ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

சிரவையாதீனம் 49ம் ஆண்டு நாண்மங்கல நாள் விழா (ஆகஸ்ட்-6)

குருவிற்கு கொலு வழிபாடு செய்து குருவருள் பெறுவதைக் காண கண் கோடி வேண்டும். குருவே பரம்பொருள் என்பது கௌமார நெறியாகும். அருணகிரி நாதர் முதல் தொடங்கி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வழியில் முருகனுக்கு என உலகில் இருக்கும் ஒரே கௌமார பரம்பரையில் நான்காம் சந்நிதானமாக உலகளாவிய அளவில் கௌமார நெறியை பலர் கடைபிடிக்க காரணமாக இருக்கும் எனது தீட்சா குருவும் எனது ஞானதேசிகருமாகிய சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களின் 49ம் ஆண்டு நாண்மன்கல நாள் விழா அனைவரும் கொண்டாட வேண்டிய திருவிழா. 100 ஆண்டுகள் கடந்தும் தூய நெறியில் தொய்வில்லாமல் விளங்கும் கௌமார மடாலயத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி நாளை கொலு வழிபாடு. முருக பக்தர்கள் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டிய அவசிய விழா இது. நன்றி. சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்.
குருபணியில்
சிரவையாதீனச்சீடர்
முருக செகதீசுவரன்
ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.
                                      சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                       கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக