வெள்ளி, 4 நவம்பர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-3

4. ஒருவர் செய்யும் தொழில் பற்றி ஜீவ நாடியில் என்ன தெரிந்து கொள்ளலாம்?

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் ஒருவருடைய தொழில் பற்றி 100% மிக மிகத்துல்லியமாக பதில் வருகின்றது. 
தொழிலைப் பொறுத்தவரையில்

  1. வேலை கிடைக்குமா?
  2. அரசுப் பணி அமையுமா?
  3. சொந்தத் தொழில் செய்யலாமா?
  4. எந்த தொழில் செய்தாலும் லாபம் இல்லை என்ன செய்யலாம்?
  5. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?
  6. எந்தத் தொழிலைத் தொட்டால் கோடீஸ்வர யோகம் வரும்?
  7. கூட்டுத்தொழில் யோகம் உண்டா?
எனும் கேள்விகளுக்கு 100% மிகத்துலியமான பதிலை முருகப்பெருமானும் அகத்திய முனிவரும் ஜீவ நாடியில் தோன்றி ஒருவரது பூர்வ ஜென்ம தொழில் எது என்று கண்டறிந்து அதன் அமைப்பில் 100% கோடான கோடி லாபம் தருகின்ற தொழில் எது என்று உரைத்து விடுகின்றனர். நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் எப்போதும் பெரிய பெரிய தொழிலதிபர்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு ஜீவ நாடியின் துல்லிய தொழில் குறித்த வாக்கே காரணம் ஆகும். ஜாதகம் யோகமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தொழிலே அமைவதில்லை காரணம் பூர்வ ஜென்ம பதிவுகளின் தாக்கமே. அந்த தாக்கத்தைக் கண்டறிந்து ஜீவ நாடியில் வருகின்ற வழிகளைக் கேட்டு கடைபிடித்தால் உடனடியான ஒரு திருப்புமுனை வருவதற்கு இப்போது ஜீவ நாடியை நாடி கடந்த 20 ஆண்டுகளாக பலர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதே சாட்சியாகும்.  ஒரு சிலருக்கு பெரிய தொழில் யோகம் இருக்கும் ஆனால் சாதாரண சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்கள் முருகனின் ஜீவ நாடியை தொடர்ந்து இடை வெளி விட்டு ஒரு வருடத்தில் 6 முறை கேட்டு அதன்படி சில வழிபாடுகளைக் கடைபிடித்தவர்கள் ஒரே வருடத்தில் பத்து ஆண்டுகள் சம்பாதிக்கும் வருமானத்தை எட்டி விட்டார்கள். ஜீவ நாடி முழுக்க முழுக்க இறை அருளால் உரைக்கப்படுவதால் பணம் என்பது குறிக்கோள் இல்லை. பயனடைந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளாகச் செய்த திருப்பணியே இன்று ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமாக அமைந்துள்ளது எனலாம். ஜாதகத்தில் தொழிலைக் குறிக்கும் 10மிடமும் 10மிட அதிபதியும் எப்படி இருந்தாலும் ஜீவ நாடி மூலம் தொழில் பற்றித் தெரிந்து கொண்டு பூர்வ ஜென்ம பதிவுகளைக் களைந்துவிட்டால் உடனடியான ஒரு தொழில் வாய்ய்பு வருவதை அனுபவத்தில் காணலாம். அப்படி முருகனை நாடி வந்து ஜீவ நாடி கேட்கும் பிராப்தம் இருப்பவர்களே 100% நம்பிக்கையுடன் வந்து நாடி கேட்க முடிகின்றது. பிராப்தம் இல்லை எனில் இது பொய் என்று யாரேனும் ஒருவர் நம்பிக்கையைக் கெடுத்து ஜீவ நாடியை நாட விடாமலேயே செய்து விடுவர் என்பதும் அனுபவம். எனவே நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து முருகனிடம் கேளுங்கள்...அவர் நிச்சயம் இல்லை என்று சொல்லுவதில்லை...முருகன் நம்மிடம் கேட்பது பணத்தை அல்ல...பக்தியையும் அன்பையும் நாம் முருகன் மீது வைத்தால் அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்து அருள்வார் அந்த முருகன்... என்பது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் வாக்காகும்.
                                                                                                                                      தொடரும்...
                                   ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக