புதன், 1 ஜூலை, 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 32 !

 சென்ற பதிவின் தொடர்ச்சி




இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில்நடந்து, சுமார் 8 மணி நேர பயணத்தில்  அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.

அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம்.

மீண்டும் அடுத்த நாள் 16.4.2015 வியாழக்கிழைமை அன்று  சுமார் 2 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைந்தோம். பின்பு தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைந்தோம்.

  இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை' என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது. இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியேதுன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி,
நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடைந்து அளவிலாத ஆனந்தம் அடைந்தோம் .

 அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை எங்களுக்கு ஏற்பட்டது.

படம்:3 பொதிகைமலை உச்சியில் உள்ள அகத்தியர் அருகில் நமது ஜீவ நாடி சுவடி

  இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்பட்டு ஒருவிதமான பயம் கலந்த பக்தியை தந்தது

இப்படி ஆனந்த அனுபவத்துடன், நாங்கள்  கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குரு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்து. அகத்தியர் மீது விபூதி அபிஷேகம் செய்த பின்பு அந்த விபூதியை எடுத்து எங்கள் நெற்றியில் பூசுமாறு ஒருவர் கேட்க முருகா!!! அகத்தீசா என நான் உரக்கக் கூறி வந்திருந்த அனைவர் நெற்றியிலும்
அபிஷேக விபூதியைப் பூசி விட்டேன். மின்சார சக்தி தங்களது உடலில் பாய்ந்ததாக அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்.


பின்பு கூட்டு வழிபாடு நடைபெற்று அங்கேயே பொதிகை மலை உச்சியில் தென்றல் தவழ ஜீவ நாடி படிக்கப் பட்டது.திடீரன மழை அதிகமாகி நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியதால் தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, ஐந்து மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, தூங்கி விட்டோம். அடுத்த நாள் 17.4.2015 காலையில் பொதிகை சிகரத்தை வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 7 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெற்றது.

”ஆசிரெனவாதம் உண்டு

அகத்தியன் ஆசியும் உண்டு

அற்புதமும் நடக்கும்

பொதிகைமலை செல்லவும் கூடும்

அதற்கு முன்பு சதுரகிரி செல்லு

முன் சேந்தமங்கலம் தரிசனம்

அவசியமாமே கந்தன் கூற்று கச்சிதம்

ஆசி! ஆசி! ஆசி! ”

என்று முருகப் பெருமான் நாடியில் உரைத்தவாறே சேந்தமங்கலம் மற்றும் சதுரகிரி சென்ற பின்பு எந்த வித பெரிய முயற்சிகள் ஏதும் இல்லாமலேயே பொதிகை மலைப் பயணம் எளிமையாக அமைந்தது எனலாம். ஏற்கனவே பொதிகை மலை சென்று வந்தவர்களுக்கே அதன் கடினம் புரியும். அவ்வளவு எளிதானதல்ல என்பதை நான் இப்போதும் உண்ர்கிறேன். ஜீவ நாடியில்
சொன்னபடி கந்தன் கூற்று கச்சிதம் என்பதை என்னுடன் வந்த அனைவரும் உணர்ந்து ஆச்சரியப் பட்டனர் எனலாம்.

(தொடரும்...)

                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

4 கருத்துகள்:

  1. ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

    பதிலளிநீக்கு
  2. ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்,
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்,
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்,
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்,
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்,
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. Sir, which temple in Senthamangalam is referred to here? Thank you,

    பதிலளிநீக்கு