புதன், 16 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-45

                                      
விலைமாதர்களுடைய மார்பகங்களிலும், வேலின் கூர்மையான பகுதிக்கு ஒப்ப இருக்கும் கண்களிலும்,  அவர்களோடு உறவாடி உழலாமல், எனது  ஊர் போல் திகழும் உனது திருப்பாதங்களைத் தந்து அருள் புரிவாயே.  நீராகி  கடல் போல் இருக்கும் இந்த உலகத்தை வலமாக  மயிலின் மேல் பறந்து வருகின்ற முருகப்பெருமானே 
                                                
சூடு நிறைந்த ஒரு ஜோதி மலையில், திருவண்ணாமலையில் இருக்கும், சோணாடு என்று சொல்லக்கூடிய சோழ நாட்டார் புகழுகின்ற தேவர்களின் பெருமாளே. என்று திருவண்ணாமலை மீது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகளால் பாடப்பட்ட திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாகும்.
திருவருணைத் திருப்புகழ்
கோடான மடவார்கள் முலைமீதே
கூர்வேலை யிணையான விழியூடே
ஊடாடி யவரோடு முழலாதே
ஊராகத் திகழ்பாத மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் வலமாக
நீடோடி மயில்மீது   வருவோனே
சூடான தொருசோதி மலைமேவு
சோணாடு புகழ்தேவர் பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

 கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

                        ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                      சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக