செவ்வாய், 30 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 32 !




சதுரகிரி பயணம் முடித்த பின்பு பொதிகைமலை செல்ல வேண்டும் அங்கு நமது ஜீவ நாடியை வைத்துப் பூஜிக்க வேண்டும் என்ற ஆவல் மீண்டும் கொழுந்து விட்டு எரிந்தது.

1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை தமிழகம் வழியாகச் செல்ல அனுமதி வழங்கியது.

  இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல மீண்டும் அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. அதுவும் அனுமதி கிடைப்பது மிகவும் சிரமமாக எங்களுக்கு இருந்தது.

இந்த நிலையில்மதுரை இறையருள் மன்றம் பரமசிவம் அவர்கள் நீண்ட நாட்களாக என்னிடம் ஜீவ நாடி கேட்டு அதன் படி நடந்து வருபவர். அவர் சதுரகிரியில் சிவ சங்கு ஐயா அவர்களின் ஆஸ்ரமத்தில் இரவில் தங்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அதேபோல் அவரிடம்  இந்த பொதிகைமலை பயணம் குறித்துச் சொல்லி இருந்தேன். அதற்கு தகுந்த நபர் மும்பை
கணேசரத்தினம் ஐயா அவர்கள்தான் என எண்ணி அவரிடம் என்னைப் பற்றியும் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி இதுவரை நடத்தி வந்த அதிசயங்கள் பற்றியும் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்.

நான் உங்களைப் பொதிகை மலைக்கு என்னுடன் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்று மும்பை கணேச ரத்தினம் அவர்கள்  சொல்ல அவர்தான் உன்னை கூட்டிச் செல்லும் சரியான நபர் என முருகப் பெருமான் ஜீவ நாடியில் சொல்ல இத்தனை அதிசயங்களையும் அந்த அகத்தியரும் முருகப்பெருமானும் நடத்தி இருக்கிறார்கள்.

மும்பை கணேச ரத்தினம் அவர்கள் சிறந்த அகத்தியர் அடியவர் ஆவார். இவருக்கு அகத்தியர் பல திருவிளையாடல்களை நடத்தி இருக்கிறார். இவர் ஒருமுறை பொதிகைமலை செல்லும் போது ஒரு தேங்காயை உடைத்து அகத்தியர் அருளால் கொட்டுகின்ற மழையை நிறுத்தி உடனே சூரியனை தோன்றச் செய்து பின் பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசனம் செய்தவர்.

பொதிகை மலையில் அகத்தியராலேயே கொடுக்கப்பட்ட யோக தண்டத்தை வைத்து பூஜித்து வருபவர். ஒருமுறை இவர் திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்த சென்ற போது இவரது தலையில் முடியெடுக்க தீர்த்தம் போட இவர் மீது ஒரு சொட்டு தண்ணீர் கூட பட முடியாமல் தெளிக்கின்றவர் தலை மீதே அந்த தண்ணீர் கொட்டியது. என்வே மொட்டை அடித்துக் கொள்ளாமல் சென்ற இவர் முன்பு பெரிய தாடியுடன் அகத்தியர் தோன்றி காட்சி கொடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக இவருக்கு ஆண்வாரிசு இல்லாத குறையை அந்த அகத்தியரே போக்கி வாரிசு தந்திருக்கிறார். அந்த ஆண் குழந்தைக்கு அகத்தியன் என்ற பெயரை வைத்திருக்கிறார். அந்த குட்டி அகத்தியனும் என்னுடம் பொதிகைமலைக்கு வந்து ஜீவ நாடியில் முருகன் மற்றும் அகத்தியரின் ஆசியைப் பெற்றான். அதேபோல் கருத்தடை செய்து கொண்ட ஒரு பெண் அகத்தியர் ஆசியால் கருவுறும் பாக்கியத்தைக் கொடுத்து இருக்கிறார் இவர் இதுவரை எங்கும் நாடி கேட்கவில்லை. இரு இடத்தில் கேட்டு இவருக்கு சரியாக வரவில்லை. இந்த நிலையில்  அவரிடம் 24.01.2015 அன்று அகத்தியர் நீ கடுக்கண் போடு பச்சை, சிவப்பு என்று சொல்லி இதன் சூட்சுமம் விரைவில் ஒருவர் அறிவிப்பார் என்று சொல்லியிருக்கிறார். உடனே தற்செயலாக மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம் என்னைப் பற்றி இவரிடம் சொல்ல நமது ஜீவ நாடி உண்மை என்று இவரிடம் அகத்தியர் உரைக்க  உடனே என்னைத் தொடர்பு கொண்டார்.


 நானும் முருகனிடம் உத்தரவு கேட்க என்  சீடனிவன் உடனே படி என முருகனும் உரைக்க 25.1.2015 ஞாயிறு சஷ்டி அன்று ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி படிக்கப்பட்டது. எனக்கும் ஜீவ நாடியை பொதிகை மலையில் வைத்து வர வேண்டும் என்ற உத்தரவு வர அவருக்கும் என் மீது ஒரு வித ஈர்ப்பு வந்து எனக்கும் எனது சீடர்கள் சிலருக்கும் கேரள வனத்துறையில் அனுமதி வாங்கி பொதிகை மலை செல்ல் ஏற்பாடுகளை கணேச ரத்தினம் அவர்கள் செய்தார். 14.4.2015 மன்மத வருடம் முதல் தேதி யில் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் நடத்திய முப்பெரும் விழாவை முடித்த உடனேயே எனது பொதிகைமலைப் பயணம் தொடங்கியது.

பொதிகை மலை செல்லும்  அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி,சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.

படம்: பொதிகை மலைப் பயணம் என்னுடன் ஞானஸ்கந்தாஸ்ரம அடியவர்கள்

அகத்திய முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள
வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது. 14.4.2015 ம் தேதி இரவு தென்காசியில் உள்ள அகத்தியர் பக்தர்களான வக்கீல் வீட்டில் தங்கினோம். 15.4.2015 புதன் கிழைமை காலை 5 மணிக்கு பயணம் ஆரம்பமானது. 16.4.2015 வியாழக்கிழைமை மதியம் குரு ஹோரையில் நமது ஜீவ நாடி அகத்தியப் பெருமானிடம் வைத்துப் பூஜிக்கப்பட்டது.

  முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

                                                      ...தொடரும்  பல அதிசயங்களுடன் 

1 கருத்து:

  1. ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்

    பதிலளிநீக்கு