வியாழன், 10 நவம்பர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-4


5.ஜீவ நாடி என்றால் என்ன?
ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன் ஐயா அவர்கள். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர். அந்த வகையில் ஹனுமத்தாசன் ஐயா அவர்களிடம் அகத்தியர் வாக்கு கேட்ட பலர் இன்று நமது ஸ்ரீஞாஸ்கந்தர் ஜீவ நாடியில் 100% பலன் பெற்று வருகின்றார்கள் என்பதற்கு ஹனுமத்தாஸன் ஐயா மூலம் அகத்தியர் உரைத்த அதே இரகசியங்களை நமது ஜீவ நாடியில் முருகப்பெருமானும் அகத்தியரும் உரைக்கின்றார்கள் என்பது பலன் பெற்றவர்களின் அனுபவமாகும். பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சியாகும்.
              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக