புதன், 30 ஆகஸ்ட், 2017

சிரவையாதீனம் 48 ம் நாண்மங்கல நாள் கவிதை

                   குருவிற்கு நாண்மங்கல நாள் விழா கவிதை


                          
குருவின் திருமேனி காண்டல் தெளிவாம்
குருவின் திரு நாமம் செப்பலும் தெளிவாம்
குருவின் திருவார்த்தை கேட்டலும் தெளிவாம்
குருவின் திருவுரு சிந்தித்தல் அதைவிட தெளிவாம்
குருவின் பெருமை இப்படிக் கண்டேன்
குருவின் அருளால் மூலன் மந்திரத்திலே
குருவை முழுமையையாய்க் கண்டேன்
குருவின் பெருமை கண்டேன் தெளிந்தேன்
குருவே இறைவனாய்க் கண்டேன் வியந்தேன்
குருவே குமர குருவே சுவாமிகளே சரணம்
சமயம் சிறக்க மலேசியா பயணம்
லட்சியத்துடனே லண்டன் பயணம்
வல்லமையுடனே வட நாட்டுப் பயணம்
சமயம் சிறக்க இப்படி இன்னும் பல பயணம்
கல்வி செழிக்க பள்ளிகள் எனவும்
சமயப்பணியொடு சமுதாயப் பணியும்
சீராய் சிறப்பாய் பேரும் புகழும்
சிறப்பாய் நாள்தொறும் வளரும் எங்கள்
குருவுக்கு அகவை நாற்பத்தி எட்டாம்
குருவைப் போற்றி எடுக்கும் திருவிழா
குருவின் அருளால் குருவைப் போற்றி
குருவே பரம்பொருள் கௌமார சமயம்
குருவின் சிரவையாதீனம் சீராய்
குருவின் அருளால் வையகம் போற்ற
குருவின் முதல் குரு குமரன் தன்னை
குருவின் அருளால் போற்றினேனே!!!
குருவாழ்க குருவே என்றும் துணை
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

                                   கவிதையாக்கம்:
                            ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக