செவ்வாய், 30 செப்டம்பர், 2014

குருவின் பெருமை !!!



அகல் விளக்கும், கோதுமை குளவியும் மனிதனின் வாழ்க்கையும் : - 


                                                                    மனிதனின் வாழ்க்கையானது அகல் விளக்கை போன்றது.அகல் விளக்கில் நெய் இருக்கும் வரை அது எரிகின்றது அதுபோல மனிதனின் வாழ்க்கை உயிர் இருக்கும் வரைதான். அகல் விளக்கில் எரிகின்ற ஜோதி நிலையானது அதுபோல மனித உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா என்றும் அழிவதில்லை. இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருளும் அணுக்களின் தொகுப்பே.எனவே இந்த உலகத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் உணர்வுதான் உயிராகிறது.அந்த உணர்வுதான் கடவுளாகும்.அந்த உணர்வை அடைவதற்குதான் இந்த மனிதப்பிறவியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார்.

நம்மை படைத்த கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் இறை தன்மையை உணர சந்தர்ப்பம் கொடுத்து கொண்டே இருக்கிறார். அதற்க்கு உதாரணம் கோதுமை குளவியனது புல்வெளிகளில் இருக்கும் புலுவிடம் சென்று ரீங்காரம் செய்கிறது.அதில் எந்த புழு தன்னை பார்க்கிறதோ 
அதை தன் கூட்டுக்கு கொண்டு வந்து ரீங்காரம் பாடியே அந்த புழுவை குளவியாக மாற்றுகிறது.அதுபோல எந்த ஒரு மனிதன் குருவின் வழியாக தனக்கு பிடித்த தெய்வத்தின்  உபாசனை மந்திரத்தை தினமும் ஜெபம் செய்கிறானோ அவனே கடவுள் தன்மையை அடைய தகுதி ஆகிறான்.

எனது வாழ்கையில் ஏற்பட்ட எல்லாவித மாற்றங்களுக்கும் எனது குருவே காரணமாகிறார். குரு தொட்டு காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியை போல குரு உபதேசித்த அனைத்தையும் சரியாக செய்தாலே இவுலக்திலும் அவ்வுலகதிலும் இடம் உண்டு என்பது சத்தியமான உண்மையாகும்.

               குரு வாழ்க ! குருவே சரணம் ! குருவே துணை ! குருவின் திருவடி போற்றி!

                                                          வடிவேல் முருகா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக