புதன், 14 மார்ச், 2018

ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி - கழுகுமலை



மிகவும் அமானுஷ்ய அதிசயம் நிறைந்த அற்புதமான ஜீவசமாதி இவரை பற்றி 4 ஆண்டுகள் முன்பே தெரிந்திருந்தாலும் குரு பௌர்ணமி அன்று  (08/07/2017) செல்லும் பாக்கியம் கிடைத்தது..

நேரில் சென்று தரிசனம் செய்யும் போது தான் அதன் மகிமையும் அங்குள்ள ஆற்றலும் நம்மை எப்படி ஆட்கொள்கிறது என்பது புரியும்..

85 வயது மதிக்க தக்க பாட்டி அவர்கள் இங்கு பூஜைகள் செய்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் கிரிவலம் வரும் அடியார்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள் இந்த வயதிலும் என்ன ஒரு பணிவு அன்பு கலந்த உபசரிப்பு .. என்ன தான் பணம் செலவு செய்து five star ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் இது போன்ற அன்பு கலந்த  உபசரிப்பு கிடைக்காது..

சுவாமிகளின் வாரிசு வரிசையில் இவர் 8வது தலைமுறை சேர்ந்தவர்கள் .. இப்போதும் சுவாமிகள் இங்கு தேகத்துடன்  உள்ளார்கள் என்பதற்கு இவரே சாட்சி..சுவாமிகளுடன் நேரடியாக பேசவும் தேவையானதை  மக்களுக்கு பெற்று தருவதும் இவர்தான்...

மிகவும் ஆச்சர்யமான பல நிகழ்வுகள் சுவாமிகளை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள் ஒரு குழந்தையிடம் என்ன பரிவு இருக்குமோ அப்படி ஒரு  அன்பு இங்கிருந்து வர மனம் இல்லை..

மிளகாய் பழம் மற்றும் வற்றல்ளே இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.. அதையே நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்..

மிகவும் சமீபத்தில் நடந்த ஒரு அதிசய நிகழ்வு உங்களுக்காக கோவில்பட்டி சேர்ந்த அன்பர் ஒருவர் சுவாமி சமாதி தரிசனத்திற்கு வந்துள்ளார் அப்போது சமாதி பீடத்தில் இருந்து அவரை ஒரு குரல் அவரை பெயர் சொல்லி  அழைத்தது அவரை மெய்சிலிர்க்க வைத்தது அந்த வினாடி  முதல் அவரை ஆட்கொண்ட நோய் நீங்க புது பிறவி எடுத்து சென்றது போல் அவர் உணர்ந்துள்ளார் ... இது போல் பல அதிசயங்களை நிகழ்த்தும் சுவாமிகள் பற்றி நிறைய செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்..

திருமணமாகி சுமார் 20 ஆண்டுகளாக குழந்தை செல்வம் இல்லாமல் தவித்து வந்த தம்பதிகள் இங்கு வந்து சுவாமிகளிடம் பிரார்த்திக்க அடுத்த வருடம் அவர்கள் தன் குழந்தை செல்வத்துடன் வந்து இங்கு சுவாமிகளை வழிபட்டு சென்றதாக கூறினார்கள்..

பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை வைத்து இங்கு பூஜை அன்னாதனம் நடைபெறுகிறது..

தற்போது சமாதி பீடம் கட்டிடம் சரியான நிலையில் இல்லை பராமரிப்பு செலவிற்காக கூட இவர்கள் யாரிடமும் கேட்பதில்லை இங்கு சென்று பார்த்த பிறகு தான் எனக்கும் தெரிந்தது ..

இந்த பதிவை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு என்னுடை தாழ்மையான வேண்டுகோள் நீங்களும் இங்கு சென்று மகானை சேவித்து உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

திருமணம் வரம் வேண்டுவோர் ஒரு ரோஜா மாலையை இங்கு சுவாமிக்கு சாற்றி விளக்கேற்றி வழிபட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை..

குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இங்கு வந்து எலுமிச்சை பழம் வாங்கி வந்து சமாதி பீடத்தில் வைத்து வழிபட்டு அத்துடம் சுவாமி நிவேதனம் செய்த மிளகாய் வற்றல்களை சேர்த்து எலுமிச்சை சாதம் செய்து அதில் இந்த மிளகாய் வற்றல்களை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை..

ஒரு முறை தரிசனம் செய்யுங்கள் ஆனந்தமாக வாழுங்கள் ...

ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி
ஆறுமுக நகர்..
கிரிவல பாதை ..
கழுகு மலை..

சிவாயநம
ராஜா @ ஈஸ்வர்
தர்மபுரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக