சனி, 27 அக்டோபர், 2018

ஜபம் செய்ய சொல்லி குருவின் வடிவில் ஜீவ நாடியுடன் தோன்றிய முருகப்பெருமான்


அடியார் ஒருவர்  ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்திலும்,  நம் குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளுக்கும் சேவை செய்து வருகிறார். நம் குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளிடமே முருக தீட்சை பெற்று  முருக உபாசனை செய்து வருகிறார். இவருக்கு  ஒரு அதிசயம் நடந்தது. விடியற்காலையில் எழுந்து ஜபம் செய்வது இவரது வழக்கம். நம் குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளும்  அவ்விதமே செய்யச்சொல்லி இருக்கிறார். விடியற்காலையில் எழுந்து தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து தீட்சைகொடுக்கும் போது வலது செவியில் சொல்லப்பட்ட மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும் என்பது இவருக்கு உபதேசம். அதை மாறாமல் செய்து வந்தார். அன்று அதிகாலை ஜபம் செய்ய எழும் முன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் இவரைத் தட்டி எழுப்பி எழுந்து ஜபம் செய் எனச் சொல்ல இவரும் அவ்விதமே செய்ய ஸ்ரீஸ்கந்த உபாசகரும் இவர் அருகிலேயே ஜீவநாடி சுவடியுடன் அமர்ந்து கொண்டு ஜபம் செய்திருக்கிறார். ஜபம் முடிந்த பின் விடிந்துவிட்டது எனத் தெரிந்து அருகில் பார்க்க அங்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் இல்லை. இது கனவும் இல்லை. நன்கு விழிப்பு நிலையிலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பின் எப்படி இது சாத்தியம் என எண்ணிய அடியவர்ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் இந்த தகவல்களைச் சொன்னார். அப்போது அந்த நேரத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் தனது வீட்டில்தான்இருந்ததாகவும் அன்று எங்குமே செல்லவில்லை எனவும் கூறி இது அந்த ஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்களாகத்தான் இருக்கும் என்று எண்ணி உடனே முருகப்பெருமானை வேண்டி ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கேட்கலாம் என்ற யோசனை சொன்னார். சொல்லி முருகனைப்பூஜித்து ஜீவ நாடி சுவடியைப்பிரிக்க  ஸ்ரீஸ்கந்த உபாசகர் வடிவில் வந்தது முருகப் பெருமானே என்றும், உன் வீட்டின் வட கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு துளசி செடி முளைத்து இருக்கிறது என்றும்அதை வெள்ளி தோறும்விளக்கிட்டு பூஜித்து வா என்றும்,வீட்டில் சுவரில் மாட்டி வைத்துள்ள படம் ஒன்று விழுந்து சுக்கு நூறாக உடைந்தது என்றும் அதை சரி செய்து கொள் என்றும் முருகப் பெருமான் ஜீவ நாடியில் உரைத்ததுவும் அவருக்கு நம்ப முடியாப் பேரதிர்ச்சியாக இருந்த்து. முருகப் பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் வடிவில் இவர் வீட்டிற்கு சென்றது உண்மை என உறுதிப்படுத்தவே மேலே உள்ள தவல்களைச் சொல்லி இருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் துளசி செடி முளைத்து இருப்பதும், சுவாமி படம் சுக்கு நூறாக விழுந்து உடைந்து இருப்பதும் ஸ்ரீ ஸ்கந்த உபாசகருக்கு தெரியாது. மனத் தூய்மையோடு முருகனுக்கும் முருகன் அடியார்களுக்கும் சேவை செய்து பூஜித்து வந்தால் அந்த முருகன் இவ்விதமெல்லாம் திருவிளையாடல்களை நடத்துவார் என்பதும் நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகன் தோன்றி வாக்குரைக்கிறார் என்பதும் உறுதியாகிறது.


                                       ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக