வியாழன், 17 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-46

நீதியின் தத்துவமாகி, சிறந்த ஒழுக்கத்தின் துணையாகி, பூதங்களாகிய உயிர்களின் மேல் தயவாகிய அன்பைத் தந்தருள்வாயே.  நாதமாகிய ஒலியும் தொனியாகிய ஓசையுமாக இருப்பவனே, ஞானக் கடலோனே, கோது என்று சொல்லக்கூடிய குற்றமேதுமில்லாத அமுதோனே, கூடற் பெருமாளே என்று நமது கௌமார அகச்சந்தான குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் மதுரையம்பதி மீது பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழாகும்.
மதுரை திருப்புகழ்
நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
பூதத் தயவான போதைத் தருவாயே
நாதத் தொனியோனே ஞானக்கடலோனே
கோதற் றமுதானே கூடற் பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                                     ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                           சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக