வியாழன், 31 ஆகஸ்ட், 2017

புலவர் புராணத்தில் ஒரு துளி

 கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் புலவர் புராணம் என்ற பெயரில் 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்கள். இது மூவாயிரம் பாடல்களைக்கொண்டதாகும். அதில் ஒரு துளி பகழிக்கூத்தர் பற்றி நமது குருநாதர் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டது. 
                                                    
                                                               பகழிக்கூத்தர்
பகழிக்கூத்தர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர். இவர் இயற்றிய மற்றொரு நூல் சிந்தாமணிச் சுருக்கம்.  இவருடைய ஊர் ஏரல். இவ்வூர் திருநெல்வேலி அருகே உள்ள திருவைகுண்டத்தைச் சார்ந்த பெருங்குளத்துக்கு கிழக்கே உள்ளது.இவர் இயற்றிய நூல் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்.இவர் வைணவ மரபினர்.இப்பிள்ளைத் தமிழைப்பாடி வயிற்று நோய் நீங்கப் பெற்றார். இவர் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றி முடித்ததும் சபையோரில் சிலர் இவர் வைணவர் என்று மரியாதை செய்தாது புறக்கணித்தனர். அன்றிரவு முருகவேளுக்குச் சாத்தப்பட்டிருந்த ரத்ன பதக்கம் காணாமற்போக, விடியற் காலையில் கோயிலார் தேட, அது நித்திரை செய்து கொண்டிருந்த பகழிக்கூத்தரது கழுத்தில் அணியப்பட்டிருப்பதைக் கண்டு,அவர் மகிமையை அறிந்து தாம் செய்த அபசாரத்தை பொருத்தருளும் படி அவரைக் கேட்டுக் கொண்டு அவரைப்பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் வந்து மரியாதை செய்தனர்எனவேதான் சமயபேதங்கள் பார்க்காமல் அறுசமய வழிபாடுகளயும் செய்வது கௌமார நெறியாகும். இதை முறைப்படுத்தியவர் கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் இருந்து தோற்றம் பெற்றதே கோவை கௌமார மடாலயம் ஆகும். புலவர் புராணப் பாடலை நமது கௌமாரபயணம் வாசகர்கள் படித்து அருள் பெறுக.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் அருளிய பழிக்கூத்தரைப் பற்றி கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய புலவர் புராணம் எனும் நூலில் உள்ள பழம்பாடல்.

பூமாது போற்றும் புகழ்ப்பகழிக் கூத்தாவுன்
பாமாலை கேட்கயாம் பற்றோமோ- யேமம்
கொடுக்க வறியேமா கூற்றுவன்வா ராமற்
றடுக்க வறியேமா தாம்.
                            -புலவர் புராணம்

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
                 www.kaumaramutt.com
                     
படம்: எம்மதமும் சம்மதமாய் ஹஜ் கமிட்டி தலைவருக்கு பாராட்டு தெரிவித்த சிரவையாதீனம் அவர்கள். நன்றி: தினத்தந்தி

            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

முருகனை வணங்கினால் எல்லாமே தேடி வரும்

முருகனது உருவம் மனதில் தோன்றினால் போதும் நாம் எதுவும் அறியாமலேயே எல்லாமே நம்மைத் தேடி வரும். இதை ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தில் பாடி உள்ளார். அதை தமிழில் கோவை கவியரசு அவர்கள் பொருள் மாறாமல் பாடி உள்ளார்கள்.

ஜானாமி சப்தம் ஜானாமி சார்த்தம்
ஜானாமி பத்யம் ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்
                                  -ஆதிசங்கரர் புஜங்கம்
சொல்லேது பொருளேது கவியேது வசனந்
      துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
         எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
            திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே.    
                                                                                        -கோவை கவியரசு அவர்கள்

   உன்னைத் துதிக்கக் குற்றமற்ற சொல்லோ, பொருளோ, கவியோ, வசனமோ நான் அறிந்தவனல்லன். ஆயினும் உன் ஒப்பில்லா ஆறுமுகங்களுடைய பெருஞ்சோதி எனது நெஞ்சில் குடி கொண்டு நல்ல தேனாகிய பாட்டை ஊற்றெடுக்கச் செய்கிறது. என்பது இரண்டு பாடல்களின் பொருளாகும்.
எனவே நமது கௌமாரபயணம் வாசகர்கள் தங்களுக்கு எந்தவிதமான துன்பம் நேர்ந்த போதும் அருகில் உள்ள முருகன் ஆலயம் சென்று இந்த இரண்டு பாடல்களையும் மனமுருகிப் பாடினால் நமது தலைக்கணம் நீங்கி முருகனது பாதத்தில் சரணாகதி அடையும் மனநிலை வந்து முருகனது அருளால் நமது துன்பம் எல்லாம் தூர விலகி ஓடும்.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                       www.kumaramutt.com

படம்: கோவையில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தினை சுவாமிகள் கொடியசைத்து துவங்கியபோது.

              ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி


முருக வழிபாடு மிகவும் தொன்மையானது. முருகனை வழிபட்டு பேரருள் பெற்றவர்கள் ஏராளம்… ஏராளம்…காலங்கள் செல்லச் செல்ல நமது தொன்மையான முருக வழிபாடு விடுபடாமல் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றும் முருகனைக் குறித்து அருளாளர்கள் பாடிய தழிழ் என்றும் மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்றும் கோவை கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் எல்லா இடங்களிலும் தமது கருத்தைப் பதிவு செய்து வருகின்றார்கள். தமிழர்களின் பழமையான வழிபாடு தொடர நாமும் நம்மால் முடிந்த சேவைகளைச் செய்து முருக வழிபாட்டின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

 அந்த எண்ணத்தில்தான் சேவை விருப்பம் உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில்  பதிவு செய்யும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளோம். பதிவு செய்த பின் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலமையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தி முருக வழிபாடு குறித்து கருத்தரங்கள் நடத்தும் திட்டமும் இருப்பதால் வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிவபெருமான், சக்தி, விஷ்னு, விநாயகர், சூரியன், முருகன் என அறு சமயத்தையும் ஒரு சமயமாக வழிபடும் கௌமார நெறியில் நின்று தங்கள் வாழ்வையும் பிறப்பையும் நல்வழியில் செலுத்தும் வாய்ப்பாக இதை ஏற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                    www.kaumaramutt.com

            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

புதன், 30 ஆகஸ்ட், 2017

இனிய அறிவிப்பு

முருகப்பெருமானுக்கு என இருப்பது கௌமார மடாலயம். இந்த மடாலயம் கோவை சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ளது. 100 ஆண்டுகள் கடந்த மிகப்பெரும் பழமை பெற்றது இந்த மடாலயம். நான்காம் குருமஹா சந்நிதானமாக இருக்கும் தவத்திரு. முனைவர் குமரகுருபர சுவாமிகள் அவர்கள் ஆன்மீக, சமுதாய சேவை செய்ய விருப்பமுள்ளவர்களை ஒருங்கிணைத்து முருகப்பெருமானின் புகழை என்றும் பரப்பி முருகனுக்கே இருக்கும் கௌமார சமயத்தோடு ஆன்மீக சமுதாய சேவைகளைச் செய்யும் எண்ணமுடையவர்களை ஒன்று திரட்டி அவரவர்களின் பகுதியில் இருக்கும் முருகனது ஆலயங்களில் பல்வேறு விழாக்களை நடத்த திட்டம் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்கள். எனவே விருப்பம் இருப்பவர்கள் பின்வரும் இணைப்பைச் சொடுக்கி தங்கள் விவரங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.




                           www.kaumaramutt.com


இந்த இணைப்பில் சென்று கோவை கௌமார மடாலயத்துடன் இணைந்து ஆன்மீக, சமுதாய சேவை செய்ய விருப்பமா? என இருக்கும். அதன் கீழ் பதிவு செய்க என்பதை அழுத்தினால் தங்கள் விவரங்கள் கேட்கும். பதிவு செய்க.

                                          சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

சிரவையாதீனம் அவர்களின் 48ம் பிறந்த நாள் விழா

நமது சிரவையாதீனம் சுவாமிகளின் ஆகத்து 6-ல் 48-ம்ஆண்டு நாண்மங்கல விழாவில் மரம்நடு் விழா, 1500 , விதைபந்து வழங்குதல் மற்றும் நூல் வெளியீடு மற்றும் சிறப்பு பூசைகள் போன்றவை இனிதே  நடைபெற்றன.







சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

சிரவையாதீனம் 48 ம் நாண்மங்கல நாள் கவிதை

                   குருவிற்கு நாண்மங்கல நாள் விழா கவிதை


                          
குருவின் திருமேனி காண்டல் தெளிவாம்
குருவின் திரு நாமம் செப்பலும் தெளிவாம்
குருவின் திருவார்த்தை கேட்டலும் தெளிவாம்
குருவின் திருவுரு சிந்தித்தல் அதைவிட தெளிவாம்
குருவின் பெருமை இப்படிக் கண்டேன்
குருவின் அருளால் மூலன் மந்திரத்திலே
குருவை முழுமையையாய்க் கண்டேன்
குருவின் பெருமை கண்டேன் தெளிந்தேன்
குருவே இறைவனாய்க் கண்டேன் வியந்தேன்
குருவே குமர குருவே சுவாமிகளே சரணம்
சமயம் சிறக்க மலேசியா பயணம்
லட்சியத்துடனே லண்டன் பயணம்
வல்லமையுடனே வட நாட்டுப் பயணம்
சமயம் சிறக்க இப்படி இன்னும் பல பயணம்
கல்வி செழிக்க பள்ளிகள் எனவும்
சமயப்பணியொடு சமுதாயப் பணியும்
சீராய் சிறப்பாய் பேரும் புகழும்
சிறப்பாய் நாள்தொறும் வளரும் எங்கள்
குருவுக்கு அகவை நாற்பத்தி எட்டாம்
குருவைப் போற்றி எடுக்கும் திருவிழா
குருவின் அருளால் குருவைப் போற்றி
குருவே பரம்பொருள் கௌமார சமயம்
குருவின் சிரவையாதீனம் சீராய்
குருவின் அருளால் வையகம் போற்ற
குருவின் முதல் குரு குமரன் தன்னை
குருவின் அருளால் போற்றினேனே!!!
குருவாழ்க குருவே என்றும் துணை
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

                                   கவிதையாக்கம்:
                            ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குருபூஜை

11.07.2017 அன்று விழுப்புரம் திருவாமத்தூரில் உள்ள கௌமார மடாலயத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குருபூஜை மிகவும் சிறப்பாக நடந்தது. இந்த பூஜையை கோவை கௌமாரமடாலயம் சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபரசுவாமிகள் அவர்கள் சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

திரிவேணி சங்கமத்தில் சிரவையாதீனம்

திரிவேணி சங்கமம் நீராடல்


                                             சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!