புதன், 3 ஜூன், 2015

ஜீவ நாடியில் தோன்றிய எழுத்துக்களைப் படித்த மலேசிய முருக பக்தர் !

                                                    குரு வாழ்க!   குருவே சரணம்!

                                 சதுரகிரியில் தவக்கோலத்தில் ஸ்கந்த உபாசகர்


மலேசியாவில் இருந்து ஒரு முருக பக்தர் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகரைப் பார்த்து ஜீவ நாடி கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்தார். ஒரு நாள் பௌர்ணமி அன்று ஸ்ரீ ஸ்கந்த உபாசகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஜீவ நாடி படித்தார் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர். படித்த சில நொடிகளிலேயே முருகப் பெருமான் ஒரு மந்திரத்தை அவருக்கு உபதேசம் செய்வதாகவும் அதனால் வந்திருப்பவரிடமே சுவடியைக் காட்டினால் அவரது கண்களுக்கு எழுத்துக்கள் தெரியும் என்றும் அதையே மந்திரமாக உச்சரித்து வரும்படியும் சொன்னார்.


அதை அவரிடம் சொன்னவுடம் கண்ணீர் மல்க சுவாமி என்னே நான் செய்த பாக்கியம் என்று சொல்லி சுவடியைப் பார்க்க பொன்னிறமாக 13 எழுத்துக்கள்  தோன்றியது. அனைத்தையும் சேர்த்துப் பார்த்தபோது ஒரு மிகப் பெரும் மந்திரம் இருந்தது. அதை அப்படியே எழுதிக் கொண்டார். பின்னர் மீண்டும் ஒருமுறை அவரிடம் சுவடியைக் காட்ட சொன்னார் முருகப் பெருமான். அதே போல் காட்டப் பட்டது.


எழுத்துக்கள் ஏதும் அதில் வரவில்லை. இதுதான் ஜீவ நாடி என்றும் தோன்றும் எழுத்துக்கள் மீண்டும் மறைந்து விடும் என்று ஜீவ நாடியின் பெருமைகளை ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் இவருக்குச் சொன்னார். வந்தவர் ஆச்சரியம் தாங்க முடியாமல் அழுதே விட்டார். மீண்டும் உரைத்தார் முருகப் பெருமான் இந்த மந்திரத்தை திருப்போரூர் சென்று 108 முறை ஜபம் செய்து சிதம்பரம் சுவாமிகளை குருவாகக் கொண்டு ஜபித்து வருமாறு சொன்னார்.


அதேபோல் இந்த மந்திர ஜபம் தொடங்கிய சில நாட்களிலேயே பல அதிசயங்களை நிகழ்த்துவதாகவும் அதைத் தனியாக எழுதி வைத்து மீண்டும் வரும்போது கொண்டு வரும்படியும் கூறினார். வந்தவர் மிகுந்த மகிழ்ச்சியோடு விடைபெற்றார். மலேசியா சென்ற பின் ஒரு வாரம் கழித்து அவர் மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொண்டார். முருகப் பெருமான் நாடியில் உரைத்தது போலவே ஜபம் செய்து வருவதாகவும் ஜபம் செய்த அடுத்த நாளே வரவே வராது என்று 8 வருடம் இழுத்தடித்து வந்த 15லட்சம் ரூபாய் தொகையை கொடுக்க வேண்டியவரே வீடு தேடி வந்து கொடுத்து விட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.


முருகனிடம் அந்த தொகை வருமா வராதா? எனத் தெரிந்து கொள்ளவே ஜீவ நாடி பார்க்க வந்ததாகவும், அப்படி அந்த தொகை வராவிட்டால் தமது குடும்பமே மிகுந்த கஷ்ட்த்திற்கு உள்ளாகி விடும் என்றே வந்த்தாகவும் தெரிவித்தார். முருகப் பெருமான் மலேசியாவில் இருந்து வந்த எனக்கு வேறு எந்த வாக்கும் உரைக்காமல் வெறும் மந்திரம் மட்டுமே உரைத்தாரே என்று அப்போது நினைத்தேன் அவர் பலன் சொல்ல வில்லை 100% விடை(சொல்யூசன்) கொடுத்துவிட்டார் என்பது இப்போதுதான் புரிகிறது என
நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதே போல் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத ஒருவித தனி அதிர்வலைகள் இந்த ஞானஸ்கந்த மூர்த்தி இருக்கும் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்த்தாகவும் தெரிவித்தார். அருகில் இருந்தால் அடிக்கடி இங்கு வருவேன் ஆனாலும் வருடம் ஒருமுறையாவது இங்கு வர வேண்டும் என்றும் இனி என் வாழ்வு முழுதும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியை மறக்காமல் அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் வேண்டும்

அதற்கு ஆசியிடுங்கள் என்று ஸ்ரீ ஸ்கந்த உபாசகரை கேட்க அவரும் ஆசி என்றார். இப்படி தினம் தினம் திவ்யமான திருவிளையாடல்கள் பலவற்றை பலருக்கும் நிகழ்த்திவருகிறார் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி.

                                   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

10 கருத்துகள்:

  1. குரு வாழ்க! குருவே சரணம்!

    பதிலளிநீக்கு
  2. குரு வாழ்க! குருவே சரணம்!

    பதிலளிநீக்கு
  3. குரு வாழ்க! குருவே சரணம்!

    பதிலளிநீக்கு
  4. தங்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிட்டுமா ? தங்களிடம் ஜீவநாடி கேட்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது .தாங்கள் அழைத்தால் தங்களை நேரில் காண ஆவலாக உள்ளேன் . எம்பெருமான் ஞானஸ்கந்த மூர்த்தியிடம் அனுமதி பெற்று , என்னை அழைத்து எனக்கு உதவி புரியுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் . நன்றி . தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் ,

    அன்பன் இரா . கணபதி . எனது இ-மெயில் முகவரி
    rghanaphathyi@gmail.com

    பதிலளிநீக்கு
  5. தங்களை சந்திக்க வாய்ப்பு கிட்டுமா ஐயா?

    பதிலளிநீக்கு
  6. Sir want to contact yourgoodselves. Being affected by abichara prayoga wish to see and get advice from my gurunathar sri Agasthiar. May i contact you sir ,? my id padman2007 at gmail.com

    பதிலளிநீக்கு
  7. ஐயா தங்களிடம் ஜீவ நாடி பார்க்க நான் எங்கனம் தொடர்பு கொள்வது...?

    பதிலளிநீக்கு