செவ்வாய், 21 ஜூன், 2016

ஜீவ நாடி உரைத்தபடி செய்த திருக்கண்டியூர் தீப விழா

                                        
காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களுக்கு அட்ட வீரட்டான தலங்களில் பௌர்ணமி தோறும் சிவலிங்க தீபம் வேல் தீபம் சக்திகல தீபம் ஆகிய 2108 தீபங்களை ஏற்றி உலக நன்மைக்காக வழிபாடு செய்யுமாறு முருகப்பெருமான் நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் ஸ்ரீஸ்கந்த உபாசார் சுவாமிகள் மூலம் வாக்குரைத்திருந்தார். அதன் அடிப்படையில் 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை வந்த பௌர்ணமியில் திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசர் ஆலயத்தில் தீப வழிபாடு செய்யப்பட்டது. பெருந்திரளான பக்தர்கள் வந்து தீபமேற்றி வழிபாடு செய்து முருகன் போற்றி மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து ஆனந்தம் அடைந்தார்கள்.அதன் சில காட்சிகள் சில... 



ஓம் ஸ்ரீ ஞானஸ்கன்ந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக