கள் கர்மாவைத்தான்

நொந்துக் கொள்ள வேண்டுமே தவிர என்னை நொந்துக் கொள்வதில்

அர்த்தமில்லை என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல் வேண்டுமென்று இழுத்தடிப்பதாக நினைக்க வேண்டாம்.



10 ஆண்டுகளுக்கு மேலும் முயற்சி செய்து இன்னும் நாடி

கேட்டுக்கொள்ள முடியாதவர்கள் இருக்கிறார்கள். வியாபாரத்திற்கோ, பண

நோக்கத்திற்கோ வேறு எந்த எதிர்பார்ப்பிற்கோ நான் நாடி படிப்பதில்லை.



எனவே அமாவாசை பூஜையில் தவறாமல் கலந்துக் கொண்டு ஆலயத்தை

27 முறை வலம் வந்து உங்கள் கோரிக்கையை வையுங்கள். நிச்சயம்

முருகன் செவி சாய்ப்பான். உங்களுக்கு அனுகிரகம் புரிவார். கடந்த 5

ஆண்டுகளாகத் தனக்கு திருமணம் ஆக வேண்டுமென்று அமாவாசை

பூஜை தவறாமல் கலந்துக் கொண்டு பணிவிடை செய்து வந்தார் ஒருவர்.

அவர் வந்து கலந்துக் கொண்ட முதல் அமாவாசையில் அவருக்கு ஜீவநாடி


பின்வருமாறு உரைத்தது.

 “காலங்கள் கடந்தாலும்

 கந்தனது ஆசி! ஆசி!

 கச்சிதமாய் வந்து சேர்ந்தாய்

 காலமது கனியும்

 காரியமும் நடக்கும்

 கால தாமதம் ஆனாலும்

 ஆரும் அவசியம் பொறு

 ஆனந்தமே ஆனந்தமே ஆசி! ஆசி!”

 என்று உரைத்தார். கந்தனது ஆசி என்று வந்ததுமே அவருக்கு மிகுந்த

சந்தோஷம். சிலருக்கு என்ன பெரிய ஆசி என்கின்ற எண்ணம் வருகின்றது.



பக்தி இல்லாதவர்களுக்கு ஆசி என்றால் சாதாரண விஷயம் தான். ஆனால்

இவர் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர் என்பதால் ஆசி என்றதுமே

அடிபணிந்து வணங்கினார். ஒன்று என்ற அந்த இறைவனின் ஆசி மட்டும்

கிடைத்துவிட்டால் அதற்கு அப்புறம் எந்தனை சைபர் போட்டாலும் அதற்கு

பலன் உண்டு. நமது வாழ்வு முழுதும் சைபராகவே இருந்தாலும் ஒன்று

என்று சொல்லக்கூடிய இறைவனின் ஆசி கிட்டிவிட்டால் அது பத்தாகிறது,

ஆயிரம் என்று மதிப்புடையதாகிறது. எனவேதான் மற்றவர்களை விட இவர்

விஷய ஞானம் உடையவர் என்பதால் ஆசியே போதும் என்றார். அடுத்து

கச்சிதமாய் வந்து சேர்ந்தாய் என்றார் முருகப் பெருமான். அதற்கு அர்த்தம்

என்ன? எப்படி இருந்தாலும் ஒரு நாள் நீ என்னிடம் வரப்போகிறாய் என்று

முருகனே எண்ணி இருந்ததால் கச்சிதமாய் வந்து சேர்ந்தாய் என்றார்.



அதாவது சரியான இடத்திற்கு நீ வந்துவிட்டாய் இனி உன் வாழ்வை நான்

பார்த்துக் கொள்கிறேன் என்ற சரணாகதி தத்துவத்தை வலியுறுத்துவது

போல் கந்த மூர்த்தி உரைத்தார். காலமது கனியும் என்றார் கந்தன். அப்படிப்

பார்த்தால் இப்போது நீ எண்ணி வந்த காரியம் கனிய வில்லை அது காயாக

இருக்கலாம் ஏன் பிஞ்சாகக் கூட இருக்கலாம் அல்லது விதையே

போடப்படாமல் கூட இருக்கலாம். விதை போட்டு அது செடியாகி மரமாகி

பிஞ்சாகி, காயாகி, கனியாகி, அப்பப்பா எவ்வளவு காலம்? அது தெரியாது.

மொத்தத்தில் இது உகந்த காலமல்ல என்று மட்டும் தெரிகிறது. அடுத்து

காரியமும் நடக்கும் என்றார். விடை கொடுத்தார் வேலன். நீ நினைத்து

வந்த காரியம் நடக்கும் என்பதில் மாற்றமில்லை. அதில் எந்த வித

சந்தேகமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக வந்து விட்டது. அடுத்த

வரியில் கால தாமதம் ஆனாலும் ஆகும் அவசியம் பொறு! ஆனந்தமே!

ஆனந்தமே! ஆசி! ஆசி! என்றார்.



  இப்போது நிச்சயமாகத் தெரிந்து விட்டது. இவர் காரியம் உடனடியாக

நடக்காது சற்று காலதாமதம் ஆகும். அப்படி ஆனாலும் ஆனந்தம் உண்டு.

இறைவனது ஆசியும் உண்டு. அதில் ஏதும் மாற்றமில்லை என்பது

நிதர்ஸனமாகிறது. இந்த விளக்கங்களையெல்லாம் கேட்டுவிட்டு கந்தனது

ஆசியே போதும் அவர் நினைத்தப்படி எனது காரியம் எப்போது

வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு, சரியான

இடத்திற்கு வந்துவிட்டேன் அதை கந்தனும் உறுதி செய்து விட்டார்.

என்வே எது எப்படியானாலும் இந்த கணம் முதல் கந்தனையே

சரணடைகிறேன் என்று வணங்கிவிட்டு சென்று விட்டார்.

                             ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

செவ்வாய், 2 டிசம்பர், 2014

குரு பக்தி !


குரு பிரம்மா, குரு விஷ்ணு; குரு தேவோ மகேஸ்வர…’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மற்ற தெய்வங்களைவிட, குருவுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம். இதில், குருவுக்கு மூன்றாவது இடம் உள்ளது. காரணம், ஒருவனது பிறவிக்கு மாதா, பிதாக்களே காரணம் என்பதால் இவர்களுக்கு முதலிடம்.
ஆரம்பத்தில் உள்ள வாக்கியத்தில் குருவுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. மனிதன் பிறந்த பின், அவனது அறிவுக் கண்களை திறந்து விடுபவர் ஆசான் அல்லது குரு. குருவுக்கு நிறைய பெருமைகள் சொல்லப்பட்டுள்ளன. "குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்!’ என்றுள்ளது. அதனால், பிறவி எடுத்தவர்கள் ஒரு சத்குருவை அடைந்து, கல்வி, வேத சாஸ்திரங்கள் பயின்று, தன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். குரு பக்தி, மிகவும் முக்கியமானது.
ஒரு நல்ல குரு கிடைப்பதற்காக தேடி அலைய வேண்டும் சீடன். ஒரு நல்ல சீடன் கிடைக்க வேண்டுமென்று, குரு தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். யார் கிடைத்தாலும் அவர் குரு என்றோ, அவன் சீடன் என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது. குருவுக்குப் பணிவிடை செய்து, அவரை திருப்திப்படுத்தினால், கற்ற வித்தைகள் நல்ல பலன் தரும்; குருவை அவமதித்தால் குரு சாபம் ஏற்படும்.
குரு சாபத்தை போக்கவோ, மாற்றவோ பகவானால் கூட முடியாது. அதனால், குரு என்றால் பக்தி, விசுவாசத்துடன் இருந்து பணிவிடை செய்து அவர் சந்தோஷப்பட்டால், அவர் ஆசீர்வதிப்பார். பல சீடர்களுக்கு, "நீ படிக்காமலே சகல வேத சாஸ்திரங்களும் உனக்கு சித்தியாகும்’ என்று, குரு ஆசீர்வதித்ததாகவும், அதே போல, அந்த சீடர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்கினர் என்றும் பல சரித்திரங்கள் உள்ளன.
கீதையை உபதேசிக்க விரும்பினான் கண்ணன். யாருக்கு உபதேசம் செய்வது என்று யோசித்தான். அந்தத் தகுதி பெற்றவன் அர்ஜுனன் தான் என்று தீர்மானித்தான். அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தான். கீதை, உயர்ந்த போதனை, தத்துவங்கள் கொண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த விஷயத்தை, உயர்ந்த இடத்தில் தானே வைக்க வேண்டும்! ஏன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தான் என்பதற்கான காரணங்கள், பகவத் கீதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளன.
நல்ல பாலை, தங்கம் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் வைப்பது தான் உயர்வு. அதை தாமிரப் பாத்திரத்திலோ, சுரைக் குடுவையிலோ வைப்பரா? தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தால் தான் பாலுக்குப் பெருமை. வைரத்தோடை நகைப்பெட்டியில் வைத்து, அலமாரியில் வைப்பரா அல்லது சமையலறை அஞ்சறைப் பெட்டியில் கடுகு, உளுத்தம் பருப்போடு போட்டு வைப்பரா?
பொருளின் உயர்வுக்குத் தகுந்தபடி இடம் தேடி வைப்பர். அதுபோல், ஒரு குருவானவர் உயர்ந்த உபதேசங்களை, தகுதி உள்ள மாணவர், சீடர்களுக்கு தான் உபதேசிப்பார். மாணவனின் அறிவு, பணிவு இவைகளை கணக்கிட்டு, அதற்கு தக்கபடி ஆசிர்வதிப்பார். அப்படி அவர் ஆசிர்வதித்து விட்டால், அந்த சீடனும் சீரும் சிறப்புமாக வாழ்வான்; குருவுக்கும் பெருமை சேர்ப்பான். நான் இன்னாருடைய சீடன் என்று பெருமையாகப் பேசுவான். அது, குருவுக்குப் பெருமை.
அப்படியில்லாமல், "குருவா… அவரா… அவருக்கு என்ன சார் தெரியும்? ஏதோ பெயர்தான் குரு! அவர் என்ன சொல்லிக் கொடுத்தார்? எல்லாம் நானே கற்றுக் கொண்டேன்…’ என்று சொல்லும் சீடர்களும் உண்டு. அதனால், விவரம் தெரிந்த குரு, ஆரம்பத்திலேயே நல்ல சீடனை தேர்ந்தெடுக்க வேண்டும். தன்னிடம் பயில்பவனின் நலன் கருதும் குருவை, சீடனும் அடைய வேண்டும். இரண்டும் நன்றாக அமைந்து விட்டால், இருவருக்குமே பெருமை தான்!

முருகனின் விஸ்வரூப தரிசனம் !


குழந்தையாக இருந்த முருகன் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த செய்தி கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்தில் சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் தந்த பின்னரே, அவனை ஆட்கொண்டு அருள்புரிந்தார். இந்த தரிசனத்தின் போது, முருகனின் சேனைத்தலைவர் வீரபாகு, முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்கும் பேறு பெற்றார். இதன் அடிப்படையில், தினமும் காலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தரிசனத்தின் போது, வள்ளியம்மன் கோயிலில் "செந்திலாதிபன் சுப்ரபாதம்' பாடப்படும். அதன்பின் பள்ளியறை தீபாராதனையும், கருவறையில் மூலவருக்கு பூஜையும் நடக்கும். அதன்பின் கொடிமரத்தடியில் பள்ளியறையில் வைத்த பாலும், கற்கண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும். விஸ்வரூப தரிசனம் கண்டவர்களுக்கு வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி சுபயோகம் உண்டாகும்.


புண்ணிய பலன் ! ! !

நம் சந்ததியருக்கு
எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?
புண்ணியங்களையா ..?
பாவங்களையா ..........?
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...!
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்...!!
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!
நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !
நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.
நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லை
என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க ...
என்பதே மெய்ஞ்ஞானம்.
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.
ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!
நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.


புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ..........................................6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு

அந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!

வியாழன், 20 நவம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 19!




சென்ற பதிவின்  தொடர்ச்சி:-


  சுமார் ஒரு மாதம் கழித்து அன்று வந்தவரின் உறவினர் அதாவது

காணிக்கை போட வேண்டாம் என்று தடுத்தவர் ஓடி வந்தார். ஐயா மிகவும்

அவசரம் நாடி படிக்க வேண்டும் என்றார். யாருக்கு என்றேன்? அன்று நான்

அழைத்து வந்தேனே அவருக்குத் தான் படிக்க வேண்டும் என்றார்.

ஏற்கனவே அவமதித்து இருந்ததால் இப்போது யாருக்கும் படிப்பதில்லை

என்று சொல்லி விட்டேன். மிகவும் கதறிய நிலையில் ஐயா அப்படி

சொல்லாதீர்கள். அன்று நாங்கள் நடந்துக் கொண்டது தவறு தான்.

அதற்கான தண்டனையினைப் பெற்று விட்டோம்,. பெரிய மனது செய்து

நாடி படித்து சொல்லுங்கள் என்றார். என்ன தண்டனை? என்ன விபரம்?

எனக் கேட்டேன். ஐயா அன்று தங்களிடம் நாடி கேட்டு விட்டு அவர்

காணிக்கை தர வந்தார்.


அந்த காணிக்கையை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதால் தான் அதை

நான் தடுத்தேன். ஆனாலும் தண்டனை அவருக்கு கிடைத்து விட்டது.

விவசாய பூமியில் இரவில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் இவர் ஈடுபட்டுக்

கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு கருநாக பாம்பு எங்கிருந்தோ வந்து

இவரை தீண்டி விட்டது. நீங்கள் அன்று படித்தது அப்படியே 100% நடந்து

விட்டது. இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.


மருத்துவர்கள் கைவிடும் நிலையில் இருக்கிறார். உடல் முழுவதும் நீல

நிறமாக மாறிவிட்டது. மிகவும் துயரத்திலும் ஆபத்திலும் இருக்கிறார்.

இராகு திசையில் இராகு புத்தி நடக்கிறது. இராகு 6ல் உள்ளார். எனவே

விஷ கிரகம் என்று ஜோதிடத்திலும் சொன்னீர்கள், நாடியிலும் சொன்னீர்கள்

தோட்டத்தில் கருப்பசாமி உண்டு என்பதும் உண்மை.

  ஆனால் அவர்கள் தீபமேற்றி வழிபடவேயில்லை. எனவே அந்த கருப்பசாமி

இவர் உயிரை மீட்டுத் தருவாரா? என்பதும் சந்தேகமே. தங்களை சிறுவன்

என நினைத்து பிழை செய்து விட்டோம். மன்னித்து ஒரு வழிகாட்டுங்கள்

என கண்ணீர் விட்டு கதறியதைப் பார்த்து மனமிறங்கி வருவதற்குள் எனது

குடும்பத்தினர் இதை கேட்டு விட்டு படித்துச் சொல்லவும் என்று

வேண்டுகோள் விடுத்தார்கள். சரி தவறை உணர்ந்து விட்டார்கள்

தண்டனையும் பெற்று விட்டார்கள். இதன் பின்பு நமது நாடி மூலம் நலம்

கிட்டும் என்ற பிராப்தம் இருந்தால் கிட்டும் என்று சொல்லி குறித்து,

மந்திரம் ஜெபித்து, தியானித்து பூஜித்து தவறுக்கு சிறு காணிக்கை

வைத்து சித்தர்களை சிந்தையில் வைத்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவநாடியைப்

பிரித்தேன். பின்வரும் பாடல் வந்தது.


“ஆபத்து வந்ததுவும்

அன்றே உரைத்தோம்

ஆனாலும் அபசாரம்

அது நேர்ந்ததால்

ஆபத்தும் நேர்ந்தது

அய்ந்தின் மடங்கு

அவசர செலவு செய்

அவசியம் தவறாமல்

அர்ச்சித்து வா கருப்பை

கரை சேர்வாய்

ஆசி! ஆசி! ஆசி!

  என்று மிகச் சுறுக்கமாக மிக அற்புதமாக அருள்வாக்கை ஜீவநாடியில்

அள்ளி வீசினார் ஆறுமுகப் பெருமான். அன்று செய்தது அபசாரம்

என்பதையும் சுட்டிக் காட்டினார். ரூ.500/- கொடுப்பதற்கு ஆயிரம் முறை

யோசித்து அதையும் கொடுக்காமல் சித்தர்களை அவமதித்ததால்அந்த 5ன்

மடங்கு வரை செலவு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை தீவிரமாக

செய்தால் விஷம் இறங்கி அவர் வாழ்வு மீளும். அதே போல் அந்த

கருப்பசாமியை அர்ச்சித்து வர வேண்டும் என்று சொல்லி விபூதி,

எலுமிச்சை கொடுத்து ஆசி கூறி அன்புடன் வழி அனுப்பி வைத்தேன்.


எந்த அவசரமானாலும் தொடர்பு கொள்ளுமாறும் சொன்னேன். அவரும்

பூரண திருப்தியுடன் சென்று அதேபோல் செய்கிறேன் என்று வேகமாகச்

  மீண்டும் ஒரு மாதம் கடந்து பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது

குடும்பத்துடன் அவரது உறவினரான மூவரையும் கூட்டிக் கொண்டு

நமது முருகன் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அருள்வாக்கு மேடையும்

சுயம்பு முருகன் சிலை மட்டுமே உள்ள மிகச் கிறிய கோவில் அங்கு

அமர்ந்தே ஜீவநாடி அருள்வாக்கு சொல்லுவது வழக்கம். இப்போது பெரிய

ஆலயம் கட்டப்பட்டு விட்டாலும் அந்த அருள்வாக்கு மேடையில் தான்

இப்போது அமாவாசையில் நாடி சொல்லப்படுகிறது.


எனது குடும்பத்தினரும் கூடி சுமார் 30 பேர் ஆலயத்தில் கூடி

விட்டார்கள். என்ன விஷயம் என்றேன். பெரிய மாலை போட்டு வஸ்திரம்

சாற்றி, சால்வையெல்லாம் போட்டு சில ஆயிரங்கள் தட்சணை வைத்து

பழங்களுடன் கொடுத்து குடும்பமே சாஷ்டாங்கமாக விழுந்து ஐயா

வயதில் சிறியவராக இருந்தாலும் தாங்கள் ஒரு சித்தர் பிறவி என்பதை

நாங்கள் உணர்ந்து விட்டோம். எங்களை மன்னித்து ஆசிர்வதியுங்கள்


எனக்கு எப்போதுமே தற்பெருமையோ, தலைக்கணமோ இல்லை. நன்றாக

வாழ்வீர்கள் எழுந்திருங்கள் என எழுப்பி சித்தர்களையும் முருகப்

பெருமானையும் அவமதிப்பது குற்றம். எனக்கு சூட்டிய மாலை மரியாதை

அத்தனையும் அந்த முருகனுக்கே அர்ப்பணம். நான் சித்தர் பிறப்பு அது

இது என்று எப்போதும் சொல்லிக் கொள்வதில்லை. நான் மிக மிக மிக

சாதாரண மனிதன். ஆனால் சித்தர்களும் முருகனும் அப்படியில்லை.

அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை எப்போதும் தர வேண்டும்.

ஏதோ வந்தோம் கேட்டோம் என்று விளையாட்டாக இருப்பது பல அபசார

தோஷங்களை ஏற்படுத்தி விடும். அதனால் தான் அபூர்வமாக சிலருக்கு

மட்டும் நாடி உரைக்கிறேன். கலியுகத்தில் ஏராள சிக்கல் இருப்பதால்

சோதனை செய்யாமல் நாடி உரைப்பதில்லை. சித்தர்கள் அனுமதி தராமல்

நாடி படிப்பதில்லை. பணத்திற்கு ஆசை பட்டும் உரைப்பதில்லை என்பது

என்னை சந்தித்து வருபவர்கள் அனைவரும் அறிந்த விஷயம்.


சரி என்ன நடந்தது சொல்லுங்கள் என்றேன். ஐயா தாங்கள் ஜீவ நாடியில்

சொன்னது போல் 5ன் மடங்காக 5 லட்சம் செலவு செய்த பின்பே உயிர்

பிழைத்து வந்து தங்கள் முன்பு நிற்கிறேன். இனி காலம் பூராவும்

ஞானஸ்கந்த மூர்த்திக்கு சேவை செய்கிறேன். என்றார். வாசகர்களுக்கு ஒரு

சந்தேகம் வரலாம். சித்தர்கள் 500 ரூபாய்க்கு ஆசைப்படுவார்களா? என்று

இந்த இடத்தில் மிகக் கவனமாக யோசிக்க வேண்டும். தட்சிணை என்பது

மன நிறைவுக்காக நாம் தருகின்ற மரியாதை. அது எவ்வளவாக

இருந்தாலும் மன நிறைவோடும், மரியாதையோடும் தர வேண்டும் என்பது

  நாடியில் வாக்கு கேட்டுவிட்டு அந்த நாடியை அவமதிக்கும் வகையில்

சொல்லுவது தான் குற்றம். எனவே சித்தர்கள் பணத்திற்கு மயங்க

மாட்டார்கள். அதே சமயம் மரியாதைக் குறையை அவர்கள்

விரும்புவதில்லை. ரூ.5 லட்சம் செலவு செய்தேன் என்பவர்கள் டாக்டர்

கேட்ட அத்துணை பணத்தையும் கொடுத்தவர்கள் சித்தர்களுக்குத் தருகின்ற

தட்சிணை விஷயத்தில் ஏன் தவறு செய்ய வேண்டும். பேருந்தில் ஏறி ரூ.5/-

கொடுத்தால் தான் பயணம் செய்ய முடியும் எனும் நிலையில் ரூ.4.99

பைசா கொடுத்து 1 பைசா இல்லை என்றாலும் பயணிக்க முடியுமா?

சித்தர்கள் வாக்கு என்ன அவ்வளவு கீழாகவா போய் விட்டது?


அதேபோல் ஜோதிடம் மூலம் பணம் வாங்கினால் தரித்திரம் பிடிக்கும்

என்று மெத்தப் படித்த மேதாவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்

சொல்கிறார்கள். கள்ளச் சாராயம் திருட்டு, விபச்சாரம் போன்ற கீழ்நிலைத்

தொழில்களோடு இலஞ்சம் வாங்கி, ஊரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள்

மட்டும் பணம் சம்பாதிக்கலாமா? அது தரித்திரம் இல்லையா? அது தான்

தரித்திரம். ஜோதிடம் மூலம் வருகின்ற தொகை புண்ணியம். தெய்வத்தின்

காணிக்கை அதை தவறான் வழியில் செலவு செய்தால் தான் குற்றம். இது

என்னவோ பணம் வாங்குவதற்காகச் சொல்கிறேன் என எண்ணி விட

வேண்டாம். எங்கு ஜோதிடம் கேட்டாலும் உரிய தட்சிணை கொடுத்து அந்த

ஜோதிடனை வணங்கி வாருங்கள். உடனே நற்பலன்கள் நடக்கும். அவர்

உண்மையான ஜோதிடராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.



                                   “ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

திங்கள், 17 நவம்பர், 2014

ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்







ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
- ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்
பொருள் விளக்கம்:-
ஓடும் மயிலில், ஓடி ஏறி, விளையாடும் ஒரே முகமும்...
ஞானியான அப்பாவுடனேயே பிரணவ ஞானம் பேசும் ஒரே முகமும்...
கஷ்டங்களைச் சொல்லி அழும் அடியார்கள் வினைகளைத் தீர்க்கும் ஒரே முகமும்...
தாரகன் என்னும் மாய அரக்கனின் மலையைப் பொடியாக்கி, வேல் பிடித்து நிற்கும் ஒரே முகமும்...
போரில் வந்த சூரனை, மற்ற அசுரர்களை வதைத்திட்ட ஒரே முகமும்...
மாறிலா வள்ளி என்னும் பேதையை, உணரவும்-புணரவும், ஆசையுடன் வந்த ஒரே முகமும்...
அருணாசலம் என்னும் திரு-அண்ணாமலையில் கோயில் கொண்ட கம்பத்து இளையனாரே! என் கந்தனே!
ஒரே முகங்களால் பலவும் செய்து, ஆறுமுகமாகவும் ஆகி நிற்கிறாய்!
ஆறுமுகம் ஆன பொருள் = நீ தான்!
நீ அருள வேண்டும் = எதை? = ஆறுமுகம் ஆன பொருளை = உன்னை

செவ்வாய், 11 நவம்பர், 2014

கந்தபுராணம் !


கந்தபுராணம் ஓர் அரிய தத்துவப்புதையல்

கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.
கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.
அவனது மனைவியராகப் புராணம் இரு தேவியரைக் காட்டும். அவளுடைய வலது பக்கம் விளங்குபவள் வள்ளி. அவள் இச்சா சக்தி. மண்ணுலகில் பிறந்து வளர்ந்தவள். தமிழ்மகள். வேடுவனான நம்பிராஜன் புதல்வி. அத்தேவி இகலோக சுகத்தைத் தருவாள். அத்தேவியை முருகன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டான்.
முருகனின் இடது பக்கம் எழுந்தருளுபவள் தேவசேனா. விண்ணுலகில் பிறந்தவள். தேவராஜனின் புதல்வி. கிரியாசக்தி. அவளை இறைவன் கற்பு முறையில் பிரம்ம விவாகம் செய்தான். முருகனை வழிபடுவோருக்கு அத்தாய் பரலோக வாழ்வில் இடம்தருவாள்.
முருகனின் மூன்றாவது சக்தி வேல். முருகனின் கரத்தில் விளங்குகிறது. வெற்றியைத் தருவது. ஞானமே வடிவெடுத்த ஞானசக்தி அது.
‘வெல்’ என்ற வினையடியில் தோன்றியது ‘வேல்’. அது ஞானமே உருவானது. ஆழந்து அகன்று கூர்மையாகி அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. செவ்வேட் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் சேவற்கொடி அஞ்ஞான இருளகற்றி ஞானஒளி வரக் கூவுகிறது. (கொக்கு- மாமரம், அற- அறுத்த, கோ- நம் அரசே) வாகனமான மயில் ஆசை என்ற பாம்பை அடக்கி பிரம்மசக்தியாக ஓம்கார ரூபமாக விளங்குகிறது.
முருகன் கைவேலுக்கு உரிய சிறப்பு வேறு எப்படைக்கும் இல்லை. தமிழ் இந்துக்களில் பலருக்கு ‘வேலாயுதம்’ என்றே பெயர் இருக்கிறது. இப்படி எவரும் வேறு எந்தப் படைக்கலனையும் தங்கள் பெயராகக் கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையிலுள்ள பிரபல யாழ். நல்லூர் போன்ற பல முருகன் ஆலயங்களில் கருவறையில் முருகனின் திருவுருவத்திற்குப் பதிலாக வேலாயுதமே விளங்கிடக் காணலாம்.
‘அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’
என்று தேவர்களின் வாக்காக வேலாயுதத்தைக் கந்தவேளாகவே கண்டு போற்றியதாகக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
இறையருள் துணையுடன் ஆணின் விந்துவும் பெண்ணின் நாதமும் கலந்து குழந்தையாகிறது. (அருணகிரிநாதர் ‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்று இதனைத் திருப்புகழில் பாடுவார்.) இறைவனிடமிருந்து வந்த நாமெல்லோரும் இறுதியில் இறைவனையே சென்றடைய வேண்டும். அழிவின் பின்னர் சூரபத்மன் நாதவுருவாகச் சேவலாக மாறி இறைவனின் கொடியாகவும் விந்துருவுருவாக மயிலாக மாறி முருகனின் வாகனமாயும் மாறியது இதை வெளிப்படுத்துகின்றது என்பர். அவனையே அடைந்து அவனருளாலே அவன் தாள் வணங்குதலே முக்தி. இதனைப் பெற்றான் சூரன். இச்சம்பவத்தை ‘சூரன் பெற்ற பேறு’ என்று கொண்டாடுவார்கள்.
ஆன்மாக்கள் நல்லறிவை நாடித் தவிக்கும் போது இறைவனே குருவாக வந்து அருள்வான் என்பதை சிவனார் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசித்தமை சுட்டுகிறது.
சிவனார் காமனை எரித்ததும் காலனைக் காலால் உதைத்ததும் அவர் காமத்தையும் மரணத்தையும் வென்றவர் என்பதையும், அவர் அடியார்களுக்கும் இவற்றால் துன்பமில்லை என்பதையும் உணர்த்தி நிற்கிறது.
இறைவனை இகழ்ந்து அவனை அவமதிப்பவர்கள் மிகுந்த அல்லல்களை அநுபவிப்பர் என்பதை தக்கன் யாகத்தை இறைவன் அழித்தமை காட்டுகின்றது.
கந்தபுராணத்தில் தாரகன், சிங்கன், சூரபத்மன் என்ற மூன்று அசுரச் சகோதரர்களின் கதை கூறப்படுகின்றது. தாரகன் உலகமே உண்மை என்று வாழ்ந்தவன். சைவசித்தாந்த நிலையில் அவனை “மாயா மலத்திற்கு” உவமிப்பர். சிங்கன் கன்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; அவனைக் “கன்ம மலத்திற்கு” உவமிப்பர். சூரபத்மன் “ஆணவ மலம்”. இறுமாப்பே அவன் இயல்பு.
இம்மூவரையும் முறையே அழித்தமை ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே இயல்பாகச் செய்ய வல்ல பெருஞ்சிறப்பு.
‘தன்னைத் தான் காதலாகில் எனைத் தோன்றும்
துன்னற்க தீவினைப் பால்’
என்பது வள்ளுவர் மொழி.
அதாவது ‘நீ உன்னை விரும்பி, உனக்கு நன்மையை விரும்பி, தீவினை ஏதும் செய்யாமல் இருப்பாயாக’ என்று அறிவுறுத்துகிறார். சூரனோ எல்லா விதத் திறனும் அறிவும் உடையவனாய் இருந்தும், இறையருள் பெற்றவனாய் இருந்தும், தீவினை செய்து தன்னைத் தானே அழித்துக் கொண்டமை வள்ளுவர் வாக்கிற்குத் தக்கச் சான்றாகும்.
இயற்கையும் தெய்வமே
மூவுலகிற்கும் முதல்வன் குழந்தையானான். தேவர்களின் வேண்டுகோளின் படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பிறந்து ஆகாயத்தில் தவழ்ந்து வாயுவாலும் அக்கினியாலும் தாங்கப் பெற்று ப்ருதிவியிலே ‘சரவணப்பொய்கை’ ஜலத்திலே குழந்தையாய் மாறியது என்று இப்புராணம் சொல்லுகிறது. இப்படிச் சொல்வது பஞ்சபூதங்களினூடாக இறையாட்சியை அவதானிக்கச் செய்கிறது. முருகனின் தோற்றத்தில் பஞ்சபூதங்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது.
ஆலய கும்பாபிஷேகக் கிரியைகளில் ஆகாயச் சூரியனிலிருந்து ‘சூரியாக்கினி’ என்ற நெருப்புப் பெறப்படுகிறது. அந்த அக்கினி மண்ணில் உள்ள குண்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டு வாயுவின் துணையுடன் வளர்க்கப்பெறுகிறது; பின், அதனை கும்பஜலத்தில் இணைத்து வழிபாடாற்றுவதுடன், இறுதியில் இறை திருவுருவத்தில் நீரால் அபிஷேகித்து இறைசாந்நதித்யம் உண்டாகப் பிரார்த்திக்கப்படுகிறது. இதைப் பஞ்சபூதங்கள் இணைந்து செயல்படும் நிகழ்வோடு இணைத்து நோக்கலாம்.
இந்த இடத்தில் ‘ஒருதிரு முருகன் வந்து உதித்தனன்’ என்று கச்சியப்பர் குறிப்பிடுவார். அதாவது என்றுமுள்ள இறைவன் இந்த வேளையில் முருகனாக உதித்தனன். (காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கிறான். ஏனெனில், அவன் முன்னரே இருப்பவன்.

                         
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.

புதன், 5 நவம்பர், 2014

அபூர்வ ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள் !






 உபாசனையைப் பலர் பற்றி பலவாறு சொல்லி இருந்தாலும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எமது பதினாறு வயதிலிருந்து செய்த உபாசனையால் பெற்ற அனுபவத்தாலும், ஜீவ நாடி மூலம் கிடைக்கும் செய்திகளாலும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஏதெனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம். அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம். மனதை ஒருமுகப்படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை. யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார். அப்படி மனதை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. எனவெ ஏதாவது ஒரு உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர். விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அருள் சாதனங்கள் எனப்படும். நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான். அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. நவக்கிரகங்களின் கதிர் வீச்சை பிரதிபலிக்கும் நவ ரத்தினங்கள், எண்கள், வண்ணங்கள் மற்றும் மூலிகைகள் போலவே நமது அருள் ஆற்றலை பிரதிபலிப்பது அருள் சாதனங்கள் ஆகும்.

எனவெ அனைத்து அருள் சாதனங்களையும் பயன்படுத்தி ஆத்ம சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தியானம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்கஅருள்சாதனங்கள்உதவும். தியானம் என்பதுமனதை இறைவனிடம் வைத்துமனதில் இறைவனின்உருவத்தையே பதித்துமந்திர ஜபம் செய்வதுதியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்துதியானம் செய்வது சிறப்புஜன சந்தடியோவேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாதுஏதெனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும்பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்கிறது. எனவெ எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. ஜபம்செய்ய நதிக்கரைமலைபுனித தலங்கள்சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை

பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம். ஜபம் செய்ய ருத்ராட்சம்மணிமாலைதாமரை மாலைபவழம் போன்ற மாலைகளும்முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன.  முக்கியமாகமனம்  இறைவனிடம் இருக்க வேண்டும்அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டுஉட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால்அது தியானமாகாதுஇத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது. இப்படி பண்ணிரண்டு தாரணை சேர்ந்து தியானமாக மாறுகிறது. கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.

1. உங்கள் உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்அதை ஜாதகம் மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ கண்டறிந்து கொள்ளவும். குரு மிக மிக அவசியம். குரு முறைப்படி உபாசிப்பதே மிக உயர்வானது. யாரை குருவாக எற்றுக் கொள்வது யாரிடம் தீட்சை பெறுவது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையான ஆர்வம் இருப்பின் குரு உங்களைத் தேடி வருவார்.யார் உங்களது ஆத்மாவை கவருகிறாரோ அவரை குருவாக எற்றுக் கொள்ளலாம். ஜீவ சமாதி ஆகியுள்ளவர்களை அதில் நீங்கள் விருப்பப்படுபவரை முதலில் மானசீக குருவாகக் கொண்டு அவரிடமே ஒரு உயிருடன் உள்ள குருவைக் காண்பிக்கச் சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.


2.உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை மணி முதல் மணி வரை முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும்நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தீவிர சாதனை புரிய பிரம்ம முஹூர்த்தத்தில் உபாசிப்பது விரைவான பலனைத் தரும். நடு நிசி பூஜையைத் தவிர்க்கவும்

3.வீட்டிலஒருகுறிப்பிட்ட இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுங்கள்அது பூஜை அறையாகவோவேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம்பூஜை அறை இல்லையென்றால்இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும்தலைகழுத்துமற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்கைகள் மடி மீது இருக்கட்டும்கண்களை மூடிக் கொள்ளவும்.  வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.

5. உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.

6. மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

7. உங்கள் உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும்உங்கள் கோரிக்கை என்னவோ அதைப் பிரார்த்திக்கவும்இதற்கு சங்கல்பம் என்று பெயர். எவன் ஒருவன் சங்கல்பிக்கிறானோ அவன் சிந்திக்கிறான் பின்னர் செயல்படுகிறான் அதன் மூலம் சாதிக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவும்.

8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும்மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை  தெய்வத்திடம் வைராக்கியத்துடன் நிறுத்தவும்.

9.பின்புகுருவிடம்உபதேசம்பெற்றமந்திரத்தை ஜபம் செய்யவும்குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும்சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008, 10008, 10008 ஆக இருக்கட்டும்.

10. உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும்.
11. 
எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால்தான் பலன் தர ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

12. தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்

13. குருவிடம் அவ்வப்போது சத்-சங்கம் வைத்துக் கொள்ளவும். அது மேலும் உபாசனை சித்திக்கு வழி கொடுக்கும்.
ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று பகவத் கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

·         சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

·         பூஜை அறைபசுக்கொட்டகைநதிதீரம்கடற்கரைஆசிரமம்ஆலயம்தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
·         கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும்தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும்அக்னி மூலை (தென்கிழக்குநோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும்மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும்ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும்கிழக்கும்வடக்கும்நிஷ்காமியமானது.

·         சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றதுபத்ராஸனம்முக்தாஸனம்மயூராஸனம்ஸித்தாஸனம்பத்மாஸனம்ஸ்வஸ்திகாஸனம்வீராஸனம்கோமுகாஸனம்சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம்பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

·         கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதிவெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்திசிவப்பு வஸ்திரம் வசியம்கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

இது சாத்வீக உபாசனை முறையாகும். இது மாந்திரீகம் அல்ல. எந்த ஒரு தவறான நோக்கிலும் பயன்படுத்தக்கூடது. மற்றவர்க்குச் செய்கின்ற தீமை திரும்ப வந்து உங்களையே தாக்கிவிடும். ஒரு சிலர் குரளி, எட்சினி, ஜின் போன்ற தேவதைகளை மந்திர உபாசனை மூலம் வசியப் படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள்அவா்களால் ஒருவரை ஆன்மிகத்தில் உயா்த்த முடியாதுஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாதுதெய்வீக அனுபவங்களைக் கொடுக்க முடியாதுஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள் போலவும்ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு உலா வருவார்கள்மோடி மஸ்தான் வித்தை செய்பவா்கள் யார்யட்சணி வித்தை செய்பவா்கள் யார்மந்திர சித்திகள் மூலம் அற்புதம் செய்பவா்கள் யார்உண்மையான மகான்கள் யார்சித்தா்கள் யார்தெய்வ அவதாரங்கள் யார்என்றெல்லாம் புரிந்து கொள்ள ஆன்மிக அறிவு வேண்டும்அனுபவ அறிவு வேண்டும்எனவே ஒரு சரியான குருவைத் தேர்ந்த்தெடுக்க பூர்வ புண்ணியமும் சிறந்த அனுபவமும் வேண்டும்.இதற்கு கீதையில் சொல்லியபடி நமது உள்ளத்தில் இறைவன் இருக்கிறார். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். நமது   பக்குவத்திற்கு தகுந்தபடி குருவைக் காட்டுகிறார். மாயை எனும் திரையால் தன்னை முழுதும் மறத்துள்ளார்.


எனவே முடிந்த அளவு மற்றவர்க்கு நன்மை செய்வோம். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பது வள்ளுவன் வாக்கு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் எல்லா உபாசனைகளுக்கும் பொருந்தும். முதலில் குருவிடம் பெற்ற மந்திரத்தை ஒரு லட்சம் முறை உச்சரித்து உரு ஏற்றிய பின்பே அருள் சாதனங்களைக் கையாள வேண்டும். ஒரே நாளில் ஒரு லட்சம் உச்சரிப்பது என்பது உடலில் காந்த சக்தியை திடீரென கூட்டி விடும் என்பதால் தினசரி 108 முறை காலை, மாலை உச்சரித்து உரு எற்றுவதே சிறப்பு. இப்போதெல்லாம் சுமார் ஒரு மணி நேரத்தில் எல்லா வகையான சித்தியும் கிடைத்து விட வேண்டும் என்று பலர் எதிர் பார்க்கிரார்கள் ஆனால் உபாசனை உயர்வான மார்க்கம், இது சித்தர்கள் கண்ட சாத்வீக முறை. பொறுமை மிக மிக அவசியம் தேவை. நாம் உச்சரித்த மந்திரங்கள் ஒரு லட்சத்தை தாண்டிய பின்னர் மேலே சொன்ன அருள் சாதனங்களைக் கையால் தொட்ட உடனேயே நம்மிடம் உள்ள சக்தி அலைகள் உடனடியாக அதில் பதிந்து அதை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு உடனடியான நல்ல பலன்கள் கிடைகின்றன. எனவேதான் மஹான்கள் தொட்டு ஆசிர்வாதம் செய்த விபூதி, எலுமிச்சை போன்றவைகள் அருள் நிறைந்து அதன் மூலம் பல்வேறு அதிசயங்கள் நடக்கின்றன. மந்திர உரு இல்லாமல் அருள் சாதனங்கள் வேலை செய்யாது. சாதரமாண விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதியில் நமது கை பட்டவுடன் உடனடி நற்பலன்கள் கிடைக்கிறது. அனைத்து விதமான அருள் சாதனங்களையும் விரிவாகப் பார்ப்போம். முதலில் விபூதியைப் பற்றிப்  பார்ப்போம். விபூதி குறித்து ஏராளமான தகவல்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் ஒரு உபாசகர் விபூதி என்கிற அருள் சாதனத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை குறிப்பாகப் பார்க்கலாம்.
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்அவை
1.   கல்பம்
2.   அணுகல்பம்
3.   உபகல்பம்
4.   அகல்பம்
கல்பம்:
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்பஞ்ச பிரம்ம மந்திரங்களை தக்க குரு மூலம் அறிந்து கொள்ளவும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தின் அன்று இந்த கல்ப விபூதி விற்பனைக்குக் கிடைக்கிறது என்ற தகவலை இந்த கட்டுரை எழுதும் போது ஒரு நண்பர் இந்த தகவலைச் சொன்னார்.
அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்துபின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
இதில் கல்பம் என்று சொல்லப்படும் வகையான விபூதியே மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம். வியாபர நோக்கில் எருமை போன்ற விலங்குகளின் சாணமும் விபூதி தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த விபூதியை மந்தரித்து கொடுத்தால் எந்த நற்பலனையும் உபாசகர்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே நீங்களே கல்ப விபூதியை தயார் செய்வதே சிறப்பு என்பது எனது கருத்தாகும். பொதுவாக விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. நல்ல ஒரு மஹானால் தொடப்பட்ட விபூதி எந்த ஒரு நறுமணமும் கலக்காமலே மிகச் சிறப்பான வாசனையைத் தருவதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.சில சித்தர்கள் அரிய வகையான மூலிகைகளை விபூதியில் கலந்தும் பயன்படுத்தி பல காரியங்களைச் சாதித்துள்ளார்கள். அவற்றையும் குரு மூலம் தெரிந்து கொள்வதே சிறப்பான முறையாகும்.
  விபூதியை ஐஸ்வர்யம் என்று சொல்வர்செல்வத்தை அளிப்பது விபூதிநம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், “ரட்சை’ என்ற பெயரும் விபூதிக்கு உண்டுவிபூதியில் உயர்வானது, “அக்னி ஹோத்ரம்’ செய்து கிடைக்கும் விபூதிஇது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும்அதற்கடுத்துபசுஞ் சாணத்தால் வரட்டி தட்டிபசு மாட்டின் கோமியத்தால், “விரஜா’ ஹோமம் செய்துவீட்டிலேயே மந்திரத்துடன் தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது.
புருவத்தின் நடுவில் ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக ஜோதி தெரிவதை யோகியர்கள், சித்தர்கள், மஹான்கள், முனிவர்கள், ரிஷிகள் கண்டு சொல்லி உள்ளார்கள். அவ்விடத்தில் தியானம் கைகூடி ஜோதி தெரிய வேண்டுமென்பதற்காகவே சந்தனம்குங்குமம்திருநீறுதிருமண் முதலியவற்றினை இடுவர்மந்திர உருப்பெற்ற விபூதி ஒருவரின் ஆத்ம ஜோதியைத் தரிசிக்க வைக்கும். இதுவும் ஒரு வகையான தீட்சை ஆகும்.
 இறைவன் படைப்பில் நமது மனித உடல் ஒரு கோவிலாகும். அதில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம்அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படவும் அதே சமயம்உள்ளிழுக்கவும் செய்யும்ஏதெனும் ஒரு பொருளை புருவ மத்தியின் அருகே கொண்டு வர ஒருவித ஈர்ப்பு தோன்றுவதை நாம் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
புருவ மத்தியில் விபூதியை வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை விபூதி சரியாகச் செய்கிறது. அதை  அப்படியே கண்களை மூடி தியானம் செய்ய உள் ஒளி பிரகாசமாகத் தெரியும். உபாசகர்கள் சூரிய நமஸ்காரத்தை தினசரி செய்வது மிக மிக அவசியம். குறிப்பாக ஜோதிடர்கள் உபாசனை இல்லாமல் ஜோதிடம் சொன்னால் மற்றவர்களது கர்ம வினை அவர்களைப் பாதிக்கும். எனவே உபாசனை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்.
  நமது கண்களுக்கு ஏராளமான சக்திகள் உண்டு. அதைவிடப் பார்வைக்கு அதிக சக்தி ஊண்டு. மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும்அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம்மனோ தத்துவம்ஹிப்னாட்டிஸம்மெஸ்மரிஸம் போன்றவற்றில் பார்வையும்,  எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறதுகண் திருஷ்டி என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதைத் தடுக்கவும் திருநீறு பயன்படும்.எனவேதான் விபூதியைக் காப்பு என்று சொல்கிறோம்.
புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பிட்யூட்ரி சுரப்பியைத் தூண்டச்செய்யும் இடமும் இந்த நெற்றி ஆகும் அந்த ஆக்ஞா சக்கரத்தைத் தியானம் செய்பவர்களுக்கு உடல்  வெப்பம் அதிகரிக்கும்அந்த சூடு தணிய  சந்தனம் பூசுவதும் வழக்கத்தில் உள்ளது..
விபூதி எல்லா வகையான தோசங்களையும் நீக்கும் தன்மை உடையது. சைவர்கள் விரும்பி அணியும் விபூதி எல்லா மதத்தினர்க்கும் நன்மை பயக்ககூடியது.அருள் மிக்க விபூதியை பின்வரும் விதிப்படி அணிவது சிறப்பானது.
வடதிசை அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுகீழே சிந்தாமல்வலது கையின் ஆள்காட்டி விரல்நடு விரல்மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்றுபூசிக்கொள்ளல் வேண்டும்எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும்முருக உபாசகர்கள் ஆறுமுகம்… ஆறுமுகம்… என்று ஆறு முறை கூறி அணிவது சிறப்பு. இதை அருணகிரினாதர் தமது திருப்புகழிழ் சொல்லி உள்ளார். அதை வரியார் சுவாமிகள் அடிக்கடி வலியுருத்திக் கூறியுள்ளார்.  நெற்றி முழுவதும் அல்லது மூன்று  கோடுகளாகத் தரிக்க வேண்டும்காலைமாலைபூசைக்கு முன்னும் பின்னும்ஆலயம் செல்வதற்கு முன்னும்இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்எனப்படும்மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்எனப்படும்.
மேல் கோடு சாம வேதம்நடுவில் உள்ளது யஜுர் வேதம்கீழே உள்ளது அதர்வண வேதம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது
ராஜ சின்னம் அணிந்தவனை எப்படி அரசன், “இவன் நம்மைச் சார்ந்தவன்’ என்று தெரிந்து கொள்கிறானோஅதே போலவிபூதி அணிந்தவனை சிவனும்திருமண் அணிந்தவனை விஷ்ணுவும்மஞ்சள் பூசிகுங்குமம் அணிந்த பெண்ணை மகாலட்சுமியும் இவர் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணி அனுக்ரகம் செய்கின்றனர்!
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றனஇந்த முறைப்படிதான் சிவன், அம்பாள், வினாயகர், முருகன் உபாசகர்கள் விபூதி தரிக்க வேண்டும்.
1.   தலை நடுவில் (உச்சி)
2.   நெற்றி
3.   மார்பு
4.   தொப்புளுக்கு (கொப்பூழ்சற்று மேல்.
5.   இடது தோள்
6.   வலது தோள்
7.   இடது கையின் நடுவில்
8.   வலது கையின் நடுவில்
9.   இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு

நவ நாகரிகமான இந்தக் காலத்தில் இம்முறைப்படி விபூதி தரிக்க இயலாதவவர்கள் முடிந்த அளவு உபாசனை செய்கின்ற பூஜா காலங்களிலாவது இம்முறைப்படி அணிந்து மற்ற நேரங்களில் புருவ மத்தியில் மட்டும் அணிந்து கொள்ளலாம்.
உபாசகர்கள் மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் முறைப்பபடி தயாரிக்கப்பட்ட விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதைப் பத்திரமாக ஒரு பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். அடுத்த முறை மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் அதே விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதே பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். இப்படியே செய்து வர வர ஜபம் செய்பவர்களது எண்ண அலைகள் விபூதியில் சேமிக்கப்படும். பின்பு ஏதேனும் ஒரு காரியத்திற்காக விபூதி கொடுக்கும் முன்னர் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்துக் கொடுக்க அந்த காரியம் அப்படியே பலிக்கும்.

நான் முன்பே குறிப்பிட்டபடி ஜபத்தை ஒரு முறை நதிக்கரையிலும், ஒரு முறை பசுத்தொழுவத்திலும், ஒரு முறை மலை உச்சியிலும், ஒரு முறை குருவின் பாதத்திற்கு அருகிலும். ஒரு முறை எதேனும் ஒரு சித்தரின் ஜீவ சமாதியிலும், ஒரு முறை கடற்கரையிலும் செய்வது மிக அதிக ஆற்றலைத் தரும். எங்கெல்லாம் சென்று ஜபம் செய்கிறோமோ அங்கெல்லாம் விபூதியை வலது உள்ளங்கையில் வைத்து உரு எற்றி வைத்துக் கொள்ளவும். இதன் நன்மைகள் கருதியே மேற்கண்ட இடங்களில் எல்லாம் ஆலயங்களை அமைத்து அற்புத வழிபாடுகளைச் செய்தார்கள் நம் முன்னோர்கள்.