திங்கள், 24 அக்டோபர், 2016

ஜீவ நாடி அதிசயம் பக்தையின் கடிதம்


 எனது உறவினர் ஒருவருக்கு ஸ்ரீ ஸ்கந்த உபாஸகரின் அருளாலும், ஆசியாலும் ஜீவநாடி படிக்கும் பாக்கியம் கிடைத்தது. சுவடியைப் பிரித்து முருகனைப் பிரார்த்தனை செய்து சுவாமிகள் நாடி படிக்கத் தொடங்கினார். சிறிது நேரம் படித்தவுடன் நாடியில் ஒரு சிறிய வேல் தோன்றியது. அந்த வேலை ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அடியேனுக்கு காண்பித்தார்கள். முருகா, முருகா, முருகா எனப் பிரார்த்தனை செய்து வேலை தரிசனம் செய்தேன். பின் அந்தப் பெண்ணுக்கு மாத வயிற்று வலி வரும் என்றும், அதற்கு மருந்தாக ஒரு ஆயுர்வேத மருந்தின் பெயரும் ஜீவநாடியில் வந்தது. மருந்து கூட நாடியில் வருமா என ஆச்சரியத்துடன் சுவாமிகளைப் பார்த்து கேட்டதற்க்கு வரும் என்றும், அந்த மருந்தின் பெயரின் எழுத்தையும் ஜீவநாடியைக் காண்பித்து படித்துக் காண்பித்தார்கள். (மருந்தின் பெயர் குறிப்பிட அனுமதி இல்லாததால்  குறிப்பிடவில்லை.) ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகள் கௌமாரப் பயணம் வலைத்தளத்திலும், திருவருள் சக்தி புத்தகத்திலும் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற அடியவர்களுக்கு முருகப் பெருமானின் அனுமதியோடு காண்பித்ததாக எழுதியிருக்கிறார்கள். நமக்கும் இந்த பாக்கியம் கிடைக்காதா என்று முருகப் பெருமானை வேண்டியிருக்கிறேன். உண்மையான பக்தி யார் வைத்தாலும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருள்புரிவார். முருகப் பெருமான்  கருணைக் கடல். கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் தெய்வம். கந்தனை நம்பினோர் என்றும் கைவிடப்படுவதில்லை. இதுபோல் நிறைய திருவிளையாடல்களை ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி ஜீவநாடி மூலம் நடத்தி வருகிறார்

இப்படிக்கு
பூரணம், பாலக்காடு
                  
       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக