செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தோரணமலை ஓர் அதிசயம் !









அகத்திய மாமுனிவர் மற்றும் தேரையர் சித்தர் தவம் புரிந்த புண்ணிய பூமியான தோரணமலை திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் இருக்கிறது.இந்த மலையில் முருகப்பெருமாள் அருள்பாலிக்கிறார்.

தலசிறப்பு:-

                     சித்தரான தேரையர் தவம் புரிந்ததால் இம்மலையை "தேரையர் மலை"
என்று கூறுகின்றனர்.இச்சாலையில் வாகனங்களில் போகும்போது தோரணமலை உடன்வருவது  போலவும்,மலை உச்சியில் இருந்து வெளியேறும் பாறையில் வழிந்தோடும் சுண்ணாம்பு கலவை "தாடி" யுடன் தேரையர் தவம் புரிவது போல காட்சி அளிப்பது வேறெங்கும் காணாத அற்புதம்.


குமரன் பெருமை :-

குன்று இருக்கும்  இடமெல்லாம் குமரன் இருப்பான்  என்பதை போல இங்கு அடிவாரத்தில் இருந்து 998 படிக்கட்டுகளை கடந்து மலை உச்சியில் குடி கொண்டுள்ளார்.மலை  ஏறும்போது வரும் மூலிகை காற்று மனதுக்கு இதமாகவும் 
அரோகரா கோஷம் மலை ஏற்றத்துக்கு பதமாகவும் இருப்பதை அனுபவரீதியாக உணரமுடியும்.

வற்றாத சுனைகள் :-

தோரண மலையில் 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் இருக்கின்றன.இதில் முக்கியமான சுனை ஒன்று முருகன் கோயில் அருகில் உள்ளது. ஊற்றில் தீர்த்தமாடிய பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆழமான சுனை ஊற்றில் கோடையிலும் தண்ணீர் வற்றுவதில்லை.மூலிகை குணம் நிறைந்த இசுனை நீரை பருகிவர தீராத நோய்கள் குணமாகிறது.

தோரண மலையில் சித்தர்கள் தவம் புரிந்த இடங்களில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர்.சுவாமி தரிசனத்துடன்  தியானமும் நடப்பது தோரண மலையில் மட்டுமே.

குன்றாத செல்வம்,குறைவில்லாத கல்வி,வளமிக்க வாழ்வுதரும் தோரண மலை முருகனை வழிபடுவோம்.

                                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் 

1 கருத்து:

  1. I like naadi sastra very much...I have been following the same for past 6 yrs.This very great skanda naadi prediction are coming true word by word.Very greatful to jagadishwaran iyya for this.Om gnana skanda murthiye namaha.

    பதிலளிநீக்கு