திங்கள், 29 அக்டோபர், 2018

இனிய அறிவிப்பு


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ளது மந்தை எனும் கிராமம். மந்தையில் இருந்து விலாங்குட்டை எனும் ஊர் செல்லும் வழியில் இருப்பதே மிகவும் வலிமைமிகு ஜீவ நாடி இருக்கும் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடமாகும். அங்கு மிகுந்த நம்பிக்கையுடன் பலர் வந்து ஜீவ நாடி கேட்டுச் செல்கின்றார்கள். இப்போது ஜீவ நாடி படிக்க நம் குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் அதிகமாக நேரம் ஒதுக்கி மக்களுக்கு ஜீவ நாடி படித்து வருகின்றார்கள். பக்தர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஜீவ நாடி வாசிக்க வேண்டும் என்பது நம் குரு நாதரின் விருப்பமாகும். பணத்தை பெரிய அளவில் எடுத்துக்கொள்ளாதவர் நம் குரு நாதர் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். இப்படி ஜீவ நாடி பார்க்க பலமுறை தொடர்பு கொண்டும் பார்க்க இயலாமல் போனவர்கள் 9865848488 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஜீவ நாடி கேட்டுக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற இனிய அறிவிப்பை முருகனது ஆசியோடும் அகத்திய முனிவரது அருளோடும் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். அதேபோல் ஜீவ நாடி கேட்க வருபவர்களுக்கு முதலில் ஜீவ நாடி மீதும் முருகன்மீதும் நம் குரு நாதர் மீது நம்பிக்கையோடு வருவது மிக மிக அவசியம். ஏதோ சந்தேக உணர்விலும் நம்பிக்கையில்லாமலும் ஜீவ நாடி கேட்க வந்தால் பெரிய அளவில் பலன் தருவதில்லை. முன்பதிவு செய்ய வழி கொடுங்கள் என்று பல அன்பர்கள் கேட்டுக் கொண்டதிற்கினங்க இங்கு தொலைபேசி எண் கொடுக்கப்படுகின்றது. இந்த எண் நம் சுவாமிகளின் அனுக்க தொண்டரது எண் ஆகும். எனவே முன் பதிவிற்கு மட்டுமே இந்த எண்ணில் அழைக்கும்படியும் மற்ற தேவையில்லாத கேள்விகளைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். அதேபோல் இது வரை ஜீவ நாடி மூலம் பலன் அடைந்தவர்களும் பலன் அடைந்து வருபவர்களும் ஏராளம் என்பது கண்கூடு. ஜீவ நாடி கேட்க வரும் முன் ஜீவ நாடி என்றால் என்ன? என்றும் காண்ட நாடிக்கும் ஜீவ நாடிக்கும் உள்ள வேறுபாடுகளையும் தெரிந்து கொண்டு வந்தால் தங்கள் துன்பங்களைத் தீர்க்கும் விடைகளும் வழிகளும் கிட்டும் என்பது திண்ணம். எனவே இந்த கௌமாரபயணம் வலைப்பதிவில் உள்ள மற்ற ஜீவ நாடி குறித்த கட்டுரைகளை நன்கு வாசித்தாலே ஜீவ நாடியின் மகிமைகள் தெள்ளென விளங்கும். அதேபோல் ஜீவ நாடி பரிகாரங்கள் என்பது பெரும்பாலும் ஆலய வழிபாடுகளாகவே இருக்கும் என்பதும் வேறு எந்த பரிகாரங்களும் ஜீவ நாடி படிக்கும் குருவோ அல்லது ஜீவ நாடிபடிக்கப்படும் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்திலோ செய்து தருவது கிடையாது என்பதும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசிய செய்தியாகும். எனவே ஜீவ நாடி கேட்டு நலன் அடையும் பக்தர்கள் 9865848488 என்ற எண்ணில் வியாழன் அன்று மட்டும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கின்றோம்.
                 ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக