திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம் !




                                                 தவத்திரு.குமர குருபர சுவாமிகள்

வருகின்ற 29.08.2015 அன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்க இருக்கிறது. அந்த விழாவை கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் தலைமை ஏற்று சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பதையும் கௌமாரபயணம்
வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



                                          ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்  ஞானஸ்கந்தாஸ்ரமம்


நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அடிக்கடி இந்த கௌமார மடம் பற்றி வருவதும் இப்போது அதன் ஆதீனமே இந்த திருக்கல்யாண நிகழ்வைத் தலைமை தாங்கி நட்த்துவதும் அந்த முருகன் திருவிளையாடல் என்பது நிரூபணமாகிறது. கௌமாரப் பயணம் வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு சேர குரு அருளையும் திருவருளையும் பெற 29.08.2015 அன்று சனிக்கிழமை ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் வரும் படி அழைக்கப்படுகிறார்கள்.



ஈரோட்டில் இருந்து பவானி வழியாக அந்தியூர் வர வேண்டும். அந்தியூரில் இருந்து புதுக்காடு எனும் ஊரில் உள்ள மந்தை பஸ் ஸ்டாப் வர வேண்டும். மந்தையில் இருந்து விலாங்குட்டை எனும் ஊர் செல்லும் வழியில் மலைக்காரன் தோட்ட்த்தில் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. வாசகர்கள் இந்த வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

                         
                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

2 கருத்துகள்: