வியாழன், 22 ஜூன், 2017

வைகாசி விசாகம் திருநாள்

அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்தில் வைகாசி விசாகம் திரு நாள் நிகழ்வு 07.06.2017 புதன்கிழமை அன்று  நடந்தது. முருகப்பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்யப்பட்டு பாலமுருகனை குழந்தையாக தாலாட்டும் ஊஞ்சள் வழிபாடு நிகழ்த்தப்பட்டது. ஜீவ நாடியில் வந்த வாக்கின்படி குழந்தை வரம் வேண்டி வந்த நூற்றுக்கும் மேம்பட்டவர்களுக்கு குழந்தை அருள் திருவமுது வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு குழந்தை அருள் திருவமுது  பெற்ற பெரும்பாலான பக்தர்கள் பிள்ளைச்செல்வம்  அடைந்துள்ளார்கள் என்பதும் பலர் தற்போது மணிவயிறு வாய்த்துள்ளார்கள் என்பதும் கண்கூடு. கலியுகத் துன்பத்தை ஓட்டி நல்ல வரம் தரும் அருள்மிகு ஞானகந்தக் கடவுள் கருணையால்தான் இப்படி பல அதிசயங்கள் நடந்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனியாம். வைகாசி விசாக பூசையின் சில படங்கள்.



ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக