செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தோரணமலை ஓர் அதிசயம் !









அகத்திய மாமுனிவர் மற்றும் தேரையர் சித்தர் தவம் புரிந்த புண்ணிய பூமியான தோரணமலை திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் இருக்கிறது.இந்த மலையில் முருகப்பெருமாள் அருள்பாலிக்கிறார்.

தலசிறப்பு:-

                     சித்தரான தேரையர் தவம் புரிந்ததால் இம்மலையை "தேரையர் மலை"
என்று கூறுகின்றனர்.இச்சாலையில் வாகனங்களில் போகும்போது தோரணமலை உடன்வருவது  போலவும்,மலை உச்சியில் இருந்து வெளியேறும் பாறையில் வழிந்தோடும் சுண்ணாம்பு கலவை "தாடி" யுடன் தேரையர் தவம் புரிவது போல காட்சி அளிப்பது வேறெங்கும் காணாத அற்புதம்.


குமரன் பெருமை :-

குன்று இருக்கும்  இடமெல்லாம் குமரன் இருப்பான்  என்பதை போல இங்கு அடிவாரத்தில் இருந்து 998 படிக்கட்டுகளை கடந்து மலை உச்சியில் குடி கொண்டுள்ளார்.மலை  ஏறும்போது வரும் மூலிகை காற்று மனதுக்கு இதமாகவும் 
அரோகரா கோஷம் மலை ஏற்றத்துக்கு பதமாகவும் இருப்பதை அனுபவரீதியாக உணரமுடியும்.

வற்றாத சுனைகள் :-

தோரண மலையில் 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் இருக்கின்றன.இதில் முக்கியமான சுனை ஒன்று முருகன் கோயில் அருகில் உள்ளது. ஊற்றில் தீர்த்தமாடிய பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆழமான சுனை ஊற்றில் கோடையிலும் தண்ணீர் வற்றுவதில்லை.மூலிகை குணம் நிறைந்த இசுனை நீரை பருகிவர தீராத நோய்கள் குணமாகிறது.

தோரண மலையில் சித்தர்கள் தவம் புரிந்த இடங்களில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர்.சுவாமி தரிசனத்துடன்  தியானமும் நடப்பது தோரண மலையில் மட்டுமே.

குன்றாத செல்வம்,குறைவில்லாத கல்வி,வளமிக்க வாழ்வுதரும் தோரண மலை முருகனை வழிபடுவோம்.

                                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் 

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம்

எமது குருநாதர் ஆசிர்வாதத்தோடும் ஞானஸ்கந்தமூர்த்தியின் அருளாசியோடும்,பக்தர்களின் ஆதரவோடும், கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
தலைமையில் 29.08.2015 சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தது


கொங்கு நாட்டில் இதுவரை எந்த ஒரு ஆலயத்திலும் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானைக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடந்ததாக சான்று இல்லை .இந்த அற்புதமான திருமண  விழாவில் கலந்துகொண்ட  அனைவருடைய மனதையும்  நெகிழவைத்தது.


விழாவில் அடியார்கள் ஒரு சிலர் வள்ளி  தெய்வானையை மணப்பெண்ணாக பாவித்து  பெண்  வீட்டார் பக்கமும்,மற்றும் சிலர்  முருகப்பெருமானை மணமகனாக  பாவித்து ஆன் வீட்டார் பக்கமும் நின்று திருக்கல்யாண வைபவத்தை  சிறப்பாக நடத்தி வைத்தனர்.

வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நிகழ்வில் இன்னும் சில படங்கள்

F:\skandan\DSC_0390.JPG


கௌமார மடாதிபதிக்கு நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் மற்றும் சிவாச்சாரியர்களால் பூரண கும்ப மரியாதை செய்வித்து வரவேற்புக் கொடுக்கப் பட்டது.
F:\skandan\DSC_0397.JPG
ஞானஸ்கந்தாசிரமத்திற்கு மடாதிபதி வருகை தரும் காட்சி

F:\skandan\DSC_0533.JPG
   
   ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் கௌமார மடாதிபதிக்கு  மாலை அணிவித்து        மரியாதை செலுத்தும் காட்சி.


F:\skandan\DSC_0543.JPG
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் திருக்கல்யாண வைபவத்திற்கு வந்திருந்த பக்தர்களை ஆசிர்வதிக்கும் காட்சி .


ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் !