செவ்வாய், 15 நவம்பர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-5

6. ஏழரைச்சனி அஷ்டமச்சனியில் இருந்து தப்பிக்க ஜீவ நாடி வழி காட்டுமா?

    ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும். 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும். 4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள். 2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினை, வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
ஒருவரின் பூர்வ ஜென்மத்தின் பாவங்களின் பதிவுகளைக் கழிக்கவே ஏழரைச்சனி அஷ்டமச்சனியில் பாதிப்புகள் வருகின்றது. ஜீவ நாடியில் முருகனின் மீது நம்பிக்கை வைத்து வந்து ஜீவ நாடி கேட்பவருக்கு பூர்வ ஜென்ம பாவ பதிவுகளைக் கண்டறிந்து உடனடியான நல்ல வழியை ஜீவ நாடி காட்டுகின்றது. பரிகாரம் செய்தால் பாவம் தீருமா? என்றால் அப்படி பரிகாரம் அறிந்து ஏழரைச்சனி அஷ்டமச்சனி பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற விதியமைப்பு இருப்பவர்கள்தான் நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியை வந்து கேட்க முடிகின்றது. ஜீவ நாடி நடத்துகின்ற திருவிளையாடல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்குக் காரணம் 100% உண்மையும் சத்தியமும் பண ஆசையில்லாத தூய்மை நிலையும் கடைபிடிக்கப்படுவதால்தான் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். எனவேதான் அடியேன் ஜோதிடம் சொல்வதில்லை முருகனின் வாக்கு மட்டுமே ஜீவ நாடியில் என்ன வருகின்றதோ அது மட்டுமே உரைக்கப்படுகின்றது. அதனால் அடியேன் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொள்வதில்லை. சிறு காணிக்கை மட்டுமே நாடி படிக்க பெற்றுக் கொள்ளப்பட்டு அந்த காணிக்கைகள் அன்னதானம் மற்றும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றது. எனவே பணம் நிரந்தரமானது அல்ல மக்கள் சேவையே மகேசன் சேவை என உணர்ந்தவன் அடியேன். அதனால்தான் மிகுந்த நேரக் குறைவான சூழ் நிலையிலும் ஜீவ நாடி உரைக்கும் சேவையை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் செய்து வருகின்றேன்.

          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக