செவ்வாய், 5 ஏப்ரல், 2016

முருகன் கௌபீனத்தைக் கண்டுரைத்த ஜீவ நாடி


கொங்கு மண்டலத்தில் உள்ள மிகச்சிறப்பான முருகன் தலத்தில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளைச் சந்தித்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைக்கும் அருள்வாக்கைக் கேட்க அமர்ந்தார். அவருக்கு மிகச்சிறப்பான முறையில் வாக்குரைத்து வந்த முருகப்பெருமான் திடீரென உன் வீட்டில் என் கௌபீனம் இருக்கின்றது அதை ஏன் ஒரு பெட்டியில் போட்டு அடைத்து வைத்திருக்கின்றாய் அந்தப் பெட்டியைத் திறந்து அந்த கௌபீனத்தைப் பூஜித்து வா என்று உரைத்தார். அதைக்கேட்ட அந்த அர்ச்சகர் முருகா…முருகா..என்று உரக்கக்கூறி கண்ணீர் மல்கினார். சத்தியமான உண்மை இந்த ஜீவ நாடியில் வாக்குரைப்பது அந்த முருகப்பெருமானே…ஏனென்றால் அந்த கௌபீனம் பழனியில் இருந்து பெறப்பட்டதாகும். கடந்த 3 ஆண்டுகளாக என் வீட்டில் இருக்கின்றது. அதை ஒரு சிறு பெட்டியில் பூட்டி அறியாமையினால் வைத்துவிட்டேன் முருகப்பெருமானே இனிமேல்  உன் வாக்குப்படியே அதை பூஜை செய்கின்றேன் என்று கூறி இன்னும் பல்வேறு இரகசியங்களை ஜீவ நாடி மூலம் அறிந்து கொண்டு விடைபெற்றார் அந்த அர்ச்சகர். இப்படி மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்களை ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஜீவ நாடி மூலமும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலமும் நடத்தி வருகின்றார்.
            ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

1 கருத்து:

  1. கௌபீனத்தை எப்படி பெறுவது,எப்படி பூஜை செய்வது அய்யா

    பதிலளிநீக்கு