வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

வாழ்வை வளமாக்க வழி கூறும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி

  • ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கைஎனவே  ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும்.
  • மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம்  போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.
  • இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது.
  • அவரவர் கர்மாவின்படி பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ற பலன்களை இப்பூவுலகில் அனுபவித்து வருகின்றனர் மனிதர்கள்.
  • நடுக்கடலில் வழிதெரியாது தத்தளிப்பவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றதே ஜோதிடம். பிரச்னைகளில் சிக்கி வழி தெரியாது தவிக்கும் ஜீவன்களுக்கு உதவும்பொருட்டு தோன்றியுள்ளவையே இது போன்ற ஜோதிட வழிமுறைகள். இவற்றை உலகுக்கு அளித்த ரிஷிகளின் நோக்கமே, மக்களுக்கு அவர்களின் நற்பலன்களை கூட்டிக்கொடுத்தும், தீய பலன்களை குறைத்து கொடுப்பதும் தான்.
  • ஜோதிடத்தை வணிகமாக கருதாமல், அதை ஒரு சேவையாக செய்பவர்களாலேயே அதை சரியாக கூறமுடியும். எனவேதான் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஜீவ நாடி உரைக்க ஒரு சிறு காணிக்கை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படுகின்றது. பணம் மட்டுமே குறிக்கோள் இல்லை.
  • ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கஷ்டத்தில் இருப்பவர்கள்  ஜீவ நாடியை அணுகி, பரிகாரம் தேடிக்கொள்ளவேண்டும்.  ஜாதகத்தின் மூலம் தீர்க்கப்படமுடியாத கர்ம வினைகள் ஜீவ நாடி மூலம் உடனடியாகஹ் தீர்வதை அனுபவத்தில் காணலாம்.
  • ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைப்பது சித்தர்களும் தேவதைகளும் என்பதால் எந்த சூழ்நிலையிலும் பரீட்சித்து பார்க்கக்கூடாது. அது மிகப் பெரிய பாபம். தவிர எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
  • ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச் சனி என எல்லாவிதமான சனி தோஷங்களையும் நீங்க வழி கூறும் ஜீவ நாடி
  • ஒரு மனிதனுக்கு ஏற்படும் எல்லாவிதமான கிரக தோஷங்களுக்கும் கிரகங்கள் காரணம் அவன் செய்த பூர்வ ஜென்மங்களின் கர்ம வினைகளே அந்த கர்ம வினைகளைக் கரைக்கும் துல்லிய வழிகளை ஜீவ நாடியில் அறிந்து கொண்டு அதைக் கடைபிடித்து வந்தால் 100% வாழ்வில் ஒரு அதிசயம் நடப்பதைக் காண முடியும்.
  • பல பரிகாரங்கள் செய்தும் தொழில் சிறப்பாக இல்லை என்பவர்கள் ஜீவ நாடியில் வரும் வழிமுறைகளைக் கடைபிடிக்க அடுத்த நொடியே பல்வேறு மாற்றங்கள் வருவதை அனுபவத்தில் உணரலாம்.
  • பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் ஏங்கித் தவிப்பவர்கள் ஜீவ நாடி வழிகாட்டுதலின் படி கடைபித்தால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கின்றது. இதுபோல் பல நூறு நபர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது.
  • நீண்ட காலமாகத் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் ஜீவ நாடி சொல்லும் வழிகளைக் கடைபிடித்தால் உடனடியாக திருமணயோகம் பெறுவதை அனுபவத்தில் பல நூறு நபர்களின் திருமணங்கள் மெய்ப்பித்து இருக்கின்றன.
  • கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வம்பு வழக்குகள் என வாழ்க்கையில் நிம்மதி இல்லாதவர்கள், தினமும் நோய் நொடித் தொந்தரவுகளுடன் வாழ்வை நடத்துபவர்கள் அனைவருக்கும் அவர்களின் கர்ம வினைகளை நீக்கி உடனடியான ஒரு தர உயர்வை நிம்மதியான வாழ்க்கையை வாழ வழிகாட்டி வருகின்றது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி.
  • கணவன் மனைவி பிரச்சினை, காதல் தோல்வி, பிள்ளைகளின் படிப்பு, தொழில் மேன்மை, அரசுப் பணி கிடைக்க, வேலையில்லாதவர்கள் வேலை பெற உன்னத வழியைக் காட்டி வருகின்றது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியாகும்.
  • பெரிய கோடீஸ்வரர்களாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் வாழ்வை அமைத்துக் கொள்ள பல சூட்சும இரகசியங்களை வருகின்றவர்களுக்கு உரைத்து ஒரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகின்றது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி.
  • எந்த தெய்வத்தை உபாசனை செய்தால் இறையருள் கிடைக்கும் என்றும் நாம் பிறவி எடுத்ததன் நோக்கம் என்னவென்றும், எந்த ஆலயத்தை வழிபட்டால் உடனடியான உன்னத மாற்றம் வாழ்வில் வரும் என்றும் எந்த சித்தர் நமக்கு வழிகாட்டுவார் என்றும், நமக்கு குரு யார் என்றும், நமது குல தெய்வம் எங்குள்ளது என்றும் 100% அற்புதங்களைக் கூறும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி.
  • தேவதா உச்சாடனம் எனும் கோடீஸ்வரனாகும் இரகசிய உபாசனை மார்க்கங்கள் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உத்தரவின் பேரில் பிராப்தம் இருப்பவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றது.
  • பல நூறு நபர்கள் கடந்த 20 ஆண்டுகளாக முருக உபாசனை, அம்பிகை உபாசனை, வாராஹி உபாசனை, மாதங்கி உபாசனை என பல்வேறு தேவதை உபாசனைகளை ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி மூலம்  பெற்று வாழ்வில் 100% தர உயர்வை அடைந்துள்ளார்கள்.
  • சென்னை அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் எனும் நூலில் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த அதிசயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
           

                   ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக