சனி, 27 செப்டம்பர், 2014

முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்!



முருகனுக்கு வேல்:-

முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்
பட்டிருக்கிறதுவேல் வெற்றிக்கும்அறிவுக்கும் அடையாளமாகத்
திகழ்கிறதுவேல் நடுவில் அகன்றும்உருவில் நீண்டும்முனையில்
கூர்மையாகவும் இருக்கிறதுஇதுபோல் இக பர வாழ்வில் மனிதன்
சிறந்தோங்க அகன்றஆழ்ந்தகூர்மையான அறிவுடையவனாக
இருக்கவேண்டும்அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய ..இறைவனேஇதையே திருவள்ளுவர்,

     
 கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
      
நற்றாள் தொழாஅர் எனின் ... என்கிறார்.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி
வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து
அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும்கூவுகின்ற
கோழி நாத வடிவானதுகோழிக் கொடி வெற்றியின் சின்னமாக
விளங்குகின்றதுஅழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான்முருகன்.மயில் மனத்தின் சின்னம்பரிசுத்தமானஅழகான உள்ளம்தான்
இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம்
விளக்குகிறதுபாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா
சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறதுதீராத
நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன்.

தமிழ் இந்துக்களின் பெயர்களில் சக்திவேல்ராஜவேல் பழனிவேல் போன்றவேல் என முடியும் பெயர்களும் வேல்முருகன்வேலப்பன்வேலம்மாள்என்ற பெயர்களும் அதிகமாக காணப்படுகின்றன

 

முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம்நமது அறிவு ஆழமானதாகவும்,பரந்ததாகவும்கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதைஉணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடிஅகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்றுகருதப்படுகிறது.

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்பற்றி கூறப்பட்டுள்ளது

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றிகூறப்பட்டுள்ளதுகந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன்வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத்தெளிவுப்படுத்துகின்றதுஎனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல்,வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரிமுருகனின் போர்க்குணம் மற்றும்முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.
வேல் விடுமினையோன்திறல்வேலன்வேல் கொண்டன்று பொருதவீரன்,துங்கவடிவேலன்ப்ரசண்ட வடிவேலன்வேல் தொட்ட மைந்தன்அசுரர்தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும்அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில்செல்வாக்குப் பெறலாயிற்று.
ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு,வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின்சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.
வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமானஅருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ,சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடியகுறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானதுதமிழகத்தில் முருகனைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத்தெளிவுப்படுத்துகின்றதுஇன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளதிருப்பத்தூர்கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம்,மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகியஇடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.
திருச்செந்தூர்திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ளமுருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளனஅவை வெகு தொலைவு வரை முருகன்கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றனமேலும் தமிழகத்தில்உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை.
இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாகஉள்ளனதமிழகத்தில் சுந்தரவேல்சக்திவேல்கதிர்வேல்கனகவேல்,வடிவேல்குமரவேல்கந்தவேல் ஞானவேல்வேலப்பன்வேல்ச்சாமி,வேலன்வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச்சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்

முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார்பெரும்பாலான ஹிந்துமத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர்.இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளைஅழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவைவாஸனைகளும்அவற்றால்ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூலகாரணம்இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணரமுதல் தடைஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான்.வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான்முருகனின் சக்திஆயுதமாகிய வேல்இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்லசக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக