வெள்ளி, 16 ஜூன், 2017

கௌமார அமுதம் மாத இதழ்

 கௌமார அமுதம் மாத இதழ்
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ளது முருகப்பெருமானுக்கே என உருவான கௌமார மடம். முருகப்பெருமானைப் பரம்பொருளாகக் கொண்டு அறு சமயத்தையும் ஒரு சமயமாகக் கருதி நெறி காட்டும் மார்க்கமே கௌமாரம் ஆகும். கோவை கௌமார மடம் உருவாகி நூறாண்டுகளுக்கும் மேல் ஆகின்றது. தற்போது நான்காம் சந்நிதானமாகிய தவத்திரு. முனைவர் குமரகுருபர சுவாமிகள் அவர்கள் அருட் செங்கோல் செலுத்தும் இந்த நேரத்தில் மடத்தில் இருந்து பல ஆண்டுகளாக கௌமார அமுதம் எனும் மாத இதழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது. பெரும்புலவர் திரு.ப.வெ.நாகராஜன் அவர்கள் குழுவில் நமது சிரவையாதீனம் சுவாமிகள் சிறப்பாசிரியராக இருந்து தண்டமிழ்க் கடவுள் முருகனின் தமிழ்பாடி தமிழ்ச்சுவை சொட்ட நாமெல்லாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டி வருகின்றது கௌமார அமுதம் மாத இதழ். இந்த மாத அட்டைப் படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பின் அட்டையில் சிரவை மூன்றாம் குரு மஹா சந்நிதானங்கள் தவத்திரு. கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு குரு பூஜை விழா படங்கள் அலங்காரம் செய்கின்றன. அந்த விழாவில் பன்னிரு திருமுறைகள் விளக்கவுரை, கந்த புராணம் விளக்கவுரை, திருவிளையாடற்புராணம் விளக்கவுரை (வர்த்தமானன் பதிப்பகம்) , கந்தரந்தாதி சொற்பொழிவு ஆய்வு நூல் என தமிழுக்குத் தொண்டாற்றும் வண்ணம்  நமது சிரவையாதீனம் சுவாமிகள்  வெளியிட்டு பெருமை செய்தார்கள். 

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக