சனி, 6 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 30 !



   ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஜீவநாடியை நம்பிக்கையுடன் கேட்டு

பல்வேறு நலன்களை அடைந்து வரும் ஒரு நலம் விரும்பி நாடி பற்றிய

ஒரு சுவராஸ்யமான சம்பவத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அதை

அனைவரும் தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும் என்பதால் அதை

அப்படியே இங்கு எழுதுகிறேன்.


காண்ட நாடி பற்றிய சம்பவக் கதை இது.

   36 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தின் முந்திய ஆதீனகர்த்தராகிய

ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் கூறிய உண்மைச் சம்பவம் இது.

மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காக தஞ்சை

மாவட்டத்தில் ஓரிடத்திற்குச் சென்றார். அவருடைய ஏடு கிடைத்தது.

ஜோதிடர் படித்துக் கொண்டே வந்தார். எல்லாம் சரியாகவே இருந்தது.

திடீரென்று பாதியிலேயே நின்றுவிட்டது. ஏனெனில் அதற்கு மேல்

தொடர்ச்சியாக இருக்கவேண்டிய ஏடுகளைக் காணோம்! ஜோதிடர் கூறினார்.

 

“இந்த ஏடுகள் என்னுடைய மூதாதைகளுக்குச் சொந்தம். என்

தந்தையாருக்குப் பிறகு நானும் என் தம்பியும் பாகப்பிரிவினை செய்துக்

கொண்டோம். அப்போது சரி பாதி ஏட்டுச் சுவடிகளை என்னுடைய தம்பி

எடுத்துக்கொண்டான். இப்போது நான் படித்த சுவடியின் மீதிப் பாகம்

என்னுடைய தம்பியிடம் இருக்கலாம். அவனிடம் சென்று பாருங்கள்.



தற்சமயம் அவன் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கிறான்”.  என்று

கூறி ஜோதிடர் தன் தம்பியின் விலாசத்தையும் கொடுத்தார்.

   சில காலம் கழித்து மதுரைக்காரர் , திருவனந்தபுரத்திற்குச் சென்றார்.

பாதி வழியில் ஒரு விபத்தில் அவர் இறந்து போனார். அவருடன் சென்ற

நண்பர் தப்பினார். விடுபட்டுப் போன அந்த ஏடுகளில் என்னதான் இருந்தது

என்பதைப் பார்க்க அவர் ஆர்வம் கொண்டார். ஆகையால் திருவனந்தபுரம்

சென்று இளைய ஜோதிடரைச் சந்தித்து அவருடைய அண்ணன் கூறிய

விபரங்களைச் சொல்லி அவர் கொடுத்த சுவடிக்கட்டின் முதல் பாகத்தின்

ஏடுகளைக் கொடுத்தார். அவற்றை வைத்து மீதிப் பகுதியைத் தேடிக்

கண்டு பிடித்து இளைய ஜோதிடர் படிக்கலானார்.



அப்பகுதியில் ஒரே ஓர் ஏடுதான் இருந்தது. அதன் ஆரம்பத்தில் ஒரே ஒரு

வாசகம் மட்டுமே காணப்பட்டது.

“மலையாள தேசஞ்சென்று

மரணத்தில் ஏகுவானே” என்றிருந்தது!

   சாகவேண்டிய தருணத்தில் அவர் மலையாளதேசம் செல்ல

வேண்டியிருந்தது.  ஏட்டைத் தேடி அவர் மலையாள தேசம் சென்றார்.

முழுச்சுவடியும் தஞ்சாவூரிலேயே இருந்திருந்தால் அவர் மலையாள

தேசம் சென்றிருக்க மாட்டார்.

 

இப்படி ஆங்காங்கே பல்வேறு உண்மைச் சம்பவங்கள் நடந்து

வருகின்றன. வாசகர்கள் இது போல் அனுபவம் இருந்தால் அதை எனக்கு

அனுப்பி வைக்கலாம். பல பேருக்குப் பயன்படும். ஒரு சில இடங்களில்

போலி நாடி ஜோதிடர்களால் இந்த கலைக்குக் களங்கம் வந்தாலும் உண்மை

எப்போதுமே தோற்காது.



நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஜீவநாடி மூலம் நடத்தி வரும் பல

திருவிளையாடல்களைப் பார்க்கும் போது ஜீவநாடியில்

வாக்கு உரைப்பது சாட்சாத் அந்த முருகனே என்பது  நிரூபணமாகிக்

கொண்டே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டால் இந்த இறைக்

காட்சி கிட்டுவதில்லை. நம்பிக்கை ஒன்றே நமது மூலதனம். நம்பிக்கை

இல்லாமல் எதுவும் நடக்காது என்பது திண்ணம். நமது ஜீவ நாடியைப்

பொறுத்தவரை முருகன் அருள் யார் மீது விழுகிறதோ அவருக்குத்தான்

நான் நாடி உரைத்து நலம் செய்ய முடிகிறது என்பது திண்ணம். நமது

ஜீவநாடியைப் பொருத்தவரை முருகன் அருள் யார் மீது விழுகிறதோ

அவருக்குத்தான் நான்  நாடி உரைத்து நலம் செய்ய முடிகிறது என்பது

என்னிடம் வருகின்ற அனைவருமே அறிந்த கூற்று. காரணம் பிரணவ

சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும்

ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும்

மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய

மும்மூர்த்தி திரு நாமங்களின் முதல் மூன்று எழுத்துக்கள்

ஒன்றிணைந்ததே “முருகா” என்னும் திரு நாமம்.






1. இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு

திருமுகம். இத்திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும்

ஞானக்கதிராக விளங்குகிறது.


2. அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம்

தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.


3. வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின்

கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.


4. நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம்

பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.


5. துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது

ஐயனின் ஐந்தாவது திருமுகம்.


6. தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா

சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம்

ஆறாவது திருமுகம்.


இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான்

பன்னிரண்டு திருக்கரங்களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு

அருள்பாலிக்கிறார்.நீலமயில் ஓங்கார சொரூபம், ஓங்காரமே பிரம்மம். அகர,

உகர, மகரா ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன்.

முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள்

நம்மை நாடி வரும். முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத்தாலே

மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு.

முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக்

கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.



திருப்பரங்குன்றம்  -- மூலாதாரம்

திருச்செந்தூர்      -- சுவாதிஷ்டானம்

பழனி             -- மணிபூரகம்

சுவாமிமலை      -- அநாகதம்

திருத்தணி         -- விசுத்தி

பழமுதிர்சோலை   -- ஆக்ஞை



இப்படிப்பட்ட சிறப்புகள் ஒருங்கே அமையப்பெற்ற முருகப் பெருமான்

எப்படி ஒரு சாதாரண மனிதனுக்கு ஓலையில் ஒளி ரூபத்தில்

தோன்றி வாக்கு உரைக்க முடியும் என்ற சந்தேகம் வருவது

இயற்கையே. அதற்கு முருகனே விடை தந்திருக்கிறார். எவர் ஒருவர்

என்னை முழுமையாக நம்பி பக்தி செய்கிறார்களோ அவர்களுக்கு

நான் தோன்றுவேன் என்பதே அது. அதுபோல் பலருக்கும் முருகன்

திருவிளையாடல்கள் நடத்திய வரலாறுகள் பல்லாயிரக்கணக்கில்

உண்டு. அது போல் இந்த ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைப்பதும்

அவரின் ஒரு விளையாட்டே. அப்படி ஒரு நாள் முருகப் பெருமானை

பூஜித்து சுவடியைக் கையில் எடுத்துப் பிரித்தேன். அப்போது ஸ்ரீ

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் கொங்கு நாட்டிலுள்ள ஆறுபடை

வீடுகள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் வந்தது.




அதன் விபரத்தை வாசகர்களும் முருக பக்தர்களும் தெரிந்து கொண்டால்

அந்த ஆறுமுகன் அருள் பெற வசதியாக இருக்கும் என்பதால் அதை

அப்படியே இங்கு எழுதுகிறேன். ஒவ்வொரு முருக பக்தர்களும்

தரிசனம் செய்யவேண்டும் என்றும் நாடியில் வந்துள்ளது. விருப்பம்

உள்ளவர்கள் இதைக் கடைபிடிக்கலாம்.

                                                                                   .....தொடரும்

                          “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

13 கருத்துகள்:

  1. ஓம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை.
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

    பதிலளிநீக்கு
  2. Ayya, Please provide your contact no. I want to talk to you - Forsivakumar@gmail.com

    பதிலளிநீக்கு
  3. “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
    “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
    “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

    பதிலளிநீக்கு
  4. ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை தயவுசெய்து தெரிய படுத்தவும்.
    naren73in@yahoo.com

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு