புதன், 29 ஏப்ரல், 2015

முப்பெரும், விழா முடி சூடிய திருவிழா ! ! !


14.04.2015 செவ்வாய்க் கிழைமை அன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுக்காடு விலாங்குட்டை மலைக்காரன் தோட்டத்தில் அமைந்துள்ள ஜீவ நாடி புகழ் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருக்கோவிலில் அப்ஸரா பப்ளிகேஷன்ஸ்  முப்பெரும் விழா இனிதே நடை பெற்றது.

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி படிக்கும் கலையைக் கைவரப்பெற்ற எனது குரு நாதர் "ஜீவநாடி கலையரசு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்" அவர்கள் எழுதிய மூன்று நூல்களை உலகப் புகழ் ஜோதிட மேதை” பண்டித காழியூர் நாராயணன் அவர்கள் வெளியிட்டார்.

கௌமாரப் பயண வாசகர்கள் பலர் முப்பெரும் விழாவிற்கு ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களுக்கு நன்றிகள் பல.



எனது குரு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் உலகப் புகழ் ஜோதிட மேதை பண்டித காழியூர் நாராயணன் அவர்களுக்கு ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார் அருகில் திருமுருக சுரேந்திரன் அவர்கள்


ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள்:

  1. துல்லிய பலன்களை மிக எளிதாகக் கணித்திட உதவும் திம்ப சக்கரம்,
  2. இறப்பின் இரகசிய புண்ணிய சக்கரம்,
  3. ஞானம் அருளும் காலக்கண்ணாடி.



உலகப் புகழ் ஜோதிட மேதை பண்டித காழியூர் பண்டித காழியூர் நாராயணன் அவர்களுடன் எனது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் அருகில் திருவருள் சக்தி குருவருள் ஜோதிடம் ஆசிரியர் ஸ்ரீ ராஜீ அவர்கள்
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் எங்கு கிடைக்கும் எனப் பல கௌமாரப் பயண வாசகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர். அவர்கள் அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் திருவருள் சக்தி குருவருள் ஜோதிடம் ஆசிரியர் திரு.ராஜீ அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவரது கைப்பேசி எண்:9710421880.


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக