சனி, 31 ஜனவரி, 2015

ஜீவ நாடி பேரதிசயம் (உண்மைச்சம்பவம்)



மும்பை அகத்தியர் அடியவர் திரு. கணேசன் ரத்தினம் என்பவருக்கு 25.1.2015

ஞாயிறு சஷ்டி அன்று ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி படிக்கப்பட்டது.

அப்போது வந்த பாடல். அவரைப் பற்றி எதுவுமே ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு

தெரியாது. ஆனாலும் அவர் அகத்தியர் அடியவர் என்பது மட்டும் தெரியும்.

முருகப்பெருமான் அவரை ஒரு இல்லறவாசி என்றும் சன்னியாசி இல்லை

குடும்பத்தில் இருந்து கொண்டேதான் இறை சேவை செய்வார், இவர் வீட்டில்

அகத்தியை சிலை உண்டு, குறிப்பாக அகத்தியரே இவருக்கு கொடுத்த

யோக தண்டம் உண்டு அந்த தண்டத்தை அடிக்கடி அக்த்தியர் சூட்சுமமாகத்

தொட்டு செல்கிறார், இவருக்கு மூன்று குழந்தைகள் உண்டு, இவர் தனுசு

ராசியில் பிறந்திருப்பார், இப்போது ஏழரை சனி என்றாலும் சித்தர்களை

பூஜிப்பவர்களுக்கு ஏழரை சனி ஒன்றும் செய்யாது, இவரது பிறப்புறுப்பில்

சிறு மச்சம் உண்டு, இவ்ர் முன் ஜென்மத்தில் அகத்தியர் அடியவர், சீடன்,

அகத்தியர் மைந்தன் இவர் ஆறுமுக ருத்திராட்சம் போட வேண்டும்,

அக்த்தியர் இவரிடம் ஒலி வடிவில் பேசி வருகிறார், அகத்தியர் சொன்னபடி

இவர் சிவப்புக் கடுக்கண் அணிய வேண்டும், 55 வயது பின்னால் அபூர்வ

ஆன்மீக யோகம் உண்டு, சித்ர பட வடிவில் சிவலிங்கம் உண்டு, அகத்தியர்

இவர் மூலம் பல அரிய சித்தாடல்களை நட்த்துவார் போன்ற ரகசியங்களை

100% மிகத் துல்லியமாக முருகப் பெருமான் ஜீவ நாடி மூலம் உரைத்தார்.

அடுத்து பல ரகசியங்களை வைகாசியிலே உரைப்பதாகவும் உரத்திருக்கிறார்

முருகப்பெருமான்.

ஸ்ரீஞானஸ்கந்தர்ஜீவநாடியில்வந்த பாடல்:

இடமான நலமான முறையான வகையான

கண்டதிவன்எதிர்காலச்சிறப்புரைப்போம்கேள்

மகிமை புகழ்கடுக்கண்அதை

முனிவனவன்அணியச்சொன்னது

முன்னேற்ற நலமே அணியலாம்நட்பு

இளமை முதல்என்சீடன்ஆசியது

இவனுக்கும்உண்ணுண்டு செப்பு

ஆனதால்மூவான சந்தானம்

அடுத்தடுத்து கொடுத்தோம்

கொடுத்ததுவும்செழிக்கும்

செழிக்குமது இனிக்கும்

இனிக்குமது இவன்வாழ்வு

இல்லறத்தோடு ஆன்மீகம்

பூரணசன்னியாசி இல்லையே

பூவுலகில்புண்ணியங்கள்

பல செய்து பல செய்து

பலர்வாழ்வை சீராக்குவான்

இல்லத்தில்இன்முகமாய்

இனிமையாய்சிரிக்கின்ற

சிலை உண்டு குருமுனிவன்தனக்கு

சீராக பூஜையும்உண்டுண்டு நட்பு

யோக தண்டம்தந்ததுவும்அகத்தியன்

ஆதலால்சூட்சுமமாய்அதில்அக்த்தியனும்உண்டே

அந்த யோகதண்டம்கையிலே அடிக்கடி இவன்தொடுவான்

இடுக்கன்பல களையும்மார்க்கம்தேடி வரும்மக்களுக்கு

இன்முகத்தோடு அருள்வாக்கு போலும்

அகத்தியன்வாக்குரைப்பான்இவனிடம்

என்சீடனின்சீடன்இவன்முன்சென்மத்திலே

அகத்தியனின்மைந்தன்இவன்

வாக்கு பலிக்கும்வரம்கிடைக்கும்

இவன்வம்சம்தழைக்கும்

இல்லறத்தாள்இவன்மனைவி அடிக்கடி

மூட்டு வலி முதுகு வலி இடுப்புவலி

என வலியால்அவதிப்பட்டாளும்

அவளுக்கும்ஆயுள்தீர்க்கமாமே

அஞ்சிடாதே நலமுண்டு

சிவலிங்கம்உண்டு இவன்வீட்டில்

சித்ர பட வடிவில்சிறப்புண்டு

சேவித்து வா சிறப்பாகும்

ஆறுமுக ருத்திராட்சம்போடுவது நல்லதே

சிவப்பு கடுக்கண்அணிந்து கொள்

ஐம்பாணம்ஐந்து பின்அபூர்வ ஆன்மீகமாமே

வில்லதிலே பிறந்து சொல்லதிலே அகத்தியன்

வந்து சொல்லிடும்நிலை பெர்றுவான்கேள்

ஏழரை சனி காலம்என்ன செய்யும்இவனை

சித்தர்கள்பூஜையது செய்வதாலே

சிவலிங்கம்ஒட்டி இவன்சிறுமச்சம்

சிறு அளவில்கொண்டதாலே

சிவன்மைந்தன்அகத்தியனோடு

போகனும்பதஞ்சலியும்மறந்திடாதே

நவமிரண்டு சித்தர்களும்நலம்அருள உள்ளதால்

நலமாக ஒலி வடிவில்உரைத்து வரும்முனிவனின்

நல்வாக்கை கடைபிடித்து வா போதுமே

மற்றவை பலவற்றை பாங்காகப்

பக்குவமாய்ப்பகர்ந்திடுவோம்

விசாகமது கொண்ட வைகாசித்திங்களிலே

ஆசி! ஆசி! ஆசி!

• இவர் பொதிகைமலை செல்லும் போது ஒரு தேங்காயை உடைத்து

அகத்தியர்அருளால்கொட்டுகின்ற மழையை நிறுத்தி உடனே சூரியனை

தோன்றச் செய்து பின் பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசனம்

செய்தவர்.

•பொதிகை மலையில் அகத்தியராலேயே கொடுக்கப்பட்ட யோக

தண்டத்தை வைத்து பூஜித்து வருபவர்

• ஒருமுறை திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்த சென்ற போது

இவரது தலையில் முடியெடுக்க தீர்த்தம் போட இவர் மீது ஒரு சொட்டு

தண்ணீர் கூட பட முடியாமல் தெளிக்கின்றவர் தலை மீதே அந்த தண்ணீர்

கொட்டியது. என்வே மொட்டை அடித்துக் கொள்ளாமல் சென்ற இவர்

முன்பு பெரிய தாடியுடன்அகத்தியர்தோன்றி காட்சி கொடுத்திருக்கிறார்.

• நீண்ட நாட்களாக இவருக்கு ஆண்வாரிசு இல்லாத குறையை அந்த

அகத்தியரே போக்கி வாரிசு தந்திருக்கிறார்.

• அதேபோல் கருத்தடை செய்து கொண்ட ஒரு பெண் அகத்தியர் ஆசியால்

கருவுறும்பாக்கியத்தைக்கொடுத்து இருக்கிறார்

• இவர் இதுவரை எங்கும் நாடி கேட்கவில்லை. இரு இடத்தில் கேட்டு

இவருக்கு சரியாக வரவில்லை.

• 24.01.2015 அன்று அகத்தியர் நீகடுக்கண் போடு பச்சை, சிவப்பு என்று

சொல்லி இதன் சூட்சுமம் விரைவில் ஒருவர் அறிவிப்பார் என்று

சொல்லியிருக்கிறார்.

• உடனே தற்செயலாக மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் பற்றி இவரிடம் சொல்ல நமது ஜீவ நாடி உண்மை

என்று இவர் மனதில் பட உடனே ஸ்ரீஸ்கந்த உபாசகரைத் தொடர்பு

கொண்டார்.

• ஸ்ரீஸ்கந்த உபாசகரும் முருகனிடம் உத்தரவு கேட்க என் சீடனின்

சீடனிவன் உடனே படி என முருகனும் உரைக்க ஸ்ரீஸ்கந்த உபாசகரும்

இவருக்கு ஜீவ நாடி படித்தார்.

• ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கும் ஜீவ நாடியை பொதிகை மலையில் வைத்து

வர வேண்டும் என்ற உத்தரவு வர அதற்கு தகுந்த நபர் மும்பை

கணேசன்தான் என எண்ணி மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம்

மும்பை கணேசனிடம்ஸ்ரீஸ்கந்த உபாசகர் பற்றியும்ஸ்ரீஞானஸ்கந்தர்

ஜீவநாடி இதுவரை நடத்தி வந்த அதிசயங்கள் பற்றியும் சொல்ல நான்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் பொதிகை செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்று

மும்பை கணேசன் சொல்ல இத்தனை அதிசயங்களை அந்த அகத்தியரும்

முருகப்பெருமானும் நடத்தி இருக்கிறார்கள். இதுதான் ஜீவ நாடி படித்த

பிண்ணனி ஆகும்.

• நாடியில் முருகன் உரைத்த பின்பே இந்த தகவல்கள் மும்பை கணேசன்

அவர்களால் பகரப்பட்டது. அதன் முன்பே இத்தனை ரகசியங்களை

முருகன்ஜீவ நாடி மூலம்உரைத்து விட்டார்.

ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ்ஓங்கட்டும்!!!!!!!!!!

1 கருத்து:

  1. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...ஞான ஜோதி அம்மா திருவடிகள் சரணம் சரணம்!!!

    பதிலளிநீக்கு