வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

இலங்கை 4ஆவது_அனைத்துலக_முருக_பக்தர்கள்_மாநாடு

மங்கள வாத்தியங்களுடன், பக்திப்பாடல்கள் முழங்க முருகப் பெருமானுக்கு சிறப்பு பூசை, வழிபாடுகளுடன் இன்று (03-08-2018) மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இனிதே துவங்கியது, நமது கௌமார மடாலயம் சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள் முனைவர் தவத்திரு. #குமரகுருபர_சுவாமிகள் எழுந்தருளி, அருளாசியுரை வழங்கியும் கருத்தரங்கில் கலந்துகொண்டும் நிகழ்வினைச் சிறப்பித்தார்கள். மயிலம் பொம்மபுர ஆதீன குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. சிவஞானபாலய சுவாமிகள், மலேசியா திருவாக்கு பீடம் தவத்திரு. பாலயோகி சுவாமிகள் ஆகிய அருளரசர்களும் எழுந்தருளி மாநாட்டு நிகழ்வினைச் சிறப்பித்தார்கள். நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முருகபக்தர்கள் கலந்துகொண்டனர், நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள் தலைமையில் இந்தியாவிலிருந்து 26 அன்பர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருகின்றார்கள் என்பது குருபிடத்தக்கது.

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக