செவ்வாய், 9 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 31!

                                    குரு வாழ்க!                                                குருவே சரணம்!

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன்  --  அவினாசி அருகில் உள்ள

     பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன்  --  பெத்திக்கோட்டை

    ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன்  --  திண்டுக்கல்

   சின்னாளப்பட்டியிலும்,

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன்  --  கோபி, காசிபாளையம்

    குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன்  --  சென்னிமலையிலும்,

6. ஒரு முகம்  தண்டாபுதபாணியாக  --  பழனியிலும்,

    முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.




திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் வழிபட்ட தலமாகும்.

அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள்

வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர்

செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத

கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப்

பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்தி

தோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி,

சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்

பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை

வழிபட்டுச் செல்கின்றனர்.

 

ஓதிமலை சிறப்பு என்னவென்றால் படைப்புக் கடவுளான பிரம்மா

கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு

முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன்,

பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். அவர்

தெரியாது நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்

தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. படைக்கும்

கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது.

எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன்

இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”

எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய

ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்

முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி

கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார்.




முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.

   சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம்

சொன்ன முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை

உபதேசித்தார். இவ்வறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த

மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு

“ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது. 18 சித்தர்களில்

ஒருவரான போகர் முருகனை தரிசிக்க பழனிக்கு செல்லும்போது

அவருக்கு சரியாக வழி தெரியாத நிலை ஏற்பட்டது. வழியில் இந்த

தலத்தில் தங்கிய போகர் முருகனை வேண்டி யாகம் நடத்தினார்.

அப்போது இத்தலத்து முருகன் அவருக்கு வழிகாட்டினார்.




இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ

வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை

நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்

கூறுகின்றனர். பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்

சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என அழைக்கப்படுகிறது.

கோவில் 1600 படிக்கட்டுக்கள் கொண்டது.

 



அதே போல் திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு

முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும்

பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்

பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்

கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர்

நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

 


அடுத்து மூன்று முக முருகனாக ஈரோடு மாவட்டம் கோபி

வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி

ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800

ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால்

முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த

முகமாக நிந்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.




எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை

பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்

முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை

வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின்

ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன்

சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.




   இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில்

செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில்

இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே

இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்

அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல

கிரக பீடைகளும் உடனே விலகும்.

 


 பழனி பற்றி அறியாதார் உண்டா என்பதால் கூடுதல் விளக்கம்

தேவையில்லை என நினைக்கிறேன். இது போல் இன்னும் பல

இரகசியங்களை தொடர்ந்து சொல்லப் போகிறேன்.

                              “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

4 கருத்துகள்:

  1. ஓம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை.

    பதிலளிநீக்கு
  2. ஓம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை.

    பதிலளிநீக்கு
  3. ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்

    பதிலளிநீக்கு
  4. Ayya, Namaskaram, longing to read the nectars you post, there seems to be a long gap, hope by the grace of The Lord Muruga things are good at your end, Om Muruga, Om Agatheesaya Namaha: Om Sairam.

    பதிலளிநீக்கு