செவ்வாய், 30 அக்டோபர், 2018

நம்பினால் நடத்திக்காட்டும் ஜீவ நாடி அருள்


முழுமையாக 100% முருகன் மீது நம்பிக்கை வைத்து ஜீவ நாடி கேட்க வருபவர்களுக்கு மிகப்பெரிய அதிசய மாற்றங்கள் நடந்து வருவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம். நாடி ஜோதிடம் என்றாலே ஏமாற்று வேலை என்பது பலரின் கசப்பான அனுபவம். ஆனால் ஜீவ நாடியை தாங்கள் பார்த்து சலித்துப் போன நாடி சோதிடத்தோடு ஒப்பிட்டு  தவறாக நினைக்காமல் முருகனே உரைக்கும் வாக்கு என்று நினைப்பவர்கள் மிக மிகக் குறைவுதான். கலியுகத்தில் இறைவன் உண்டு என்று ஏற்றுக் கொள்வதே அபூர்வமாகும் போது ஜீவ நாடியில் இறைவன் வாக்கா? நிச்சயம் இருக்கவே இருக்காது என்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். அப்படி அவ நம்பிக்கையோடு ஜீவ நாடி பார்க்க வருவது தேவையில்லாத கால விரையம். இன்னும் சிலர் அவ நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்டுவிட்டு முருகப்பெருமான் உரைத்த வாக்குகள் பலிக்கத் துவங்கியவுடன் நம்பிக்கை கைவரப்பெறுகின்றார்கள். எனவே  ஜீவ நாடி கேட்கும்போது முழு நம்பிக்கையுடன் சென்றால் நிச்சயம் நடக்கும். எல்லாமே பொய்யில்லை அதே சமயத்தில் எல்லாமே உண்மையுமில்லை. ஆனால் உரிய நேரம் வரும்போது தானாகவே உண்மையான ஜீவ நாடியைத் தேடிப் போய் பலன் பெற்றுவிடுவார்கள் என்பது திண்ணம். அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்திற்கு முதன் முதலாக ஜீவ நாடி கேட்க வருபவர்கள் பெரும்பாலும் ஒரு சாதாரண நிலையிலேயே அனுகுகின்றார்கள். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்து அது அனைத்தும் தனது வாழ் நாளில் நடக்கும் போதுதான் உண்மையை உணர்கின்றார்கள். பின்பு நிரந்தர பக்தர்களாக மாறி ஜீவ நாடியில் உத்தரவு கேட்காமல் எதையும் செய்வதில்லை எனும் நிலைக்கு வந்து இறுதியில் முருக பக்தர்களாகவே மாறிவிடுகின்றார்கள். அந்த அளவு முருகப்பெருமானும் சித்தர்களும் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக பல்வேறு திருவிளையாடல்களை நடத்தி வருகின்றார்கள் என்பது 100% சத்தியமாகும். உண்மையான ஜீவ நாடிகள் அபூர்வம்தான் என்றாலும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வரும் பலன்கள் அப்படியே பலிப்பதும், ஜீவ நாடியில் சொன்ன ஆலய வழிபாடுகள் செய்த உடனேயே ஒரு மாற்றம் வருவதும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம். எனவே பிராப்தம் இருப்பின் உண்மையான ஜீவ நாடி கேட்கும் வாய்ப்பு அமையும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
                     ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக