திங்கள், 25 ஏப்ரல், 2016

நாய் வளர்க்க அறிவுறுத்திய ஜீவ நாடி

                       தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி
எழுத்துக்கள் எதுவுமே எழுதப்படாத வெறும் பனை ஓலையில் ஒளி வடிவிலும் வரி வடிவிலும் சில தெய்வீகச் சின்னங்களின் வடிவிலும் தோன்றி முருகப்பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் கண்களுக்குத் தென்படச் செய்து சில உள்ளுணர்வுகளைக் கொடுத்து யார் வந்து ஜீவ நாடி கேட்க அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினைகளைக் கரைக்கும்படியும் பாடல் வடிவில் முக்காலங்களையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றார். உண்மையான ஜீவ நாடி என்பது  கலியுகத்தில் கிடைப்பது மிகவும் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். நாடி ஜோதிடம் என்றாலே முகம் சுளிக்கின்ற ஒரு நிலையை தவறு செய்பவர்கள் சிலரால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஜீவ நாடியைப் பொறுத்தவரை எந்தவித எழுத்துக்களும் இல்லாமல் யாராலும் எழுதப்படாமல் சித்தர்களும் தேவதைகளும் தோன்றி வாக்குரைப்பதாகும். இது அருள்வாக்கு எனும் பட்டியலிலும் இடம் பெறாது. அருள்வாக்கு என்பது உள்ளுணர்வினால் உரைப்பது. ஜீவ நாடி என்பது ஓலைச்சுவடியில் தோன்றும் சித்தர்களால் உரைப்பது. ஜீவ நாடி படிக்க பூர்வ ஜென்ம தவவலிமையோடு மிகுந்த ஒழுக்கம் தேவையாகும். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் பற்றி அனைவருமே நன்கு அறிவார்கள். தவ வலிமையோடு சீரிய ஒழுக்கம் உடையவர். முன் ஜென்ம கௌமார நெறியில் வந்தவர். இப்படி தொழில் முறையில் அல்லாமலும் வியாபார ரீதியில் அல்லாமலும் அருள் நோக்கிலேயே நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் செயல்பட்டு வருவதால்தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவையை எந்தவித விமர்சனங்களும் இன்றி செய்ய முடிகின்றது என்பது நிச்சயம், நிதர்சனம். சத்தியமான உண்மையாகும்.இப்படி இருக்கின்ற நிலையில் ஒருவர் நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் நிலையில் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலம் ஜீவ நாடி கேட்டு தற்போது விரைவில் குழந்தை பிறக்கின்ற நிலையில் இருக்கின்றார் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிகாரங்கள் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டு இப்போது இன்னும் ஒரு மாதத்தில் முருகன் அருளால் குழந்தை பிறக்க இருக்கின்றது. அவருக்கு மீண்டும் ஜீவ நாடி உரைக்கும் போது ஓலைச்சுவடியில் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கு ஒரு நாய் வடிவம் காட்சி கொடுத்திருக்கின்றது. அதைப்பார்த்த சுவாமிகள் உன் வீட்டில் இருக்கும் வயதான நாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் விரைவில் ஒரு குட்டி நாய்க்கு ஏற்பாடு செய்து வளர்க்குமாறு உரைத்த உடனேயே வந்தவருக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. காரணம் இது பற்றி சுவாமிகளுக்கு ஏற்கனவே தெரியாது.சுவாமி உண்மைதான் இப்போது இருக்கும் நாய் வயதாகிவிட்டதால் படுத்த படுக்கையாக இருக்கின்றது என்பதால் சென்ற வாரம் தான் ஒரு குட்டி நாய்க்கு ஏற்பாடு செய்ய பணம் கொடுத்திருக்கின்றேன் என்றார். அதற்கு நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அதுதான் நல்லது குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் ஒரு நாய் வளர்க்கத் துவங்கினால் அது பைரவர் ஆசியைப் பெற்றுத்தரும் என்று உரைத்தார்கள். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களை சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அவர் மகிமை தெரிவதில்லை. அருளாளர்கள் நம் சுவாமிகளிடம் இருக்கின்ற சக்தியை உணார்ந்து பலன் அடைகின்றார்கள் என்பது கண்கூடு.

                        ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக